search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230972"

    • உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்.
    • காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    திருவாரூர்:

    மன்னார்குடி அசேஷம் ராஜராஜன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.

    இவரது மனைவி பிரேமா. பிரேமா வுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 20.7.22 முதல் 24.07.22 வரை மன்னார்குடி பாலகிருஷ்ண நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றார்.

    இதற்கான செலவு ரூ.19,494-ஐ வழங்கக்கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.

    விண்ணப்பித்தும் காப்பீட்டுத்தொகை கொடுக்காததன் காரணமாக, ராஜேந்திரன் சென்னையில் காப்பீட்டு நிறுவனத்தின் மீது திருவாரூர் மாவட்ட குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் ஆணையத்தலைவர் சக்கரவர்த்தி மற்றும் உறுப்பினர்கள் லட்சுமணன், பாக்கியலட்சுமி ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர் அவர்கள் கூறியதாவது, புகார்தாரரின் மனைவி பிரேமாவுக்கு மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 19,494-ஐ இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

    புகார்தாரருக்கு எதிர்தரப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்துக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

    வழக்கு செலவு தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும்.

    இந்த உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து 6 வார காலத்துக்குள் மேற்படி தொகைகளை புகார்தாரருக்கு வழங்க வேண்டும்.

    தவறினால் வழக்கு செலவு தொகை நீங்கலாக மற்றவைகளுக்கு உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • மதுரையில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் 20-ந் தேதி நடைபெறுகிறது.
    • உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட சிறு, குறு தொழில் நிறுவன பிரதிநிதிகள் இன்று காலை நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தமிழக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்கள் சமீபத்தில் முதல்- அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மின் கட்டணங்களை குறைத்தால் மட்டுமே சிறுதொழில் நிறு வனங்கள் தங்கு தடையின்றி இயங்க முடியும். எனவே மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என மனு கொடுத்தோம்.

    ஆனால் அரசு எங்களின் கோரிக்கைகளை நிறை வேற்றவில்லை. எனவே சிறு, குறுந்தொழில் நிறுவ னங்கள் பாதிப்பு அடைந்து உள்ளது. இந்த நிலையில் திருச்சி செயற்குழு கூட்ட தீர்மானத்தின்படி தமிழகம் முழுவதும் வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு செய்தும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் மதுரை மாவட்ட த்தில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்புகள் பங்கேற்க உள்ளன. அன்றைய தினம் காலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    தாழ்வழுத்த மின் சாரத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுககு, 50 கிலோவாட் வரை ரூ.35 ஆகவும், 51 முதல் 112 கிலோவாட் வரை ரூ.75 ஆகவும் குறைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். உச்ச பயன்பாடு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத் திற்கு 25 சதவீத மின் கட்டண உயர்வை 15 சதவீதம் ஆக குறைப்பது தொடர்பாக அரசு உத்தரவு வெளியிட்டு உள்ளது. ஆனாலும் இதனால் பெரிய அளவில் பலன் இல்லை.

    தமிழக மின்வாரியத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் கால தாமதப் படுத்து கின்றனர். லட்சக்கணக்கில் பணம் செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பின் அளவை குறைக்க முடியும் என்று தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனால் எண்ணற்ற சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நகர பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளை 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற உத்தேச திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் சிறு தொழில் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.

    கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு, குறுந் தொழில் நிறுவனங்களை மீட்பது தொடர்பான உயர் மட்டக் குழுவின் 50 பரிந்துரைகளை உடனடி யாக செயல்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக் ககளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி ஒரு நாள் கதவடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார்

    நாகர்கோவில் :

    சுசீந்திரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் தனது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

    சிகிச்சைக்காக பணம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். அதில் ஒரு பகுதியை மட்டும் இன்சூ ரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. மீதி பணத்தையும் தருமாறு கேட்டதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

    இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சைக் காக ஏற்கனவே செலவழித்த பணத்தில் மீதித் தொகையான ரூ.20,000, நஷ்ட ஈடு ரூ.5,000 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 ஆக மொத்தம் 27,500-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
    • 11 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    பின்னர் அவர் பேசியதாவது:

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்த 101-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமில் 18 வயது முதல் 40 வரை உள்ள 5ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ படித்த இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்தம் 2012-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 301 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன .

    342 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்கும், 11 நபர்கள் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.எல்.ஏ, மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன், கல்லூரி செயலர் கணேசன், தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் உதவி இயக்குனர் ரமேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் சிவா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நகர தி.மு.க. சார்பில் திருத்துறைப்பூண்டியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ஞானி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் சிக்கந்தர், மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர். இதில் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 68 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    • நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் பினாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

    சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர் களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பைனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரமும், துணிக்கடை களில் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிறுவனங்கள் வாரியாக உள்ள புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைக்க வேண்டும்.
    • பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியிடத்தில் பாலியல் வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2013 குறித்து அரசு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவன ங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பயிற்சி நிலைய ங்கள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள், தொழி ற்சாலைகள், நிதி நிறுவனங்கள், விற்பனை கூடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள், விளையாட்டு அரங்கங்கள் ஆகிய நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் பணிபுரியும் இடங்களில், மகளிர்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்கள் தடுக்கவும், புகார் தெரிவிக்கவும் நிறுவனங்கள் வாரியாக உள்ளக புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைத்திட வேண்டும்.

    பணிபுரியும் இடத்தில் மூத்த பெண் பணியாளரை தலைவராக நியமனம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் பணிபுரியும் அலுவலகம், பிறதுறைகள் , பிற கிளைகள் , பிற பணியிடங்களில் இருந்து நியமிக்கலாம்.

    பெண்கள் சார்ந்த பிரச்ச னைகளை முன்னெடுத்து அவற்றை களை ந்திட விருப்பம் உடையவர் (அல்லது) சமூக பணிகளில் அனுபவம் (அ) சட்ட அறிவு பெற்ற இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். பெண்களுக்கான சமூக பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனம் /மகளிர் சங்கங்களை சார்ந்த அல்லது

    பாலியல் வன்கொடு மைகள் குறித்தவிழிப்பு ணர்வுடைய நபர்களில் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும். புகார் குழு அமைத்த நிறுவனங்கள் அதன் விவரத்தை வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.203, 3-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். இந்த புகார் குழு அமைக்காத நிறுவனத்திற்கு பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.
    • நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000-ம், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பு தமிழ்நாடு அரசால்
    வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட
    பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும்உ பயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர் களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரமும், துணிக்கடைகளில் பயன்படுத்தினால்
    ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000-ம், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமானது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முகாமில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இந்த முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்று, ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று கொள்ளலாம்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த வட்டகரையை சேர்ந்தவர் மேரி புஷ்பராணி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்திடம் கியாஸ் சிலிண்டர் முன் பதிவு செய்திருந்தார். இதற்காக கொடுத்த கட்டண ரசீதில் சிலிண்டரின் விலை ரூ.969 மற்றும் ரூ.15 ஆக மொத்தம் ரூ.984 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சிலிண்டரின் விலை, வரிகள் உள்பட சேர்த்து ரூ.969 மட்டுமே. எனவே ரூ.15 அதிகமாக பெற்றது நேர்மையற்ற வணிக நடைமுறை என அவர் நிறுவனத்திடம் கூறினார். மேலும் தன்னிடம் கூடுதலாக வாங்கிய ரூ.15-ஐ திருப்பி தர வேண்டுமென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் மேரி புஷ்பராணி கேட்டார்.

    அதோடு பல நுகர்வோர் குறைதீர்க்கும் அரசு அமைப்புகளிடமும் இது குறித்து புகார் செய்தார். மேலும் வக்கீல் மூலம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னரும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேரி புஷ்பராணி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர்.

    இதைத் தொடர்ந்து கியாஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மேரி புஷ்பராணிக்கு நஷ்ட ஈடு (அபராதம்) ரூ.7500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் மேரி புஷ்பராணியிடம் கூடுத லாக வசூலிக்கப்பட்ட ரூ.15 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.2,500 என மொத்தம் ரூ.10,015-ஐ ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தர விடப்பட்டது.

    • 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும்.
    • இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் பேருந்து நிலையத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ திரும்ப பெற வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார்.

    அப்போது அவர் பேசுகையில், தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி மும்மொழி கொள்கை என்பது குழந்தைகளின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழிக் கல்வியை கேள்விக்குறியாக்கும், 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக அமையும்.

    இந்த கொள்கையின்படி தற்போதுள்ள 850 பல்கலைக்கழகங்கள் மற்றும் 48,000க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இனி 15000 உயர்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே தேசிய கல்விக் கொள்கை 2020 உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

    தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கமலநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், வட்டாரத் தலைவர் ராஜேஷ் மற்றும் அனைத்து ஆசிரிய சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் திரளாகக்கலந்து கொண்டனர்.

    இதேபோல் தேசியக் கல்விக்கொள்கை 2020 திரும்பப்பெறவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழி புதிய பேருந்துநிலையத்தில் மாநில துணைத்தலைவர் நா.அசோக்குமார் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

    • வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தினார்.
    • பல நாட்களாக மேற்கூறிய நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு கடன் தொகையும் வழங்கப்படவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் தனிநபர் கடன் வாங்க முடிவு செய்தார். அந்த நேரத்தில் அவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

    அதில் வெளியூரில் உள்ள எங்களது நிறுவனம் மூலம் குறைந்த வட்டிக்கு தனிநபர் கடன் தருகிறோம்.

    அதற்காக வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய அந்த அரசு ஊழியர் குறுந்தகவலில் உள்ள லிங்கை திறந்து அதில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தினார். ஆனால் தனி நபர் கடன் கிடைக்கவில்லை.

    மீண்டும் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதிலும் தனிநபர் கடன் தருவதாக கூறப்ப ட்டிருந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட வங்கி கணக்கில் மீண்டும் சில தவணைகளாக ரூ.3 லட்சத்து 39 ஆயிரம் செலுத்தினார்.

    ஆனால் பல நாட்களாக மேற்கூறிய நிறுவனத்தில் இருந்து எந்த ஒரு கடன் தொகையும் வழங்க ப்படவில்லை.

    அப்போது தான் ஏமாற்ற ப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்தார். மொத்தம் ரூ‌.5 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.இது குறித்து தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்‌‌.

    அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×