என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பந்தயம்"

    • மொராய்ஸ்சிட்டி மாரத்தான் ஓட்ட பந்தயத்தில் 2,500 பங்கேற்றனர்
    • போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி

    திருச்சி

    திருச்சியை போதையில்லா மாநகரமாக உருவாக்குவதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி இன்று நடத்தப்பட்டது. திருச்சி மொராய் ஸ்சிட்டி திருச்சி மாநகர காவல் துறை இணைந்து நடத்திய இந்த மாரத்தான் போட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது.

    திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொராய்ஸ்சிட்டி உரிமையாளர்லெரொன் மொராய்ஸ், ஜோசப் கல்லூரி முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் 2,500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஜோசப் கல்லூரியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை, மதுரை ரோடு, பாலக்கரை, மேலப்புதூர், தலைமை தபால் நிலையம், கல்லுக்குழி ரயில்வே மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், விமான நிலையம் வழியாக 10 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மொராய்ஸ் சிட்டியை சென்றடைந்தது.மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15,000 , 2ம் பரிசாக 10 ஆயிரம் , 3ம் பரிசாக 5 ஆயிரம் வழங்கப்பட்டது.

    • ஜனவரி 17-ந் தேதி எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்த வேண்டும்.
    • 24 பேர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம்.

    பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் கடந்த 3 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நிலையில் வருகிற ஜனவரி-17 காணும் பொங்கல் தினத்தன்று நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் முன்னிலை வகித்தார். டி.சிம்சன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜனவரி-17 ந்தேதி எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி, ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக கூட்டத்தில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்த விஜயகுமார் தலைமையில் 24 பேர் கொண்ட விழா குழு அமைக்கப்பட்டது.கூட்டத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், குதிரை, மாடு உரிமையாளர்கள், ஜாக்கிகள் கலந்துக்கொண்டனர்.

    • சிங்கம்புணரி அருகே மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி இந்த பந்தயம் நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் முத்து ராமலிங்கதேவரின் 115-ம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 60-ம் ஆண்டு குருபூஜை விழாவை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 56- க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பெரியமாடு, கரிச்சான் மாடு ஆகிய 2 வகையான காளைகள் போட்டியில் பங்கேற்றன. பந்தய காளைகளுக்கு ஏற்ப தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.

    ராமநாதபுரம் மன்னர் பிரம்ம முத்துராமலிங்க நாகேந்திர சேதுபதி கொடியசைத்து பந்தயத்தை தொடங்கி வைத்தார். காளைகள் அ.காளாப்பூர்- திருப்பத்தூர் சாலையில் சீறிப்பாய்ந்து இலக்கை எட்டின. வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையா ளர்களுக்கு முறையே ரூ.33 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.27 ஆயிரத்து 777, 3-ம் பரிசாக ரூ.21 ஆயிரத்து 111, 4-ம் பரிசாக ரூ.6 ஆயிரத்து 666 வழங்கப்பட்டது.

    கரிச்சான் மாட்டில் 44 ஜோடி மாடுகள் பங்கேற்றதால். 2 போட்டிகளாக பிரித்து நடத்த ப்பட்டது. அதில் மாட்டின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.23 ஆயிரத்து 333, 2-ம் பரிசாக ரூ.19 ஆயிரத்து 999, 3-ம் பரிசாக ரூ.16 ஆயிரத்து 666, 4-ம் பரிசாக ரூ.5 ஆயிரத்து 555 வழங்கப்பட்டது.

    • மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.
    • 2,3 -ம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தில்லையாடி உத்திராபதியார் 43-ம் ஆண்டு, நாராயணசாமி 10-ம் ஆண்டு நினைவையொட்டி மாடு, குதிரை எல்கை பந்தயம் காணும் பொங்கல் விழாவில் நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார்.

    செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி தலைவரும், திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான அமுர்த விஜயகுமார், ஒன்றியக் குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிம்சன் வரவேற்று பேசினார்.

    விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு மாடு மற்றும் குதிரை எல்கை பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து திருக்கடையூரில் உள்ள தில்லையாடி நுழைவு வாயில் அருகிலிருந்து போட்டி அனந்தமங்கலம் மற்றும் தரங்கம்பாடி வரை நடைபெற்றது. மாட்டிற்கான எல்கை பந்தயம் 6கி.மீ தூரம் உள்ள அனந்தமங்கலம் வரையும், குதிரைக்கான எல்கை பந்தையம் 8கி.மீ தூரம் உள்ள தரங்கம்பாடி வரையும் சென்று திருக்கடையூர் திரும்பும்படி நிர்ணயிக்கப்பட்டது.

    சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை ஆகிய மாடுகள் மற்றும் குதிரைகள் பந்தயத்திற்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் அவைகள் மாடுகள், குதிரைகள் ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைப்பெற்றது.

    போட்டியில் வெற்றிப்பெற்ற சின்னமாட்டிற்கு ரூ.8 ஆயிரம், நடுமாட்டிற்கு ரூ.10 ஆயிரம், பெரிய மாட்டிற்கு ரூ.12 ஆயிரம், கரிச்சான் குதிரைக்கு ரூ.15 ஆயிரம், நடுக்குதிரைக்கு ரூ.18 ஆயிரம், பெரிய குதிரைக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் நினைவு பரிசுகள் வெற்றிப்பெற்ற மாடு, குதிரை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

    மேலும் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த மாடு, குதிரைகளுக்கும் பல்வேறு பரிசுகள் விழாக்குழுவினரால் வழங்கப்பட்டது.

    போட்டிகளில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், கோயம்புத்தூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடு, குதிரைகள் போட்டியில் பங்கேற்றன.

    பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்தனர். நிறைவாக பந்தயக்குழு நிர்வாகி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    • தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயமும் நடைபெற்றது.
    • 1 முதல் 4 இடம் பிடித்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

    பேராவூரணி ஆவணம் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தின் முதல் போட்டியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், சிங்கப்பூர் தொழிலதிபர் செல்வராசு, தென்னங்குடி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.அன்பழகன், அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஷ்குமார் மற்றும் பொன்காடு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பெரிய மாடு பந்தயத்தில் 14 வண்டிகள், நடு மாடு பந்தயத்தில் 19, பூஞ்சிட்டு மாடு பந்தயத்தில் 47 வண்டிகள் பங்கு பெற்றது. அதனைத் தொடர்ந்து பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இதில் 12 குதிரை வண்டிகள் ஓடியது. தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயம் நடைபெற்றது.

    தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பங்கேற்றது.

    போட்டியில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாமிடம், நான்காவது இடத்தில் வந்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கொடி பரிசாக ஆட்டு கிடா, செல்போன் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை தனவேந்தன் ஒருங்கிணைத்தார்.

    பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பந்தயங்களை கண்டுகளித்தனர்.

    • கடலாடி அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • மாடுகளின் உரிமையாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தில் அரிய நாச்சி அம்மன் கோவில் திரு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பந்தயத்திற்கு 12 மைல் தூரமும், சின்ன மாடு பந்தயத்திற்கு 8 மைல் தூரமும் போட்டி நடந்தது. பெரிய மாடு மற்றும் சின்ன மாடு பந்தயத்தில் 33 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

    இதில் பெரிய மாடு பந்தயத்தில் முதல் பரிசை விளாத்திகுளம் வீர ஜோதி என்பவரது மாடும், 2-வது பரிசை மதுரை மாவட்டம் திருப்பாலை விஷால் என்பவரது மாடும், 3-ம் பரிசை கே.வேப்பங்குளம் நல்லதேவர் என்பவரது மாடும், 4-ம் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடும் வென்றது.

    சின்ன மாடு பந்தயத்தில் முதல் பரிசை சுரேஷ்குமார் என்பவரது மாடும், 2-ம் பரிசை ராஜேந்திரன் என்பவரது மாடும், 3-ம் பரிசை பூலாங்கல் மந்திரமூர்த்தி என்பவரது மாடும், 4-ம் பரிசை மேலச் செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி மாடும் பெற்றன.

    மாடுகளின் உரிமை யாளர்களிடம் நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடு களை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • ஏரியூர் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி பந்தயம் சிங்கம்புணரி ஒன்றியம் ஏரியூர் கிராமத்தில் உள்ள மலைமருந்தீஸ்வரர், முனிநாதன் மற்றும் தண்டாயுதபாணி கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் ஏரியூர்-சிவகங்கை சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 66 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், நடுமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம், பூஞ்சிட்டு வண்டி பந்தயம் என 4 பிரிவாக நடைபெற்றது.

    முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை வைத்தியா வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் விஜயவேல் வண்டியும், 3-வது பரிசை சிவகங்கை அருண் ஸ்டுடியோ வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற நடுமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கினிப்பட்டி பெரியசாமி வண்டியும், 2-வது பரிசை அலவாக்கோட்டை பன்னீர்செல்வம் வண்டியும், 3-வது பரிசை புதுசுக்காம்பட்டி குணசேகரன் வண்டியும் பெற்றது.

    சிங்கம்புணரி அருகே ஏரியூர் கிராமத்தில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 18 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை பொண்குண்டுப்பட்டி செல்லை வண்டியும், 2-வது பரிசை வல்லாளப்பட்டி சுந்தர்ராஜ் வண்டியும், 3-வது பரிசை கோட்டணத்தம்பட்டி கதிரேசன் வண்டியும் பெற்றது. இறுதியாக நடைபெற்ற பூஞ்சிட்டு பந்தயத்தில் மொத்தம் 27 வண்டிகள் கலந்துகொண்டு இரு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை எஸ்.எஸ்.கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் வண்டியும், 2-வது பரிசை ஆபத்தாரணப்பட்டி பிரபுபழனிச்சாமி வண்டியும், 3-வது பரிசை ம.ஒத்தப்பட்டி ஜெகநாதன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற 2-வது பிரிவில் முதல் பரிசை மேலூர் புவனேஸ்வரி எலக்ட்ரிக்கல்ஸ் வண்டியும், 2-வது பரிசை மாம்பட்டி செல்வேந்திரன் வண்டியும், 3-வது பரிசை மாம்பட்டி சிதம்பரம் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றி கோப்பைகள் வழங்கப்பட்டது.

    • ஊமச்சிகுளத்தில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படுகிறது.

    மதுரை

    மதுரை ஊமச்சிகுளத்தில் மாட்டு வண்டி பந்தயம் இன்று காலை நடந்தது. இதனை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கியதும் மாடுகள் மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி ஓட்டம் பிடித்தது.

    5 மைல் தூரத்தை பெரிய மாடுகள் தொட்டு, அதன் பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதற்கான முதல் பரிசாக ரூ.3 லட்சமும் 2-வது பரிசாக ரூ.2.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.2 லட்சம், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், சாரதிக்கு கொடி பரிசு ரூ.10 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.10 ஆயிரம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

    சிறிய மாடுகளுக்கான பந்தயத்தையும் அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். சிறிய மாடுகள் 3 மைல் தூர எல்லையை தொட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்தன. இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சமும் 2-வது பரிசாக ரூ. 1.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ.1 லட்சமும், 4-வது பரிசாக ரூ.25 ஆயிரம், சாரதிக்கு கொடி பரிசு ரூ.5 ஆயிரம், எல்லை பரிசு- ரூ.5 ஆயிரம் ஆகும்.

    போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் அறிவித்தனர். 

    • மேலூர் தெற்குபட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் தெற்குப்பட்டியல் ஸ்ரீ காஞ்சி குளம் சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை தெற்குப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக நடந்த இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் 24 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் 7வண்டிகளும், சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் 17வண்டிகளும் பங்கேற்றன.

    இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த ேபாட்டியினை காண சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர்.

    • தேவகோட்டை அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி கிராமத்தில் வேம்புடைய அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

    இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 57 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

    மாட்டு வண்டி பந்தயம் நடு மாடு, பூஞ்சிட்டு, பெரிய மாடு, கரிச்சான் என 4 பிரிவுகளாக நடந்தது.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த போட்டியை கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.நடு மாட்டு பிரிவில் சசிகுமாரும், பூஞ்சிட்டு, பெரியமாடு பிரிவில் நல்லாங்குடி முத்தையாவும், கரிச்சான் பிரிவில் பாப்பன்கோட்டை பாக்கியம் ஆகியோரது மாடுகள் வெற்றி பெற்றன.

    போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், கிராம மக்களும் செய்தி ருந்தனர்.

    போட்டியை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. 

    • தி.மு.க. சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • இந்த பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு முதல் பரிசு பெற்றது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் மாய கிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த பந்தயத்தில் சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு முதல் பரிசு பெற்றது.

    2-வது பரிசை வள்ளியூர் முத்தையா ஆனந்த் என்பவரது மாடும், 3-வது பரிசை மேல செல்வனூர் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின், 4-வது பரிசை ஏனாதி பூங்குளத்தான் என்பவரது மாடும் பெற்றன.

    சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சித்திரங்குடி ராமமூர்த்தி என்பவரது மாடு பெற்றது. 2-வது பரிசை பூலாங்கால் சிக்கந்தர் பாட்சா என்பவரது மாடும், 3-வது பரிசை சிங்கிலி பட்டி முகுந்தன் என்பவரது மாடும், 4-வது பரிசை பூலாங்கால் அனுசுயா என்பவரது மாடும் பெற்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கடலாடி தி.மு.க. தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் செய்திருந்தனர்.

    • தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் காந்தி முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் ரவிச்சந்திர ராமவன்னி சிறப்புரையாற்றினார்.

    வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகன், உதயகுமார், ஆதிமுத்து, ஒன்றிய பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணசாமி, ராமசாமி, போஸ், நெசவாளரணி மாரிச்சாமி, செந்தூரான், செந்தூர்பாண்டி, கலைஞர் பகுத்தறிவு பாசறை முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிளைச் செயலாளர் மன்சூர் அலிகான் வரவேற்றார். ஒன்றிய பிரதிநிதி சண்முகவேல் நன்றி கூறினார். இதையொட்டி பெருநாழியில் இருந்து அருப்புக்கோட்டை சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

    வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ×