என் மலர்
நீங்கள் தேடியது "உண்ணாவிரத போராட்டம்"
- சுற்றுலா தளங்களில் சுகாதாரமான முறையில் கழிப்பறைகளை அமைத்து தர வேண்டும்.
- இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில், இன்று வாடகை வாகனங்கள் டிரைவர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் வாகன பர்மிட்டை பதிவிறக்கம் செய்வதை அரசு எளிமைப்படுத்த வேண்டும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவு கட்டணங்களையும் 177 சதவீதம் உயர்த்துவதை தமிழக அரசு பரிசிலிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைத்து அதனை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசை தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
மானிய விலையில் டீசல் வழங்குவதற்கு வழிவகை செய்து தர வேண்டும். சுற்றுலா தளங்களில் சுகாதாரமான முறையில் கழிப்பறைகளை அமைத்து தர வேண்டும்.
வாகனங்களை தடுத்து நிறுத்தி டிரைவர்களுக்கு அபராதம் என்ற பெயரில் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் வசூலிப்பதை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
- மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்.
- 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.
சென்னை:
மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராகவும், பூரண மது விலக்கை அமல்படுத்த கோரியும் சென்னை எழும்பூரில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு கட்சி தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார்.
துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். தலைமை நிலைய துணை செயலாளர் அந்தோணி ராஜ் உறுதிமொழியை வாசித்தார்.
ஆந்திர மாநில தென் மண்டல செயலாளர் லோகநாதன், மாணவர் அணி துணை செயலாளர் கிஷோர், வர்த்தகர் அணி செயலாளர் பெருமாள், இளைஞர் அணி செயலாளர் கிச்சா ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருவதாக கூறுகிறார்கள்.
இதனை தடுக்க தற்போதுள்ள 1 லட்சம் போலீசார் போதாது. இதற்காக தனிப்படை அமைக்க வேண்டும். 36 ஆயிரம் கோடி வருவாய் மதுவால் கிடைப்பதாக கூறுகிறார்கள்.
அதனை ஈடுகட்ட தொழில் வளத்தை மேம்படுத்தி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.
அப்போது எப்படி சமாளித்தார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
- போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
- கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று தமிழக முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
நாகர்கோவிலில் போராட்டம் நடத்துவதற்கு சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு திரண்டனர். போராட்டத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் கால்டுவின் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் செண்பகவல்லி முன்னிலை வகித்தார்.
மாநில கலை இலக்கிய துணை செயலாளர் அமலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் டார்வின் தாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், ஜெபஸ்டின், தெற்கு மண்டல தலைவர் நலன் குமார், மகளிர் அணி செயலாளர் சந்திரா, தொண்டரணி செயலாளர் ராஜேஷ் மற்றும் ரதீஷ், எபனேசர், பாபு, செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் போதை பொருளை தடை செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை டி.எஸ்.பி. நவீன் குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கு மேற்பட்ட சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் அந்த பகுதியில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- உண்ணாவிரத போராட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மிகவும் போராடி 8 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டு, 5 தளங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி:
சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நகராட்சி பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் சொத்து வரி, பால் விலை உயர்வு, தேங்காய் விலை வீழ்ச்சி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பேசியதாவது:-
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மேற்கு புறவழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டு, 50 சதவீத பணிகள் முடிந்திருந்தது. ஆனால் கடந்த ஓராண்டாக பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவைக்கு மாற்றுப்பாதையாக கோவில்பாளையம்-வெள்ளலூர் சாலை அகலப்படுத்தும் திட்டத்தையும் ரத்து செய்துள்ளனர்.
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மிகவும் போராடி 8 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டு, 5 தளங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.
ஆனால் அதன் பிறகு மத்திய அரசு நிதி தருவதாக கூறியும் தி.மு.க. அரசு போதிய நோயாளிகள் இல்லை என்று கூறி கட்டிடம் கட்டாமல் இருக்கிறது. ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு நிதி கொடுக்கப்பட்டும் பணிகளை நிறுத்தி உள்ளனர். இதுபோன்று பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் அமுல் கந்தசாமி, சூலூர் கந்தசாமி, பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ண குமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல் முத்துகருப்பணன், திருஞானசம்பந்தம், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.
- கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.
ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.
இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.
இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
- பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரதம்
- 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை போராட்டம்
புதுச்சேரி:
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, காரைக்காலில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
- ஓசூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
- மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமை தாங்கி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
ராகுல் காந்தி, எம்.பி.பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ராம் நகர் அண்ணா சிலையருகே நடந்த இந் நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ. முரளிதரன் தலைமை தாங்கி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் மகாதேவன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில்,மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன் , ஹரீஷ் உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பில்,உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- உத்தனப்பள்ளியில், விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருட்டிணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஊராட்சிகளில் சிப்காட் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரி, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து உத்தனப்பள்ளியில், 88 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், நாம் தமிழர் கட்சி சார்பில்,உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. இதற்கு மண்டல செயலாளர் பிரபாகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலளார் சிவராமன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட செயலாளர் வேல்கணேசன், வேப்பனப்பள்ளி தொகுதி செயலாளர் சிவசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் ராவணன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகதீசபாண்டியன், ராசா அம்மையப்பன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் உள்பட பலர் கண்டன உரை ஆற்றினார்கள்.
இந்த போராட்டத்தில், கெலமங்கலம் அருகே அயர்னபள்ளி, நாகமங்கலம், உத்தனப்பள்ளி ஊராட்சிகளில் 3,800 ஏக்கர் விவசாய நிலங்களை அபகரித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை வெளியேற்றத் துடிப்பதாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், உத்தனப்பள்ளியில் விவசாயிகள் தொடர்ந்து 88 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பப்பட்டன.
- சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது.
- டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
மங்கலம் :
மங்கலம் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் இருந்து சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இது குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளதாகவும்,பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது எனக்கூறியும் இடுவாய் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக இந்த பகுதியில் இருந்து அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இடுவாய் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக்கடையை இடுவாய் பகுதியில் இருந்து மாற்றி சின்னக்காளிபாளையம் ரோட்டில் பொம்மங்காடு என்ற பகுதியில் அமையவிரு ப்பதாக தெரிகிறது. மது கடை கட்டிடத்திற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கார்டன், திருமலை கார்டன், ஜி.என். கார்டன், செந்தில்நகர், பாப்பாங்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் இடுவாய் ஊராட்சி-அண்ணாமலைகார்டன் பஸ்நிறுத்தம் அருகே பந்தல் அமைத்து ஒருநாள் மாபெரும் அடையாள உண்ணாவிரத ப்போராட்டத்தை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளனர். இதில் பொதுமக்கள் , குழந்தைகள், பெண்கள், கருப்புபேட்ஜ் அணிந்து குடியிருப்பு பகுதிக்குள் குடி எதற்கு, விளைநிலங்கள் வீணாப்போக விடமாட்டோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி உண்ணா விரதப்போ ராட்டத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து உண்ணாவிரதப்போ ராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது; சின்னக்காளிபாளையம் அதிகளவில் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு வெங்காயம், புகையிலை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால் பிளாஸ்டிக் கவர்கள், மதுபாட்டில்கள், போன்றவற்றால் விவசாய நிலங்கள் பாழ்படும்.மேலும் அண்ணாமலை கார்டன், திருமலைகார்டன், ஜி.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடுவாய் பகுதியில் இருந்து சின்னக்காளிபாளையம் செல்லும் ரோட்டில் பொம்மங்காடு பகுதியில் மதுக்கடை அமைக்க மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகளை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
- 7-வது நாளாக ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், ரவி தலைமையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
- எங்கள் கோரிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த போராட்டம் தீவிரமடையும்
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் மற்றும் கரை அமைக்கும் பணியை ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்த்தும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி பழைய கட்டுமானங்கள், பழுதடைந்த பகுதிகளை மட்டும் சீரமைக்க 2 தரப்பு விவசாயிகளும் ஒப்பு கொண்டனர்.
ஆனால் சில இடங்களில் கான்கிரீட் தளம், கரை அமைக்கும் பணி நடந்ததால் திட்ட எதிர்ப்பு விவசாயிகள் ஈரோடு அடுத்த வாய்க்கால் மேட்டில் கடந்த 6 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 7-வது நாளாக ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடாசலம், ரவி தலைமையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். இவர்களுக்கு ஆதரவாக கடையடைப்பு, கருப்பு கொடியேற்றம், கோபி பகுதியில் இருந்து வாகனங்களில் பேரணி நடத்தினர். வணிகர்கள் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமைச்சர் முத்துசாமி நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் சில கோரிக்கைகள் வைத்தனர். உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் என்று கூறினார். இதனை ஏற்று விவசாயிகள் தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் 7 நாட்களாக நடந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.
இது குறித்து கீழ்பவானி விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ரவி கூறியதாவது:-
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு தொடர்பான அரசாணையில் மாற்றம் செய்து, பழைய கட்டுமானங்களை சீரமைக்க கோரியும், மண் கால்வாய்களை மண்ணைக்கொண்டே சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி 7 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசு தரப்பில் அமைச்சர் முத்துசாமி எங்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவுவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த போராட்டம் தீவிரமடையும். எங்களை பொறுத்தவரை கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானங்களை செய்ய சொல்லியுள்ளோம். புதிய கட்டுமானங்களை அந்த பகுதி விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு செயல்படுத்த வேண்டும். புதிதாக தேவையற்ற இடங்களில் கட்டுமானங்களை செயல்படுத்தக்கூடாது.
எதிர்கட்சித்தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது பொதுமக்கள், விவசாயிகள் கருத்தை கேட்டு இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 95 சதவீத விவசாயிகள் இந்த திட்டத்தை எதிர்ப்பதால், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து எங்களது நியாயமான கோரிக்கைக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சத்துணவு ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
- குடும்ப பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
தருமபுரி,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்ட ஆயத்த மண்டல கூட்டம், தருமபுரி சிஐடியு அலுவலகத்தில், நடந்தது.
மாவட்ட தலைவர் காவேரி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் தேவகி, மாநில துணைத்தலைவர் மஞ்சுளா, மாநில செயலாளர் மகேஸ்வரி, சிஐடியு மாநில செயலாளர் நாகராசன், ஜாக்டோ - ஜியோ நிதிகாப்பாளர் புகழேந்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணகிரி மணி, நாமக்கல் கோமதி, மாவட்ட செயலாளர்கள் சாந்தி, நாமக்கல் தங்கராஜ், சேலம் அமராவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
30 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். குடும்ப பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சத்துணவுடன் இணைக்கவேண்டும்.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், ஜூன் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 72 -மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த உண்ணாவிரதப ்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பெருந்திரளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொருளாளர் வளர்மதி நன்றி கூறினார்.
- போனஸ் வழங்கக்கோரி நடந்தது
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள பெல் நிறுவனத் தில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள போனசை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.ஏ.பி. ஊழியர்கள் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணிவரை உண்ணாவிரத போராட் டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது ஜாயிண்ட் கமிட்டி கூட்டத்தை உடனடியாக கூட்டிபோனஸ் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், போக்குவரத்து மற்றும் உணவுக்கு வழங் கப்பட்டமானியங்களை ஏற்கனவே வழங்கியது போல வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.