search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடைப்பு"

    • மணி என்ற சுப்ரமணியன் (வயது 42) இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
    • சம்பவத்தன்று ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடி மற்றும் மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்ற சுப்ரமணியன் (வயது 42) இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அலுவலக கண்ணாடி மற்றும் மின் சாதனங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த சுப்ரமணியன் சம்பந்தப்பட்ட நபர்களான கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யப்பன் (38), ராமச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) ஆகியோரை நேரில் சென்று ஏன் எனது அலுவலக கண்ணாடியை உடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அப்பொழுது அய்யப்பன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்கு பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணகுமாரை தேடி வருகின்றனர்.

    • 2 வாலிபர்கள் தப்பி ஓட்டம்
    • தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு மிடாலத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராபின்சன் ஓட்டினார்.

    இரணியல் அருகே மட விளாகம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது 2 வாலிபர்கள் பஸ்ஸை தடுத்து நிறுத்தி னார்கள். திடீரென அவர்கள் அந்த பகுதியில் கிடந்த கற்களை எடுத்து பஸ்ஸின் மீது வீசினார்கள்.

    இதில் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து அந்த வாலி பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து டிரைவர் ராபின்சன் இரணியல் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணை யில் குடிபோதையில் வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வாலிபர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    • கற்களை தூக்கி பஸ்சில் வீசியதில் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது.
    • குடிபோதையில் கற்களை வீசி பஸ்ஸை சேதப்படுத்தியது தெரிய வந்தது.‌

    தஞ்சாவூர்:

    தஞ்சை கரந்தையில் போக்குவரத்து பணிமனை உள்ளது.

    இந்த பணிமனையில் இருந்து தினமும் ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பணிமனையில் இருந்து கும்பகோ ணத்துக்கு செல்லும் அரசு பஸ்சை தஞ்சை அடுத்த மாத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த டிரைவர் ரத்தினசாமி (வயது 53 ) தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்று பயணிகளை ஏற்றுவதற்காக ஓட்டினார்.

    பணிமனையில் இருந்து பஸ் வெளியே புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

    அப்போது கீழவாசல் பூமால் ராவுத்தன்கோவில் தெருவை சேர்ந்த கார்த்தி (25) திடீரென கற்களை தூக்கி பஸ்சில் வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறாக நொறுங்கியது.

    இது குறித்து ரத்தினசாமி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    முதல் கட்ட விசார ணையில் கார்த்தி, குடிபோதையில் கற்களை வீசி பஸ்ஸை சேதப்படுத்தியது தெரிய வந்தது.‌

    இருந்தாலும் பஸ்சை சேதப்படுத்தியதற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம்.
    • சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் வாய்க்கால் மேடு தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி மனைவி காந்திமதி பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் விநாயகர் கோவில் தெருவில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளோம். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் 6 பேர் வீட்டின் முன்பு பொறுத்தி இருந்த 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். கேமராக்களை உடைக்கும் முன்பு அதில் 6 பேர் உள்ளதாக தெரிகிறது. எனவே கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சுமார் 26 ஆயிரம் மதிப்புள்ள 3 கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும்.
    • அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி கூடத்தில் நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமை வகித்தார்.

    ஆணையர் வாசுதேவன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர்கான், பொறியாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் சார்லஸ், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் முன்னிலை வகித்தனர்.

    கணக்கர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு,

    நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன் பேசுகையில், நகர்மன்ற தலைவர், அதிகாரிகள் வார்டுகளுக்கு ஆய்வு செய்ய செல்லும்போது அந்தப் பகுதியில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து செல்லவேண்டும் என்றார்.

    முழுமதி இமயவரம்பன்:

    எனது வார்டில்கொசு த்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்கவேண்டும். பாலமுருகன்: மழைநீர் வடிகால்களில் பெரும்பா லும் செப்டிக்டேங்க் கழிவுநீர் திறந்துவிடப்படகிறது.அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    வேல்முருகன் :

    அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது இதனை முற்றிலும் தடுக்க வேண்டும்.

    நாகரத்தினம்:

    8-வது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அந்த இடத்தை மீட்க நடவடிக்கை வேண்டும்.

    ஜெயந்திபாபு:

    பதினெண் புராணேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பணி நடைபெறுவதால் கோயிலுக்கு செல்லும் சாலையை சரி செய்ய வேண்டும்.

    முபாரக்அலி:

    பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களின் நலன் கருதி பாலத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவதாஸ்:

    எனது வாடுக்கு துப்புரவு பணி மேற்கொள்ள ஊழியர்கள் வருவதில்லை.

    இதனால் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இரண்டு இடங்களில் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டும்.

    ராஜசேகர்:

    சித்தமல்லி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மோட்டார் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகை யில், ஈசான்ய தெருவில் அமைந்துள்ள எரிவாயு தகணமேடை பராமரிப்பு பணிக்கு ரூ.9.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    மழைநீர் வடிகாலில் கழிவுநீர் திறந்து விட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    நகராட்சி பகுதிகளில்முதற்க ட்டமாக 79 இடங்களில் மின்விளக்குகள் அமைக்கப்ப டவுள்ளது.

    மின்சாரவாரியம் அனுமதி பெற்று அடுத்து 37 மின்விளக்குகளும் எரியவை க்கப்படும் என்றார்.

    • காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பதாக தகவல்
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை அடுத்த கக்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 70). இவருக்கு சொந்தமான ஆலமூடு போற்றி குடும்ப கோவில் மேலகக்கோட்டில் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு பூஜை வழிபாடுகளை முடித்து விட்டு கோவில் நடையை சாத்தி விட்டு ராமதாஸ் சென்றுவிட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணி.
    • சாலை ஓரங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணி தொடக்கம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாவில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை செய்யும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க ஐந்தாயிரம் மண் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை என தெரிவித்தனர் வேதாரண்யம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகள் ஏற்படும் உடைப்புகளை சரி செய்ய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தற்போது மணல் முட்டைகள் தயார் செய்யும் பணியில் சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் இங்கு தற்போது ஜந்து ஆயிரம்மண் மூட்டையில் தயார் செய்யப்பட்டு சாலை ஓரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஆறுகளின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வகையில் சாலை ஓரங்களில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளையும் சமாளிக்க நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாயானது வலு விழந்த நிலையில் தண்ணீர் அழுத்தம் காரணமாக விரிசல் உண்டாகி உடைப்பு ஏற்பட்டு வருகிறது‌.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் அருகே சொக்கநாதபுரத்தின் வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் தற்சமயம் காட்டாற்று வெள்ளம் போல் வீணாக சென்று கொண்டிருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் இக்கூட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. தற்போதும் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்குள் பதிக்கப்பட்ட தண்ணீர் குழாயானது வலு விழந்த நிலையில் தண்ணீர் அழுத்தம் காரணமாக விரிசல் உண்டாகி உடைப்பு ஏற்பட்டு வருகிறது‌.

    எனவே இதைப் போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் புதிய குழாய்களை பதிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • முகமூடி திருடர்கள் கைவரிசை
    • களியக்காவிளை போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குழித்துறை அருகே உள்ள வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் பிரவு சிங். இவர் குழித்துறை சந்திப்பு பகுதி யில் கடந்த 5 வருட மாக பேக்கரி கடை நடத்தி வருகி றார். நேற்று இவர் வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் இரவு 10 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது பின்பக்க சட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    கடைக்குள்சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. யாரோ மர்ம மனிதர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளை சம்பவ த்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. கடை யின் பணப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து பிரவு சிங் களியக்காவிளை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் பொருத்தி இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சோதனை செய்தனர். அதில் மர்ம நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கடைக்கு உள்ளே புகுந்து கல்லாவை உடைத்து பணத்தை திருடி செல்வது தெரியவந்தது.

    இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழித்துறை பகுதியில் அடிக்கடி கடைகளை உடைத்து திருட்டு நடப்பதால் கடை நடத்தி வருபவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
    • 100 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது

    கரூர்

    கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், மேலூர், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த குழாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது மாயனூர் ரெயில்வே கேட்டு அருகே திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 100 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் அப்பகுதியில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் ஆறுபோல் ஓடி வீணாகியது. பின்னர் உடைப்பு சரிசெய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
    • டிரைவர் தப்பி ஓட்டம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மஞ்சாலும் மூடு அருகே முக்கூட்டுகல் பகுதியில் அனுமதியின்றி பாறை உடைப்பதாக ரகசிய பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரகசிய பிரிவு போலீசார் அப்பகுதியில் நோட்டமிட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்றைய தினம் பாறை உடைப்பதாகவும் உடைக்கப்பட்ட பாறை களை கேரளாவுக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் பாறை உடைக்கும் நபர்களும் டிரைவரும் தப்பி ஓடி விட்டனர். பின்னர்போலீசார் விசாரணைமேற்கண்ட போது பனச்சமூடு அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற ஜே.சி.பி. வாகனம் மற்றும் பாறை உடைக்க கூடிய கம்ப்ரஸர் மோட்டார், டெம்போஆகியவற்றை போலீசார் கைப்பற்றி வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.
    • மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து திருடி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம்-தென்பிடாகை இடையே திருமலைராஜன் ஆற்றங்கரையில் பள்ளம் தோண்டி மணல் திருடப்பட்டு வருகிறது.

    பின்னர் அந்த மணலை அந்த பகுதியில் கொட்டி வைத்து இரவில் வந்து வாகனங்களில் எடுத்துச் செல்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இது போல் மணல் எடுப்பதால் மழை வெள்ள காலங்களில் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    மேலும் சுமார் 25 ஆண்டுகள் பழமையான அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்கள் சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டு மணலை திருடி கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்தும் திருடி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

    இருப்பினும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தெரியாமல் சிலர் ஆற்றங்கரைகளில் பள்ளம் தோண்டி மணலை திருடி செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு செய்து ஆற்றில் தோண்டி மணலை திருடிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×