என் மலர்
நீங்கள் தேடியது "தார் சாலை"
- கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.
- பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது.
கடலூர்:
பண்ருட்டி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி முதல் பனிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லுாரி வரையில் பைபாஸ் பகுதியில் வராததால்அப்பகுதிக்கு தனியாக தேசிய நெடுஞ்சாலை நகாய் பிரிவின் சார்பில் தனியாக ஒப்பந்த பணி கோரப்பட்டு பணிகள் துவங்கியது. இப்பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலைகள் தரமில்லாமலும், ஒரே நீள,அகலத்தில் போட ப்படவில்லை. மாறாக பள்ளமும், மேடுமாகவும், பழைய தார்சாலை அளவில் பாதியளவே பல இடங்களில் தார் சாலைபோடப்பட்டுள்ளன.
அரைகுறையாக போடப்பட்ட தார்சாலையும் தரமற்ற முறையில் உள்ளது. இதனால் பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது. தரமற்ற சாலைகள் போட்ட தேசிய நெடு ஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சி யினர், வியாபாரிகள் போரா ட்டம் நடத்திட தயாராகி வருகின்றனர். இதனால் தரமற்ற சாலையை சீரமைத்து, சீராக சாலை அமைத்திட மாவட்ட நிர்வாகம், நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சக்கிமங்கலம் பகுதியில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர்.
மதுரை
மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- சக்கிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்மேடு பகுதியில் எம்.ஜி.ஆர் நகர், பி.டி.ஆர். நகர், நரிக்குறவர் காலனி, அன்னை இந்திரா நகர், சத்யா நகர், அம்பேத்கர் நகர், அஞ்சுகம் நகர் ஆகியவை உள்ளன. இங்கு 5 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அம்பேத்கர் நகர் முதல் அஞ்சுகம் நகர் வரை தார் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. போக்குவரத்து சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.
எனவே அம்பேத்கர் நகருக்கு வரும் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் ஆகியவை வருவதில்லை. அம்பேத்கர் நகரில் கடந்த 2016-ம் ஆண்டு எம்.பி. நிதியில் தார்ச்சாலை போடப்பட்டது. அதன்பிறகு அங்கு எந்தவித பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. கல்மேட்டில் உள்ள சிலைமான் புறக்காவல் நிலையம் செயல்படாமல் உள்ளது. 4 ரோடு சந்திக்கும் இடத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும்.
அம்பேத்கர் நகரில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும், வணிக வளாகம் கட்டிடம் மற்றும் புதிதாக பள்ளிக்கூடம் கட்ட வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மண் சாலைகள் தார் சாலைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சாலைகள் பல ஆண்டுகளாக மண் சாலைகளாகவே இருந்து வந்தது. நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் பதவியேற்றவுடன் நகரில் அடிப்படை வசதிகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார். அதன்படி நகராட்சி பகுதியில் உள்ள 93 மண் சாலைகளை ரூ. 653.95 லட்சம் மதிப்பில் தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
23-வது வார்டில் நடந்து வரும் சாலை பணிகளை நகர் மன்றத்தலைவர் சுந்தரலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் தனலட்சுமி, நல்லுப்பாண்டி ஆகியோர் பார்வையிட்டனர்.
- தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது,
- பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகத்தில் இருந்து உதயாமாம்பட்டு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையொட்டி அவர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தப் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தற்பொழுது குண்டும், குழியுமாக உள்ளதால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. சாலை மிகவும் மோசமாக உள்ளதால் அவசரத்திற்கு ஆட்டோக்கள் கூட சவாரிக்கு வர மறுப்பதாகவும் ஆதங்கத்துடன் எம்.எல்.ஏ விடம் கூறினர். இதனை தொடர்ந்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலரை தொலைபேசி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஏன் இவ்வளவு நாட்களாக புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை? புதிய தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேட்டார். அதற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3.5 கி. மீ தூரத்திற்கு ரூ. 2 கோடியே 24 லட்சம் நிதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டு ள்ளதாகவும், விரைவில் அதற்கான ஆணை பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அதிகாரி கூறினார். இதனை தொடர்ந்து புதிய தார்ச்சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரியிடம் அறிவுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர், கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகலூர் கிருஷ்ணமூர்த்தி, நகர துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, நிர்வாகிகள் காமராஜ் ஏழுமலை, சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மதுரை மாவட்டத்தில் ரூ.5.28 கோடி மதிப்பில் தார் சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
- இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைச்சர் மூர்த்தி ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் 3 தார் சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்ற திட்டப்பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ1.37கோடி மதிப்பீட்டில் 1.6கி.மீ நீளம், மாங்குளம் கிராமத்தில் ரூ2.04கோடி மதிப்பீட்டில் மாங்குளம் - காந்திநகர் வரை 2கி.மீ நீளம், வெள்ளியன்குன்றம் புதூர் கிராமத்தில் ரூ1.87கோடி மதிப்பீட்டில் விபுதூர் முதல் அந்தமான் சாலை வரை 2கி.மீ நீளம் என மொத்தம் ரூ5.28கோடி மதிப்பீட்டில் 5.6கி.மீ நீளம் உள்ள 3 தார்சாலைகள் மேம்பாட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் வேண்டி பொது மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மணிமேகலை, சோமசுந்தரபாண்டியன், வழக்கறிஞர் கலாநிதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் கலந்து கொண்டார்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு பகுதியான வண்ணான்விளை பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், பகுதி செயலாளர் ஜீவா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
- மாநகராட்சி கவுன்சிலர் தேவி மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 21,23-வது வார்டிற்குட்பட்ட கொத்தூர் முதல் கொத்தகொண்டப்பள்ளி பிரதான சாலை, 100அடி சாலை பகுதியில் மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை புதுப்பித்தல் பணியை, ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கவுன்சிலர் தேவி மாதேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார்.
- சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றி யத்தை சேர்ந்த பள்ளியம் பட்டு- அப்பம்பட்டு சாலை ரூ.32 லட்சத்தில் தார் சாலையாக அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி வரவேற் றார். நிகழ்ச்சியில் சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன் பொதுகுழு உறுப்பினர் மணிவண்ணன் ஒப்பந்ததாரர் கோடீஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவர் முன்வர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பால கிருஷ்ணன் ஒன்றிய நிர்வாகி கள் வாசு, அய்யா துரை, இக்பால்சையீத் முன்னாள் கவுன்சிலர் தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியின் 7-வது வார்டுக்குட்பட்ட தெலுங்கு செட்டி தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் மேரி ஜெனட் விஜிலா, ஜெயவிக்ரமன், கவுசிகி, தொழில் நுட்ப அலுவலர் ரவி, பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி அகஸ்தீசன், வேல்முருகன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- வேலூர் டவுன் பேரூராட்சிக்கு உட்பட்ட அனிச்சம்பாளையம் 18-வது வார்டில், 2ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- காவிரி ஆற்றின் நடுவே புகளூர் தடுப்பணை பணிகள் காரணமாக கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் அப்பகுதி சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வாழவந்தியில் இருந்து வள்ளிபுரம் செல்லும் சாலையில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு குற்றபுல னாய்வு துறை ஈரோடு உட்கட்ட டி.எஸ்.பி., சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 160 மூட்டையில் 9 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடத்தல்
விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த தேவேந்திரன் (52), பன்னீர்செல்வம் (60) ஆகியோர் ரேசன் அரிசியை கடத்திக் கொண்டு கடலூர் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கடத்தப்பட்ட 9 டன் ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய தேவேந்தி ரன், பன்னீர்செல்வம் ஆகி யோரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.
- புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இருந்து சி. என். பாளையம் செல்லும் சாலையை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 59.08 லட்சம்மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கும், துத்திப்பட்டு கிரா மத்தில் இருந்து இருளர் காலனி மயான பாதை செல்லும் சாலையை ரூ 46 லட்சம்மதிப்பீட்டில் தார்சாலையாகஅமைப்பதற்கும்,துத்திப்பட்டு முதல் கிருஷ்ணா புரம் வரை செல்லும் சாலையை ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர்நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அலுமேலுகிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மங்கை முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சிங்,வனக்குழு தலைவர் நடராஜன்,அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் பிரதாப், முத்து, பாண்டியன், சுரேஷ், சரவணன் , அரசு ஒப்பந்த தாரர் சரவணன், செஞ்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பழனி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
- கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு போடப்பட்டது.
- கைகளில் எடுத்தாலே தார்ச்சாலை பெயர்ந்து வரும் அளவுக்கு சாலை போடப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி 13 வது வார்டு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை மற்றும் சாய் ராஜ் ஆகியோர் கூறுகையில்:-
பல்லடம் நகராட்சி 13வது வார்டு பகுதியில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 84 லட்சம் மதிப்பீட்டில் தார் ரோடு போடப்பட்டது. இந்த நிலையில், தார் சாலை தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளது.
மேலும் பழைய தார் சாலையை முறையாக அகற்றாமல் போடப்பட்டுள்ளதால், தார் சாலை பாலம்,பாலமாக பெயர்ந்து வருகிறது. கைகளில் எடுத்தாலே தார்ச்சாலை பெயர்ந்து வரும் அளவுக்கு சாலை போடப்பட்டுள்ளது. எனவே தரமற்ற தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.