என் மலர்
நீங்கள் தேடியது "கட்டிடம்"
- ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாக கட்டிட கட்டுமான பணிகள் ஆய்வு.
- வணிக வளாகத்தின் மூலம் தினமும் 100 பேருக்கு வேலை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்ட த்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டை தம்பி க்கோட்டை வடகாடு இறால் பண்ணைசெயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்ப ட்டது. பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மாற்று த்திறனாளிகள் முகாமில் சமையலறை, கழிவறை போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் சுகாதாரமாக உள்ளதா என்றும், மாற்று த்திறனா ளிகளின் கோரிக்கைகளை கேட்டறிய ப்பட்டது, மேலும் தம்பிக்கோட்டை வடகாடு நியாய விலை கடையில்
உணவுப் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்தும், பொன்னவராயன் கோட்டையில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில் தென்னை வணிக வளாகம் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்த ப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வணிக வளாகத்தின் மூலம் தினமும் 100 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் உரிய
நடவடிக்கை எடுக்கப்ப டும் . இந்த வளாகத்தில் தேங்காய் பால் எண்ணெய் , தேங்காய் துருவல் பவுடர், குழந்தைகளுக்கான எண்ணெய், நார்ச்சத்து மாத்திரைகள் என தேங்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஐந்து பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படவுள்ளன.
மேலும் ரூ.2.40 கோடியில் 500 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு , தேங்காய்களை இறக்க பிளாட்பார்ம் ஆகியவை அமைப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் முடிக்கப்பட்டு தென்னை வணிக வளாகம் விரைவில் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன் , சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- புதிய பஸ் நிலைய கட்டிடம் தரமாக கட்டப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
- அ.தி.மு.க. ஆட்சியில் தனியார் பங்கேற்புடன் பஸ் நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2027-2022-இன்கீழ் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பதற்காக கடந்த 16-ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது.
இந்த பணிக்கான ஒப்புதல் கோரி மயிலாடுதுறை நகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடை பெற்ற அவசர நகர்மன்றக் கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
ஆணையர் செல்வபாலாஜி முன்னிலை வகித்தார்.
அப்போது நடைப்பெற்ற விவாதங்கள் வருமாறு:
நடராஜன் (தி.மு.க.) :
மயிலாடுதுறை மக்களின் 34 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், பேருந்து நிலையம் அமைக்க இடம் தந்த தருமபுரம் ஆதீனம், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர், அமைச்சர்களுக்கும் நன்றி.
கணேசன் (ம.தி.மு.க) :
புதிய பஸ் நிலையத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்ட பின்னர் நகராட்சி பொது நிதியிலிருந்து சுமார் ரூ.1 கோடி (4.97 சத வீதம்) கூடுதலாக ஒதுக்க வேண்டியதன் அவசியம் என்ன ? புதிய பஸ் நிலைய கட்டடம் தரமாக கட்டப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
ஆனந்தி (அ.தி.மு.க) : -
புதிய பஸ் நிலையம் அமைய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ் டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர்:-
இடம் தேர்வு செய்து அதற்கான தீர்மானம் நிறைவேற்றியது மக்களால் தேர்வு செய்யப் பட்ட தி.மு.க நகரமன்றத்தில் தான்.
அதிமுக ஆட்சியில் தனியார் பங்கேற்புடன் பேருந்து நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டது. அப்போது டெண்டர் எடுக்க யாரும் முன் வரவில்லை.
தற்போதைய தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி அதனை அவர் ஏற்று முழுமையான மானியத்துடன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதற்காக தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்த அமைச்சர்கள்.
எம்எல்ஏக்க ளுக்கும், ஒத்துழைப்பு தந்த நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.
நிகழ்சியின் முடிவில் நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.
பின்னர், நகர்மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு நகர்மன்ற உறுப்பினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் அனைவரும் ஊர் வலமாக வந்து பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த னர். இதில் ராஜகுமார் எம்எல்ஏ கலந்துகொண்டார்.
- விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சு கூட்டு விலை அருந்ததியார் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார். விஜய் வசந்த் எம். பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை.
- இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் தமிழக அரசு மூலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர், பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீடு, வீடாக சென்று வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் ஆதியன்குடி என்ற பழங்குடி இன மக்களும் வசித்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக தங்களுக்கு பழங்குடி இன சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தமிழக அரசு பழங்குடி இன மக்களுக்கானசாதி சான்றிதழ்களைவழங்கி வருகிறது.
அதனை த்தொடர்ந்து மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசித்து வரும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கி உள்ளோம்.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை, 250 குடும்பங்களுக்கு இருளர் மற்றும் ஆதியன்குடி சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார மேம்பா ட்டிற்காக இவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் தமிழக அரசு மூலமாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கும்பகோ ணம் கோட்டாட்சியர் லதா, திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூங்குழலி, சூரிய நாராய ணன், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
- பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் உள்ள கிராமங்களில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் ,காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சித் தினத்தன்றும் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வார்டு தோறும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் பகுதி சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.
அதன்படி உள்ளாட்சி தினமான இன்று தமிழகத்தில் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
மேலும் முதல் முறையாக தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் என இரண்டு நகராட்சிகள் மற்றும் வல்லம், சுவாமிமலை உள்பட14 பேரூராட்சிகளிலும் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் இந்த பகுதி சபை கூட்டங்கள் நடந்தன. தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 1 பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
துரை. சந்திரசேகரன் எம் .எல் .ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டு வரவேற்றார்.
கூட்டத்தில் 1 வார்டு 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தன. பொதுமக்கள் சேர்ந்து ராமானுஜம் என்பவரை கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசிய விவரம் வருமாறு:- சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேகத்தடையும். பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உடற்பயிற்சி கூடமும்.
நவீன கழிப்பிடமும்,சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைத்தும். அங்கன்வாடிக்கு புதிய கட்டிடமும் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி பேசினர்.
ஆசிரியர் ஒருவர் பேசும்போது, நகராட்சி பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து உணவருந்தும் கூடத்தின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும். போதிய அளவில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
அப்போது 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசும்போது:-
நான் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்ய வேண்டும். பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மாணவியின் பேச்சை அனைவரும் ரசித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சை மாநகராட்சி 25-வது வார்டு உட்பட்ட பகுதியான கீழ ராஜவீதி மணிகர்ணிகேஸ்வரர் கோவிலில் நடந்த பகுதி சபை கூட்டத்துக்கு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில் பொதுமக்கள் தங்களது வார்டு சம்பந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டவில்லை.
- கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்–குட்பட்ட கீழத்தென்பாதி 17-வதுவார்டில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் ரம்யாதனராஜ் தலைமை வைத்தார்.
துணைத்தலைவர் சுப்பராயன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், கணக்கர் ராஜகணேஷ் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆணையர் வாசுதேவன் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து பின்பு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் பொதுமக்கள் கீழத்தென்பாதி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்தும் புதிய கட்டிடம் கட்டவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் சமுதாயக் கூடத்தில் கல்வி கற்கும் நிலை இருந்து வருகிறது.
மாணவ- மாணவிகளின் நலன் கருதி புதிய பள்ளி கட்டிடம் கட்ட வேண்டும். 17 வது வார்டில் கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். குடிசை பகுதி நிறைந்த இப்பகுதியில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூட்டத்தில் வார்டு குழு உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அபிராமம் பஸ் நிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள கழிவறை கட்டிடத்தை சீரமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர.
- இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது.
அபிராமம்,
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பஸ் நிலையம் அருகே 10 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் கட்டப்பட்டது.
தொடக்கத்தில் 2 ஆண்டுகள் மட்டுமே இந்த கழிவறையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இங்கு மோட்டார் பழுதடைந்து கிடப்பதால் அதை சரிசெய்து கொடுக்க வேண்டும், கழிவறையை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்து வருகிறது. தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டங்களும் இங்கு அதிக அளவில் உள்ளன.
இந்த கழிவறை அருகே பஸ் நிறுத்தம் இருப்பதால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பயத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது.
எனவே இந்த கழிவறையை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ஊரமைப்பு துறை இயக்குனர் உறுதி
- ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகரா ட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகர் ஊரமைப்பு துறை இயக்குனர் சண்முகவேல் ராஜா கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.
இன்று காலையிலும் ஆய்வுப் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரி களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஏற்கனவே கட்ட ப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக கட்டப்படும் வீடுகள், வணிக வளாகங்கள் அரசின் விதி முறை களுக்கு உட்பட்டு கட்டினால் மட்டுமே அனுமதி அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டது.
- பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியில் செல்லும் பகுதிக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.
- பஸ் நிலையத்தில் பஸ்கள் இருந்து வெளியில் வரும் பஸ்கள் பிரதான சாலைக்கு திரும்பும் இடத்தில் வளைவு ஒன்று கட்டப்பட்டுள்ளது.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியில்அமைந்துள்ள பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவகம் ஒன்று செயல்பட்டு வந்தது.பேரூராட்சியால் ஏலம் விடப்பட்டு ஏலதாரர் நடத்தி வந்த இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து இருந்ததாலும், பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியில் செல்லும் பகுதிக்கு இடையூறாக இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்த வண்ணம் இருந்தன.
இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் கட்டிட ஆய்வாளர்களிடம் கட்டிடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டது. கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பொறியாளர் குழு கட்டிடம் பழுதடைந்து நிலையில் உள்ளதாகவும், இந்த இடித்து அகற்றப்பட வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தது.இதன் அடிப்படையில் கட்டிடத்தில் உள்ள உணவகத்தை மூடுமாறு பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு, அதன்படி உணவக கட்டிடம் பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பஸ் நிலையத்தில் இருந்த பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் நேற்று இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
பேரூராட்சி செயல்அலுவலர் நெடுஞ்செழியன், பேரூராட்சி தலைவர் மெய்யழகன், ஆகியோர் மேற்பார்வையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் பாதுகாப்பில் இரண்டு பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
கட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி நேற்று காலை முதல் பேருந்து நிலையத்திற்குள் பஸ்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் பஸ்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திற்கு எதிரில் இருந்த சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன.இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
கட்டிட இடிப்பு குறித்து பேரூராட்சிசெயல் அலுவலர்நெடுஞ்செழியனிடம் கேட்ட போது பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளதை அடுத்து இடித்து அகற்றப்பட்டது.
பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் பகுதியில் இனி எந்த ஒரு சிறு வணிக கடைகளுக்கும் வைப்பதற்கு அனுமதி கிடையாது.அதில் தற்போது இருக்கும் அனைத்து கடைகளையும் அகற்ற கூறப்பட்டுள்ளது.
அகற்றப்பட்டவுடன் அந்த இடங்களில் பயணிகள் அமர்வதற்கான வசதி செய்து கொடுக்கப்படும் என்று செயல் அலுவலர் தெரிவித்தார். திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தில் பஸ்கள் இருந்து வெளியில் வரும் பஸ்கள் பிரதான சாலைக்கு திரும்பும் இடத்தில் வளைவு ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இதுவும் பஸ்கள் திரும்புவதற்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தும்வகையில் உள்ளது.எனவே இந்த வளைவையும் இடித்து அகற்றுவதற்கும், அதை வளைவின் அருகில் உள்ள மின்சார கம்பத்தை நகர்த்தி வைப்பதற்கும் பேரூராட்சி நிர்வாகம் ஆவனசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை.
- ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், பஞ்சநதி க்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறப்பு மக்கள்நேர்காணல் முகாம் கலெ க்டர்அருண்தம்பு ராஜ் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசி யதாவது:-
இந்த ஊராட்சியில் கடந்த முறை கணபதிதேவன்காடு கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு சாலையை ரூ.34.86 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட சாலை அமைக்கவும், சிறுதலைக்காடு சாலையை ரூ.14.84 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கவும், கணபதிதேவன்காடு அடப்போடை சாலையை ரூ.14.05 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலையாக மாற்றும் பணியையும் வழங்கியுள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது ரூ.25.99 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான ஆணை, ஆவடைக்கோன் காடு மயான சாலையில் ரூ.27.76 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு ஜல்லி சாலையாக மாற்றுவதற்கும், கணபதி தேவன் காடு மயான கொட்டகையின் கூரை அமைக்கும் பணிக்காக ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலும் மூன்று பணிகள் நடைபெறுவதற்கான ஆணை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாற்றுத்தி றனாளி நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ. 59,150 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு சுமார் ரூ.38 லட்சத்து 35 ஆயிரத்து 549 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார். முகாமில் வருவாய் அலுவலர் ஷகிலா, வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், வேளாண் இணை இயக்குனர் அகண்டாராவ், ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன், ஊராட்சிமன்ற தலைவர்கள் சத்தியகலா, தேவி தமிழரசி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுப்பையன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணகி, மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர் உதயம் முருகையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ராஜ், பாஸ்கர் தாசில்தார் ஜெயசீலன் தனி வட்டாட்சியர்கள் ரமேஷ், வேதையன், மாதவன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
- பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது.
- பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குழந்தைகள் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் முழுவதும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
இதனால் பள்ளியில் உடைந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே கட்டிடத்தில் குவித்து வைக்கபட்டுள்ளது. இந்நிலையில், கடந்த
2017-ம் ஆண்டுபேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக பல்நோக்கு சேவை மையம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தில், தற்போது வகுப்பறைகள் இயங்கி வருகின்றன.
பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாணவர்களின் நலன் கருதி அரசு பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவ மாணவிகளுக்கு இடிக்கப்பட்ட கட்டிடத்தின் அருகே உள்ள தகரக் கொட்டாகையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
- தூசி, விஷப் பூச்சிகளைத் தடுக்கும் வண்ணம் தகரக் கொட்டகை சுற்றிலும் தார் படுதாய் சுற்றப்பட்டு அவல நிலையாக பள்ளி காட்சியளிக்கிறது.
கபிஸ்தலம்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, ஆதனூர், ஒலைப்பாடி ஒன்றிய கவுன்சிலர் கே. முருகன் ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் சோழங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுது ஏற்பட்டதால் கட்டிடம் இடிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவ மாணவிகளுக்கு இடிக்க ப்பட்ட கட்டிடத்தின் அருகே உள்ள தகரக் கொட்டா கையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மழை க்காலம் தொடங்குவதாலும் வெயில் மற்றும் தூசி, விஷப் பூச்சிகளைத் தடுக்கும் வண்ணம் தகரக் கொட்டகை சுற்றிலும் தார் படுதாய் சுற்றப்பட்டு அவல நிலையாக பள்ளி காட்சியளிக்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு சோழங்கநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.