search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • பரமக்குடியில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது.
    • மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



    போகலூர் ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடியில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை யில் அவரது அலுவ லகத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர் செயலாளர் வடக்கு ஜீவரத்தினம், உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகி துரைமுருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரபா சாலமன், ராதா பூசத்துரை உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டஜனர்.

    போகலூர்

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின்படி போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் குமுக்கோட்டை கிராமத்தில் கருணாநிதி பிறந்தாநள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    மேலும் பொட்டிதட்டி கிராமத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா தலைமையில் பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் முன்னிலையில் பஸ் நிலையம் அருகில் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    மஞ்சூர் கிராமத்தில் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையிலும் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அரியக்குடி புத்தூர், தெய்வேந்திரநல்லூர், திருவாடி, கருத்தனேந்தல், மஞ்சக்கொல்லை, பாண்டிகண்மாய் உள்ளிட்ட மேற்கு ஒன்றிய ஊராட்சிகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய பெருந்தலைவர் அப்பாஸ் கனி, பொங்கலூர் ஒன்றிய குழு துணை தலைவர் பூமிநாதன், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி கார்த்திக் பாண்டியன் உள்ளிட்ட கிளை கழக செயலாளர், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டி அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
    • தாசில்தார் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நெடுங்குளத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெட்கிராட் மற்றும் ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நெடுங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் விழாவுக்கு பெட்கிராட் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.சுப்புராம் தலைமை தாங்கினார். பொருளாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வாடிப்பட்டி வட்ட தாசில்தார் மூர்த்தி மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ''பிளாஸ்டிக்கை ஒழிப்போம்'' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட மஞ்சப்பை மற்றும் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கப்பட்டது. ஜி.எச்.சி.எல். பவுண்டேஷன் அலுவலர் சுஜின் தர்மராஜ் நெடுங்குளம் கிராமத்திற்கு பல்வேறு பயிற்சிகளையும், உதவிகளையும் பவுண்டேஷன் சார்பில் செய்து வருவதாக பேசினார். நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி வாழ்த்தி பேசினார். பின்னர் நெடுங்குளம் கண்மாய்கரை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டனர். முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் லூதர்கிங் நன்றி கூறினார். பின்னர் சமயநல்லூரில் உள்ள மீனாட்சி மில் வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்புவனம் அருகே வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார்.

    பொதுவாக விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • சோழவந்தானில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத்தலைவர் லதா கண்ணன், துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், குத்தாலம், செந்தில், செல்வராணி, ஜெயராமச்சந்திரன், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, நிஷா கவுதம ராஜா, முத்து செல்வி சதீஷ், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, சுரேஷ், நகர் இளைஞர் அணி முட்டை காளி, தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன், சங்கங்கோட்டை ரவிசந்திரன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொம்மனப்பாடியில் ஊரணி விழா நடைபெற்றது.
    • இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகேயுள்ள உள்ள பொம்மனப்பாடி கிராமத்தில் ஊரணி விழா நடைபெற்றது. இதையொட்டி செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. ஊரணி விழாவையொட்டி பொதுமக்கள் அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சுவாமிகள் டிராக்டர் மூலம் ஊர்வலமாக சென்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    • கரூர் மாரியம்மன் கோவிலில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா
    • ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

    கரூர்

    கரூர் மாநகரில் வீற்றிருக்கும் மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் அம்மனாக இருப்பதால், பல்வேறு இடங்களில் இருந்தும் கரூர் மாரியம்மன் கோவிலுக்கு திருவிழா காலங்களில் பக்தர்கள் படையெடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 14-ந்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அதன் பின்னர் பக்தர்கள் பால்குடம் மற்றும் புனிதநீர் எடுத்து வந்து கம்பத்தில் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    கடந்த 19-ந்தேதி பூச்சொரிதல் விழாவையொட்டி, கரூர் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் 47 பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். கடந்த 21-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தேரோட்டம் நிகழ்ச்சியில் தேரில் வீற்றிருந்தபடியே முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். மேலும் நேற்றுமுன்தினம் முதல் இன்று (புதன்கிழமை) வரை திருவிழாவின் முக்கிய நாட்களாக கருதப்படுகிறது. விரதம் இருந்து வரும் பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி, அலகு குத்தி கொண்டு வந்து பயபக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று காலை முதலே கோவிலில் வழிபாடு நடத்த பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் ஜவகர்பஜார் வீதியில் மக்கள் அலைகடலென திரண்டிருந்ததை காண முடிந்தது. மேலும் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றிலிருந்து புனித நீராடி பக்தர்கள் நீண்ட அலகினை தங்களது கன்னத்தில் குத்தி கொண்டு பக்தி பரவசத்துடன் வந்து கோவில் முன்பு சாமி வந்து ஆடினர். இன்னும் சிலர் தங்களது முதுகில் வாள்களை குத்தி கொண்டும், கன்னத்தில் அலகு குத்தி கொண்டும் வந்தனர். அப்போது அவர்களை வரவேற்கும் விதமாக மேள, தாளங்கள் முழங்கப்பட்டன.

    இதற்கிடையே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றிலிருந்து பொக்லைன் எந்திரம் மூலம் பறவைகாவடி தயார் செய்யப்பட்டது. பின்னர் அமராவதி ஆற்றில், தற்காலிகமாக வைக்கப்பட்ட குழாய் தண்ணீரில் புனித நீராடிய பக்தர்கள், தங்களது உடலில் இரும்பு கொக்கியை மாட்டி கொண்டனர். அப்போது பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடியே பறவை காவடி எடுத்து வந்தனர். அப்போது வழிநெடுகிலும் நின்றிருந்த பக்தர்கள் பறவை காவடியை வணங்கினர்.

    பின்னர் கோவிலை வந்தடைந்ததும் பொக்லைன் எந்திரத்தில் தொங்கிய பக்தர்கள் கீழே இறங்கி நேர்த்திக் கடனை நிவர்த்தி செய்தனர். இதே போல் நாக்கில் வேல் குத்தி கொண்டும், அக்னி சட்டி ஏந்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இதையொட்டி மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

    பக்தர்கள் கூட்டத்தை கண்காணிப்பதற்கு ஏதுவாக ஜவகர்பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. கோவிலின் எதிரே அமைக்கப்பட்டிருந்த கரூர் புறக்காவல்நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த கணினி திரையில் அதன் பதிவுகளை கண்காணித்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் முன்புறத்தில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து, பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தினர். கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா இன்று (புதன்கிழமை) மாலை 5.15 மணிக்கு நடக்கிறது. பின்னர் இரவு 7.30 மணியளவில் ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற உள்ளது.

    • வருகிற ஜூன் 1-ந் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது.
    • ஊர் பொதுமக்கள் வாத்தியம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராஜ கம்பீர விநாயகர், கன்னிமூல விநாயகர், ஆறுமுக வேலவர், விஸ்வநாதர்,விசாலாட்சி அம்மன், ஆதி மூலவர் அகஸ்தீஸ்வரர், ராஜ நாகலிங்கம், பஞ்சலிங்கேஸ்வரர், கன்னிமார், இடும்பன், கடம்பன் வீரபாகு ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தெய்வகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்தது.

    குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து கோபூஜை, தன பூஜை, அணுக்கை, மகா கணபதி ஹோமம், தீர்த்த சங்கர கணம், அக்னி சங்கர கணம் பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    இதை தொடர்ந்து காரமடையில் இருந்து திருமுருக பக்தர்கள் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் தாரை தப்பட்டைகள், செண்டை வாத்தியம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி மிருதிங்கரணம், அங்கூரார் பணம், ரக்ஷாபந்தனன், கும்ப அலங்காரங்கள் கலா ஆகர்சனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, மண்டப வேதியர்ச்சனை, பூரணாகுதே மற்றும் இரவு உபச்சாரங்கள் தீபாராதனை தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ணயாகசாலை நிகழ்ச்சியை பாலு மற்றும் விவேக் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடைபெற்றது
    • கொட்டும் மழையில் தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்

    வேப்பந்தட்டை,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்திருவிழா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழா உடன் தொடங்கி 13 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினமும் கரகாட்டம் மற்றும் வாண வேடிக்கையுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், மாரியம்மன் திருவீதி உலா ஊரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. நேற்று முன்தினம் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்திய பக்தர்கள், பொங்கல், மாவிளக்கு பூஜையிலும் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மேளதாள, வாணவேடிக்கை முழங்க, மாரியம்மன் எழுந்தருளிய திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுந்தனர். கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர், ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. தேரோட்டத்தின் போது, திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

    • அரியலூர் வாழைக்குறிச்சியில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் பூங்கரகம், அக்னிகரகம் எடுத்து வந்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் மாரியம்மன், திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. 19-ந் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்று, மகா மாரியம்மன், திரவுபதி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மன், திரவுபதி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு பூங்கரகம், அக்னி கரகம் ஏந்திய நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவில் மகா மாரியம்மன், திரவுபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இன்று காலை கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிக்குப் பின்னர் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்றது.

    • ஜல்லிகட்டு ஆர்வலர்களால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் 5-ந்தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது
    • இதற்காக அரசு மருத்துவகல்லூரியிலிருந்து திருச்சி சாலை சிப்காட் செல்லும் வழியில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    புதுக்கோட்டை,

    தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டப்போராட்டம் நடத்தி அனுமதி பெற்று தந்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜல்லிகட்டு ஆர்வலர்களால் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் புதுக்கோட்டையில் வருகிற 5-ந்தேதி பாராட்டு விழா நடைப்பெறுகிறது.இதற்காக அரசு மருத்துவகல்லூரியிலிருந்து திருச்சி சாலை சிப்காட் செல்லும் வழியில் பந்தல் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    இதையொட்டி இன்று மாலை கற்பக விநாயகர் மகாலில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்ட துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கலந்துக் கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. மேலும் ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் உட்பட ஜல்லிகட்டு பேரவையினர், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார்கள்.

    • திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம் நடைபெற்றது
    • நேர்த்தி கடனை செலுத்த பக்தர்கள் இழுத்து வழிபாடு

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்துவட்டு செல்கின்றனர்.பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காகவும், வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். முடி காணிக்கை, அக்கினி சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் ஏந்தி செல்லும், அலகு குத்துதல் உள்ளிட்டவைகள் அடங்கும். அந்த வகையில் தங்க தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதும் சிறப்பு வாய்ந்ததாகும்.இந்த தங்கத்தேர் கோவிலின் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரரத்தை இணைக்கும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் தங்கத் தேரோட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த தங்கத் தேரை தூய்மைபடுத்தி மின் விளக்குகள் பொருத்துப் பணிகள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.இந்தநிலையில் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக நேற்று தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்தினர். கோவில் உள்பிரகத்தில் தங்க தேர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு கட்சி அளித்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

      சேலம்:

      சேலம் அருகே புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் இன்று மதியம் எருது விடும் விழா நடைபெறுகிறது.

      இந்த விழாவில், மாடுகளுக்கு வர்ணம் பூசி மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வந்து, துணியால் சுற்றப்பட்ட பொம்மைகளை வைத்து மாடுகளுக்கு முன்பாக காண்பித்து அந்த பொம்மையை மாடுகள் முட்ட செய்து மகிழ்வது வழக்கம். இந்த சமயத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கையாக சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மேற்பார்வையில் அன்னதா னப்பட்டி உதவி கமிஷனர் அசோகன், கொண்ட லாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி, கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

      ×