என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரம்ப சுகாதார நிலையம்"

    • 15-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர்.
    • ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்்ளது. இங்கு கிள்ளை பகுதியை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்வர். இந்நிலையில் கிள்ளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் இருளர் சமூக மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். கிள்ளை பகுதியில் வசிக்கும் இருளர் சமுதாய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும், இருளர் மக்கள் வந்தாலே, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைக்கும் டாக்டர்கள், நர்சுகளை பணி நீக்கம் செய்ய வேண்டுமென போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாசலில் அமர்ந்து இருளர் இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இத்தகவல் அறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இருளம் இன மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மற்ற சமுதாய மக்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதை போல, தங்களுக்கும் சிகிச்சை வழங்க வேண்டும். கிராம மக்களிடையே பாரபட்சம் காட்டும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி னர். இருளர் இன மக்களின் திடீர் போராட்டத்தால் கிள்ளை பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
    • செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம் .எல். ஏ. தலைமையிலும் திருவையாறு ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜ்மோகன், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ், தஞ்சை தொகுதி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ், தொகுதி துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், விஜயகுமார், பாட்ஷா, புவனேஸ்வரி, வெங்கடேசன், நிர்வாகிகள் டாக்டர் திருச்செ ல்வி, காயத்ரி, செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    • தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் அரசு துணை சுகாதார மையங்களில் 8,713 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தவிர மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கும் செவிலியர்கள் பணியிடங்கள் உள்ளது.

    இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 2250 கிராம செவிலியர்களை தேர்ந்தெடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு 2,250 பேரை தேர்ந்தெடுக்க தற்காலிக அடிப்படையில் ரூ.19,500 ஊதிய விகிதத்தில் நேரடி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதன்படி விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இம்மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது, கல்வித் தகுதி, பொது தகவல், தகுதி நிபந்தனைகள் பிற முக்கிய வழிமுறைகள் போன்ற விவரங்கள் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் www.mrb.tn.gov.in இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் 47ஆயிரத்து 938 செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவற்றில் 12,787 பேர் ஒப்பந்த செவிலியர்கள்.

    இந்த ஒப்பந்த செவிலியர்கள் 2016, 2017 மற்றும் 2020-ம்ஆண்டு கால கட்டங்களில் பணிக்கு வந்தவர்கள்.

    அவர்களுடைய பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அவர்களை மீண்டும் மாவட்ட மருத்துவ சங்கம் மூலம் 14,000 ரூபாயில் இருந்து மூலம் 18,000 ரூபாயாக உயர்த்தி அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு உள்ளார்கள்.

    இந்நிலையில் செவிலியர்களுக்கு தற்போது 499 நிரந்தர செவிலியர்கள் காலியிடங்கள் உள்ளது. அந்த 499 செவிலியர்களுக்கான காலி பணியிடங்களை ஒப்பந்த செவிலியர்களையே நிரப்பிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

    13.10.2023 அன்று கலந்தாய்வு மூலம் மூப்பு நிலை மற்றும் சுழற்சி மூலம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தற்போது எம்.ஆர்.பி. மூலம் ஒப்பந்ததார செவிலியர்கள் கால முறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய கட்டிடம் கட்ட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    தக்கலை :

    தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதநல்லூர் பேரூராட்சி யில் அமைந்துள்ளது கோதநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம். இந்த கட்டிடம் 1983-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன்பிறகு போதிய பராமரிப்பு இல்லாமல் சிமெண்ட் பாளங்கள் கழன்று விழுந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் பலத்த மழையால் அங்கு தரை முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

    இதனால் நோயாளிகள் சாக்கு பைகளை தரையில் விரித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த கட்டிடத்தில் மருத்துவ பணிகள் செய்ய முடியாமல் பக்கத்தில் உள்ள மகப்பேறு நடக்கும் கட்டிடத்தில் வைத்து வெளி நோயாளிகளுக்கு டாக்டர்கள் மருத்துவ உதவிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அங்கும் போதிய கட்டிட இட வசதி இல்லை. இதனால் புறநோயாளிகள் அலைக்கழிக்கபடுகிறார்கள். இந்த கட்டிடம் பழமையாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்ற அச்சத்துடன் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பயந்து போய் உள்ளனர். தமிழக அரசு உடனடியாக இந்த மருத்துவமனை கட்டிடத்தை இடித்து மாற்றி புதிய கட்டிடம் கட்ட முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். மேலும் இது குறித்து கோதநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் கிதியோன் ராஜ், தமிழக முதல்-அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    • மருத்துவமனையில் மின்சாரம் தடை பட்டால் இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருந்தது.
    • மருத்துவமனைக்கு இதற்கு முன்பு ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டம் :

    கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட செந்தரை பகுதியில் கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். புற நோயாளிகளாக பலரும் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மின்சாரம் தடை பட்டால் இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருந்தது.

    இதனால் மருத்துவரின் வேண்டுகோளை ஏற்று தன்னார்வலர்கள் மூலமாக கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்வெர்ட்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் எஸ்.எம்.கான், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், அல்போன்சாள், மருத்துவர் ஆனி ஜனட் மேரி, சுகாதார ஆய்வாளர் ஜோஸ், செல்வராஜ், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவமனைக்கு இதற்கு முன்பு ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. இது போன்ற காரியங்களை செய்து வருவதை மக்கள் மிகவும் பாராட்டினார்கள்.

    • பேராபத்து ஏற்பட்டால் உயிரிழக்க நேரிடும்
    • அளிக்கும் மருத்துவத்தில் நோயாளிகளுக்கு திருப்தி இல்லை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் ஒடுகத்தூர், பள்ளி கொண்டா, சின்ன பள்ளி குப்பம், உட்பட மலை கிராமமான பிஞ்சமந்தை போன்ற பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த சுகாதார நிலையங்க ளில் கடந்த 2 மாதங்களாக மருத்துவர்கள் பற்றாக்கு றையாக உள்ளது என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதனையடுத்து செவிலியர்களும் மருத்துவ உதவியாளர்களும் அளிக்கும் மருத்துவத்தில் நோயாளிகளுக்கு திருப்தி இல்லாமலும் ஒரு வேலையில் ஏதாவது பேராபத்து ஏற்பட்டால் உயிரிழக்க நேரிடும். அப்படி ஏற்பட்டால் யார் பொறுப்பேற்று கொள்வது என ஆதங்கமாக பேசி வருகின்றனர்.

    ஒடுகத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் 5 மருத்து வர்கள் பணியாற்றக்கூடிய இடத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றார்.

    பீஞ்சமந்தை, சின்னப் பள்ளிகுப்பம், பள்ளி கொண்டா உள்ளிட்ட சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் அடுக்கம்பா றை, குடியாத்தம் போன்ற மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவுக்கு மருத்துவர்களை பணி அமர்த்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.
    • தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

     அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்காகவும் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காகவும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இதனால் அவ்வப்போது உரிய நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் ராதிகா சாஸ்திரி, சார்லஸ் நாதன், ஜான், விபின், மற்றும் பொறியாளர் ஜான்சன் ஆகியோர் குழுவாக சேர்ந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பு இன்றி இருந்த சுகாதார நிலையத்தை ரூ.85 லட்சம் மதிப்பில் புதுப்பித்து சுகாதார நிலையத்துக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும், மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்கள் மட்டுமின்றி அவசர சிகிச்சைக்கான வார்டுகளும் மற்றும் பிரசவ வார்டுகளும் அமைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உட்பட 57 கிராமங்கள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் பேர் இந்த மருத்துவமனையால் பயனடைவார்கள். இதனை கட்டிக் கொடுத்த தன்னார்வ லர்களுக்கு வாழ்த்துக்க ளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். தமிழக அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஊட்டியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 150 பேர் வீதம் மூன்று ஆண்டுகளில் 450 மருத்துவர்கள் பயிற்சி பெற்று செல்கின்றனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில் குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், தாசில்தார் கனிசுந்தரம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

    • கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
    • டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராதாபுரம் அருகே உள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவரது மனைவி சுபத்ரா தேவி (வயது24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.

    அப்போது அங்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு பணியில் இல்லை. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்த சுபத்ரா தேவிக்கு தானாகவே அழகான பெண் குழந்தை பிறந்தது.

    அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுபத்ரா தேவி மற்றும் குழந்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    சுமார் 1 மணி நேரமாக பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் துடித்த நிலையில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அவர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் தகவல் அறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிய ராஜ்குமார், உதய லட்சுமி ஆகியோர் வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர்.

    ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று பெயர் பலகை மட்டும் பெரிதாக வைத்துள்ளீர்கள். ஆனால் டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.

    மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தாலும் கூட, அருகில் உள்ள சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ தான் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கிறீர்கள். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

    இதையடுத்து ஜனவரி மாதத்திற்குள் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் உறுதி அளித்தார்.

    இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.
    • ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர், உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார்.

    விருத்தாசலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாலை உளுந்தூர்பேட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலக்கொல்லை வரை நடைபயிற்சி மேற்கொண்டார்.

    பின்னர் அவர், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு பணியில் இருந்த ஒரு சில செவிலியர்களிடம் குறைகள் பற்றி கேட்டறிந்ததுடன் டாக்டர்கள் எத்தனை பேர் பணியில் உள்ளனர் எனவும் கேட்டார். அதற்கு 2 டாக்டர்கள் பணியில் உள்ளதாக செவிலியர் கூறினார்.

    தொடர்ந்து அவர், வட்டார மருத்துவ அதிகாரி யார், அவர் எத்தனை முறை இந்த மருத்துவமனைக்கு வருவார், மாவட்ட துணை சுகாதார இயக்குனர் யார், அவர் எத்தனை முறை வருவார் எனவும் செவிலியரிடம் கேட்டறிந்தார்.

    இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டரைசெல்போன் மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உங்கள் பணிக்கான நேரம் என்ன, உங்கள் வீடு எங்கே உள்ளது என்றார். அதற்கு டாக்டர் நெய்வேலியில் தங்கி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார்.

    அப்போது மா.சுப்பிரமணியன், டாக்டரிடம் மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க கடிதம் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறேன், காலை 9 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் எனவும் கூறினார்.

    • யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை வழங்க வேண்டும்
    • யோகா ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என சீமான் கேள்வி

    தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் யோகா ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்குணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், பணியாற்றி வந்த யோகா ஆசிரியர்களுக்கு ரூபாய் 5000 முதல் 8000 வரை அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதுடன், கடந்த 20 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது வன்மையான கண்டனத்துக்குரியது.

    தமிழ்நாடு முழுவதுமுள்ள 1300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது பணியாற்றி வரும், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற யோக ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக யோகா மற்றும் நேச்சுரோபதி ( BNYS) படித்துள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தமிழக ஆயூஸ் மையம் (STATE AYUSH SOICIETY) கடந்த 07.02.2025 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே பணியாற்றி வரும் யோகா ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை நசிக்கின்ற கொடுஞ்செயலாகும். இப்புதிய பணி நியமனத்திற்கு, பல இலட்ச ரூபாய் லஞ்சம் பெற்று, கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்திய ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி, ஆரம்ப சுகாதார நிலைய யோகா ஆசிரியர் பணியிடத்திற்கு, யோகா படிப்பில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதுமானது என்று வரையறுத்துள்ள நிலையில், அத்தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது? யாரை மகிழ்விக்க இந்த அறிவிப்பு? யாருடைய லாபத்திற்காக இப்பணி நீக்க உத்தரவு? யோகா ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்து, அவர்களது குடும்பத்தை வீதியில் நிறுத்துவது சிறிதும் நியாயமற்ற கொடுஞ்செயலாகும். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? என்ற கேள்விகள் எழுகிறது.

    ஆகவே, தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது பணியாற்றும் யோகா ஆசிரியர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்யும் முடிவைக் கைவிட்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய 20 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • பூமி பூஜை நடந்தது
    • வந்தவாசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த வழூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வக கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது.

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் இந்த புதிய ஆய்வக கட்டிடம் கட்டப்பட உள்ளது. நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தார். வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயமணி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் எம்.ஆர்.ஆனந்தன் வரவேற்றார்.

    வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார் பூமி பூஜை மற்றும் கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.

    வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சு.வி.மூர்த்தி, வந்தவாசி நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால், திமுக ஒன்றியச் செயலார்கள் எஸ்.பிரபு, சி.ஆர்.பெருமாள், வழூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • நோயாளிகள் சிரமத்தை குறைக்க நடவடிக்கை
    • அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று திடீரென சென்று ஆய்வு நடத்தினார். அங்குள்ள மருந்தகம், தடுப்பூசி போடும் பிரிவு, கணினி அறை உள்ளிட்ட பல இடங்களை ஆய்வு செய்தார்.

    அப்போது சுகாதார நிலைய வளாகத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது. மேலும் ஆங்காங்கே கற்க ளும், மரக்கட்டைகளும் கிடந்தன. அவற்றை பார்வை யிட்ட மேயர் மகேஷ், அவற்றை உடனே அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    சுகாதார நிலையத்தில் கை கழுவும் வாஷ் பேஷனை சீரமைத்து தர வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலை யத்தில் படிக்கட்டு வசதி சரி வர இல்லை. இதனால் நோயாளிகள் சிரமப்படு கிறார்கள் என்றும் பணியா ளர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் அவர்களிடம் கூறினார். பின்னர் சுகாதார நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்துக்கும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    முன்னதாக அழகம்மன் கோவில் அருகே சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அதோடு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினத்தையொட்டி கோட்டார் கவிமணி பள்ளியில் உள்ள அவரது சிலைக்கும் மேயர் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி,மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் அக்‌ஷயா கண்ணன், கலாவாணி, ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×