என் மலர்
நீங்கள் தேடியது "திடீர் சாவு"
- தக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து கொடுத்து வந்தனர்.
- டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஏற்கனவே தக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் உமா–மகேஷ்வரன். கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவரது மனைவி ஹேமா (22). இவர்களது மகன் தக்ஷன் (5). வீட்டிற்கு அருகில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தான்.
தக்ஷனுக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருந்து கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவ த்தன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து தக்ஷனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ஏற்கனவே தக்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
- ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு அடுத்துள்ள குட்டைக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் வேம்புசாமி (61). இவர் கடந்த 30 வருடங்களாக ஈரோட்டில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பண்ணாரி சர்க்கரை ஆலையில் இருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றி கொண்டு திருவண்ணா –மலை சென்று கொண்டி ருந்தார். அவருடன் கிளீனர் குமார், கணக்காளர் செல்வ–ரத்தினம் ஆகியோரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அதிகாலை சுமார் 3 மணியளவில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது வேம்புசாமிக்கு கை, கால்கள் உதறல் ஏற்பட்டு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அவருடன் வந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து வேம்புசாமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து வேம்புசாமியின் மனைவி கண்ணம்மாள் (57) அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அமிர்தலிங்கம் தன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
- சம்பவத்தன்று திடீரென்று அதே பகுதியில் சாலையில் மயங்கி விழுந்தார்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (வயது 65). இவர் தன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடுவீரப்பட்டு பகுதியில் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று திடீரென்று அதே பகுதியில் சாலையில் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அமிர்தலிங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அமிர்தலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலத்தில் நர்சிங் கல்லூரி மாணவி திடீரென இறந்தார்.
- பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
திருமங்கலம்
கள்ளிக்குடி போலீஸ் சரகம் குராயூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையத்துரை. இவருடைய மகள் பவானி(19). இவர் திருநகரில் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். பவானிக்கு நோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கல்லூரி செல்வதற் காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது பவானி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக குடும்பத்தினர் அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பவானி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் திடீரென இறந்தார்.
- இதுகுறித்து தேவகோட்கோடை ட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கும் சினேகா (வயது 21) என்பவருக்கும் கடந்த இவருக்கும் சினேகா என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்தநிலையில் சினேகாவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக இறந்த தாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் சினேகா இறப்பு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நெடுமரம் கிராம நிர்வாக அலுவலர் கோகிலா தேவி கொடுத்தபுகாரின் பெயரில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு குறித்த தன்மையை மருத்துவர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, கண்டவராயன்பட்டி சார்பு ஆய்வாளர் சேதுராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சபஹரிசன் ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்
- சக்தி சபஹரிசன் தலைவலிப்பதாக கூறி மாத்திரை சாப்பிட்டார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்லூர் அருகே உள்ள புதுக்காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் சக்தி சபஹரிசன் (வயது 15). இவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சக்தி சபஹரிசன் தலைவலிப்பதாக கூறி மாத்திரை சாப்பிட்டார். இரவு திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக சபஹரிசனை அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சபஹரிசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு 10-ம் வகுப்பு மாணவர் திடீர் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சி மேல்வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 30). இவர்களுக்கு யாஷிகா (4) என்ற மகள் உள்ளார்.
ஜான்சிராணி சென்னை அம்பத்தூரில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது கருச்சிதைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது பாண்டுரங்கன் திடீரென மயங்கி விழுந்தார்.
- அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (61). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார்.
பாண்டுரங்கன் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதியில் ஒரு டீக்கடையில் போண்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 13 வருடமாக பாண்டுரங்கன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 4 மாதமாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கறையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாண்டுரங்கன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
- திருச்செங்கோடு மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கோவை,
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வேப்பங்காட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது70). இவர் போக்சோ வழக்கில் திருச்செங்கோடு மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பழனிசாமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கிருஷ்ண–மூர்த்தி (வயது 57). உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
- இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கிருஷ்ண–மூர்த்தி (வயது 57).
இவர் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் திடீரென உயிரிழந்தார்.
இதேபோல், சேலம் மாநகர சிறுவர் காப்பக உதவி மையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் முரளிதுரை (வயது 55). இவர் உடல் நலக் குறைவால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இவர்களது உடலுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் இன்று அஞ்சலி செலுத்துகிறார்.
- நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்
குன்னத்தூர் :
குன்னத்தூர் அருகே வெள்ளரவெளி கிழக்கு வீதி, ராசு காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் ( வயது 56),தொழிலாளி.
இவர் பல நாட்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். நெஞ்சு வலிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்தநிலையில் வீட்டு வாசலில் இறந்து கிடந்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், கணேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து குன்னத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுரேசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
- சுரேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கோவை,
கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 39). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று சுரேசுக்கு பிறந்த நாள். இதனையடுத்து அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெரிய புத்தூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்னர் குடும்பத்துடன் காரமடை ரங்க நாதர் கோவிலுக்கு சென்றார்.இதனை தொடர்ந்து அனைவரும் காரமடையில் மதிய சாப்பாடு சாப்பிட முடிவு செய்தனர். அதன்படி அனைவரும் அங்கு சென்று ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென சுரேஷ் மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் தனது கணவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சுரேசை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனை கேட்டு அதிர்ச்சி யடைந்த அவரது மனைவி தனது கணவரின் உடலை கட்டிபிடித்து கதறி அழுதார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்த நாளன்று குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.