என் மலர்
நீங்கள் தேடியது "ஆடுகள் பலி"
- நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன.
- ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், வடமுகம் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட கொம்மக்கோயில், கும்மாக்காளி பாளையம், உருமாண்டம் பாளையம், கூனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன. இது வரை பல ஆடுகள் இறந்துள்ளன.
இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கண க்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாய்கள் பெருந்துறை, பணிக்கம் பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கு அருகே கூட்டமாக தங்கி இருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், ஆடு, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாக மாறும் அபாயம் உள்ளது.
எனவே ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொம்மக்கோயில் கொல்லங்காடு, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆடுகளை காலை நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் இறந்து விட்டது. மேலும் 6 ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது.
- பாப்பாத்தி அப்பகுதியில் 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.
- மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி சனி சந்தை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மனைவி பாப்பாத்தி (50). இவர் அப்பகுதியில் கீத்துப் பின்னும் தொழில் செய்து கொண்டு 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை செம்மறியாடுகளை தனது வீட்டு அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை ஆட்டுக்கொட்டைக்குச் சென்று பார்த்த பொழுது 4 செம்மறி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறி இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனப்பகுதி அருகில் உள்ளதால் வனவிலங்குகள் ஏதேனும் கடித்துள்ளதா? அல்லது மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து வருவாய் துறைக்கும், வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் செல்லப்பன் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றது தெரிய வந்தது.
- ஏதேனும் விலங்குகள் கால் தடம் பதிவாகியுள்ளதா என்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் திங்களூர் செல்லப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 54). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 24 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து தூங்க சென்று விட்டார்.
பின்னர் இன்று காலை செல்லப்பன் பட்டியை பார்த்தபோது பட்டியில் இருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 4 ஆடுகள் காயத்துடன் கிடந்தன. பின்னர் இது குறித்து திங்களூர் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும் போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் செல்லப்பன் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றது தெரிய வந்தது. வனத்துறையினர் அங்கு ஏதேனும் விலங்குகள் கால் தடம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.
மேலும் காயம் அடைந்த 4 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என செல்லப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வனத்துறையினர் இந்தப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அம்மாபேட்டை அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தது. அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்தது. தொடர்ந்து மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.
- அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
- வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை
ஆலங்காயம்:
வாணியம்பாடி வனத்துறையினர் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.
இருப்பினும் முருகன்குட்டை, சங்கத்து வட்டம், மதனாஞ்சேரி ஆகிய பகுதிகளில் இதுவரை சுமார் 50 ஆடுகளை மர்ம விலங்கு கடித்த குதறியது. ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்.
மதனாஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகைகள் கட்டி வைத்திருந்தார்.
நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் அங்கேயே பலியானது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தபோது, அந்த வழியாக 4 ஓநாய்கள் போன்ற விலங்குகள் கூட்டமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வனச்சரக அலுவலர் குமார் தலைமையான வனத்துறையினர் விரைந்து சென்று, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுவரை 50 ஆடுகள் பலியாகி உள்ளது. மர்ம விலங்கு பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பொதுமக்கள் கூறியபடி, தொடர்ந்து ஆடுகளை கடித்துக் குதறும் மர்ம விலங்கு, ஓநாயாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். சிறுத்தை போன்ற விலங்குகள் ஆடுகளை கடித்த உடன் வனப் பகுதிக்குள் சென்று விடும். ஆனால் ஓநாய் போன்ற விளக்குகள் கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியிலேயே பதுங்கி இருந்து, நள்ளிரவு நேரங்களில் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை.
எனவே மதனாஞ்சேரியை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஓநாய் போன்ற மர்ம விலங்குகள் பதுங்கி உள்ளதாக என வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது.
- கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்த நல்லூர் அருகே உள்ள ஒப்பனையாள்புரம் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 54). இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது அங்குள்ள வயல் வரப்பில் கிடந்த கொய்யா பழங்களை 2 ஆடுகள் கடித்து சாப்பிட்டது. திடீரென கொய்யாப்பழம் வெடித்து சிதறியதில் 2 ஆடுகளும் அங்கேயே இறந்துவிட்டன.
உடனே முருகன் ஓடி போய் ஆடுகளை பார்த்தபோது அந்த கொய்யாப்பழத்தில் வெடி மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்தார். இதையடுத்து முருகன் கரிவலம்வந்த நல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில் வனவிலங்குகள் வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் கொய்யாப்பழத்தில் வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதனை ஆடுகள் சாப்பிட்டதால் அவை வெடித்து 2 ஆடுகளும் இறந்தது உறுதியானது.
தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் வேறு இடங்களில் ஏதேனும் வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என்று தோட்ட உரிமையாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரின் உதவியுடன் ஆய்வு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
- தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது.
இந்த நிலையில் காங்கேயம் அடுத்த மறவம்பாளையம் பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட செம்மண்குழி கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு விவசாயம் மற்றும் ஆடு மேய்த்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. வழக்கம்போல் நேற்று ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடிக்க முயன்றுள்ளது.
இதில் நாய்களிடமிருந்து தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடிய போது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இன்று காலை பொன்னுசாமி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல தோட்டத்திற்கு சென்று பட்டியில் பார்த்தபோது ஆடுகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியபோது கிணற்றுப் பக்கத்திலிருந்து ஆடுகளின் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது 35 ஆடுகளும், கிணற்றுக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கயிறுகளை கட்டி ஆடுகளை மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரை அதிகமாக குடித்ததால் 16 ஆடுகள் இறந்து விட்டது. இது தொடர்பாக காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த அப்புகுட்டி என்பவர் தோட்டத்தில் வளர்த்த வந்த 3 ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றது. எனவே தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
- வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்தில் இரண்டாவது பெரிய வாரசந்தையாகும் இந்த சந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுவதால் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில் இந்த சந்தையில் ஆடு மாடுகள் விற்பனை கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் போச்சம்பள்ளி மற்றும் அதன் கிராமப்புறங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஆடு, கோழி வளர்ப்புத் தொழில் பிரதான தொழிலாக உள்ள நிலையில் வறட்சி காலங்களில் விவசாயம் பொய்த்து போனாலும் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு கைகொடுக்கும்.
இவ்வாறாக வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளை சந்தைகளுக்கு விற்பனை செய்யப்படும் பொழுது அந்த ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அந்த ஆடுகளை கோவில் விழாக்களில் அசைவ விருந்துக்காகவும், ஆடுகளை வளர்ப்பதற்காகவும் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போச்சம்பள்ளி வார சந்தை தேடி ஆடுகளை வாங்க வந்து செல்கின்றனர்,
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரார் மணிகண்டன் (வயது35) என்பவர் ஆடுகளை வளர்க்க கடந்த வாரம் 20-க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளை சுமார் ரூ.2.38 லட்சம் கொடுத்து வாங்கி சென்றார். இதில் 8 ஆடுகள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்து விட்டது. அப்போது அந்த ஆடுகளின் வயிற்றில் மண் கரைசல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து மணிகண்டனுக்கு ஆடுகளை விற்ற கரகூர் பகுதியை சேர்ந்த வியாபாரிகளிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரிகள் சரிவர பதிலளிக்காமல் மிரட்டியுள்ளனர். இதனால் மணிகண்டன் அவரது உறவினருடன் போச்சம் பள்ளி வாரசந்தையில் இன்று வியாபாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடு வியாபாரிகளின் தொழில் போட்டியின் காரணமாக சிலர் ஆட்டின் வாயில் சேற்று தண்ணீரை கரைத்து வாயில் ஊற்றி அதன் எடையை அதிகரித்து காட்டுகின்றனர். சிலர் இந்த மோசமான செயலால் ஈடுபட்டு வருவதால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமே பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் செயல்படாமல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
வளர்ப்புக்காக வாங்கி சென்ற ஆடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பஸ் கடும் பனிமூட்டம் காரணமாக ஆட்டு மந்தையில் புகுந்தது.
- சக்கரத்தில் சிக்கி ஆடுகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நாராயணன் பேட்டை, தன்வாடாவை சேர்ந்தவர் மல்லேஷ். இவரது மாமா கர்ரெப்பா மற்றும் சிலர் தங்களது 600 ஆடுகளை பல்நாடு மாவட்டத்தில் மேய்த்து வந்தனர்.
நேற்று அதிகாலை புதுக்காலு நெடுஞ்சாலையில் மேம்பாலம் வழியாக ஆடுகளை ஓட்டி சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் கடும் பனிமூட்டம் காரணமாக ஆட்டு மந்தையில் புகுந்தது.
பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ஆடுகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி 146 ஆடுகள் இறந்தது தெரிய வந்தது. சாலை முழுவதும். ஆட்டின் உடல்கள் சிதறியபடி ரத்தம் வழிந்தோடியது. ஆட்டின் உரிமையாளர்கள் சுமார் ரூ.18 லட்சம் மதிப்பிலான ஆடுகள் இறந்து விட்டதாகவும், இழப்பீடு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி நிற்காமல் ஆடுகளின் மீது மோதியது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் கொரக்கவாடி கிராம சாலையில் கொரக்கவாடி நோக்கி ராமநாதபுரம் மாவட்டம் அரியாங்குடியைச் சேர்ந்த முருகேசன் (45), இன்று காலை 5 மணி அளவில் செம்மறி ஆடுகளை ஓட்டிச் சென்றார். அப்போது பின்னால் மினி லாரி வந்தது.
இதனை காட்டுக்கொட்டகை,கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கார்த்திக் (28) ஓட்டி வந்தார். திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி நிற்காமல் ஆடுகளின் மீது மோதியதில் 30 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தது.
இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.
- மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் புதூர் மேற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றார்.
இந்த நிலையில் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரது ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்ததில் 7 ஆடுகள் இறந்து விட்டது. இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.
மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், வீடுகளில் ஆடுகள் வளர்ப்போரும் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்தோடு உள்ளனர்.
இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் இடம் தெரிவித்தனர். மேலும் பிரம்மதேசம் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி உள்ளனர். தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரம்மதேசம் புதூர் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்தியூர் பேரூராட்சியில் தெரு நாய் பிடிப்பதற்கு கேட்டுள்ளனர். ஒரு நாய் பிடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் அந்த நாய்களை பிடிக்க ஒரு மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் மிகுந்த வேதனையோடும் அச்சத்தோடும் உள்ளனர்.
- ஒவ்வொரு பயனாளிக்கும் 17 ஆயிரத்து 500 ரூபாய் அரசின் சார்பில் ஒதுக்கப்படுகிறது.
- இறந்த ஆடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
திருப்பூர்:
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கு தலா, 3,500 ரூபாய் பெறுமானமுள்ள 5 ஆடுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பயனாளிக்கும் 17 ஆயிரத்து 500 ரூபாய் அரசின் சார்பில் ஒதுக்கப்படுகிறது.
அவிநாசி ஒன்றிய பகுதியில் சின்னேரிபாளையம், நடுவச்சேரி, புலிப்பார், தண்டுக்காரன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகளில் சில அடுத்தடுத்து இறந்தன. இறப்புக்கான காரணம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு வரும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பயனாளிகளுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத்தருவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.அதற்கேற்ப பயனாளிகளின் விவரங்கள் இறந்த ஆடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.
- தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
- வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள ஊராட்சி கவுண்டன் புதூர் இப் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பரணி இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பரணி வழக்கமான மேய்ச்சலுக்கு ஆடுகளை திறந்துவிட கொட்டகைக்குச் சென்று உள்ளார். அப்போது அங்கு மூன்று ஆடுகளை மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மர்ம விலங்குகளின் கால் தடங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.