என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் கேஎன் நேரு"
- பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- 100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையில் இன்று வினாக்கள், விடைகள் நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அப்போது, கள் மீதான தடையை நீக்கி கள், பதநீரை அரசே கொள்முதல் செய்து ஆவின் போல விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டும் என்று உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைச்சர் பொன்முடி, கள் தடை நீங்குமா? என்ற கேள்விக்கு, கள்ளில் சிலவற்றை கலந்தால் அது போதைப்பொருளாக மாறிடும். அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது, பதநீரை கள் ஆக்குவது சரி, போதைப்பொருள் ஆக்குவதால் தான் சிக்கல். பனை பொருள் இணையதளம், கைபேசி வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.
பதநீர், கள் விற்பனையை அனுமதிப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்துபேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனிடையே, அமைச்சர் கே.என்.நேரு, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கழிவு நீரில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்படும் நீரைத்தான் மக்கள் குடிக்கிறார்கள். ஆனால் நம் மக்கள் அது வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்.
100 லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்தால் 6 லிட்டர் கழிவு நீர் போக, 94 லிட்டர் நல்ல நீர் கிடைக்கும். சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயம் அல்லது ஆற்றில் விடலாமா என்பது குறித்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முடிவு செய்யப்படுகிறது என்று கூறினார்.
- 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும்.
- தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து கேட்ட கேள்விக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளிக்கும்போது கூறியதாவது:-
இந்த ஆண்டு தமிழகத்தில் 375 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதற்காக குழு நியமிக்கப்பட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 375 ஊராட்சிகளும் நகராட்சியில் சேர்ந்தாலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு சென்றடையும்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர், ஹசன் மவுலானா, தரமணி பகுதியில் குடிநீர் இல்லாததால் மக்கள் அவதிபடுவதாகவும் அங்கு போராட்டம் வெடிக்கும் சூழல் உள்ளது எனவே நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதில் பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகளை அனுப்பி உடனடியாக தண்ணீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார்.
- ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசியதாவது:-
வருகிற 4-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை தருவதாக இருந்ததன் அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தரும் முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதனை ஏற்றுக்கொண்ட பின்னர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் மரக்கூழ் ஆலை இரண்டாவது அலகினை திறந்து வைக்கிறார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு பெரம்பலூர் புறப்பட்டு செல்கிறார்.
அங்கு மாலையில் இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து 5-ந்தேதி முதல்-அமைச்சர் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் இருந்தது.
அதன் அடிப்படையில் தனித்தனியாக நடைபெற இருந்த கூட்டம் இன்று 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்து இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நீண்ட தூரம் பயணிக்க கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும் நாளைதான் அவரது வருகை தொடர்பான முடிவு தெரியவரும்.
தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார். இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். சின்ன விஷயத்தையும் பா.ஜ.க.வினர் ஊதி பெரிதாக்குகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த ஒரு குறையும் கூறமுடியாத அளவுக்கு நமது முதல்வர் ஆட்சியை நடத்தி வருகிறார்.
இப்போது அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. நான்தான், நீதான் என்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இடத்தை பிடித்து விட வேண்டும், எதிர்க்கட்சியாக வந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. அந்த நோக்கத்தில் அவர்கள் அ.தி.மு.க.வை ஒன்று சேரவிடாமல் பார்த்து கொள்வதோடு, தடுத்தும் வருகிறார்கள்.
நான் வெளிப்படையாக வெட்கத்தை விட்டு கூறுகிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் அனைவரும் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்.
தற்போது தி.மு.க. எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ வருங்காலத்தில் இதோடு இன்னும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி 40-க்கு 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். திருச்சி என்ன நினைக்கிறதோ, அதுதான் தமிழ்நாட்டில் நடக்கும். திருச்சி சரியாக இருந்தால் தமிழ்நாடு சரியாக இருக்கும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களை தவிர மீதமுள்ள அனைத்து இடங்களிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்று சொன்னேன். அதேபோல் மூன்று இடங்களை தவிர டெல்டாவில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றிபெற்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாபெரும் வெற்றியை தலைவருக்கு தேடித்தர வேண்டும்.
கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சில சில சங்கடங்கள் நிலை வருகிறது. அவற்றை சரிசெய்யும் வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.
சென்னை:
சென்னையில் மீண்டும் நேற்று மழை பெய்ததால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு கொளத்தூரில் நடந்த பணிகளை இன்று ஆய்வு செய்தார்.
அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நேற்று இரவு முதல் பெய்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. புதிதாக கால்வாய் கட்டாத பகுதியிலும் ஏற்கனவே உள்ள பகுதியிலும் நின்ற மழைநீரை மின்மோட்டார் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. சேரும் சகதியும் கூட அகற்றப்பட்டுள்ளது.
மேலும் தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடக்கிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் முழுமையாக அகற்றும் பணி முடிந்தவுடன் சென்னை முழுவதும் சாலைகள் சீரமைக்கப்படும். இதற்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். மழை முடிந்தவுடன் சாலைகள் செப்பனிடும் பணி தொடங்கும்.
கடந்த 10 வருடமாக அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளாததால் தான் சென்னையில் மழைநீர் தேங்கியது. அவர்கள் அந்த பணியை செய்திருந்தால் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும். தூர்வாரும் பணியை செய்யாததால்தான் சென்னை பாதித்தது.
முதல்-அமைச்சர் 1000 கி.மீ தொலைவிற்கு மழை நீர் கால்வாய் பணிகளை செய்ய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தென் சென்னை, மத்திய சென்னை பகுதியில் அறவே தண்ணீர் தேங்கவில்லை.
வட சென்னையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதுவும் ஓட்டேரி கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மழைநீர் தேங்கியது.
கொளத்தூர் கன்னித்தீவு போல இருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது வேறு நினைவை ஏற்படுத்துகிறது. அவர் போகிற கன்னித்தீவு வேறு. அவர் கட்சியில் தான் இருப்பதை காட்டிக்கொள்ளவே இது போன்று பேசுகிறார்.
மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.
நிதி ஒதுக்கி செயல்படுத்தியது யார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் செய்கிறோம்... செய்கிறோம்... என்றார்கள். ஆனால் கடைசி வரை செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடசென்னையில் 36 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது.
- அதிக மழைப்பொழிவு இருந்த போதிலும் 2 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. மற்ற இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை.
சென்னை:
சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தற்போது மழை நீர் முழுமையாக வடிந்து விடுகின்றன. கனமழையின் போது தேங்கிய பகுதிகளில் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் மழை நீர் எந்த இடத்திலும் தேங்கவில்லை.
மழைநீர் வடிந்து விடுவதால் தற்போது கொசு மற்றும் மழைக்கால நொய் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கி உள்ளது. கொசு ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் போன்றவை பரவாமல் தடுக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுளது.
ராயபுரம் மண்டல அலுவலகத்தில் கொசு ஒழிப்பு பணியை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
வடசென்னையில் 36 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பெய்துள்ளது. அதிக மழைப்பொழிவு இருந்த போதிலும் 2 இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. மற்ற இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் வடிகால் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகளை செய்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் உடனடியாக வடிந்துள்ளது. இப்போது எங்கும் மழை நீர் தேங்கி நிற்கவில்லை.
சேரும், சகதியுமாக இருந்த இடத்தில் கூட அவற்றை அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன. கால்வாய் அடைப்புகளை நீக்கி வருகிறோம்.
மேலும் நீர்நிலைப் பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்கள் கொசுக்களால் பாதிக்கக்கூடாது என்பதற்காக கொசுவலைகள் இலவசமாக வழங்கி வருகிறோம்.
சென்னை மாநகராட்சியில் இருப்பில் உள்ள 2.60 லட்சம் கொசு வலைகள் வழங்கப்படுகிறது. அந்த பணிகளை இன்று தொடங்கி உள்ளோம். எங்கெல்லாம் நீர் நிலைகள் இருக்கின்றதோ அந்த பகுதிகளுக்கு அதிகமாகவும் நகர்ப்புற மக்களுக்கு குறைவாகவும் வழங்கப்படும்.
அடுத்த கட்டமாக கொசு ஒழிப்பு பணியும் தொடங்கியுள்ளது. நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்காத வகையில் படகுகள் மூலமும், எந்திரங்கள், மூலமும் கொசு மருந்துகள் தெளிக்கப்படுகன்றன. வீடுகளிலும் மருத்து தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். 247 கி.மீ. கால்வாய்களில் அனைத்து பகுதிகளிலும் இந்த பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கலாநிதி வீராசாமி எம்.பி., ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில், 7,000 அறுவை சிகிச்சைகள், 2,500 வரை பிரசவ அறுவை சிகிச்சை என 9,000 முதல், 9,500 அறுவை சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன.
- திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு அவசர சிகிச்சை படுக்கைள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
மேலும், 32 படுக்கைகளுடன் கூடிய இ.சி.ஆர்.பி. தீவிர சிகிச்சை பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
அமைச்சர் மா.சுப்ரமணியன், காலையில் ஜாக்கிங் செல்லும் போது, கல்லணை அருகே உத்தமர் சீலி கிராமத்தில் வீடு, வீடாக சென்று 'மக்களை தேடி மருத்துவம்' வந்து சேர்ந்ததா? என்று ஆய்வு செய்திருக்கிறார். தனது துறையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். திருச்சிக்கு இரண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொடுத்துள்ளார். திருச்சிக்கு அரசு பல் மருத்துவமனை ஒன்று வேண்டும். அதை, நிதி நிழல் அறிக்கையில் மட்டும் நீங்கள் (அமைச்சர்) சேருங்கள். நிதியை நான் முதல்வரிடம் கேட்டுப்பெற்றுக்கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணம், இரு மருத்துவர்கள் என்று அறிக்கை வந்தவுடன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 540 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது. அறுவை சிசிச்சை அறை முன்பு, 'செக் லிஸ்ட் போர்டுகளை' வைத்துள்ளோம். இதன் மூலம் மருத்துவத் தவறுகள் குறையும்.
விரைவில், 1,649 அறுவை சிகிச்சை அரங்கு முன்பு செக் லிஸ்ட் போர்டு வைக்கப்படும். இதுபோன்ற ஏற்பாடு இந்தியாவில் இதுவே முதல்முறை. தமிழகத்தில், 7,000 அறுவை சிகிச்சைகள், 2,500 வரை பிரசவ அறுவை சிகிச்சை என 9,000 முதல், 9,500 அறுவை சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன. திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு அவசர சிகிச்சை படுக்கைள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான தொடு உணர்வு சிகிச்சை பூங்கா தொடங்கிவைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் காது கேட்கும் திறனற்ற 88 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
திருச்சியில் அரசு பல் மருத்துவமனை நிதி நிழல் அறிக்கையில் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு திருச்சியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியும் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் புதிதாக 708 நகர்நல வாழ்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் நமது அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியால் திருச்சியில் மட்டும் 36 மையங்கள் அமைய இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
- தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார்.
சேலம்:
சேலம் கோட்டை மைதானத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு பேசியதாவது:-
மு.க.ஸ்டாலினை கட்சியின் செயல் தலைவராக, முதல்-அமைச்சராக முன்மொழிந்த வர் பேராசிரியர் அன்பழகன். மறைந்த ஜெயலலிதாவிற்காக அ.தி.மு.க.வினர் ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தாத நிலையில், பேராசிரியருக்காக 100 இடங்களில் நூற்றாண்டு பொதுக் கூட்டங்களை நடத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.
அனைவரையும் சமமாக மதிக்கக்கூடிய பேராசிரியர் அன்பழகன் நமக்கு முன்னோடியாக விளங்குகிறார்.
தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து வருகிறார். இது வாரிசு அரசியல் அல்ல. கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் தி.மு.க.வினர் எப்போதும் நன்றி விசுவாசமாக இருப்போம். தி.மு.க.,வைக் கட்டிக்காத்து எங்களை உருவாக்கிய தலைவர் குடும்பத்துக்கும் தலைவருக்கும் என்றும் நேர்மையோடு அவர்களோடு இருந்து பாடுபடுவோம்.
அதன் அடிப்படையில் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி மட்டுமல்ல, அவரது மகன் வந்தாலும் ஆதரிப்போம். வாழ்க என்று சொல்வோம். நன்றியோடு இருப்பவர்கள் தி.மு.க.வினர். எங்களை வாரிசு அரசியல் என்று சொல்லி மிரட்ட முடியாது.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் அ.தி.மு.க கோட்டை என்று பேசி வருகிறார். சேலம் இனி எப்போதும் தளபதியின் கோட்டையாக இருக்கும். பல வழக்குகள் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களை முதல்-அமைச்சர் கைது செய்யாமல் உள்ளார். இதேபோன்று தொடர்ந்து அவதூறாக பேசி கைது செய்ய வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விடாதீர்கள்.
தி.மு.க ஆட்சியில் முதல்-அமைச்சர் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார். விரைவில் சேலத்திற்கு வந்து பல திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அனைத்து சமுதாய மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் இயக்கம் தி.மு.க. நிதி சுமையை ஏற்றி வைத்த அ.தி.மு.க.விற்கு சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு பற்றி பேச தகுதியில்லை.
கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் 537 திட்டங்களை அறிவித்து 143 மட்டும் அரசாணை வெளியிட்டனர். தி.மு.க கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 28 திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சேலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றுவோம். இதற்காக தீவிரமாக பணியாற்றுவோம் என்று பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் சபதம் ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளில் 4,500 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
- திருச்செந்தூரில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும்.
திருச்செந்தூர்:
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று திருச்செந்தூர் வந்தார். நகராட்சி நிர்வாகம் சார்பில் திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை அவர் பார்வையிட்டார். திருச்செந்தூர் தோப்பூரில் உள்ள பாதாளச்சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை பர்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பஸ்நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மார்க்கெட் கட்டிடங்களையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூரில் நடைபெற்று வரும் பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளில் 4,500 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதால் அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவில் அது சரி செய்யப்பட்டு 2 மாதங்களில் நிறைவு பெறும். திருச்செந்தூரில் நிலவிவரும் குடிநீர் பற்றாக்குறை விரைவில் சரிசெய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அப்போது அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகராட்சி ஆணையாளர் வேலவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- கழிவுநீரில் ஏற்படும் கசடுகழிவுகளை தனியாருடன் இணைந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
- மதுரை வடக்கு தொகுதி தி.மு.க. உறுப்பினர் தளபதி கோரிக்கை வைத்தார்.
சென்னை:
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் கூறுைகயில், 'திருமங்கலம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிதி நிலைக்கு ஏற்ப விரைந்து செயல்படுத்தப்படும் என கூறினார்.
மேலும், 21 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 40 கிலோ வாட் திறன் கொண்ட கசடுக்கழிவு அப்புறப்படுத்த பணிகள் நடந்து வருகிறது என்றும், கழிவுநீரில் ஏற்படும் கசடுகழிவுகளை தனியாருடன் இணைந்து பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், மதுரையை போன்று அருகில் இருக்கும் நகரங்களில் மாநகராட்சி போன்று வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், மதுரைக்கு அருகில் உள்ள நகரங்களை மேம்படுத்தினால் மதுரையில் இட நெருக்கடி குறையும் என்பதால் இதனை உடனடியாக செயல்படுத்த முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி நிலைமைக்கு ஏற்ப விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
அதேபோல், மதுரையில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் புதிய பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி தி.மு.க. உறுப்பினர் தளபதி கோரிக்கை வைத்தார்.
அதற்கு அமைச்சர் கே.என்.நேரு, 21 மாநகராட்சிகளில் 19 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒசூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு செயல் படுத்தப்பட உள்ளதாகவும், மதுரையில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
- பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், குப்பைத் தொட்டிகளின் வடிவம் மற்றும் தாங்கும் திறன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
- பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரை கொசு ஒழிப்புப் பணியை தீவிரப்படுத்த மழைநீர் வடிகால் கால்வாய்களில் கொசுப் புழு நாசினி தெளிப்பதற்காக ஒரு கோட்டத்திற்கு ஒரு கைத்தெளிப்பான் வீதம் 200 கோட்டங்களிலும் மூலதன நிதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 200 புதிய கைத்தெளிப்பான்களும், நீர்வழித்தடங்களில் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள பெருநிறுவன சமுக பங்களிப்பு நிதியின் கீழ் தலா ரூ.13.5 லட்சம் என மொத்தம் ரூ.81 லட்சம் மதிப்பீட்டில் 6 டிரோன் எந்திரங்களும் வழங்கப்பட்டன.
அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியாளர்களிடம் வழங்கினார்கள்.
மக்கும், மக்காத குப்பைகளைப் பெறுவதற்கான புதிய குப்பைத் தொட்டிகள், பயன்பாட்டில் உள்ள குப்பைத் தொட்டிகளில் பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், குப்பைத் தொட்டிகளின் வடிவம் மற்றும் தாங்கும் திறன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு மாற்றி அமைக்கப்பட்ட பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத் தொட்டிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு மண்டலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவர்கள் தனசேகரன், இளைய அருணா, டாக்டர் கோ.சாந்த குமாரி, சர்ப ஜெயாதாஸ் நரேந்திரன், நியமனக்குழு உறுப்பினர் வேலு, துணை ஆணையாளர்கள் பிரசாந்த், ஷேக் அப்துல் ரஹ்மான், சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டலக்குழுத் தலைவர் ஶ்ரீராமுலு, மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், உர்பேசர் சுமீத் நிறுவன அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதலமைச்சர் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்.
- சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னை வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையோடு 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த காலங்களில் பாசன பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகள் கண்டறியப்பட்டு அவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க தற்போது கூட சுமார் 736 நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சாலை வசதி, மருத்துவச் சேவைகள், மழைநீர் வடிகால் பணிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் பணிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பு.
- கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம்.
ஈரோடு:
ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பு. கடந்த 18 மாதங்களில் நாங்கள் செய்த சாதனைகளின் அடிப்படையில்தான் நாங்கள் வாக்கு கேட்கிறோம்.
இந்த தொகுதியை காங்கிரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். அக்கட்சியின் வெற்றிக்காக பாடுபட உள்ளோம். சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு அவர்கள் அரசை விமர்சிப்பது இயற்கையானது.
உண்மையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவு வரி உயர்வு மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மக்களும் அதை ஏற்றுக் கொண்டனர். இப்போது கடந்த 18 மாதங்களில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் வாக்குகளை கோருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.