search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233572"

    • மோஷின், மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.
    • அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

    திருப்பூர் :

    மது போதையில் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரை சேர்ந்த மோஷின், (36). மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.

    பனியன் தொழிலாளியான அவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

    சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே பல இடங்களில் குத்திக் கொண்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
    • திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர்.

    விருதுநகர்

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர் (வயது42). இவர்களது அண்ணன் இவரது அண்ணன் சோமு (53). இவர்களுக்கு விருதுநகர் அருகே உள்ள பாவாலி சங்கரநாராயணபுரத்தில் பூர்வீக வீடு உள்ளது. இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்காக சென்றனர்.

    திருவிழாவில் சாமி கும்பிட்டு விட்டு பூர்விக வீட்டிற்கு சென்றனர். அங்கு வைத்து சுந்தர், சோமு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது குடும்பப் பிரச்சனை தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சோமு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரை குத்தினார்.

    உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுந்தரின் மகன் அரவிந்த் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சோமுவை கைது செய்தனர்.

    • குடிபோதையில் தகராறு செய்த மகனை, தந்தை கத்தியால் வெட்டிார்.
    • கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் மலைச்செல்வன். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு சூர்யபிரகாஷ்(வயது21) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சூர்யபிரகாஷ் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தாய் கல்யாணியிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து மலைச்செல்வனுக்கு, அவர் போனில் தகவல் தெரிவித்தார்.

    இந்தநிலையில் இரவு மலைச்செல்வன் வீட்டிற்கு வந்தபோது சூர்யபிரகாஷ் வாசலில் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்து மலைச்செல்வன் அவரை கண்டித்தார். ஆனால் தந்தையுடனும் சூர்யபிரகாஷ் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மலைச்செல்வன், சூர்யபிரகாஷ் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை கை, கால்களில் வெட்டினார். சூர்யபிரகாஷின் நண்பர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கல்யாணி கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர்
    • கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த திருநாவுக்கரசர்(வயது39) கரூர் தான்தோன்றி மலை டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ராயனூரை சேர்ந்த குடியரசு (22) என்பவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் குடியரசை தாந்தோணிமலை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன்(20). இவர் கரூர் காமராஜர் மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தபோது கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம் (28) கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதுகுறித்து விசாரித்த கரூர் டவுன் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா(33) கரூர் அருகம்பாளையம் டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீராம் கார்த்திக்(32) அவரிடம் இருந்த பர்சை திருடி சென்றார். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீராம் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன்(23) மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்ற போது கரூர் மாவடியான் கோவில் பகுதியை சேர்ந்த வினோத்குமார்(23) அவரிடம் கத்திய காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கைதான ரவுடி வாக்குமூலம்
    • மோட்டார் சைக்கிளில் முந்தி செல்வதில் தகராறு

    நாகர்கோவில்:

    கருங்கல் கப்பியறை புதுக்காட்டு வெட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சேவியர் பாபு (வயது 57), நில புரோக்கர்.

    இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். தற்பொழுது சேவியர் பாபு நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வந்தார். நிலம் சம்பந்தமான பணிகளுக்காக சேவியர் பாபு அடிக்கடி நாகர்கோ விலிலுள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்.

    நேற்று முன்தினம் மதியம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு அவரது நண்பர் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த செல்வராஜ் (48) என்பவருடன் மோட் டார் சைக்கிளில் வந்தி ருந்தார். பின்னர் செல்வ ராஜ், சேவியர் பாபு இரு வரும் கலெக்டர் அலுவ லகத்தில் இருந்து நெடுஞ்சா லைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கும் இவர்க ளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திர மடைந்த வாலிபர் சேவியர் பாபுவை கத்தியால் குத்தி னார். அதை தடுக்க வந்த செல்வராஜுக்கும் கத்தி குத்து விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பிணமாக கிடந்த சேவியர் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.செல்வராஜை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகள் ஆய்வு

    கொலை நடந்த பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் உணவுப் பொருட்கள் டெலிவரி செய்யும் பேக் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அந்த பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.அப்போது சேவியர் பாபுவை கொலை செய்தது ராணி தோட்டம் பெஞ்சமின் தெருவை சேர்ந்த சுபின் (33) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீ சார் அவரை கைது செய்ய நடவ டிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த சுபின் தலைமறை வானார்.

    இந்த நிலையில் சுபின் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சுபினை கைது செய்த னர்.கைது செய்யப்பட்ட சுபின் நாகர்கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார்.அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப் பட்டது.

    போலீசாரிடம் சுபின் அளித்துள்ள வாக்கு மூலத் தில் கூறியிருப்பதாவது:-.

    நான் உணவுப் பொருட் கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நேற்று முன்தினம் மதியம் உணவு பொருட்களை டெலிவரி செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் சேவியர் பாபு, செல்வராஜ் ஆகியோர் வந்தனர்.

    மோட்டார் சைக்கிளை முந்தி செல்வது தொடர்பாக எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. திடீரென அவர்கள் என்னை தாக்கி னார்கள். இதனால் ஆத்திர மடைந்த நான் அவர்களை கத்தியால் குத்தினேன். பின்னர் எனது மோட்டார் சைக்கிளையும் உணவு பொருள் டெலிவரி செய்யும் பேக்கையும் அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்று விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தொடர்ந்து போலீசார் சுபினிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட சுபின் மீது ஏற்கனவே கோட்டார் வடசேரி நேசமணி நகர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள் ளது.

    ரவுடிகள் பட்டியலி லும் சுபின் பெயர் இடம் பெற்று உள்ளது குறிப்பி டத்தக்கதாகும்.

    கொலை செய்யப்பட்ட சேவியர் பாபு மகள்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள்.சேவியர் பாபு கொலை செய்யப்பட்ட தகவல் வெளி நாட்டில் உள்ள அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சொந்த ஊருக்கு வர தயாரானார்கள். இந்த நிலையில் இன்று சேவியர் பாபுவின் மகள் ஊருக்கு வருகிறார். அவரிடம் சேவியர் பாபுவின் உடலை ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • மணிகண்டன்அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய–தாக புகார்கள் வந்தன.
    • இதை தொடர்ந்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

     புதுக்கோட்டை

    ஆலங்குடி கல்லுக்குண்டு கரையைச் சேர்ந்தவர் துப்பாக்கி முருகன் மகன் மணிகண்டன் (வயது 23). இவர் தற்போது ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டியதாக புகார்கள் வந்தன. அதன் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் ஆய்வாளர் அழகம்மை விசாரித்து வழக்குப்பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் நேற்று அடைத்தனர். தீபாவளி அன்று கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் கைதான மணிகண்டன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை வெட்டியதில் படுகாயமடைந்தார்
    • சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகேமுன்வி ரோதம் காரணமாக ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவருக்கு அரிவாள் வெட்டு; படுகாயங்களுடன் நாகை அரசு மருத்துவம னையில் அனுமதி

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அகிலா.

    இவரவது கணவர் சரவணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி மன்றத் தலைவாரன இவருக்கும் அதே பகுதி திமுகவைச் சேர்ந்த ராமாயி, மணிக்கண்டன், சிவானந்தம், கரிகாலன் ஆகியோருக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதலில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஆதமங்கலம் ஊராட்சி மாவிலங்கை பேருந்து நிலையத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் சூர்யா தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது மணிக்கண்டன் என்பவர் அரிவாளால் அவர்களை வெட்ட வந்துள்ளார். அவர்கள் தெருவுக்குள் ஓடிய நிலையில் அவர்களை ராமாயி, அவரது மகன் சிவானந்தம், உறவினர்களான மணிக்கண்டன், கரிகலாலன் ஆகியோர் வெட்டுவதற்காக துரத்தி உள்ளனர்.

    அப்போது சமரசம் பேச வந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் சரவணனை பிளேடு, கத்தி, அரிவாள் கொண்டு வெட்டியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு வலிவலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வலிவலம் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

    • புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • படுகாயமடைந்தவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதி

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே உள்ள தேங்காப்பட்டணத்தை அடுத்த பனங்காலமுக்கு பகுதியை சேர்ந்த அல்போ ன்ஸ் மகன் பிரபு (வயது 36). கடல் தொழில் செய்து வரு கிறார்.

    இவரது மனைவி சுபலதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 வருடங்களாக கருத்து வேறுபாடு காரண மாக கணவன்- மனைவி இடையே பிரச்சினை உள்ளது. இதனால் அடிக்கடி சண்டைகள் நடப்பது உண்டு.

    சம்பவத்தன்று வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்ப்பட்டது. பிரபு குறைவாக பணம் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபலதா வெட்டுக்கதியால் வெட்டியுள்ளார்.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த பிரபு, குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி பெற்று, ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார்.
    • காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார்.

    கோவை 

    கோவை ஆவாரம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 22). இவர் காந்தி மாநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் தனது நண்பர்களுடன் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    இதேபோன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அஜித் குமார் வேலைக்கு சென்றபோது காந்திமா நகர் பகுதியில் சிறுவன் ஒருவனை வாலிபர் ஒருவர் தாக்கினார். இதனை பார்த்த அஜித் குமார் அந்த வாலிபரை கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே மோதல் இருந்து வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக அஜித்குமார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவரை புகார் அளிக்க விடாமல் அந்த வாலிபர் மிரட்டினார். இதனை அடுத்து அவரின் நடவடிக்கை குறித்து தந்தையிடம் தெரிவிப்பதற்காக நேற்று அஜித்குமார் தனது நண்பர் கார்த்திக் (21) என்பவருடன் கணபதி வீ. ராவ் நகரில் உள்ள அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது அவர்களுக்கி டையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அஜித்குமார் மற்றும் கார்த்திகை கத்தியால் குத்தினார். பின்னர் இருவரையும் மிரட்டிவிட்டு அந்த வாலிபர் அங்கு இருந்து தப்பி சென்றார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கத்திக்குத்தில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஜித்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேரையும் கத்தியால் குத்தியது கோபால் என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கோபாலை தேடி வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அன்பழகன்.

    மதுரை

    மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் அன்பழகன். சம்பவத்தன்று காலை இவர் செக்கானூரணி- திருமங்கலம் ரோட்டில் ரோந்து சென்றார்.

    மாவிலிப்பட்டி சந்திப்பு அருகே 2 பேர் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் அன்பழகன் விசாரித்தார். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். 2பேரிடமும் கத்திகள் இருந்தது தெரிய வந்தது.

    எனவே சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும், காவல் நிலையத்துக்கு வாருங்கள் என்று அழைத்தார்.இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அன்பழகனை கத்தியால் குத்த பாய்ந்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் சிவசக்தி வழக்குப்பதிவு செய்து பன்னியான் மேலத்தெருவை சேர்ந்த காசி விஸ்வநாதன் (25), செக்கானூரணி சிவப்பிரகாஷ் (27) ஆகியோரை கைது செய்தார்.

    • வியாபாரியை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • செல்லூர் முத்துக்குமார், வில்லாபுரம் சதீஷ், சிம்மக்கல் கார்த்திகேயன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர், 50 அடி ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 31). இவர் அந்த பகுதியில் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று அதே பகுதியில் வசிக்கும் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். அப்போது இவருக்கும், அங்கிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து வைத்தனர். இந்த நிலையில் அசோக்குமார் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விஷேச நிகழ்ச்சியில் தகராறு செய்த 5 பேர் கும்பல் அசோக்குமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இதுகுறித்து அசோக்குமார் செல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்மக்கல் எல்.எம்.பி. அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த முருகன், கவுதம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய செல்லூர் முத்துக்குமார், வில்லாபுரம் சதீஷ், சிம்மக்கல் கார்த்திகேயன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் தீர்த்துக்கட்டியதாக போலீசில் வாக்குமூலம்
    • ரதீஷ்குமாரின் மனைவி கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். அவர் தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பெருமா ள்புரத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்ப த்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு உதவியாளராக பணி யாற்றி வந்தவர் ரதீஷ்குமார் (வயது 35).

    இவர் நேற்று வழக்க ம்போல் ஆஸ்பத்திரிக்கு பணிக்கு வந்தார். இந்த ஆஸ்பத்திரி காலை 7 மணி முதல் 10.30 மணி வரை யும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் செயல் படும். ஒய்வு நேரத்தில் ரதீஷ்குமார், ஆஸ்பத்திரி பதிவேட்டு அறையிலேயே தங்கி இருப்பார்.

    நேற்று மதியம் 3 மணி அளவில் அறையில் தங்கி இருந்த அவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரை குத்திக் கொன்ற பெண்ணே, இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவாகரத்தில் இந்தப் படுகொலை நடந்திருப்பது தெரியவந்தது. கொலை செய்ய ப்பட்ட ரதீஷ்குமார் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்த திருமணமான ஷிபா என்ற பெண்ணுடன் நட்பாக பழகி உள்ளார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    திருமணம் செய்து கொள்வதாக ரதீஷ்குமார் அளித்த உறுதிமொழியால் ஷிபா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து உள்ளார். ஆனால் அவரிடம் உல்லாசம் அனுப வித்த ரதீஷ்குமார் அவரை ஏமாற்றி விட்டு, கடந்த ஆண்டு வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தன் வாழ்க்கையை சீரழித்த ரதீஷ்குமாரை கத்தியால் குத்தி, ஷிபா கொலை செய்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஷிபாவை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    நான் எம்.எஸ்.சி., பி.எட்., எம்.பில்., படித்துவிட்டு பேராசிரியையாக வேலை பார்த்து வந்தேன். எனது கணவர் மேக்சன், மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தார். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    2 பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகை பெற நான் முயற்சித்தேன். அப்போது தான் ரதீஷ்குமார் எனக்கு அறிமுகமானார். உதவித் தொகை பெற அவர் உதவினார்.

    அதனால் நட்பாக பழக ஆரம்பித்த எங்களது பழக்கம் சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியது. ரதீஷ்குமாருடன் பல இடங்களுக்குச் சென்று உல்லாசமாக இருந்தேன். ரதீஷ்குமாரின் வசீகர பேச்சால் கணவர்-குழந்தைகளை மறந்தேன்.

    அப்போது என்னை திருமணம் செய்வதாக உறுதி அளித்த ரதீஷ்குமார், உனது கணவரை விவாகரத்து செய்து விட்டு வா. நாம் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கலாம் என்றார்.

    கள்ளக்காதல் மோகத்தில் கணவரை நான் விவாகரத்து செய்தேன். அதன்பிறகு தனிமையில் வசித்த நான் கடந்த 13 ஆண்டுகளாக ரதீஷ்குமாருடன் பழக்கத்தில் இருந்தேன். அவர் வேலை பார்க்கும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் ஒய்வு நேரத்தில் நான் அங்கு செல்வேன். அப்போது அவருக்கு உணவு சமைத்து கொண்டு செல்வேன்.

    அங்கு உணவருந்தி விட்டு நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்தோம்.இப்படியே காலம் கடத்தினால் எப்படி? என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என ரதீஷ்குமாரிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் அளித்தார்.

    மேலும் கடந்த சில நாட்களாக அவர் என்னிடம் நெருக்கமாக இல்லாதது போன்று தோன்றியது.இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    ரதீஷ்குமார் பற்றி விசாரித்த போது, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் மீனாட்சி புரம் பகுதியில் வசிப்பது தெரியவந்தது.இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இது குறித்து அவரிடம் கேட்டபோது, விரைவில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்கிறேன் எனக் கூறினார். ஆனால் அவரது பதில் எனக்கு பிடிக்கவில்லை. மேலும் அவரால் நான் வேலைைய இழந்ததும் எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து விட்டு தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய ரதீஷ்குமார் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    என் வாழ்க்கையை நாசமாக்கியதோடு மற்றொரு பெண்ணின் வாழ்க்கையையும் சீரழித்த ரதீஷ்குமாரை தீர்த்துக் கட்டுவது என முடிவு செய்தேன். இதற்கான நேரத்திற்கு காத்திருந்த போது, ரதீஷ்குமார் என்னை தொலைபேசியில் அழைத்தார்.

    நம் விவகாரம் குறித்து பேசி முடிவு எடுக்கலாம், நீ இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு வா என்றார். இது தான் சரியான நேரம் என நினைத்த நான், தூக்கமாத்திரை கலந்து சாப்பாடு தயாரித்து கொண்டு சென்றேன். வீட்டில் இருந்து செல்லும் போதே கொலை திட்டத்தை செயல்படுத்துவதற்காக கத்தி மற்றும் குத்தூசியை எடுத்துச் சென்றேன்.

    இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பதிவேட்டு அறையில் ஒய்வு நேரத்தில் ரதீஷ்குமார் மட்டுமே இருந்தார். அவருக்கு உணவு பரிமாறி னேன். அதனை சாப்பிட்ட அவர், சிறிது நேரத்தில் மயக்க நிலைக்குச் சென்றார்.

    இதற்காக காத்திருந்த நான், தயாராக வைத்திருந்த கத்தி மற்றும் குத்தூசியால் ரதீஷ்குமார் உடலில் ஆத்திரம் தீர குத்தினேன். சுமார் 30 முறை சரமாரியாக குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    ரதீஷ்குமாரை கொலை செய்து விட்டு, அறையை விட்டு வெளியே வந்த நான், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அடி-தடி பிரச்சினை உடனே வாருங்கள் என கூறினேன். போலீசார் வந்ததும் ரதீஷ்குமாரை கொலை செய்தது பற்றி தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி ,ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் கென்னடி, பிரான்சிஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஷிபாவிடம் இருந்து போலீசார் கைப்பற்றினர். அவர் வைத்திருந்த பையில் பல்வேறு மாத்திரைகள் இருந்தன.

    எனவே கொலை செயலை முடித்துவிட்டு அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கலாம். பின்னர் முடிவை மாற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட ரதீஷ்குமாரின் மனைவி கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். அவர் தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×