என் மலர்
நீங்கள் தேடியது "கோஷங்கள்"
- ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில், அக். 27-
தி.மு.க. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொன்.ராதாகிருஷ்ணன்
குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் பொன்ரத்தினமணி முன்னிலை வைத்தார்.
முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்து வருகிறது. 1967-ம் ஆண்டு தமிழை சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். 50 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சிக்கு என்று ஒரு இருக்கை அமைக்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் பிரதமர் மோடி காசி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று 3 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.
உலகத்திலேயே பழமை யான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி கூறினார். சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமை யான மொழி என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் இங்குள்ள தி.மு.க.விற்கு தமிழைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
துரோகம்
இலங்கையில் தமிழர்கள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் தான் தி.மு.க.,-காங்கிரஸ் எம்.பி., க்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். குமரி மாவட்டத்தில் எதை வேண்டுமானாலும் அரசியலாக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அது மோச மான விளைவுகளை ஏற்ப
டுத்தும்.
குமரி மேற்கு மாவட்ட த்தில் மாணவர் ஒருவர் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்த பள்ளியை மீண்டும் திறந்து செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மாண வர்கள் தொடர்ந்து அங்கு கல்வி கற்க வேண்டும்.
குரல் கொடுப்போம்
தமிழை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. அது எந்த அரசாக இருந்தாலும் சரி. வேறு மொழியை திணிக்கும் நிலை ஏற்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது.
- விழிப்புணர்வு பேரணி நடைபெற்று சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியும், ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
முகாம் அலுவலர் முரளிதரன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள், மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், என். எஸ்.எஸ் மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.
முன்னதாக பொருளாளர் வினோத் வரவேற்றார்.நிறைவில் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.
- திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
புதுச்சேரி:
உள்ளாட்சி ஊழியர்க ளுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கவும், நிலு வையில் உள்ள ஊதியத்தை வழங்கவும் வலியுறுத்தி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், நேற்று பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கப்படும் என, முதல்- அமைச்சர் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். பொதுவான பணிநிலை அரசாணைப்படி உள்ளா ட்சி அமைப்புகளில் பணி புரியும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் ஒருமுறை நிகழ்வாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் சகாயராஜ் நன்றி கூறினார்.
- அலங்காநல்லூர்-பாலமேட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தி.மு.க. அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் அழகுராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோன்று பாலமேடு பேரூர் அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி துணை சேர்மன் ராமராஜ், ராஜவேல் பாண்டியன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலமேடு பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் உடனடியாக வழங்க வேண்டும்.
- பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பி னர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட தலைவர் கலைவாணன், இளவரசன் தலைமை தாங்கினர்.
அரசு ஊழியர் சங்க செயலாளர் அசோக்குமார், மாநில துணைத்தலைவர்.தமிழ்நாடு உயர்நிலை பள்ளி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகம் மாநில தீர்ப்பு குழு உறுப்பினர் தமிழ்நாடு வெங்கட்டு ஆகியோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் சண்முகம் சுந்தரம் வரவேற்றார்.
அப்போது தமிழக அரசு பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் சத்தியசீலன், இளையராஜா, ரெங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் 1.7.2022 முதல் 4 சதவீத அகவிலைப்படியை முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடன் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலி முறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செலிவியர்கள் உள்ளிட்ட வர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பணியாளர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
- பிச்சை பாத்திரத்தை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பருவகால பணியாளர்கள் பானை, தட்டில் பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் 2022-23 சம்பா பருவம் தொடங்கப்பட்டுள்ளதால் கொள்முதல் பணியை மேற்கொள்ள பணியா ளர்களின் பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்டு 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்யாத நெல்லில் ஏற்படும் எடை இழப்பை இயக்கம் செய்யாத துணை மேலாளர், உதவி மேலாளர், கண்காணிப்பாளர் ஆகியோ ரை பொறுப்பேற்க செய்ய வேண்டும்.
சேமிப்பு கண்களுக்கு இயக்கம் செய்யப்பட்ட நெல் இறங்கிய மறுநாள் சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு ஒப்புகை சீட்டினை வழங்க வேண்டும்.
பருவகால பணியாளர்களின் சம்ப ளத்தை பிரதி மாதம் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிச்சை பாத்தி ரத்தை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாநிலத் துணைப் பொருளாளர் பார்த்தசாரதி, மாநில செயலாளர் தயாளன், துணைச் செயலாளர் பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கவர்னர் ரவியை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- தமிழக ஆளுநருக்கு எதிராக விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
விழுப்புரம்:
சட்டத்திற்கு விரோதமாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு விரோதமாகவும் செயல்படும் கவர்னர் ரவியை பதவியில் இருந்து அகற்றக்கோரி விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி,மாநில செயலாளர் வழக்கறிஞர் தயானந்தம்,விழுப்புரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், சிவா, ராஜ்குமார், நாராயணசாமி, நகர மன்ற உறுப்பினர் சுரேஷ் ராம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் ஐயர் கண்டன உரையாற்றினார்கள் அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் ஆர்.டி. சீனிவாச குமார் தலைமையில் தமிழக ஆளுநருக்கு எதிராக விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
- ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அ.தி.மு.க சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட செய லாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் முன்னிலை வகித்தார்.மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன்,
எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மருது பாண்டியர் நகர் ராஜேந்தி ரன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
நாகப்பட்டினம்:
நாகூர் அரசு தேசிய துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், பள்ளி துணைத் தலைவர் அமுதா ஆறுமுகம், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேரணில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தி பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்படி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
முன்னதாக நடைபெற்ற விலையில்லா புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் இவற்றை சிறப்பு விருந்தினர்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.
தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.
உதவி தலைமை ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சித்ரா மேகலா, தேவி, தையல்நாயகி, செந்தில், பாலா சத்துணவு ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- பருத்தி பஞ்சை தலையில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணைத்தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையிலான விவசாயிகள் தலையில் பருத்தி பஞ்சுகளை கட்டி க்கொண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
பருத்தி குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் அறிவித்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் விவசா யத்திற்கு வாங்கிய தேசிய வங்கிகளின் கடன் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரம் மானியம் வழங்க வேண்டும்.
டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் விலையை குறைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தினர்.
இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- வட்டாட்சியர்அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டது.
சீர்காழி:
கள்ளக்குறிச்சி மாவட்ட த்தை சேர்ந்த வட்டாட்சியரை, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.
இதை கண்டித்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு வட்டத் தலைவர் ராஜீவ் காந்தி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் இளவரசன், மத்திய செயற்குழு உறுப்பினர் சுந்தரம், மாவட்ட துணை தலைவர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை யில் 39 அலுவலக பணியாளர்கள் வருகை பதிவேட்டில் கையொப்ப மிட்டு பணியை புறக்கணித்து வட்டாட்சியர்அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது கள்ளக்குறிச்சி மாவட்டம் வட்டாட்சியரை பணி நீக்கம் செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை கண்டி த்தும், அரசியல்வாதிகளுக்கு துணை போகும் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலர்கள், பணியா ளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பணிகள் பாதிக்கப்பட்டது.