என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் வேதனை"
- 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பி ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
40 நாட்களில் அறு வடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயி கள் முள்ளங்கி சாகுபடி செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக நல்ல மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியது.
இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் மாரண்டஹள்ளி, காரிமங்க லம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் முள்ளங்கி வரத்து குறைந்து விலை அதிகரித்து கிலோ ரூ.25 -க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது முள்ளங்கி வரத்து அதிகரித்து விலை கடும் விலை சரிந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.2 முதல் 4 ரூபாய் வரை அடிமாட்டு விலைக்கே வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் அறுவடை செய்யும் கூலி கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். கடந்த சில தினங்களுக்கு முன் நல்ல விலைக்கு விற்கப்பட்ட முள்ளங்கி தற்போது ஒரு கிலோ 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியும், தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது.
- அவசர, அவசரமாக விளை நிலங்களில் நெற்ப யிற்களை அழிப்பது நியாயம்தானா? எனவும் கேள்வி.
ஓசூர்,
பெங்களூர் விமான நிலையம் முதல் ஓசூரை சுற்றி எஸ்.டி.ஆர் ஆர். என்னும் சேட்டிலைட் ரிங்ரோடு, 21 கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமையவுள்ளது.சேட்டிலைட் ரிங்ரோடு அமைக்க திட்ட மதிப்பீடு முடிந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியும், தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில்,ஓசூர் அருகே கொத்தூர் கிராமத்தில் 6 வழிச்சாலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் தற்போது விவசாயிகள் நெற்பயிரிட்டு அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், அதிகாரிகள் ஜேசிபி வாகனத்தின் மூலம் சாலை பணிகளுக்காக, நெல்வயலில் பயிர்களை அழித்திருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் அறுவடைக்காக 1 மாத கால அவகாசம் கேட்டும், அதிகாரிகள் சிறிதும் செவி சாய்க்காமல் பயிர்களை அழித்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாலை பணிகளை தொடங்கவே, இன்னும் பல மாதங்களாகும் என கூறப்படும் நிலையில், அவசர, அவசரமாக விளை நிலங்களில் நெற்ப யிற்களை அழிப்பது நியாயம்தானா? எனவும் கேள்வி எழுப்பியுள்ள விவசாயிகள், அறுவடைக்கு பிறகு பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- கால்வாயின் கடைமடையில் பாசன பகுதிக்குட்பட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து 200 கிமீ செல்லும் கீழ்பவானி பிரதான கால்வாயின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே கடந்த அக்ேடாபர் மாதம் 30-ந் தேதி உடைப்பு ஏற்ப ட்டதால் பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
குறைவான அளவு திறக்கப்படும் இந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தண்ணீர் பிரச்சனையால் தாமதமாக கடைமடை பகுதியில் நெல்சாகுபடி செய்ததாக தெரிவித்த விவசாயிகள், கால்வாய் உடைப்பால் கடந்த 10 நாட்களாக தண்ணீர் முற்றிலும் கிடை க்காத நிலை ஏற்பட்டதாக கூறினர்.
மேலும் குறைவான அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராது என்றும் தெரிவித்தனர். கால்வாயின் கடைமடையில் பாசன பகுதி க்குட்பட்ட பாண்டி பாளையம், குட்டக்கா ட்டுவலசு, கணக்க ம்பாளையம், குலவிளக்கு, காகம் உள்ளி ட்ட பகுதி களில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதாக விவசா யிகள் தெரிவித்துள்ளனர்.
கடைமடை பகுதிக்கு தண்ணீர் விரைந்து கிடைக்கவும், நெற்பயிர்களை பாதுகாக்கவும் கால்வாயில் முழு கொள்ளளவான 2 ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் முழுமையாக கிடைத்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், இல்லை யெனில் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு செலவு செய்து நடவு செய்த பயிர்கள் வீணாகிவிடும் என்றும் வேதனை தெரிவித்தனர்.
- அபிராமம் பகுதியில் மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
- இதனால் விவசாயிகள் மனவேதனையில் உள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதி வானம் பார்த்த பூமியாகும். இங்கு பருவமழையை மட்டுமே எதிர்பார்த்து விவசாயிகள். நெல், மிளகாய் உளுந்து, பருத்தி போன்ற பயிர்களை சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்கின்றனர்.
அபிராமத்தை சுற்றி உள்ள அச்சங்குளம், காடனேரி, வல்லகுளம், நகரத்தார்குறிச்சி, பாப்பனம், நரியன், முத்தாதிபுரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 45 நாட்களுக்கு முன் விதைக்கப்பட்ட நெல், பருத்தி உளுந்து, மிளகாய் பயிர்கள் வளர்ந்து பயன்தரக்கூடிய நிலையில் மழை பொய்த்ததால் அந்த பயிர்கள் கருகி வருகின்றன.
இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து விவசாயி கர்ணன் கூறுகையில், இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.
இந்த ஆண்டு பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து கண்மாய்க்கு வரும் கால்வாயை தூர்வாரி அபிராமம் மற்றும் சுற்றுவட்டார கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவந்து விவசாயம் செழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- 2 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாதா ராவ் ஏரியும் முழுவதுமாக நிரம்பியது.
- நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும்அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில்,கீரை வகைகள், முள்ளங்கி,கத்தரிக்காய், பீட்ரூட், வாழை மற்றும் கொத்தமல்லி உள்ளிட்டவிவசாய பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாதா ராவ் ஏரியும் முழுவதுமாக நிரம்பியது.
ஆனால், உபரி நீர் வெளியே செல்ல வழியின்றி, சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்களில் 3 அடிக்கு மேல் ஏரி நீர் சூழ்ந்துவிட்டது. 2 மாதங்களாகியும் விளை நிலங்களில் உள்ள தண்ணீர் வற்றவோ, வெளியேறவோ வழி இல்லாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து மிகுந்த நஷ்டத்திற்கு தள்ளப்பட்டதாக, அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை என்றும், தற்போது இரண்டு மாதங்களாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயிர்கள் மழை நீரில் அழுகி தற்போது அந்த தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன் புழுக்கள் உற்பத்தியாகி வருவதாகவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும்அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறினர்.
மேலும், 25 வருடங்களாக நிரம்பாத ஏரி தற்போது பெய்த மழையினால் நிரம்பியிருப்பது, ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் ஏரியின் உபரி நீர் வெளியேற வழியின்றி, விவசாய பயிர்களை சூழ்ந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையை தருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம், உடனடியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற வழிவகை செய்து, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காரியாபட்டி, நரிக்குடி பகுதியில் நெற்கதிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
- காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நரிக்குடி பகுதிகளில் மழை பெய்தும் வைகை ஆற்றில் இருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கட்டனூர், சீனியேந்தல், இருஞ்சிறை, உலக்குடி, மானூர், மறையூர், நரிக்குடி உள்பட 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பிய காரணத்தினால் விவசாயிகள் நெல் நடவு செய்தனர்.
தற்போது நெல் பரிச்சல் ஏற்படும் தருவாயில் உள்ளது. இந்த நேரத்தில் நரிக்குடி அருகே உள்ள சீனியேந்தல், கட்டனூர் காரியாபட்டி அருகே உள்ள டி.வேப்பங்குளம், எஸ்.கடமங்குளம், உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ளவிவசாய நிலங்களில் நெற்கதிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். காட்டுப்பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து காவிரி, வைகை, கிருமால் நதி, குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மச்சேசுவரன் கூறியதாவது:-
நரிக்குடி பகுதியில் கடந்த 20 ஆண்டு காலமாக எந்த ஒரு கண்மாயும் நிரம்பாத நிலையில் இருந்து வந்தது. கடந்த 2,3 வருடங்களாக கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பியதற்கு பின்பு வயல் பகுதியில் சீமைகருவேல் மரங்கள் அடர்ந்திருந்ததை அப்புறப்படுத்தி நெல் நடவு செய்து உள்ளனர்.
விவசாயிகள் வட்டிக்கு வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் நெற்பயிர்களை நாசம் செய்து வருகிறது. காட்டுப் பன்றிகளை ஒழிக்காவிட்டால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். காட்டுப்பன்றிகளை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகாலை கரையை கடந்ததின் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து கன மழை பொழிந்தது.
- விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டா ரங்களில் மாண்டஸ் புயல் அதிகாலை கரையை கடந்ததின் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்து கன மழை பொழிந்தது. இந்நிலையில் செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் செஞ்சி, ஊரணிதங்கள், அனந்தபுரம், மேல்ம லையனூர், அவலூ ர்பேட்டை ஆகிய பகுதி களில் பயிரிடப்பட்ட சுமார் 200 ஏக்கர் நெற்பயி ர்கள் நீரில் மூழ்கி காற்றின் வேகத்தன்மையால் நெல் பயிர்கள் சாய்ந்தது. இத னால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்து ள்ளனர்.
இந்நிலையில் ஊரணி தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய விளைநிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்யிர்கள் நீரில் மூழ்கியதால் கடும் வேதனை அடைந்துள்ளனர். ஆறு மாதமாக பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த நெற்கதி ர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு வேளாண்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர்.
- மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே அகரகோட்டாலம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பரவில் மக்கா ச்சோளம் பயிர் செய்துள்ள னர். தொடர்ந்து விவசாயிகள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி, உரமிட்டு பராமரித்து வந்தனர். இந்நிலையில் மக்காச்சோள பயிரில் கடந்த சில வாரங்க ளாக படைப்புழுக்கள் தாக்குதல் காணப்பட்டது. இதை யொட்டி விவசாயிகள் பயிர்களுக்கு மருந்து தெளித்த னர். இருப்பினும் மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் குறையவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அகர கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 44) ஆட்டோ டிரைவர். இவர் தனக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் கடந்த 60 நாட்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மருந்து தெளித்தும் பயனில்லை புழுக்கள் சாகாமல் உயிருடன் இருக்கிறது.
ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் செலவு செய்து பயிர்களை பராமரித்து வந்த நிலையில் படைப்புழுக்கள் தாக்குதலால் பயிர்கள் நாசமாகி போனது. எனவே சம்மந்தப்பட்ட வேளாண்மை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் மேலும் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மருந்து வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- குறிஞ்சிப்பாடியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன.
- சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருகிறது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடிக்கு அருகில் உள்ள கல்குணம் பூதம்பாடி ஓணாங்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்ததால் நீரில் மூழ்கி நெல் பயிர்கள் மடிந்தன.
தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் சம்பா நெல் பயிர்களை புகையான் பூச்சி படையெடுத்து தாக்கி அழித்து வருவதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இந்த புகையான் பூச்சிகளை அழிக்க பல கம்பெனிகளின் மருந்துகளை தெளித்தும் பயனில்லை. இது தொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்க முன்வரவில்லை.
எனவே, வேளாண்துறை உயரதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளை காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல் குணம்மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வருவதால் தனி கவனம் செலுத்தி விவசாய நிலங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
- மிளகாய், பருத்தி செடிகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
- வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அபிராமம்
இந்த ஆண்டு பருவமழை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்த நிலையில் மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் என்ன செய்வது? என்ற மனகுழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் பகுதியில் உள்ள மிளகாய், பருத்தி செடிகளை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருகிறது. காட்டு பன்றிகளுக்கு பயந்து இந்த ஆண்டு நிலக்கடலை விவசாயத்தை விவசாயிகள் பயிரிடவில்லை.
காட்டு பன்றிகள் தொல்லை குறித்து வேளாண் மற்றும் வனத்து றையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டு பன்றிகளால் பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- அபிராமம் பகுதியில் உலர்களம் இல்லாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
- போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள தரைக்குடி, வல்லகுளம் தேவநேரி அச்சங்குளம் உள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விவசாயம் செய்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மிளகாய் பயிரிட்டனர்.
இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லததால் விவசாயிகள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டனர். போர்வெல் அமைத்து தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தனர். இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் போதிய மழை யின்றி செடியிலேயே மிளகாய் சோடையாகி போனது. இதனால் விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து மிளகாய் பறித்து உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிராமங்களில் உலர்களங்கள் வசதி இல்லாததால் விவசாயிகள் நிலம், சாலையோரம் கால்வாய் புறம்போக்கு வாய்க்கால்புறம்போக்கு போன்ற இடங்களில் மிளகாய் மற்றும் சிறுதானியங்களை உலர வைக்கின்றனர். உலர்களம் இல்லாமல் மண் தரையில் உளர வைப்பதால் மிளகாயின் தரம் குறைவதால் மிளகாய் விலை குறையும் நிலை உள்ளது.
இதனால் அபிராமத்திற்கு உள்பட்ட கிராமங்களில் உலர் களங்கள் அமைக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தக்காளியை பதப்படுத்தி இருப்பு வைக்க போதிய வசதி இல்லை. அறிவிப்பு வெளியிடப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில வாரங்க ளாகவே தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 1 கிலோ ரூ.10க்கும் கீழ் சென்றதால் விவசாயிகளே வாகனங்களில் வைத்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம், அம்பி ளிக்கை, இடையகோட்டை, வடகாடு, கேதையறும்பு, விருப்பாச்சி, தங்கச்சி யம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்ய ப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படு கிறது.
பின்னர் நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்க ளுக்கும் கேரள போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடந்த 1 மாதமாகவே மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.70க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
1 கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். தக்காளியை பதப்படுத்தி இருப்பு வைக்க போதிய வசதி இல்லை என்றும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.