என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் ஆய்வு"
- மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
- மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.
மதுரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து திரும்பி செல்லும் பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சிறப்பு பஸ்கள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
அங்குள்ள மதுரை கோட்ட முன்பதிவு விசா ரணை மையம் மற்றும் அரசு விரைவு போக்கு வரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களிலும் அமைச்சர் ஆய்வு செய்தார்.குறிப்பாக, முன்பதிவு செய்துள்ள பயணிகளிடம் பஸ் வசதிகள்குறித்துஆய்வு செய்தார். பயணிகளிடம் பஸ் வசதிகள் குறித்து கருத்து களையும் கேட்டறிந்தார்.
அமைச்சரின் இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.
- தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு திரும்பும் பயணிகள் கூட்டத்தால் திருச்சி பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள் நிரம்பி வழிந்தன
- இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார்
திருச்சி:
தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் எந்தவித அச்சமும், இடையூறும், சிக்கலும் இன்றி கொண்டாடிடும் வகையில் அரசு தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செம்மையாக செய்து தரப்பட்டு இருந்தன.
இதில் வெளியூர்களில் வசிப்பவர்கள், வேலை நிமித்தம் தங்கியிருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
கூடுதல் கட்டணத்தை மையமாக கொண்டு செயல்பட்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு கடிவாளம் போடும் வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு பயணிகளுக்கு நிம்மதியை அளித்தார்.
கடந்த 21-ந்தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களும், அடுத்ததாக தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் ஊர் திரும்புவர்களின் வசதிக்காக மேலும் 3 நாட்களும் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதில் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களில் இருந்து தங்களது பணியிட ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.
இதற்கிடையே பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்பட பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்துஆய்வு நடத்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்தார். அங்கு டிக்கெட் வழங்கும் இடம், சென்னை பஸ்கள் நிறுத்தப்படும் பகுதிகளில் ஆய்வு செய்தார்.
பயணிகளிடம் பஸ்கள் இயக்கப்படுவது மற்றும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அமைச்சர் வந்ததை அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்களிடம் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொடர்ந்து 3 நாட்கள் வரும் 30-ந்தேதி பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.
இரவு நேரம் என்றும் பாராமல் 11.30 மணி வரை ஆய்வு நடத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பயணிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதிகமாக இருந்தபோதிலும் சிரமமின்றி பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணித்தனர்.
இதேபோல் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை செல்லும் அனைத்து ரெயில்களிலும் முண்டியடித்து ஏறி இடம் பிடித்தனர்.
மொத்தத்தில் தமிழகத்தின் மத்திய மாவட்டமான திருச்சி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு மீண்டும் ஊர் திரும்பும் பயணிகள் கூட்டத்தால் சற்றே திணறியது.
- டேன் டீ நிறுவனத்தில் புதிதாக சேரும் பணியாளா்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.
- ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் வீடுகளை காலி செய்யுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஓய்வுபெறும் டேன் டீ தொழிலாளா்களுக்கு நடுவட்டம் பேரூராட்சியில் வீடு கட்டுவதற்கு தோ்வு செய்யப்பட்ட இடத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் சா.ப.அம்ரித் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
டேன் டீ நிறுவனத்தில் புதிதாக சேரும் பணியாளா்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன.அதனால், ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் வீடுகளை காலி செய்யுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மக்களவை உறுப்பினா் நகா்ப்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததன் பேரில் இந்த ஏற்பாடு நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், டேன் டீ மேலாண்மை இயக்குநா் (பொ) வெங்கடேஷ், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் கோவிந்த் ராவ், சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநரும் இண்கோ சா்வ் முதன்மைச் செயல் அலுவலா் மோனிகா ராணா, வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, டேன் டீ பொது மேலாளா் அக்பா், வட்டாட்சியா் ராஜசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்
- எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள மரக்கதவில் 1895-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு குறித்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் சாலையில் சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைக் காவலர் கோவில்உள்ளது இங்கு புகழ்பெற்ற அர்த்தனாரீஸ்வரர் மலைக் கோவிலை காத்து அந்நியர்கள் படையெடுப்பின் பாதுகாத்த ஸ்ரீ நெல்லையப்ப சுவாமி ஸ்ரீ வேமண்ணா சுவாமி உருவங்கள் உள்ளன.
இந்த கோயில் குடமுழுக்கு செய்யப்பட்டது எப்போது என்பது குறித்து எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள மரக்கதவில் 1895-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வு குறித்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது .
இது தவிர வேற எந்த ஆவணமும் இல்லாத இந்த கோயிலுக்கு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கப் பட்டது. விரைவில் இந்த புனரமைப்பு பணிகளை செய்து குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நத நிலையில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இந்த கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பழமை வாய்ந்த இந்த கோவிலை சிறப்பாக புனரமைப்பு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு பகுதியினையும் ஆய்வு செய்தார். காலியாக உள்ள இடங்களில் பூங்கா அமைத்தும் பொதுமக்கள் பார்வையிடவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த புனரமைப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதவில்லை என்றால் கூடுதலாக நிதி ஒதுக்கவும் அரசு தயாராக உள்ளதாகவும், அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, மற்றும் அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் உதவிஆணையர் ரமணி காந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- மதுரை ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை.
மதுரை
மதுரை அண்ணாநகரில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏஜெண்டுகள் மூலம் பொது மக்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வழக்கமாக பால் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி விடும். கடந்த 10 நாட்களாக, காலை 8 மணிக்கு செல்வதாக தெரிகிறது. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ஆவின் பால் கிடைக்கவில்லை. முகவர்கள் கால தாமதமாக வந்த ஆவின் பால் வாகனங்களை திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை மாவட்டத்தில் தினமும் சுமார் 1 லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு 1.60 லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால் 1.35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. ஆவின் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆவின் நிறுவனத்தில் பால்களை அடுக்கி வைப்பது, பிரித்து வைப்பது உள்ளிட்ட பணிகளில் நிரந்தர ஊழியர்களுடன் தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை. மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் ஏற்பட்டு உள்ள பால் தட்டுப்பாடு, ஊழியர் பற்றாக்குறை மற்றும் குளறுபடிகள் மாநில அளவில் பிரதிபலித்தது.
இந்த நிலையில் அமைச்சர் நாசர் இன்று மதுரை வந்தார். அண்ணாநகர் ஆவின் நிறுவனத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அமைச்சருடன் கலெக்டர் அனீஷ்சேகர், மேலாண் இயக்குநர் சுப்பையன் ஆகியோரும் உடனிருந்தனர்.
- 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.
- திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
காங்கயம்:
காங்கயம் நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள வாரச் சந்தை வளாகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச் சந்தை நடைபெற்று வந்தது. அதன் பின்னா் இந்த சந்தை செயல்படவில்லை. இதையடுத்து மாடு வளா்க்கும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க காங்கயம் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மாட்டுச்சந்தை செயல்பட முடிவு செய்யப்பட்டது.
தற்போது காங்கயம் வாரச் சந்தை வளாகத்தில் தினசரி சந்தை, உழவா் சந்தை, சிறு மேடையுடன் கூடிய பொதுக்கூட்ட அரங்கம், பொது நூலகம், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகியன செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு சந்தைக்கான இடம் குறுகிய நிலையில் தற்போது இந்த வாரச் சந்தை வளாகத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கட்டப்பட்டு வருகின்றன.
இதனால் காங்கயம் நகரில் மாட்டுச் சந்தை அமைப்பதற்கு காலியிடம் இல்லாததால் தாராபுரம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சக்தி நகா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கா் நிலத்தில் ஓராண்டு வாடகையாக ரூ. 3 லட்சம் செலுத்தி வாரம்தோறும் மாட்டுச்சந்தை செயல்பட உள்ளது.
வரும் காலங்களில் நகராட்சிக்கு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்பாக ஓராண்டு முன்னோட்ட அடிப்படையில் செயல்படவுள்ள இந்த மாட்டுச் சந்தையில் தற்போது ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், திமுக. நகர செயலாளா் வசந்தம் நா.சேமலையப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
- கூடுதல் ஆட்களை நியமித்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னா கரம் பேரூ ராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பஸ் நிலையம் அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு, தற்பொழுது ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை குறைந்த ஆட்களை வைத்து பணி நடைபெறுவதால் உடனடியாக கூடுதல் ஆட்களை நியமித்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி, பேரூராட்சி தலைவர் வீரமணி, செயல் அலுவலர் கீதா,பேரூராட்சி துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ், இளநிலை பொறியாளர் பழனி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- செல்போன் டவர் அமைக்கும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
- சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களுக்காக பி.எஸ்.என்.எல். டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாராப்பூர் உள்வட்டம் மேலவண்ணாரியிருப்பு பகுதியில் பணிகளின் நிலை குறித்து அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் பேசியதாவது:-
சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட மேலவண்ணரியிருப்பு, பிரான்பட்டி, தர்மப்பட்டி மற்றும் அ.காளாப்பூர் ஆகியக் கிராமங்களில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான தொலைத்தொடர்பினை மேம்படுத்திடும் பொருட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம், 4 டவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளின் மூலம் மேற்கண்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சுமார் 38 கிராம மக்கள் பயன்பெறுவார்கள். இந்த பகுதிகளில் நடந்து வரும் பணிகளை தரமான முறையில் முடித்து, பொது மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் தொடங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று பொது மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக நேரில் என்னிடமோ, கலெக்டரிடமோ அல்லது உள்ளாட்சி பிரதிநிதிகளின் மூலமாகவோ கொடுக்கலாம். அந்த மனுக்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
- பின்னர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்டு சென்றார்.
தருமபுரி,
நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில், பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில், 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.
மாவட்ட கலெக்டர் இல்லம் அருகேவுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளர் அலுவலகம் முன்பிருந்து நடைப்பயிற்சியினை தொடங்கிய அமைச்சர் செல்பி பாலம் புதிதாக அமைக்கப்பட்ட சிப்காட் சாலை, தடங்கம் மேம்பாலம் வழியாக நடைப்பயிற்சி யினை மேற்கொண்டு மீண்டும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு தனது நடைபயிற்சியினை நிறைவு செய்தார்.
பின்னர் ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமினை பார்வையிட்டு சென்றார். இந்த நடைபயிற்சியின் போது மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தடங்கம் சுப்பிரமணி, மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஏ.எஸ். சண்முகம், உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்
- மாணவியை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
வேலூர்:
காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூபாய் 10. 81 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாவட்ட உள்விளையாட்டு அரங்கம் மற்றும் ரூ.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றை, மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் குமரவேல் பாண்டியனிடம் கேட்டறிந்தார்.
மேலும் இது தொடர்பான விவரங்களை விரிவான அறிக்கையுடன் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்புமாறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அண்மையில நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வேலூர் பகுதியைச் சேர்ந்த ஜெருஷா ஜாஸ்மின் என்ற மாணவியை பாராட்டி சான்றிதழை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
- ரூ.95 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
- அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே உள்ள வாணாபுரத்தில் இயங்கிவரும் கஸ்தூரிபாய் காந்தி பாலிக வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் தங்கி படித்து வரும் மாணவிகளின் வசதிக்காக அங்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் ரூ.95 லட்சம் மதிப்பில் 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை இன்று (புதன்கிழமை) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி புதிதாக கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறையுடன் கூடிய விடுதி கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்அதே பகுதியில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளி யிலும் ஆய்வு செய்தார். அப்போது அங்கி ருந்த 1ம் வகுப்பு மாணவர்களிடம் பாடப்புத்தகத்தை வாசிக்க சொல்லி அவர்களின் கல்விதிறனை ஆய்வு செய்தார், மேலும் அருகில் இயங்கி வரும் உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களிடமும் கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள் செய்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் பெருமாள். துரைமுருகன், பாரதிதாசன், ஒன்றியக்குழு துணை தலைவர் அண்ணா துரை மற்றும் கட்சி நிர்வாகி கள் பலர் உடன் இருந்தனர்.
- மாணவ மாணவிகளுக்கு சரியான உணவுகள் வழங்குவதில்லை என தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்துள்ளது.
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் வருவதில்லை. பள்ளி மாணவ மாணவிகளுக்கு சரியான உணவுகள் வழங்குவதில்லை என தொடர்ந்து தமிழக அரசுக்கு புகார்கள் வந்த நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
கல்வராயன்மலை சேராப்பட்டு அருகே உள்ள கி ளாக்காடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் சேராப்பட்டு அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, இன்னாடு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு செய்து ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து செல்கிறார்களா? மாணவ மாணவிகளுக்கு சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அதற்கான பதில்களையும் கேட்டு கொண்டார். அப்போது கல்வராயன் மலை ஒன்றிய குழு தலைவர் சந்திரன் உடன் இருந்தார்.