என் மலர்
நீங்கள் தேடியது "அவதி"
- பெண்கள், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்கப்படுமா? பழுதான பஸ்களால் தினமும் அவதிபடும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
- தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.
மதுரை
மதுரையில் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்திலும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் தினமும் வேலைக்கு செல்லும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் சென்று வருகின்றனர். தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.
மதுரையில் ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்படு கின்றன. காலை, மாலை நேரங்களில் அதிக அள வில் பயணிகள் கூட்டம் இருக்கும். தற்போது உள்ள பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.
மதுரையில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்கள் ஓருசில பஸ்கள்தான் நன்றாக உள்ளன. பல பஸ்கள் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இருந்த போதிலும் பயணிகள் அவைகளின் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.
பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.
தனியார் பஸ்கள் பயணி களை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்கள் ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிருக்கு தனி பஸ்கள் இயக்கவேண்டும். மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறு கின்றனர்.
- போதிய இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் அலுவலகம் அமைந்துள்ளதால் பொது மக்களும், அலுவலர்களும் அவதி அடைந்து வந்தனர்.
- சீர்காழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 கோடியே மதிப்பில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
போதிய இடவசதி இல்லாமல் குறுகிய இடத்தில் அலுவலகம் அமைந்துள்ளதால் பொது மக்களும், அலுவலர்களும் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சீர்காழி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் பூமி பூஜையில் பங்கேற்று பணியினை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் ரவி, நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது,
- மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை
கடலூர்:
திட்டக்குடி அருகே வாகையூர்,ஆக்க னூர், பாளையம், இடைச்செ ருவாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று இரவு சுமார் 11.30 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இன்று காலை 9.30 மணி வரை மின்சாரம் இல்லாமல் பள்ளி செல்லும் மாணவ மாணவர்கள், குழந்தைகள், முதியோர் உட்பட மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
நேற்று மழை காற்று அதிக அளவில் இல்லை, இருப்பினும் மின்சாரம் நேற்று இரவு முழுவதும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் தங்கு தடை இன்றி பொது மக்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- திருமங்கலம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
- மழைநீரை அப்புறப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சப்பட்டி கிராமத்தில் சிவன் நகர், இந்திராநகர் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. இப்பகுதி விரிவாக்க பகுதி என்பதால் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் அமைத்து தராமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் உச்சப்பட்டி கண்மாயில் தண்ணீர் நிரம்பியதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்வது வழக்கமாக உள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை இப்பகுதியில் மழை வெள்ளம் புகுந்து குடியிருப்பு வாசிகள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 4 மாதமாக தண்ணீர் வற்றாததால் இப்பகுதி மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாகவும், விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் நுழைவதாகவும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
இது தொடர்பாக பலமுறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
மழைநீரை அப்புறப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனைஅடைகின்றனர்.
- வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது
கடலூர்:
தமிழகத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மையான திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளது. இதுதவிர திருப்பாடல் பெற்ற பாடலீஸ்வரர் கோவிலும் இங்கு உள்ளது.இப்படிப்பட்ட அற்புத ஸ்தலங்களால் அமையப் பெற்றது கடலூர் மாவட்டம். மேலும் கடலூர் மாநகராட்சியாக மாற்றப்பட்டு பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அதிகாரி களால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கடலூரில் சில்வர் பீச், பெரிய மால் எண்ணிலடங்காத சிறிய மற்றும் பெரிய அளவிலான விலை குறைந்த விலை அதிகமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் வேறு எந்த பகுதியை காட்டிலும் கடலூர் மாவட்டம் முதன்மையாக உள்ளது. மேலும் விழுப்புரம், திண்டிவனம், சென்னை, திருவண்ணாமலை, விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடலூர் மாவட்டம் வழியாகத்தான் செல்ல முடியும். மேலும் கடலூர் துறைமுக பகுதி, தேவனாம்பட்டினம் பல்வேறு மீனவ குடும்பங்க ளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
இப்படிப்பட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் சாலைகளில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்கள் சாலைகளில் நீண்ட நாட்களாக உள்ள பள்ளத்தால் முகம் சுழித்து மன வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக கடலூரில் இருந்து முதுநகர் மற்றும் கடலூரில் இருந்து புதுவை மாநிலத்திற்கு செல்லக்கூடிய சாலை மிக மோசமாக நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலை மிகவும் சேதம் அடைந்து பெரும் பள்ளங்களாக உள்ளதால் அதில் செல்லக்கூடிய வாகனங்களால் சிறிது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாலையிலிருந்து வரும் புகையினால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நோய்வாய் ஏற்படும் வாய்ப்பு அளவுக்கு அதிகமாக உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் பள்ளத்தினால் வாகனங்களும் பெரிதும் சேதமடைகிறது நீண்ட நாட்களாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்ய பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் வேதனை அளிக்கிறது. எனவே அதிகாரிகள் இதில் தனிக்கவனம் செலுத்தி சாலைகளில் உள்ள குண்டு குழியுமாக உள்ள பெரிய பள்ளங்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுகின்றனர்.
- வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
- மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
மதுரை
மதுரை-திருப்ப ரங்குன்றம் சாலையில் உள்ள வசந்தநகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தொடர்ந்து வெளியேறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி கடை கள் மற்றும் வீடுகள் முன்பு குளம் தேங்கி இருந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது.
இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகள் முன்பு சாக்கடை நீர் வராத அளவிற்கு மணலை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ள ஒரு தெரு முழுவதும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதே பகுதியில் உள்ள கடைகளையும் வியாபாரிகள் திறக்க முடியாமல் மூடி வைத்துள்ளனர்.
மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சாக்கடை நீர் பிரச்சினைக்கு உடன டியாக மாநகராட்சி தீர்வு காணாவிட்டால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
- விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதி.
- நெல் மூட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது.
இந்த கொள்முதல் நிலையத்திற்கு செல்ல மண்சாலை தற்காலிக மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறுவை, சம்பா அறுவடை நேரங்களில் பருவம் தவறி செய்யும் மழையால் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்று சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு எடுத்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கடந்த 2016 -ம் ஆண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.
இடையாத்தங்குடி, கணபதிபுரம், சேஷமூலை, கிடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிற்கு சாகுபடி நிலங்கள் உள்ளது.
இங்கு அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் முழுவதும் இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் கொள்முதல் செய்ய ப்படும்.
இந்த நிலையில் சாலை மண்சாலையாக இருப்பதால் நெல் மூட்டைகள் ஏற்றி வரும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கிறது.
இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்களை விடுத்துள்ளனர்.
- புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் சதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.
- இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம்– உளுந்துார்பேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில், வாழப்பாடி பேரூராட்சிக்கு முத்தம்பட்டியில் இருந்து மத்துார் வரையிலான ஏறக்குறைய 4 கி.மீ., துாரத்திற்கு இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
இச்சாலையில் இருந்து, போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த வாழப்பாடி– தம்மம்பட்டி சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளையும் இணைக்கும் வகையில், சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் நிறுவன பங்களிப்புடன் தன்னிறைவு திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேரூராட்சி காமராஜ் நகரில் இருந்து புதுப்பாளையம் வரை, புறவழிச்சாலையின் இருபுறமும் இணைப்புச்சாலை அமைக்கப்பட்டது.
தம்மம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் இச்சாலை வழியாகவே சேலம்-–உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை அடைகின்றன. இதுமட்டுமின்றி, சிங்கிபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்களும், வாழப்பாடி நகர்ப்புற குடியிருப்பு பகுதிக்கு செல்லும் அனைத்து ரக வானங்களும் இந்த இணைப்புச் சாலையிலேயே சென்று வருகின்றன.
இந்நிலையில், புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் கழிவுநீர், வெளியேற போதிய வடிகால் வசதியில்லாததால், தெற்கு புறத்திலுள்ள இணைப்புச் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த இடத்தில் சாலை பெயர்ந்து குண்டு குழியுமானதோடு, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக பழுதடைந்து கிடக்கிறது.
இதனால், இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி இப்பகுதியில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளத்தில் சிக்கி வாகனங்கள் பழுதடைந்து வருகின்றன. எனவே, பழுதடைந்து கிடக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
- இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர்.
- தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
கடலூர்:
சென்னையில் இருந்து புதுச்சேரி கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக மிக முக்கிய வழித்தடங்களாக இருப்பதால் கடலூர் நகரின் வழியாக 24 மணி நேரமும் வாகனங்கள் போக்குவரத்து இருந்து வருகின்றன. இதில் மிக முக்கியமாக கருதக்கூடிய பாலமாக கடலூர் அண்ணா பாலம் இருந்து வருகின்றன. இந்த பாலம் கெடிலம் ஆறு குறுக்கே இருந்து வருகின்றது. மேலும் கடலூர் நகரின் முக்கிய இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடலூர் மக்களின் மிக முக்கிய அத்தியாவசிய பாலமாக இருந்து வருவதால் அனைத்து வாகனங்களும் இவ்வழியாக சென்று வருவதோடு பாதசாரிகளும் சாலை ஓரத்தில் நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் பாலத்தின் நடுவே தற்போது குண்டு குழியுமாக இருப்பதோடு பாலத்தில் உள்ள இரும்பு கம்பிகள் பெயர்ந்து மேலே வந்துள்ளது. இவ்வழியாக வாகனங்கள் அதிகளவில் சென்று வருவதால் பாலத்தின் தரம் நாளடைவில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
மேலும் பாலத்தில் அதிகளவில் அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் நாளுக்கு நாள் சாலையில் பள்ளம் அதிகரித்து வருவதோடு வாகனங்கள் சாலை ஓரத்தில் செல்லும்போது பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில நேரங்களில் பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விபத்தும் ஏற்பட்டு வருவதையும் காண முடிகிறது .இந்த நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் சமயத்தில் அதிக அதிர்வலைகள் ஏற்படும் நேரத்தில் அவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிக முக்கியமாக கருதக்கூடிய அண்ணா பாலத்தை உரிய முறையில் ஆய்வு செய்து பாலத்தின் தரமும் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழியுமானதை சரி செய்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சாலையின் மேலே உள்ள இரும்பு கம்புகளை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தனியார் பஸ் டிரைவர்கள் மோதியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
- பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தியதால் தகராறு ஏற்பட்டது.
திருமங்கலம்
திருமங்கலத்தில் வெளியூர் பஸ் நிலையம் மதுரை மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது. பஸ் நிலையம் எதிரே டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வங்கிகளும் இயங்கி வருகிறது.
வெளியூர் பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தி முந்திச் செல்வதில் தனியார் பஸ் டிரைவர்களுக்க அடிக்கடி தகராறு இருந்து வருகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசிக்கு செல்லும் தனியார் பஸ் திருமங்கலம் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றியது. இந்த பஸ்சை கள்ளிக்குடிடய அடுத்துள்ள குராயூரை சேர்ந்த பிச்சை ஓட்டி வந்தார். இந்த பஸ்சுக்கு அடுத்து மற்றொரு தனியார் பஸ் சிவகாசிக்கு மதுரையில் இருந்து வந்தது. இதை சோளங்குருணியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(32) ஓட்டிவந்தார்.
ஏற்கனவே முன்னால் சென்ற பஸ், திருமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிகொண்டிருந்ததை கண்ட பின்னால் வந்த பஸ்சின் டிரைவர் ஆத்திரமடைந்தார். அவர் வேகமாக சென்று ஏற்கனவே நின்று கொண்டிருந்த பஸ்சை முந்தி சென்று தனது பஸ்சை நிறுத்தினார்.
இதில் பிச்சை ஓட்டி வந்து நிறுத்திய பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இது தொடர்பாக பிச்சை மற்றும் 2-வதாக வந்த பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் சிவரக்கோட்டையை சேர்ந்த ஜெயராஜ்(41) ஆகியோர் ஏன் பஸ்சை எடுக்கவில்லை என்று கூறி பிச்சையுடன் தகராறு செய்தனர். 3 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வெளியூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
இதுகுறித்து பஸ் டிரைவர் பிச்சை, தன்னை மற்றொரு பஸ் டிரைவர் செல்வராஜ், கண்டக்டர் ஜெயராஜ் ஆகியோர் இரும்பு ராடு கொண்டு தாக்க முயன்றதாக திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் நிலையம் எதிரேயே தனியார் பஸ் டிரைவர்கள் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க திருமங்கலம் போலீசார், தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பஸ்ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று தன்னார்வ அமைப்பினர், பயணிகள் வலியுறுத்தினர்.
- அன்பழகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
- வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் அருகே மணக்காடு பிடாரிக்கட்ட ளை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 53). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியே இருந்த போது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )ராதாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கழிவு நீருடன் மழை நீரும் கலந்து புகுந்ததால் துர்நாற்றம்
- குடியிருப்புவாசிகளே பொக்ளைன் வரவழைத்து கழிவு நீரை வெளியேற்றினர்
திருச்சி,
திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதியிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது.இந்த நிலையில் திருநகர் மெயின் ரோடு பகுதியில் நடைபெறும் பணிகளுக்காக அப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் பகுதியை அடைத்து வைத்தனர். இதனால் கடந்த சில தினங்களாக திருநகர் 5,6,7 கிராஸ் பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் தேக்கமடைந்தது. இதற்கிடையே நேற்று பெய்த கனமழையின் காரணமாக ஏற்கனவே நிரம்பியிருந்த கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து அப்பகுதி வீடுகளுக்குள் புகுந்து விட்டது.இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.குறிப்பாக குடிநீர் பைப் அமைந்துள்ள பகுதிகளிலும் சாக்கடை நீர் நிரம்பியுள்ளது. இதனால் குடிநீர் பிடிக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறும்போது,மெயின் ரோட்டில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளுக்காக கழிவு நீர் வடிகால் பகுதியை அடைத்து வைத்துள்ளனர். இதனால் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.இப்போது வீடுகளுக்குள்ளும் கழிவு நீர் வந்துவிட்டது.இன்னும் இந்தபணிகள் இரண்டு வாரத்துக்கு நீடிக்கும் என சொல்லப்படுகிறது.எனவே கழிவு நீரை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது கழிவுநீரை வேறு வழியில் திருப்பிவிட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போன்று அவ்வப்போது எங்கள் பகுதிக்கு குறைந்த அளவே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர்.நேற்று பெய்த கனமழையின் போது குடியிருப்பு வாசிகளாகிய நாங்களே ஒரு ஜேசிபி எந்திரத்தை வரவழைத்து ஒரு பகுதியில் சாக்கடை நீரை உடைத்து வெளியேற்றினோம் என்றனர்.