என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருபூஜை"

    • குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
    • அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காளையார்கோவில்

    மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.

    அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.

    மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு செம்பிய நாட்டு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் செம்பிய நாடு மறவர் சங்கத் மாநிலத் தலைவர் சி.எம்.டி ராஜாஸ் தேவர் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் எஸ்.செந்தில்ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. சிவபெருமானுக்கு கண் கொடுத்தவரும், மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த 63 நாயன்மார்களில் ஒருவருமான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணிக்கு மேல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கண்ணப்பநாயனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் புதிய காசி விஸ்வநாதர், கண்ணப்ப நாயனார் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். குருபூஜை விழாவிற்கு இருக்கூர் பட்டக்காரரும், இடும்பை இளைய நாயகருமான சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர் கலந்து கொண்டார்.

    விழாவில் பாண்ட மங்கலம் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணப்ப நாயனார், புதிய காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவின் நிகழ்வாக திருநாவுக்கரசர் உடன் அப்பூதியடிகள் மற்றும் சண்டிகேஸ்வர பெருமான் மற்றும் அனைத்து மும்மூர்த்திகளுக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் , அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உடன் அப்பூதியடிகள் மற்றும் சண்டிகேஸ்வர பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மடாலயத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதலுடன் வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தர் சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.
    • திருஞானசம்பந்தர் உடனே நால்வர் பெருமக்களுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூர் பேட்டை திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நேற்று திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதலுடன் வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தர் சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.

    திருஞானசம்பந்தர் உடனே நால்வர் பெருமக்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் மகேஸ்வர பூஜை நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

    • திருவாதவூரில் மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.
    • மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் பிறந்த மக நட்சத்திர நாளில் அங்கு குரு பூஜை விழா நடந்தது.

    இதையொட்டி ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவிலில் மதுரை நகரத்தார் மற்றும் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அங்கிருந்து மாணிக்கவாசகர் தன் பிறந்த வீட்டிற்கு செல்லும் நிகழ்ச்சி மேளதாளங்களுடன் நடந்தது. அங்கு அவருக்கு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது.

    பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

    • மாணிக்கவாசகரின் சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • அவரது படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜையை முன்னிட்டு நடராஜசுவாமி சன்னதியில் மாணிக்கவாசகர் உருவ சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    பின்னர் நடராஜர், தியாகராஜசுவாமிகள், மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. தொடந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள மாணிக்கவாசக சுவாமிகள் மடத்தில் மாணிக்கவாசகர் உருவ படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது.

    இதில் யாழ்பாணம் கரணவாய் வரணி ஆதினம் மற்றும் மாணிக்கவாசக மடத்தின் தர்மகர்த்த செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஆதிவார மடம் நிர்வாகி குமரேசமூர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனர்.

    கோயில் ஓதுவார் மூர்த்தி பரஞ்சோதி ஓதுவார் தலைமையில் தேவார திருப்பதிகம் பாடப்பட்டது. அறுசுவை அன்னதானம் அளிக்கப்பட்டது.

    • மகாலிங்கம் சித்தர் குருபூஜை பெருவிழா நடைபெற்றது
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தலையாட்டி சித்தர் ஆசிரமத்தில், மகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை பெருவிழா நடந்தது. விழாவிற்கு ஆசிரம நிர்வாகி காமராஜ் தலைமை வகித்தார். இயக்குநர்கள் நந்தேஸ்வரன், சக்திஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருச்சி ஓங்கார குடில் பாம்பாட்டி சித்தரின் சீடர் வேலுதேவர் கலந்துகொண்டு யாக வேள்வியை தொடங்கி வைத்தார். கோமாதா பூஜை , 210 மகா சித்தர்கள் யாகமும், தொடர்ந்து அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தவயோகி மருதவேல் தேவர், எல்ஐசி முகவர் அசோகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் கிராமத்தில் உள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. மாணிக்கவாசகரின் சிறப்புகள் குறித்து முத்துச்சாமி, தனலட்சுமி பக்தி சொற்பொழிவு ஆற்றினர்.

    மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். பஞ்ச வாத்தியங்கள், சங்க நாதம் முழங்கி, திருவாசகம் பாடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை நடந்தது.
    • அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப் பட்டது.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத் துக்கோன் குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுரு–வப்படத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் சோழ–வந்தான் சட்டமன்ற உறுப்பி–னர்கள் வெங்கடேசன், அவைத் தலைவர் பாலசுப்பி–ரமணியம், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், அழகுபாண்டி, பகுதி செய–லாளர்கள் சசிகுமார், ராம–மூர்த்தி, செயற்குழு பூமிநா–தன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன்,

    பேரூர் தலைவர் ரேணுகா ஈஸ்வரி, கவுன்சி லர்கள் ரோகினி பொம்மை தேவன், செல்வகணபதி, பாபு, இளைஞரணி அழகு பாண்டி, வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவில் காட்சி அளிக்கிறார்.
    • மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் சித்தர் பிரதிஷ்டை செய்தார்.

    மதுரை மாநகரில் பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புராணத்தை உள்ளடக்கி இருக்கின்றன. அதேநேரத்தில் சில சமூகத்தினர் தங்களது இஷ்ட தெய்வத்தை பிரதிஷ்டை செய்தும், வணங்கியும் வந்தனர்.

    அந்த தெய்வங்களுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டு வழி வழியாக வழிபட்டும் வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு பெற்ற கோவில்தான் வடக்குமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமஸ்வாமி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில் ஆகும்.

    இக்கோவில் குறித்து கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது:-

    தேரோடும் வீதியான வடக்கு மாசி வீதியிலே இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு யாதவ பெருமக்களால் நிர்மாணிக்கப்பட்ட தாகும். மூலஸ்தான விக்ரகத்தை ஸ்ரீபழனிநாச்சி முத்துசுவாமிகள் என்னும் சித்தர் தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சமாதியாகி விட்டார். அவரது சமாதியான தினத்தை இன்றளவும் யாதவப் பெருமக்கள் குருபூஜையாக ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணத்தன்று நடத்துகிறார்கள்.

    முன்னொரு காலத்தில் இந்த பகுதி நந்தவனமாக இருந்தது. அந்த நந்தவனத்திலேயே ஒரு கம்பத்தடியில் ஸ்ரீ ஆஞ்சநேயர், கோவில் கொண்டிருந்தார். இதன் அருகே தான் மூலஸ்தான விக்ரகம் இருந்தது. அப்போது அதற்கு கம்பந்தடி கிருஷ்ணன் என்ற நாமம் இருந்தது.

    பூம்புகாரில் இருந்து மதுரை வந்த கோவலனையும், கண்ணகியையும் இங்குள்ள வடக்கு மாசி வீதி இடைச்சேரி பெண்ணான மாதரி தான் ஆதரித்ததாகவும், சிலப்பதிகாரத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் இடைசேரி பெண்களால் ஸ்ரீநவநீதகிருஷ்ணனை முன்னிருத்தி பாடப்பெற்ற தாகவும் கூறப்படுகிறது.

    இந்த நவநீதகிருஷ்ணன் கோவிலின் உபகோவிலான ராமாயண சாவடி கோவிலும் இவ்வீதியில்தான் உள்ளது. பாண்டிய மன்னரிடம் கண்ணகி கோபம் கொண்டு, அங்கிருந்து வந்து கண்ணகி இளைப்பாரிய இடமும் இந்த ராமாயண சாவடி கோவில்தான்.

    ராமன் சன்னதி, விநாயகர் சன்னதி, தண்டபாணி சன்னதி, நாச்சிமுத்து, கருப்பண சாமி சன்னதி ஆகிய துணை கோவில்களையும் கொண்டுள்ளது.

    வடக்கு பார்த்து உள்ள ஸ்ரீராமஸ்வாமி நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள மூலவர் சிறு குழந்தை வடிவிலான கிருஷ்ணராக காட்சி அளிக்கிறார். கலை நயத்துடன் கற்களால் கட்டப்பட்ட இக்கோவிலின் 10 தூண்களிலும் கிருஷ்ணரின் தசாவாதார காட்சிகளும் பொறிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீநவநீத கிருஷ்ணன் தொட்டில் கட்டும் பிரார்த்தனைக்கு இணங்கி பிள்ளை செல்வத்தை அருள்கிறார். எனவே குழந்தை வரம் வேண்டுவோர் தினசரி வந்து வழிபட்டால் பலன் உண்டு.

    இதேபோல வெண்ணை, வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்து பிரார்த்தனை செய்வோருக்கு மன இன்னல்களை போக்கி எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இத்திருக்கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தின்போது 10 நாட்கள் பகல் பத்து, ராப்பத்து திருவிழா நடைபெறும். அப்போது 10 நாட்களும் ஸ்ரீகண்ணபிரான் ராமாயண சாவடிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தினசரி தீர்த்தங்களும், பிரசாதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு சொந்தமான பசுமாட்டை கோவிலுக்கு கொண்டு வந்து தினமும் பூஜை நடத்தப்படுவது சிறப்பாகும்.

    ராமாயண சாவடி ஸ்ரீராமர் சன்னதியில் ஸ்ரீராமநவமி உற்சவத்தன்று சீதா திருக்கல்யாணம் வெகுசிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு சொந்தமான ஸ்ரீராமஸ்வாமி, ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி தேவஸ்தானம் யாதவ பெருமக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குருபூஜை விழா 37-ம் ஆண்டாக இன்றுடன் மூன்று நாட்களாக நடைபெற்றது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,வெங்கல் அணைக்கட்டு திருவிழா எனப்படும் மும் முனிவர் குருபூஜை விழா 37-ம் ஆண்டாக இன்றுடன் மூன்று நாட்களாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை கணபதி பூஜையுடன் மூன்று நாள் திருவிழா துவங்கியது. எனவே, ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ செண்பகா தேவி அம்மன், ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர், மும்முனிவர் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை வெங்கல் மும்முனிவர் திருக்குற்றாலம் மெளன குரு சுவாமி படம் மற்றும் செண்பகாதேவி அம்மன் உற்சவர் ஆகியவற்றின் ஊர்வலம் அம்மணம்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து புறப்பட்டு அணைக்கட்டுக்கு வந்தடைந்தது. இன்று காலை அம்மணம்பாக்கம் அணைகட்டு ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ வெங்கல் மும்முனிவர் திருக்குற்றால மௌன குரு சுவாமிகள் மற்றும் ஸ்ரீசெண்பகா தேவி அம்மன் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் உற்சவர் ஸ்ரீசெண்பகாதேவி அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக திருமாங்கல்யகயிறு, மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தைச்சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் இக்கோவிலுக்கு

    வந்து தரிசனம் செய்தனர். இந்த அணைக்கட்டு திருவிழா துவங்கியபின் தான் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவிலின் ஆடித்திருவிழா துவங்கியதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் எம்.கணேசன், செயலாளர் டி.ஆர்.நந்தகோபால், பொருளாளர் டி.கணேசன், கௌரவத் தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் விழா குழுவினர்கள் பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×