என் மலர்
நீங்கள் தேடியது "வளர்ச்சி பணிகள்"
- ஆலங்காட்டுப்பாளையத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
- ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்புச் செயலாளரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.
இதில், தெக்கலூா் அங்கன்வாடி மையம், கிட்டாம்பாளையம் ஊராட்சி பெரியாா் சமத்துவபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாம், நம்பியாம்பாளையம் மற்றும் ஆலங்காட்டுப்பாளையத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
அதேபோல, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுப்பாளையத்தில் நஞ்சண்ணன்குட்டை பகுதியில் குளத்தை தூா்வாரும் பணி, நம்பியாம்பாளையம் ஊராட்சியில் ஆரம்ப சுகராதார நிலையத்தில் உள்ள மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் மருந்து இருப்பு ஆகியவை குறித்த விவரங்களையும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமானப் பணி, ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமானப் பணி, ஈஸ்வரமூா்த்தி பூங்காவில் கழிவறை கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.
பின்னா் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- கல்லல் யூனியனில் ரூ.111.97 கோடியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றி யத்தில் ரூ.111.97 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படு த்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் மட்டுமின்றி, வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாகவும், அதன் நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் 14-வது நிதிக்குழு மானியம், 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், நமக்கு நாமே திட்டம், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி, எஸ்.ஐ.டி.எஸ்.திட்டம், ஒன்றிய பொது நிதி உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் 2019-2020-ம் ஆண்டில் மொத்தம் 865 பணிகள் ரூ.2584.29 லட்சம் மதிப்பீட்டிலும், 2020-21-ம் ஆண்டில் மொத்தம் 1,328 பணிகள் ரூ.3896.49 லட்சம் மதிப்பீட்டிலும், 2021-22-ம் ஆண்டு 1,910 பணிகள் ரூ.4716.63 லட்சம் மதிப்பீட்டிலும் என மேற்கண்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டப்பணிகள் தொடர்பாக, கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தளக்காவூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.2.34 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் இணைப்புகள் பணிகள் தொடர்பாகவும், கம்பனூர் ஊராட்சியில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நியாயவிலைக்கடைக் கட்டிடம் கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும், 15-வது நிதிக்குழு மான்யத் திட்டத்தின் கீழ் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தே க்கத்தொட்டி கட்டுமானப் பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், என்.மேலையூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்றக்கட்டிடம் கட்டும் பணிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, இடம் தேர்வு செய்யப்படுவது தொடர்பாகவும் துறை சார்ந்த அலுவ லர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகளை தரமான முறையில், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பா ட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் -இணை இயக்குநர் சிவராமன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவித் திட்ட இயக்குநர் செல்வி, சிவகங்கை மாவட்ட செயற்பொறியாளர் வெண்ணிலா, தேவ கோட்டை உதவி செயற்பொ றியாளர் ஜெயராஜ், கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, அழகுமீனாள், உதவிப்பொறியாளர்கள் விஜயலெட்சுமி, செல்லையா, கணேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- விருதுநகர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து அரசு சிறப்பு செயலாளர் ஆய்வு செய்தார்.
- ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் தம்மநாயக்கன்பட்டி, கன்னிசேரிபுதூர், வி.முத்து லிங்காபுரம், பாவாலி, கூரைக்குண்டு ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் குறித்து கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தம்ம நாயக்கன்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.30 லட்சம் மதிப்பில், பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு குழந்தை களுக்கு முறையாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.
அதே பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய புதிய கட்டடப் பணிகளையும், கன்னிசேரிபுதூரில் ரூ.2.40 லட்சம் மதிப்பில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்டப்பட்டுள்ளதையும், அந்த பகுதியில் ரூ.1.27 லட்சம் மதிப்பில் உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
வி.முத்துலிங்காபுரத்தில் ரூ.36 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், பாவாலி ஊராட்சியில் ரூ.6.50 லட்சம் மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊரணி அமைக்கப்பட்டுள்ள தையும், கூரைக்குண்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.3.15 மதிப்பில் நர்சரி கார்டன் மற்றும் கிணறு மறுசீரமைப்பு பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி, அரசு சிறப்பு செயலாளர் (திட்டம் மற்றும் வளர்ச்சி) ஹர் சஹாய் மீனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், சாந்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
- சிவகாசி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகாசி யூனியன், நடையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.311.3 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், மங்களம் ஊராட்சி, மேட்டுப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.49.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிறு பாலப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத்தின் (சுகாதாரம்) கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டார பொது சுகாதார மையக் கட்டிடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி, கங்காகுளம் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.5.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மாணவிகளுக்கான கழிவறை கட்டிடங்களையும், செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.56 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டிடப் பணிகளையும், தேவர் குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II-ன் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டிட பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பணிகளை விரைவா கவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் எம்.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிகிச்சை முறைகள் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- ராஜபாளையத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
- சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி தென்றல் நகரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.5.57 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நாற்றாங்கால் நர்சரி பண்ணையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விதம், விநியோகிக்கப்படும் முறைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.
தென்றல் நகரில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கிடைமட்ட உறிஞ்சி குழியி னையும், திருவள்ளுவர் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மிதிவண்டி நிறுத்த கூடத்தையும், மருதுநகரில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், ஒப்படைக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாய் திட்டத்தின் கீழ், ரூ.3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி பணிகள் துரிதமாக செயல்படுத்தப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கி தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்தும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மொத்தம் 112 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள் வீதம் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வரப்பு பயிர்கள் (துவரை, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு) ஆகியவை கிராம பஞ்சாயத்துக்கு 15 எக்டர் வீதம் 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 5 கைத்தெளிப்பான்கள் மற்றும் 5 விசைத் தெளிப்பான்கள் அல்லது 5 பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை பயனுள்ள வேளாண் நிலங்களாக மாற்றும் நோக்கத்தில் இதுவரை 39 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தரிசு நில தொகுப்புகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியான தரிசு நிலங்களை கண்டறிந்து தொகுப்புகளாக அமைந்திட வேண்டும். தரிசு நில தொகுப்புகள் தொட ர்ச்சியாக அமையாதபோது இடையில் உள்ள 2 முதல் 3 ஏக்கர் வரை சாகுபடி நிலங்க ளையும் கொண்டு வந்து தொடர்ச்சியான தரிசு நிலத் தெர்குப்பாக அமைத்துக் கொள்ளலாம்.
தரிசு நில தொகுப்பு அமைப்பதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மை யினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் செல்லம்பட்டி வட்டாரம், விக்ரமங்கலம் கிராம பஞ்சாயத்தில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் எண் உலர்களம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- காரியாபட்டி யூனியனில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- ரூ.10லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோணுகால், தண்டியேந்தல், முடுக்கன்குளம், சூரனூர் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தண்டியேந்தல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.76லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட கிராம நூலக கட்டிடத்தையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தண்டியேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வு செய்து அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் இதர மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தண்டியேந்தல் அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து அங்கு பழுதடைந்த கட்டிடத்தை பார்வையிட்டு அதனை பராமரிப்பு பணி மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முடுக்கன்குளம் ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.65 க்ஷலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களத்தையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூட கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.56கோடி மதிப்பில் முடுக்கன் குளம்- காரியாபட்டி-நரிக்குடி சாலைகள் மேம்படுத்தப்பட்டு வரும் பணிகளையும், சூரனூர் ஊராட்சியில் தேனூர் பெரியகுளம் கண்மாயில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.73லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மதகு மற்றும் வரத்து கால்வாய் பராமரிப்பு பணிகளையும், சூரனூர் ஊராட்சி, தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.3.08 லட்சம் மதிப்பில் புனரமைக்கப் பட்டுள்ள 3 பள்ளி வகுப்பறை கட்டிடங்களையும், தேனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை கட்டிடத்தையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், சண்முகப்பிரியா மற்றும் பலர் உடனிருந்தனர்.
- வேளாங்கண்ணி பேரூராட்சியில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
- எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் கூட்டு உள்ளுர் திட்டக்குழும பகுதிக்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் முழுமை திட்டம் தயாரிக்கப்பட்டதை தொடர்ந்து வேளாங்கண்ணி பேரூராட்சியில் அண்ணா பல்கலைகழக தொழிற்நுட்ப வல்லுனர்களுடன், நாகப்பட்டினம் நகர் ஊரமைப்பு துறை துணை இயக்குநர் முன்னிலையில் பொது மக்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் டயானா ஷர்மிளா மற்றும் துணைத்தலைவர் தாமல் ஆல்வா எடிசன் தலைமையில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் அதிபர் மற்றும் நிர்வாக தந்தையர்கள், பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக சங்க பிரநிதிநிதிகள், தங்கும் விடுதி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், அனைத்து சமுதாய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் எதிர்வரும் ஆண்டுகளில் நில வகைப்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஒளித்தோற்றம் மூலம் விவரிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி மற்றும் அலுவல பணியாளர்கள் உடனிருந்தனர்.
- ரூ.3.83 கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் தேரிருவேலி ஊராட்சியில் அனைத்து கிராம மேம்பாட்டு திட்டத்தில் காகித மில்லத் வீதியில் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். ராவுத்தர் சாகிப் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஊராட்சியின் மூலம் நன்றாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளி களுக்கு தலா ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதை கலெக்டர் பார்வையிட்டு உரிய காலத்திற்குள் கட்டி முடிக்க அறிவுரை வழங்கினார்.
தேரிருவேலி பெரிய கண்மாயில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.8.99 லட்சம் மதிப்பீட்டில் கண்மாய்யை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணியாளர்களிடம் இதை நன்றாக சீரமைத்தால் உங்களுக்கு நீண்ட நாள் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் அரசு வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பணியாளரும் உரிய அளவீட்டு பணியை நாள் ஒன்றுக்கு சரியாக மேற்கொள்ளும் பொழுது அதிகபட்ச ஊதிய தொகையை எளிதாக பெற முடியும்.
பணியா ளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு முழுமையான ஊதியத்தை பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். பின்னர் அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என தெரிவித்தார்.
தேரிருவேலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சை வழங்குவது குறித்தும், நாள்தோறும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், மருந்துகள் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்தும் வகையில் திடல் சிறையத்தேவன் ஊரணியில் ரூ.119.80 லட்சம் மதிப்பீட்டில் சீரமைத்து கரையை பலப்படுத்தி பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முதுகுளத்தூரில் ரூ.242.85 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகள் நடைபெறும் பொழுது பொறியாளர் ஆய்வு செய்து தரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, பிரியதர்ஷினி, பொறியாளர் ஜம்பு முத்து ராமலிங்கம், பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, தேரிருவேலி ஊராட்சி மன்றத்தலைவர் அபுபக்கர் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் யூனியனில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
- இந்த பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெய சீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் ரூ.11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவி லைக்கடையையும், சிவஞானபுரம் ஊராட்சி சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள கட்டிட புதுப்பித்தல் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
பெரியபேராலி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.27.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டிடங்களையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பெரிய பேராலி ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
15-வது நிதிக்குழு சுகாதார நிதியின்கீழ் பெரிய பேராலி ஊராட்சியில் ரூ.36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார மைய கட்டடத்தையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- குற்றால அருவி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.
- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் பணிகள் செயல் படுத்தப்படும்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என 2022- 2023-ம் ஆண்டு மானிய கோரிக்கை அறிவிப்புகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
ரூ. 11 கோடியில் வளர்ச்சி பணி
அதன்படி குற்றாலத்தில் உள்ள பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி மற்றும் புலி அருவி ஆகிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளபட உள்ளது. அந்த வகையில் ரூ. 11 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசும்போது, தற்போது பிரதான அருவிப் பகுதிகளில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
அப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் அறை, கழிப்பறை, தோரணவாயில் புதுப்பித்தல், பாதை சீரமைத்தல், சிறுவர் பூங்கா மேம்பாடு மற்றும் குற்றாலம் பேரூராட்சி ஆலோ சனையுடன் அடிப்படை தேவை பூர்த்தி செய்தல் ஆகிய பணிகள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் செயல் படுத்தப்படும். தொடர்ந்து மற்ற பகுதிகளி லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகள் பயன்பெறு வார்கள் என்றார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், உதவி செயற்பொ றியாளர் சீனிவா சன், சுற்றுலா அலுவலர் சீதாராமன், மண்டல சுற்றுலா வளர்ச்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கார்த்திக்குமார், தலைமை செயல் அதிகாரி திருமலை நம்பிராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிர மணியன், உதவி சுற்றுலா அலுவலர் சந்திர குமார் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் கேட்டறிந்தார்.
- விவசாயிகள் நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்தில் வேளாண்மை தோட்டக்கலை துறை சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார். அவர் கொங்கரப்பட்டு மற்றும் சுற்றுப்பகுதிகளில் தோட்டக்கலை துறை மூலம் அவுரி பயிர் செய்யப்ப ட்டுள்ளதை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னோடி விவசாயி அன்பழகன் இப்பகுதியில் அதிக அளவு அவுரி பயிர் செய்யப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் இடம் விரிவாக விவரம் தெரிவித்தார். பயிர் செய்ய பூச்சி தாக்குதல் குறைவாக இருப்பதாகவும் சாகுபடி செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதாகவும் அதனால் அதனை பயிர் செய்வதாக அவர் தெரிவித்தார். மாவட்ட கலெக்டர் அவுரி பயிர் செய்த விதைப்பு முதல் அறுவடை செய்வது ஏற்றுமதி செய்வது வரை விவரங்களை விவசாயி களிடம் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் அவுரி பயிருக்கு மானியம், அவுரி தழை காய வைக்க உலர் களம், சேமிப்பு கிடங்கு, அவுரிபயிருக்கு காப்பீடு, அவுரி விதை உற்பத்தி செய்தல், நியாயமான விலை கிடைப்பது போன்ற வற்றை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாவட்ட கலெக்டர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துறை) சண்முகம் வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி உதவிய இயக்குனர் தோட்ட கலைத்துறை அப்துல் லத்தீப் மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் சத்தியமூர்த்தி வல்லம் வேளாண்மை உதவி இயக்குனர் உள்ளி ட்டோர் உடன் இருந்தனர்.