என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு பணி"

    • இருசக்கர பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் உத்தரவின் பேரில், 2024-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் அமைவதற்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாது காப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளது.

    முக்கியமாக, புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணை யாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள், ஆயுதப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை (டி.எஸ்.பி) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர் கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை 31.12.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று இரவு 9 மணியில் இருந்து முக்கியமான இடங்களில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு சென்னை, மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய மாவட் டங்களில் மொத்தம் 420 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வேண் டிய உதவிகளை மேற்கொள்வார்கள்.

    இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர பைக் ரேஸ் தடுப்பு நடவடிக்கையாக 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் உள்ள 100 முக்கிய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31-ந்தேதி மாலை முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந் தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளுநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ஏ.டி.வி. எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும். மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலை யிலும் இது போன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும்.

    மேலும், முக்கிய இடங்களில் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப்படைகள், கடற்கரை ஓரங்களில் பாது காப்பிற்காக நிறுத்தப்படும்.

    மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும். மொபைல் சர்வைலன்ஸ் எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு டாடா ஏஸ் போன்ற வாகனங்களில் பி.ஏ.சிஸ்டெம், பிளிக்கெரிங் லைட் போன்றவை பொருத்தியும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்.

    பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்து வதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    சென்னை பெருநகர காவல் துறையினர், அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து சென்னை பெருநகரில் பொதுமக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

    மேலும், சென்னை பெருநகர காவல் துறையின் அறிவுரைகளை கடை பிடித்து புத்தாண்டை கொண்டாடுமாறு பொது மக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    எனவே, பொதுமக்கள் சென்னை பெருநகர காவல் துறையினருடன் கைகோர்த்து 2024-ம் ஆண்டு புத்தாண்டினை இனிதாக வரவேற்போம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.

    வேங்கிக்கால்:

    ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

    இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ராஜகோபுரம் வழியாக மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    புத்தாண்டு தினத்தில் 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். அம்மணி அம்மன் கோபுரம் வழியாக வருவாய் துறை, காவல்துறை, அறநிலையத்துறை உள்ளிட்ட துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதை பார்த்த வெளிமாநில பக்தர்கள் அங்கு காத்திருந்தனர்.

    நேற்று காலை சுமார் 11 மணியளவில் அம்மணி அம்மன் கோபுர கதவு பூட்டப்பட்டிருந்து. இந்நிலையில் அரசு துறையினரால் அழைத்து வரப்படும் வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கோபுர வாசல் கதவுகள் திறக்கப்பட்டது. அப்போது அங்கு காத்திருந்த பக்தர்கள் முண்டி அடித்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்ததால் பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பக்தர்களை விலக்கிவிட்டு சமாதானம் செய்து அனுப்பினர்.

    இது குறித்து பக்தர்கள் கூறுகையில் அருணாசலேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த கோபுர வாசல் வழியாக தரிசனத்திற்கு செல்வது என்பது குறித்து முறையான அறிவிப்பு பலகையோ, வழிகாட்டி பதாகைகளோ வைக்கப்படுவதில்லை. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது. 5-ம் பிரகாரத்தில் திருப்பதியில் உள்ளதைப்போல் பக்தர்கள் அமர்ந்து காத்திருக்கும் அறைகள் அமைக்க வேண்டும். இந்த அறைகளில் கழிவறை வசதிகள் செய்யப்பட வேண்டும்.

    அதிக அளவில் வரும் பக்தர்களின் நலன் கருதி தரிசன முறையில் உரிய மாற்றம் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எளாவூர் சோதனை சாவடியில் 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
    • சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழக எல்லையில் சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக தினந்தோறும் ஆந்திரா, பீகார், ஒடிசா, மராட்டியம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆந்திராவில் இருந்து கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் கஞ்சா, செம்மரக்கட்டைகள் தொடர்ந்து கடத்தி வரப்படுவதாகவும், ஹவாலா பணம் கடத்தப்படுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட த்தில் சமீப காலமாக பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள கோழிகள் மற்றும் பறவைகள் இறக்கின்றன.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி கால்நடை மருத்துவர்கள் ஆந்திராவை ஒட்டி தமிழக எல்லையில் அமைந்துள்ள எளாவூர் சோதனை சாவடியில் சிறப்பு முகாம் அமைத்துள்ளனர். ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை ஒவ்வொன்றாக நிறுத்தி டயர் மற்றும் வாகனத்தின் வெளிப்புற பகுதியில் கால்நடைத்துறை ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து அனுப்பி வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் கடந்த 17-ந்தேதி தொடங்கின.

    இன்று 3-வது நாளாக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளில் நடந்து வருகிறது.

    • ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசார் அடுத்த சுற்றில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள்.
    • தினமும் 2 ஷிப்ட்களாக போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் வைத்து பாதுகாக்கப்பட உள்ளது. ஜூன் 4-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாக்கும் அறை மற்றும் ஓட்டு எண்ணும் மையத்துக்கு நாளை மாலை முதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.

    நாளை மாலை முதல் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தொடங்குவார்கள். குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக ஐ.ஆர்.டி.டி. கல்லூரி வளாகத்தில் தனித்தனியே ஸ்டிராங் ரூம்களில் வைத்து சீலிடப்படும்.

    அதன்பின் அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும். துணை ராணுவத்தினர் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையை ஒட்டி பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆயுதப்படை மற்றும் பட்டாலியன் போலீசார் அடுத்த சுற்றில் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். இறுதியாக உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.

    ஜூன் 4-ந் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடரும். ஒரு ஷிப்ட்டுக்கு துணை ராணுவம், பட்டாலியன் மற்றும் ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 199 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். தினமும் 2 ஷிப்ட்களாக போலீசார் பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்கவும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
    • கஞ்சாவுடன் தப்பி ஓடிய வாலிபர் ஒருவரையும் குதிரை படையினர் விரட்டி பிடித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் மெரினா கடற்கரையில் குதிரைப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவதி, ஷாலினி என 2 சிறுமிகள் கடலில் மூழ்கியுள்ளனர்.அவர்களை குதிரைப்படை வீரர்கள் மின்னல் வேகத்தில் குதிரையில் பாய்ந்து சென்று காப்பாற்றியுள்ளனர்.

    இது தவிர குற்றச் செயல் களை தடுப்பதற்கும் குதிரைப்படை வீரர்கள் உதவி செய்து வருகிறார்கள். சென்னை காவல் துறையில் செயல்பட்டு வரும் குதிரைப்படைக்காக குதிரைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1670-ம் ஆண்டு மாகாண கவர்னராக இருந்த வில்லியம் என்பவர் இந்த குதிரைப்படையை உருவாக்கினர்.

    அப்போது புதுப் பேட்டை, வேப்பேரி கால்நடை மருத்துவமனை, வேப்பேரி போலீஸ் நிலையம், பூக்கடை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை ஆகிய 7 இடங்களில் குதிரைப்படை பிரிவு செயல்பட்டு வந்தது. தற்போது புதுப்பேட்டை பிரிவு மட்டுமே செயல்பட்டு வருகிறது.

    இதையொட்டி 25 குதிரை களில் 11 குதிரைகள் குதிரை யேற்றத்தின்போது பிரத்தியேக பயிற்சி பெற்றவையாகும். மீதமுள்ள 14 குதிரைகள் குடியரசு தின அணிவகுப்பு, வி.ஐ.பி. பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

    மெரினாவில் கஞ்சாவுடன் தப்பி ஓடிய வாலிபர் ஒருவரையும் குதிரை படையினர் விரட்டி பிடித்துள்ளனர். செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்கவும் குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கபாலி, காவேரி, சோழன், சாரதி, வைகை, தாமிரபரணி என குதிரைக்கு பெயர் வைத்துள்ளனர்.

    • ஒலிம்பிக் போட்டி பாரீசில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
    • 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலை நகர் பாரீசில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டியில் 117 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தொடக்க விழாவில் 45 ஆயிரம் பேர் வரை பாதுகாப்புக்கு அமர்த்தப்படுவார்கள்.

    மேலும் 18 ஆயிரம் ராணுவ வீரர்களும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள்.

    இதற்கிடையே ஒலிம்பிக் போட்டி பாதுகாப்பு பணிக்காக இந்திய மோப்ப நாய்கள் பாரீஸ் சென்று உள்ளன.

    10 சிறப்பு பயிற்சி பெற்ற சிறப்பு கமெண்டர்கள் சி.ஆர்.பி.எப்.பின் மோப்ப நாய்களுடன் அங்கு சென் றுள்ளனர். இந்த மோப்ப நாய்கள் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் பல்வேறு மைதானத்தில் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

    இந்தியா-பிரான்ஸ் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த மோப்ப நாய்கள் பெல்ஜியம் மாலினோஸ் இனத்தை சேர்ந்தவையாகும். சந்தேகத்துக்குரிய மனிதனின் இருப்பிடம், குண்டுகளை துல்லியமாக கண்டறிதல் போன்றவற்றில் இந்த வகை நாய்கள் மிகவும் சிறப்பாக செயல்படும்.

    • சென்னை பெருநகர காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு 16,000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    16.01.2025 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் மெரினா கடற்கரை உள்ளிட்ட இதர பொழுது போக்கு இடங்களுக்கு அதிகளவில் வருவதால், எவ்வித அசம்பாவிதமும் நிகழா வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், விரிவான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் 16,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    1. மெரினா கடற்கரை (உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை) சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் (Temporary Mnl Control room) அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும். அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகணங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுவார்கள்.

    2. கடற்கரை மணற்பரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு வான்தந்தி கருவி (Walky Talky), மெகா போன். பைனாகுலர் ஆகியவை வழங்கப்பட்டு, வாட்சப் குழு (WhatsApp Group) அமைக்கப்பட்டும், பைனாகுலர் மூலம் காவலர்கள் கண்காணித்து மெகா போன் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், கட்டுப்பாட்டறைக்கு வான் தந்தி கருவி மூலமும், வாட்சப் குழுவிலும் உடனுக்குடன் தகவல்களை வழங்குவார்கள். மேலும், 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

    காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மேலும், குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய 3 All Terran Vehicle மூலம் கடற்கரை மணற்பரப்பில் காவல் ஆளினர்களால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடை பெறாமல் கண்காணிக்கப்படுவர்.

    சென்னை பெருநகர காவல் மற்றும் கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர் காக்கும் பிரிவின் (Anti Drowning team) 85 காவல் ஆளிநர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்காத வண்ணம் தீவிரமாக கண்காணிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    3. பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை: பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் 1 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறை. 3 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் ஆளிநர்களால் பைனாகுலர் மூலம் கண்காணிக்கப்படுவதுடன், ஒலிபெருக்கி மூலம் அறிவுரைகள் வழங்கப்படும். மேலும், குதிரைப்படை மற்றும் சுற்றுக் காவல் ரோந்து ஊகணங்கள் மூலம் ரோந்து வரப்பட்டு, கண்காணிக்கப்படுவதுடன். ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பாதுகாப்பு குறித்த அறிவுரைகளும் வழங்கப்படும். 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள். தீயணைப்பு வாகனம். அப்பகுதியை சேர்ந்த நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் மற்றும் மோட்டார் படகுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    4.முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்:

    (I) குழந்தைகள் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்கு காவல் அடையாள அட்டை:

    கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகா காவல் மூலம் தயாரிக்கப்பட்ட கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள் காவல் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டைகள் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களிடம் விபரங்கள் பெறப்பட்டு, அடையாள அட்டையில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் ஆகியவற்றை எழுதி, குழந்தைகளின் கைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுவர். ஆகவே குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மேற்கூறிய காவல் உதவி மையங்களில் (Wrist ID Band) அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு கடற்கரைக்குள் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவர்.

    (II)டிரோன் கேமராக்கள்:

    மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் (Drone Camera) மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும். மேலும், அதிக திறன் கொண்ட டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு அவைகள் மூலம் கடலோர மணற்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை வாசகங்கள் ஒலிபரப்பப்படும்.

    5. இதர பாதுகாப்பு ஏற்பாடுகள்:

    காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவு கூடும் மற்ற முக்கிய இடங்களான கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, செம்மொழி பூங்கா உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்கள் (Amusement Park) மற்றும் இதர இடங்களிலும் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் காணும் பொங்கலை கொண்டாட சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வணிக வளாகங்கள் (Malls) மற்றும் திரையரங்குகள் கொண்ட வணிக வளாகங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் துறை சார்பில் முக்கியமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களில் சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிறேல்களில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    6. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்:

    காணும் பொங்கலன்று சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஒட்டிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்குவார்கள். இது மட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, GST ரோடு மற்றும் இதர சாலைகளில் இருசக்கர வாகன பந்தயம் (Blice Race) தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டு பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். சென்னை பெருநகர காவல்துறையின் அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து பொதுமக்கள் மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாட்களுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா வரும் ஜனவரி 26ம் தேதி அன்று 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று இரவு முதல் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த 5 அடுக்கு பாதுகாப்பு வரும் ஜனவரி 30 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்றும் ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆகிய 3 நாட்களுக்கு 7 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலில் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஊழியர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் மற்றும் மோப்ப நாய்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    விமான நிலைய வளாகமும் ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெடிபொருட்கள் நிபுணர்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கவனமாக ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) அதிகாரிகள், மோப்ப நாய்களுடன், சென்னை விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும், குறிப்பாக விமானங்கள் நிறுத்துமிடங்கள் உள்ள பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    BCAS பாஸ்கள் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே உள்ளவற்றுடன் கூடுதலாக, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் இந்தப் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளையும் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். வழக்கமான பயணிகள் சோதனைகளைவிட கூடுதலாக பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    குறிப்பாக பயணிகளின் கைப்பைகள் பரிசோதிக்கப்படுகின்றன. மேலும் திரவங்கள், ஊறுகாய், ஹல்வா, ஜாம் மற்றும் எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதேபோல், சரக்கு பார்சல்கள் பல கட்ட சோதனைக்குப் பிறகுதான் விமானங்களில் ஏற்றப்படுகின்றன.

    இதனால், கடும் பயணிகள் சோதனைகள் காரணமாக, உள்நாட்டு விமானம் புறப்படுவதற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்பும், சர்வதேச விமானம் புறப்படுவதற்கு 3.5 மணி நேரத்திற்கு முன்பும் பயணிகள் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • முக்கிய சந்திப்புகளில் கூடுதல் கண்காணிப்பு
    • ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு

    நாகர்கோவில்:

    கோவை மதுரை சேலம் பகுதிகளில் பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கல்யாண சுந்தரம் (வயது 55) என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கல்யாணசுந்தரம் வீட்டில் குண்டு வீசியது தொடர்பான வழக்கில் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து குளச்சல் பகுதியை சேர்ந்த முஸ்ஸாமில் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாகியுள்ள மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகி றார்கள்.

    இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகி றார்கள். ஆரல்வா ய்மொழி களியக்காவிளை அஞ்சுகிராமம் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

    இதேபோல் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. போலீசார் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலோர கிரா மங்களிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    முக்கிய சந்திப்புகள் மற்றும் கலெக்டர் அலுவலக பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    பாரதிய ஜனதா நிர்வாகிகள் வீடுகளுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி வெள்ளாடிச்சி விளையில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்பட முக்கிய நிர்வாகிகள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம்

    தமிழக முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கும், கைது நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தலைவர் பரக்க த்துல்லா உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு மாவட்ட துணைத்தலைவர் சோமு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பாப்புலர் பிரண்ட் மாவட்ட பேச்சா ளர் ஹமீது இப்ராஹிம், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முஹம்மது யாசின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.முன்னதாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் முஹைதீன் வரவேற்று ேபசினார். முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ஆரிபு நன்றி கூறினார். முன்னதாக ராமநாதபுரத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில் புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது மறியலில் ஈடுபட்டவா்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதன் பின்பு மறியலில் ஈடுபட்ட 22 ஆண்கள், 4 பெண்கள் என 26 பேரை போலீசார் கைது செய்தனர். அவர் வெளிப்பட்டினத்தில் உள்ள தனியாா் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர். ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஓசூர் சப்-டிவிஷனில் சுமார் 1,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • 500 சிலைகள் 4-ந்தேதி கரைக்கப்படவுள்ளன.

    ஓசூர்,

    ஓசூரில் விநாயகர் சதுர்த்தி பந்தோபஸ்து மற்றும் சிலை ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னிட்டு, போலீசாரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓசூர் எம்.ஜி.ரோடு காந்தி சிலை அருகே கொடி அணிவகுப்பை, மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் டாகூர் தொடங்கிவைத்தார்.

    மேலும், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, போஸ் பஜார் வழியாக சென்று மீண்டும் காந்தி சிலையருகே நிறைவடைந்த இந்த அணிவகுப்பினை, அவர் தலைமை தாங்கி நடத்திச் சென்றார்.

    முன்னதாக, அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, விரிவான பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்களும், இந்து மற்றும் முஸ்லீம் அமைப்புகளும் நல்லமுறையில் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ஓசூர் சப்-டிவிஷனில் சுமார் 1,000 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 500 சிலைகள் வருகிற 3-ந்தேதியும், அதேபோல் சுமார் 500 சிலைகள் 4-ந்தேதியும் கரைக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள சிலைகளும் கரைக்கப்படும்.

    விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது, 1, 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 இடங்கள் பதற்றமான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன அதில், ஓசூரில் 2 இடங்கள் பதற்றமான பகுதியாகும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் மற்றும் ஓசூர் சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.

    • தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் இருந்து அலங்கிரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது.

    அப்போது சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நில அளவையர்கள் நடராஜன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

    அதன்படி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு–கள் அகற்றப்பட்டன.அப்போது உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல், ஒன்றிய பொறியாளர் கோபி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை யாக ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×