search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வூதியர்கள்"

    • விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் கலெக்டர் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையிலும் மார்ச் 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 21-ந்தேதி வரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இரட்டை பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.

    விண்ணப்பங்களில் "ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

    தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையில் உள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.

    ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
    • இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    சேலம்:

    சேலம் கோட்ட போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை என்று கூறி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடைக்கவில்லை.

    தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் உட்பட அனைவருக்கும் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை ஒய்வூதிய பண பலன் உட்பட பஞ்சப்படி என எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

    இதை அடுத்து ஆத்திரமடைந்த போக்குவரத்து ஓய்வூதியர்கள் இன்று காலை சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதையடுத்து சாலையில் அமர்ந்து அவர்கள் தங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

    சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக நடந்த போராட்டத்தில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதை அடுத்து போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இதை அடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அண்ணாபூங்கா அருகே உள்ள 2 திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், போக்குவரத்து கழக ஓய்வு ஊதியர்களுக்கு 7 ஆண்டுகளாக எந்த பலனும் கிடைக்காதால் நாங்கள் வறுமையில் வாடி வருகிறோம். எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை எனில் விரைவில் குடும்பத்துடன் டெப்போ முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எந்த அரசு வந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இதனை நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

    • 75 மற்றும் 80 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு.
    • குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.1000 ஆக வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தினம், ஆண்டு விழா , 75 மற்றும் 80 அகவை நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சீனி .அய்யாகண்ணு தலைமை தாங்கினார்.

    மாநில துணை பொது செயலாளர் ஜெகதீசன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் ஞானசேகர் வரவேற்றார். மாவட்ட செயலாளர் டாக்டர் சேதுராமன் ஆண்டு அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.

    மாநிலத் தலைவர் சீதாராமன், மாநில பொது செயலாளர் மருதை ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில செயலாளர் ஜாகிர் உசேன், மாநில மகளிர் அணி செயலாளர் ரேணுகா, அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் ராஜராஜன், திருவாரூர் மாவட்ட தலைவர் முருகானந்தம், கருவூலர் கணக்கு துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் மகேஸ்வர், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் ராசமாணிக்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், மாநில தணிக்கையாளர் பாலசுப்ரமணியன், பட்டுக்கோட்டை வட்டக் கிளை தலைவர் ரெஜினால்டு செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த விழாவில் 75 மற்றும் 80 அகவை நிறைவு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கருவூல அலுவலர் (பொ) மீனாட்சி பரிசு வழங்கி பாராட்டினார்.

    இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், மத்திய அரசு 1-7-2022 முதல் வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படியை அதே தேதியில் இருந்து உடன் அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 21 மாத கால 14 சதவீத அகவிலைப்படியையும் 1-1-2022 முதல் 1-7-2022 வரை வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவையையும் உடன் வழங்க வேண்டும்.

    புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்து மருத்துவ செலவு தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும். கண்புரை சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் அனுமதிக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் இறந்தால் குடும்ப நல நிதியாக ரூ.2 லட்சமாக வழங்க வேண்டும்.

    மத்திய அரசு வழங்குவது போல் தமிழக அரசும் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ படியை ரூ.1000-ஆக வழங்க வேண்டும். ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும், அடையாள அட்டை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோபாலகிருட்டிணன், எஸ்தர் தாஸ், தஞ்சை ராமதாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் வசந்தா நன்றி கூறினார்.

    • எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொகையை வழங்க வேண்டும்.
    • அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும்.

    கும்பகோணம்:

    அகில இந்தியமாநில அரசு ஓய்வூதியர் சம்மேள னத்தின் அழைப்பை ஏற்றுஅனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில முடிவின்படி, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி, ஒன்றிய, மாநில அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கும்பகோணம், திருவிடைமருதூர் வட்டக்கி ளைகள் இணைந்து கோட்ட அளவில் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு, அகில இந்திய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வட்ட தலைவர் ஆ.துரைராஜ் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை மாவட்டத் துணைத் தலைவர் பழ. அன்புமணி துவக்கி வைத்து பேசினார்.

    வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் ரங்கசாமி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் எச். உமா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் இரா.ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சொ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், கும்பகோணம் நகர செயலாளர் பக்கிரி சாமி, பொருளாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, திருவிடைமருதூர் பொறுப்பாளர்கள் உதயகு மார், பன்னீர்செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபாலன் நிறைவுரை உரையாற்றினார்.

    நிறைவாக திருவிடைமருதூர் வட்டத் தலைவர் கே.சிவராமன் நன்றி தெரிவித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும்.

    எல்லா நோய்களுக்குமான முழுமையான செலவுத்தொ கையை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கிட வேண்டும்.

    70 வயது முதிர்வடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12000/- ஆக வழங்க வேண்டும் நிறுத்தப்பட்ட ரயில் பயணக் கட்டணச் சலுகைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர்.

    • அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியம் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு டிஎன்ஜிபிஏ. வட்ட தலைவர் தாசன் தலைமை தாங்கினார்.

    மடத்துக்குளம் வட்டக்கிளை நிர்வாகி மாவளப்பன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.எல்லம்மாள், உடுமலை வட்ட செயலாளர் விஜயகுமார் கோரிக்கை விளக்கம் அளித்தார். மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு உடுமலை வட்ட தலைவர் செல்லத்துரை வாழ்த்துரை வழங்கினார். உடுமலை பொருளாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 75பேர் கலந்து கொண்டனர்.

    • புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
    • அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    மின்சார சட்ட திருத்த மசோதா-2022-ஐ கைவிட வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த பணி காலத்தை 50 சதவீதம் கணக்கில் எடுத்து பென்ஷன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு கிளை தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார்.

    இந்த நூதன போராட்டத்தில் ஆண்கள் மேல் சட்டை அணியாமல் அரை நிர்வாணத்தில் நின்று கோஷங்கள் எழுப்பினர்.

    பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    போராட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • முதுகுளத்தூர் வட்டார ஓய்வூதியர் மன்ற செயற்குழு கூட்டம் டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில் நடந்தது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டார ஓய்வூதியர் மன்ற செயற்குழு கூட்டம் டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர்

    சிக்கந்தர்முன்னிலை வகித்தார். பொருளாளர் செந்தூரான் அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 2022-23-க்கான வரவு- செலவு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஓய்வூதியர் அனைவருக்கும் புதிய மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். ஓய்வூதியர்கள் வங்கியில் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    மருத்துவ சிகிச்சைக்குரிய செலவுகள் காப்பீடு நிறுவனங்கள் வழங்குவதில் ஏற்படுத்தும் தாமதத்தை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் செந்தூரான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளையும் செயலாளர் சிக்கந்தர் செய்திருந்தார்.

    • தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச் செயலாளர்கள் ஹரிதாஸ், ஆறுமுகம், பிரசன்னா, சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    1.1.2022 முதல் 30.6.2022 முடிய வழங்கப்பட வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான சந்தா தொகை ரூ. 497 ஆக உயர்த்தப்பட்டதை கைவிட வேண்டும்.

    தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியின் படி 70 வயதினை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 அனைவருக்கும் வழங்கிட வேண்டும். ெரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயண கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்.

    பணி நிறைவு நாளன்று தற்காலிக பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையா வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அரசு இ-சேவா மற்றும் பொதுசேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
    • நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கருவூலத்தில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கும் வகையில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும்.

    கொரோனா பெறும் தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டிற்கான நேர்காணல் நடைபெறாத நிலையில் தற்போது அரசாணை நிலை எண் படி ஓய்வூதியர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இவ்வாண்டிற்கான (2022-23) நேர்காணல் செய்து கொள்ள வேண்டும்.

    மின்னணு வாழ்நாள் சான்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் நேரில் கருவூலத்திற்கு வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் பொருட்டு ஜீவன் பிரமான் இணையதளம் மூலமாக ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு சேவை முறையை பின்பற்றி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    அரசு இ-சேவா மற்றும் பொதுசேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அல்லது ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூல முகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    இணையதளத்தில் பதிவிறக்கம் மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண், பி.பி.ஒ. எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றினை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து ஓய்வூதியர் வங்கி கணக்கு உள்ள வங்கியின் கிளைமேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) தாசில்தார், துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் இருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர், மாஜிஸ்திரேட், நோட்டரி பப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு தபால் மூலம் அனுப்பலாம். குறைபாடுகள் இருப்பின்... மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் தொடர்புடைய மாவட்டக்கருவூல அலுவலர் அல்லது மண்டல இணை இயக்குனர் அல்லது சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையரகம், பேராசிரியர் அன்பழகன் மாளிகை, 3-வது தளம், சென்னை- 600036 என்ற முகவரிக்கோ, dta.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 044-24321761, 044-24321764, 044-24321765 என்ற தொலைபேசி எண்களுக்கோ அல்லது திருச்சி மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தை rjdtry@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 0431-2414046 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் அரியலூர் கருவூலத்தினை 04329-228910 என்ற தொலைபேசி எண்ணிலும், dtoari.tndta@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்,

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்காசி கிளையின் 5-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
    • புதிய நிர்வாகிகள் தேர்வு அதிகாரி கணேசன் முன்னிலையில் நடந்தது.

    தென்காசி:

    தென்காசி மேலகரம் திரிகூடராசப்ப கவிராயர் திருமண மண்டபத்தில் அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் தென்காசி கிளையின் 5-வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. துணைத்தலைவர் அஹமத் அலி தலைமை தாங்கினார். துரைராஜ் இறைவணக்கம் பாடினார்.

    செயலாளர் செல்லப்பா வரவேற்றார். பொருளாளர் வேலாயுதம் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். விழாவில் சங்க மூத்த அதிகாரி கணபதி சுப்பிரமணியனுக்கு 80 - வயது நிறைவடைந்ததையடுத்து அவரை, அஹமத் அலி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் சுப்பிரமணியனின் கடந்த கால நிர்வாக திறமைகளையும், சேவைகளையும் நிர்வாகிகள் செல்லப்பா, வேலாயுதம், கணேசன், கிட்டு ஆகியோர் பாராட்டி பேசினர்.

    தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு அதிகாரி கணேசன் முன்னிலையில் நடந்தது. இதில் தலைவராக அஹமத் அலி, ஆலோசகராக வேலாயுதம், செயலாளராக செல்லப்பா, பொருளாளராக சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.விழாவில் ஏராளமான உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும் வகையில் கருவூல பணியாளர்கள் மூலம் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஓய்வூதியர்களுக்கு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நடப்பு ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நேர்காணல் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடையும் வகையில் கருவூல பணியாளர்கள் மூலம் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்ட கருவூலம்: ராயபுரத்தில் உள்ள ஜெய்வாபாய் பள்ளியில் ஜூலை 1, 12,21 மற்றும் ஆகஸ்டு 1,11,24 தேதிகள். தேவாங்கபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 4, 13, 22, ஆகஸ்டு 2,12, 25 தேதிகள். அனுப்பர்பாளையம் நடுநிலைப்பள்ளியில், ஜூலை 5, 14, 25, ஆகஸ்டு 3,16, 26. கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் பள்ளியில்ஜூலை 6,15,26, ஆகஸ்டு 4,17, 29 தேதிகள்.

    மண்ணரை மனவளக்கலை மன்றத்தில் ஜூலை 7,18, 27, ஆகஸ்டு 5,18, 30. பெரிச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஜூலை 8, 19,29, ஆகஸ்டு 8,22,மங்கலம் ரோடு கருவம்பாளையம் அரசு நடுநிலைப்பளியில் ஜூலை 11,20,29, ஆகஸ்டு 10,23ந் தேதிகள்.

    அவிநாசியில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில்ஜூலை 1,12, 21, ஆகஸ்டு 1,11,24ந் தேதிகள். ஓய்வூதிய ஆசிரியர் கூட்டமைப்பு அலுவலகத்தில் ஜூலை 4,13,22, ஆகஸ்டு 2,12,25 தேதிகள்.அன்னூரில் உள்ள அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு அலுவலகத்தில் ஜூலை 7, 18ந் தேதிகள். சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 8, 19, கருவலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 14, 27, குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஜூலை 15, 28ந்தேதிகளில் முகாம் நடக்கிறது.

    பல்லடம் சார் நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு, ஜூலை 1,4,5,6,8,12,14,18,20,22,25,27,29 தேதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஜூலை 7,15,26,28 தேதிகளில் பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், அரசு மேல்நிலைப்பள்ளியில்ஜூலை 11,19 தேதிகளில் நடக்கிறது. சுல்தான்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் ஜூலை 13,21 தேதிகளில் நடைபெறும்.

    திருப்பூர் சார்நிலை கருவூலத்தில் ஓய்வூதியம் பெறுவோருக்கு திருப்பூர் குமரன் வணிக வளாகம் அருகில் ஜூலை 1 முதல் 7 மற்றும் 11,12 தேதிகள், நஞ்சப்பா பள்ளியில் ஆகஸ்டு 1 முதல் 5-ந் தேதி, கணக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆகஸ்டு 10 முதல் 12ந்தேதி,

    சூலூரில் செப்டம்பர் 1,2 தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை முகாம் நடைபெறும். நேர்காணலுக்கு வரும்போது, ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, மொபைல் உள்ளிட்டவற்றை உடன் எடுத்துவரவேண்டும். முகாமில் பங்கேற்போர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • அரசு இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம்.
    • www.tngov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    ஜீவன் பிரமான் இணையதள மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பெற இந்திய தபால்துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அரசு இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து நேர்காணல் செய்யலாம். ஓய்வூதியர் சங்கத்தின் மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்ய ஆண்டு நேர்காணல் செய்யலாம். கருவூலமுகாம் இலவச சேவையை பயன்படுத்தி இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

    மின்னணு வாழ்நாள் சான்று பெற ஓய்வூதியர்கள், ஆதார் எண், பி.பி.ஓ.எண், வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் படிவத்தை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் வாழ்நாள் சான்றை www.tngov.in/karuvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

    ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள வங்கி கிளையின் மேலாளர் அல்லது அரசிதழில் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது தாசில்தார், துணை தாசில்தார் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் சம்பந்தப்பட்ட கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×