search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை நடமாட்டம்"

    • விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அண்மைக்காலமாக மர்ம விலங்கு அடித்து கொன்று வந்தது.
    • சில நாட்களாக வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்டது பக்க நாடு கிராமம். இப்பகுதியில் உள்ள கோம்பைக்காடு, ஓடுவங்காடு, சன்னியாசி முனியப்பன் கோவில், செங்குட்டப்பட்டி, குண்டு மலைக்கரடு உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில், விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அண்மைக்காலமாக மர்ம விலங்கு அடித்து கொன்று வந்தது.

    இதனை அடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் அங்கு பதிவாகியிருந்த கால் தடங்கள் மற்றும் அடையாளங்களை வைத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதை உறுதி செய்தனர். இதனை அடுத்து வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தும், சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்தும் கடந்த சில நாட்களாக வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அவ்வப்போது கிராமப் பகுதிக்கு வருவதும், மீண்டும் அடர்ந்த வனத்திற்குள் சென்று பதுங்கி கொள்வதுமாக போக்கு காட்டி வந்த சிறுத்தையின் நடமாட்டத்தினை கண்காணிப்பதற்காக, அப்பகுதியில் டிரோன் கேமராவினை பறக்க விட்டு, கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும் சிறுத்தை பிடிபடும் வரை அப்பகுதி விவசாயிகள் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும், பொதுமக்கள் இயற்கை உபாதைக்காக வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும், குழந்தைகள், சிறுவர்களை தனியாக வெளியே அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு வனத்துறையினர் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது.
    • தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழக - கர்நாடகா இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

    திம்பம் மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடுவது வழக்கம். இந்த நிலையில் 17-வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச்சுவரில் ஒரு சிறுத்தை ஜாலியாக படுத்திருந்தது அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்தனர்.

    வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை நடமாட்டத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். சிறிது நேரத்தில் சிறுத்தை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,

    திம்பம் மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையின்றி வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி சாலையோரம் நிற்கக்கூடாது.

    குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் இயற்கை அழகை ரசிப்பதாக கூறி வாகனங்களை சாலையோரம் நிறுத்தி செல்போன்களில் படம் எடுத்து வருகின்றனர். இது ஆபத்தான செயலாகும். இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர்.
    • கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் சாம நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருக்கின்றன. 5-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், ஒரு அரசு பள்ளி, அதன் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம் என்று அந்த பகுதி மிகவும் பரபரப்பு நிறைந்தது ஆகும்.

    நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஜெயராமன் என்பவரது வீட்டின் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து உள்ளனர்.

    அவர்கள் திருப்பத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பரபரப்பான நகர பகுதியில் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இருக்காது, அது காட்டுப்பூனையாக இருக்கலாம் என்றனர். ஆனால் அவர்களின் கணிப்பு தவறு என்பதை போன்று அங்கு ஒரு சிறுத்தையை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். அதனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிறுத்தை வனத்துறையினரிடம் இருந்து தப்பி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மேரி இமாகுலேட் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் பாய்ந்து சென்றது. அப்போது அங்கு பள்ளி சுற்றுச்சுவருக்கு பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த புத்தகரத்தை சேர்ந்த கோபால் (வயது 55) என்பவரை நெற்றி, காது பகுதியில் சிறுத்தை தாக்கிவிட்டு மறைவான இடத்தில் புகுந்தது.

    சிறுத்தை தாக்கியதை அருகில் இருந்தவர்கள் பார்த்து கூச்சலிட்டு பள்ளிக்குள் சிறுத்தை புகுந்து விட்டது, குழந்தைகளை காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் தொற்றியது.

    பள்ளி வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்த தகவல் அறிந்து மாணவிகளை வகுப்பறையின் உள்ளே வைத்து ஆசிரியர்கள் பூட்டி பாதுகாத்தனர். சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்த கோபாலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    சிறுத்தை பள்ளி வளாகத்தில் இருப்பதால் மாணவிகளை வெளியே அனுப்ப வேண்டாம், கதவுகளை திறக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அருகில் இருந்த பள்ளிகளிலும் எச்சரிக்கையாக இருக்கும்படி தகவல் தெரிவித்தனர். சிறுத்தை புகுந்த தகவல் திருப்பத்தூர் நகர பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் தங்கள் குழந்தைகளின் நிலைமை என்ன ஆனதோ என்ற அச்சத்துடன் 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி முன்பு பதற்றத்துடன் குவிந்தனர்.

    இதையடுத்து அங்கு சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது சிறுத்தை திடீரென 10 அடி உயர சுற்றுச்சுவரை தாண்டி குதித்து அருகே உள்ள கார் நிறுத்தும் பகுதிக்குள் புகுந்தது. சிறுத்தை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிய தகவல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வகுப்பறை கதவுகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மாணவிகளை பத்திரமாக பெற்றோருடன் அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில பள்ளி குழந்தைகள் பயத்துடன் அழுது கொண்டு ஓடினர். அவர்களுக்கு ஆசிரியர்களும், சக மாணவிகளும் ஆறுதல் கூறினர்.

    சில பெற்றோர்கள் பள்ளிக்குள் விரைந்து தங்களது குழந்தையை கட்டித்தழுவி, குழந்தையை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடினர். மாலை 5.30 மணிக்கு அனைத்து மாணவிகளும் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டனர். அப்போது பொதுமக்களும், பெற்றோர்களும் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் புகுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி மாணவிகளை பெற்றோருடன் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

    பின்னர் கார் நிறுத்தத்தில் பதுங்கி உள்ள சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர்.

    கார் ஷெட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை சாலைப்பகுதிக்கு தாவ முயன்றது. அப்போது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்தனர். பிடிபட்ட சிறுத்தையை வனத்திற்குள் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    திருப்பத்தூரில் பெரும் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை 10 மணி நேர போராட்டத்திற்கு பின் சிக்கியதால் தற்போது மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். 

    • சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது.
    • காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவிப்பு.

    திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள பள்ளிக்குள் சிறுத்தை புகுந்த நிலையில், அந்நகர பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சம்பந்தப்பட்ட சிறுத்தை திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

    சிறுத்தை இருப்பதை கண்டு தப்பிக்க முயன்று கார் பார்க்கிங்கில் உள்ள காரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக 5 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காரில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும், கார் பார்க்கிங்கில் பதுங்கியுள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.
    • சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில் 10 நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வனத்துறையினர் வசம் சிக்கவில்லை.

    இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சிறுத்தை ஒன்று அரியலூர் மாவட்டத்தில் சுற்றி திரிந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது. மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை நீர் வழி பாதை வழியாக அரியலூர் மாவட்டம் சென்று இருக்கலாம் என்று வனத்துறை தெரிவித்து 2 நாட்கள் தொடர் கண்காணிப்புக்கு பிறகு தனது தேடுதல் வேட்டையை மயிலாடுதுறை மாவட்டத்தில் நிறுத்தியது.

    இந்நிலையில் ஏற்கனவே சிறுத்தை ஆட்டை அடித்து கொன்ற மயிலாடுதுறை புறநகர் பகுதியான சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் சிறுத்தை தென்பட்டதாகவும் அது தன்னை விரட்டி வந்த நாய்களில், ஒரு நாயை தூக்கி செல்லும் பொழுது நாய்கள் சேர்ந்து சிறுத்தையை விரட்டியதாகவும் நேற்று முன்தினம் இரவு கட்டுமான தொழிலாளி ஒருவர் வனத்துறையினரிடம் தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள காலடி தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சற்று பெரிதான காலடி தடம் ஒன்றை கண்டுபிடித்து அதனை சுற்றி அடையாளம் காண, சுன்னாம் பால் வட்டம் வரைந்து மூடி, பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    இதனால் சிறுத்தை அரியலூரில் இருந்து மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்ததா? என குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சிறுத்தை வந்ததற்கான எந்த தடயமும் இல்லை. இருந்தாலும் சிறுத்தையை பிடிக்க மீண்டும் மயிலாடுதுறை பகுதியில் 3 கூண்டுகள், 10 கண்காணிப்பு கேமராக்களுடன் வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    • வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.

    செந்துறை:

    மயிலாடுதுறை பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கடந்த 11-ந்தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி முந்திரி காடு, செந்துறை அரசு மருத்துவமனை, நின்னியூர் பகுதியில் உலவியது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வாத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

    இந்நிலையில் செந்துறை அரசு மருத்துவமனையில் தென்பட்ட சிறுத்தை இன்னமும் செந்துறை பகுதியில் சுற்றி வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் சிறுகளத்தூர் தனியார் முந்திரி காட்டில் சிறுத்தை நடமாற்றம் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

    அதேபோல் இரவு துளாரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் இருளாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அங்கு இருந்த லாரி ஓட்டுநர் ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சமூக வலைதளங்களில் சிறுத்தை நடமாட்டம் முந்திரி காடுகளில் இருப்பதாகவும் யாரும் முந்திரி கொட்டை பறிக்க செல்ல வேண்டாம் என்றும் கால் தடங்களை வைத்து பதிவிட்டனர்.


    இந்த தகவல் அப்பகுதியில் காட்டு தீயாக பரவியது. இதனால் முந்திரி விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சிறுத்தையை பிடிக்க திரண்டதால் அப்பகுதில் பரபரப்பு ஏற்பட்டது அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் இவைகள் சிறுத்தை கால் தடம் இல்லை இவைகள் நாய்கள் கால்தடம் என்று தெரிவித்தனர். இருப்பினும் இந்த பகுதி மக்கள் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக அச்சத்தில் உள்ளனர். இதனை போக்கு வதற்காக வனத்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.
    • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை.

    அரியலூர்:

    மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது.

    பின்னர் அந்த சிறுத்தை குற்றாலம் பகுதிக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அரியலூர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது.

    இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 89 சிசிடிவி கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டன. மேலும் மயிலாடுதுறை, குற்றாலம், அரியலூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கூண்டுகள் வைக்கப்பட்டன.

    ஆனால் அதன் பின்னர் சிறுத்தை நடமாட்டம் எங்கும் தென்படவில்லை.

    இதுகுறித்து மூத்த வன அதிகாரி ஒருவர் கூறும்போது, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிறுத்தை அல்லது அதன் கால் தடம் எதுவும் புதிதாக கண்டறியப்படவில்லை. இருப்பினும் மேற்கண்ட மாவட்டங்களில் வனத்துறையினர் தொடர்ந்து 2 பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர் அதிகாரிகள், உள்ளூர் மக்களுடன் தொடர்பில் உள்ளனர்.

    சந்தேகப்படும்படியாக மர்ம விலங்கு ஏதும் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.

    • மயிலாடுதுறையில் இருந்து சுமார் 74 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது.
    • சிறுத்தையை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    அரியலூர்:

    மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக தானியங்கி கேமராக்கள் பொருத்தியும், கூண்டுகள் வைத்தும் சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    ஆனால் அங்கிருந்து குற்றாலம் பகுதிக்கு சிறுத்தை இடம் பெயர்ந்தது. காஞ்சிவாய், பேராவூர், நண்டலாறு, வீரசோழன் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் 89 நவீன கேமராக்களும், 7 குண்டுகளும் வைக்கப்பட்டது. இருப்பினும் சிறுத்தை சிக்கவில்லை.

    இந்நிலையில் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 74 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூர் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. செந்துறை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிசிடிவி கேமராவில் சிறுத்தை நடமாடுவது பதிவாகி இருந்தது. இதனால் அரியலூர் செந்துறை, மஞ்சுநாதபுரம் பகுதிகளில் உள்ள முந்திரி தோப்பு, கால்வாய் என 11 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது. போலீசார் மற்றும் வனத்துறையினர் 45 பேர் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் சிறுத்தை யார் கண்ணிலும் படவில்லை.

    தற்போது சிறுத்தை எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து சிறுத்தையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். குத்தாலம் பகுதியில் 4 இடங்களில் கூண்டு, 20 இடங்களில் கேமராக்கள், அரியலூர் மாவட்டம் குன்னூர் வனப்பகுதி, மங்காரம் ஓடை பகுதியில் 2 இடங்களில் கூண்டு, 15 இடங்களில் கேமராக்களும் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறை வட்டாரத்தினர் கூறியதாவது:-

    மயிலாடுதுறை பகுதியில் உலாவிய சிறுத்தை கடலூர் அல்லது விழுப்புரம் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கலாம். இது புலி மாதிரி ஒரே இடத்தில் இருக்காது. நகர்ந்து கொண்டே இருக்கும். மேலும் மனித நடமாட்டம் இருந்தால் பதுங்கிக் கொள்ளும். சத்தமே காட்டாது. இரவிலேயே அதிகம் நடமாடும். அதனால்தான் சிறுத்தையை அதிகமாக யார் கண்ணிலும் சிக்கவில்லை. சிறுத்தையை கண்காணிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைய தேவை இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்

    • காலடி தடம், சிறுநீர் கழித்த அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பாதை கணக்கிடப்பட்டு, கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • சிறுத்தை தற்போது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் நடமாடுவதாக தெரிய வந்துள்ளது.

    பெரம்பலூர்:

    மயிலாடுதுறை மாவட்டத்தின் சில கிராமங்களில், சிறுத்தை நடமாட்டம் சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து சிறப்பு குழு அமைத்து, சிறுத்தையை தேடும்பணி நடந்தது. இதனிடையே சிறுத்தை, அரியலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில கிராமங்கள் வழியாகச் சென்றது உறுதியானது. இதையடுத்து, சிறுத்தையின் காலடி தடங்கள், எச்சங்கள் அடிப்படையில் அதன் பாதையை வனத்துறையினர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சிறுத்தை குறித்த தகவல் தெரிந்தால் வாட்ஸ்அப்பில் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வாரணவாசி அருகேயுள்ள சமத்துவபுரம் சாய் பாபா ஆலயத்தின் அருகே இரட்டை சிறுத்தை இருப்பதாக தகவல் பரவியது. அதை மறுத்துள்ள வனத்துறை, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேண்டுமென்றே தகவல் பரப்பப்பட்டள்ளதாக கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதில், தவறான செய்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, ஒரு நாளைக்கு, 10 கி.மீ., வரை சிறுத்தை இடம் பெயர்வதாக தெரியவந்துள்ளது. இந்த அடிப்படையில், அதன் நகர்வு தொலைவு மற்றும் திசை கணக்கிடப்பட்டு வருகிறது.

    காலடி தடம், சிறுநீர் கழித்த அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் பாதை கணக்கிடப்பட்டு, கூண்டுகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை தற்போது அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் எல்லை கிராமங்களில் நடமாடுவதாக தெரிய வந்துள்ளது.

    இதனால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது கூடுதலாக கண்கணிப்பு கேமராக்கள் அமைத்து சிறுத்தையை கண்காணித்து பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பெரம்பலூரில் ஏற்கனவே, 2013-ம் ஆண்டில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. பின்னர் அந்த சிறுத்தை பிடிக்கப்பட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டது.

    • செந்துறை போலீசார் ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
    • முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக் காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.

    சிறுத்தை மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து செந்துறை போலீசார் வாகனத்தில் சென்றபடி ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைப் பார்த்து இது சிறுத்தை தான் என்று உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு பிரிவு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து தெர்மல் டிரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் செந்துறை, பொன்பரப்பி ஆகிய ஊர்களில் முந்திரி காடுகள், நீர்நிலைகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். 3 பிரிவுகளாக பிரிந்து வனத்துறை அதிகாரிகள் கேமராக்களை பொருத்தினர்.

    இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளி சென்ற மாணவர்கள் மதியம் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.

    இன்றுடன் 10 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.

    நேற்று முன்தினம் காலை காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் சிறுத்தை மயிலாடுதுறை நகரை விட்டு வெளியேறி விட்டதோ? என்ற சந்தேகமும் எழுந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறையை தொடர்ந்து, அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.
    • காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.

    பின்னர் அங்கிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குத்தாலம் அருகே காஞ்சிவாய் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தெரியவந்தது. இதே தொடர்ந்து 7 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    இதில் பல்வேறு பணிகளில் பகுதிகளில் இருந்து வந்துள்ள நிபுணர்கள், வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் தெர்மல் ட்ரோன் கேமரா, தானியங்கி கேமராக்கள், மோப்ப நாய்கள், வேட்டை நாய்கள் உதவியுடன் சுற்றுவட்டார பகுதிகளில் முழுவதும் கண்காணித்து சிறுத்தையை கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிவாய் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் சிறுத்தையின் எச்சம் கால் தடம் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாகை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் கூறியதாவது:-

    சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.

    இதுகுறித்து பொதுமக்களுக்கு தேவையான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை காஞ்சிவாயை அடுத்த கருப்பூர் அருகே நண்டல ஆற்றின் அருகில் சிறுத்தையின் எச்சம் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிறுத்தை இடமாற்றம் அதன் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை குறித்து ஆலோசித்து வரைபடங்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என்றார்.

    இதன் காரணமாக அருகாமையில் உள்ள மாவட்டங்களான தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இன்று 8-வது நாளாக தொடர் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    மேலும் தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ்.புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதிகளில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். எஸ்.புதூரில் 3 கூண்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    ×