என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுப்போட்டி"

    • சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2021- 22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் (பதின்மப் பள்ளிகள் உள்பட) படித்து வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய), அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) படித்து வரும் மாணவர்களுக்கும் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமையன்று) சிவகங்கை மருது பாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த போட்டிகளில்் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும்் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாவர்கள் இருவரை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்் வழங்கப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களு க்கான பேச்சுப் போட்டிகள் 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கியும்், கல்லூரி மாணவர்களுக்்்கான பேச்சு போட்டிகள் 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியும் நடத்தப்பட உள்ளன.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியா், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும்் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80198) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
    • பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் :

    தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளான 14-11-2022 (திங்கட்கிழமை) அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் கீழ்க்காணும் தலைப்புகளில் நடத்தப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் ) வருமாறு :- குழந்தைகள் தின விழா , ரோசாவின் ராசா ,ஜவகர்லால் நேருவின் தியாகங்கள் , நூல்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு,இளைஞரின் வழிகாட்டி நேரு

    கல்லூரி மாணவர்களுக்கான ஜவகர்லால் நேரு - பேச்சுப் போட்டிக்கானத் தலைப்புகள் வருமாறு :- இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு ,,நேரு கட்டமைத்த இந்தியா ,காந்தியும் நேருவும்*ந,ருவின் பஞ்சசீலக் கொள்கை ,உலக அமைதிக்கு நேருவின் தொண்டு , அமைதிப்புறா - நேரு.

    இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்குமாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையிலும், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.2000 வீதம் சிறப்புப் பரிசும் வழங்கப்பெற உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • 10-ம் வகுப்பு மாணவர் கற்பக மணி பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் 2-வது இடம் பெற்றார் .

    கடையநல்லூர்:

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. போட்டிகளில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் பரதன் பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், இதே மாணவர் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.

    இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் கற்பக மணி அண்ணா பிறந்த தின பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றார் .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெல்லை தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரி ஷீலா ஜெபரூபி முதல் பரிசாக ரூ.5000 மற்றும் சான்றிதழும், இரண்டாம் பரிசாக தலா ரூ.3000-ம் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.

    பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் மங்களத்துரை, உதவி தலைமை ஆசிரியர் ராஜன், முதுகலை தமிழாசிரியர் சண்முகசுந்தரம், தமிழாசிரியர் மாரியப்பன், முதுகலை வரலாற்று ஆசிரியர் பசும்பொன் ராஜா, 8-ம் வகுப்பு தமிழாசிரியர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.

    • மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.
    • போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புத்தக கல்வியோடு சிறந்த பண்புகளையும், சமூக சிந்தனையை மேம்படுத்தவும் இணை செயல்பாடு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் மன்றங்களை மீண்டும் புதுப்பித்து மாணவா்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.

    இதன்படி திருப்பூா் மாவட்ட அளவிலான 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தொடங்கிவைத்தாா்.

    பேச்சுப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள், கட்டுரைப் போட்டியில் 50 மாணவ, மாணவிகள் என மொத்தம் 100 மாணவா்கள் பங்கேற்றனா். பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி, கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவா், மாணவி என மொத்தம் 4 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

    இதில் இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் செங்கப்பள்ளி தலைமை ஆசிரியா் உதயகுமாா், பிச்சம்பாளையம் தலைமை ஆசிரியா் லட்சுமிபதி ஆகியோா் கலந்து கொண்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை ஆய்வாளா் ரவி செய்திருந்தாா்.

    • எண்ணறிவு பயிற்றுவிக்க18 ஆயிரத்து 142 கற்போர் கண்டறியப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
    • 'வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி' எனும் தலைப்பில் பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு பேச்சுப் போட்டி கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாதவருக்கு, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்றுவிக்க, மாவட்டத்தில் 18 ஆயிரத்து 142 கற்போர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'வாசிப்பை நேசி, வாழ்க்கையை சுவாசி' எனும் தலைப்பில் பேச்சு போட்டி நேற்று நடத்தப்பட்டது. மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அண்ணாதுரை போட்டிகளை துவக்கி வைத்தார். வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற, பயிற்றுநர்கள் பங்கேற்று, தங்கள் பேச்சுத்திறனைக் காட்டினர்.

    • கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    • போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி வருகிற 27-ந் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

    போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிரப்பி முதல்வர், துறைத்தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கு தலா ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே ஒரு கல்லூரியில் இருந்து பங்கேற்க முடியும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

    ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் மொத்த பரிசு தொகையாக ரூ.66 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை-பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு பரிசு தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு இப்போட்டிகள் வருகிற 10-ந் தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம், மருதுபாண்டியர் நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி நடை பெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மட் டுமே இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

    ஒரு கல்லூரியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்பு கள் போட்டிகள் தொடங்கும் முன் அறிவிக்கப்படும். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை நேரிலோ அல்லது தொலை பேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80798) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுக்கோட்டையில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லுரி யில் சிறுபாண்மையினர் ஆணையத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து போட்டிகளில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.பின்னர் அமைச்சர் பேசும் போது,தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபா ண்மையினர் நலன் காப்பதற்காக மாநில சிறுபாண்மை நல ஆணை யத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்.

    பேச்சுக் கலை என்பது எண்ணங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மற்றவர்கள் முன்பாக நல்ல வாதமாக எடுத்துவைப்பதற்கு சமமாகும். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆற்றல் கொண்டிருப்பா ர்கள். எழுத்தாற்றல், பேச்சாற்றல், இசை, நடனம், ஓவியம் போன்ற பல்வேறு ஆற்றல்களில் ஏதேனும் ஒரு ஆற்றலில் சிறந்தவர்களாக மாணவர்கள் இருப்பார்கள். தங்களிடம் உள்ள ஆற்றலை வளர்த்து கொண்டு எதிர் காலத்தில் சிறந்தவர்களாக, வல்லவர் களாக இந்த நாட்டிற்கு பயன்பட வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, பிற்படுத்தப்பட்டோர மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் அமீர் பாஷா, கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி சிறுபாண்மையினர் ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட் அந்தோணிராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.





    .




    • கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
    • தமிழக அரசு காலை உணவுத் திட்டம் 1544 பள்ளிகளில் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அரங்கில், மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்துக் கல்லூரி மாணவ, பேச்சுப் போட்டி நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழினை வழங்கி அவர் பேசியதாவது:-

    கடுமையான முயற்சி செய்தால்தான் முன்னேற முடியும். விடா முயற்சி, கடுமையான உழைப்பு இதுதான் நமது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் அப்போதுதான் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற முடியும் பேச்சுப்போட்டி என்பது கல்வி சார்ந்த ஆற்றலை அதிகப்படுத்துவது வாழ்கையில் கல்வி மட்டும் போதுமானது அல்ல. அதையும் தாண்டி பல்வேறு ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் தனித்திறமைகள் மாணவர்களுக்கு தேவை. அரசை தேடி மக்கள் இல்லை மக்களைத் தேடி அரசு சென்று சேவை செய்யவேண்டும் என்பது தான் நமது பொதுப்பணி துைற அமைச்சரின் விருப்பம், ஒவ்வொரு தொகுதியிலும் நேரடியாக சென்று மக்களிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது தீர்வு காண்பதே தன்னுடைய தலையாய் கடைமையாக பணியாற்றி வருகின்றார்.

    மாணவர்கள் அரசுப் போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு வருகின்ற ஜூன் மாதத்திலிருந்து திருவண்ணாமலை செய்யாறு அரசுக்கலைக் கல்லூரிகளில் வகுப்பு தொடங்கப்படும் இந்த பயிற்சிக்கு வேலை வாய்ப்பு பயிற்சி துறையின் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் இ - புக் - ல் டவுன்லோட் செய்து பயன் பெறலாம் மற்றும் தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது நமது மாவட்டத்தில் 1544 பள்ளிகளில் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் . பார்வதி சீனிவாசன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் . நிர்மலா கார்த்தி வேல்மாறன், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 15 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

    போட்டிக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சுகந்தி வரவேற்று பேசினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன் , பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை துறையின் நல அலுவலர் நரேந்திரன், தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா ஹனி, கல்லூரி செயலர் ராதாகிருஷ்ணன், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தொடர்ந்து அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் மாணவர்களுக்கு ரூ 20 ஆயிரமும்,2ம் இடம் வெற்றிப்படும் மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், 3ம் இடம் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. ஐந்தாயிரம் வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் தமிழக அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே, பெரியார் அம்பேத்கரும் கண்ட சமூக ஜனநாயகம், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர், அறிஞர் அண்ணாவின் தமிழ் கனவு, கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும் மாநில உரிமைகளும் உள்ளிட்ட 15 தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் உதவி கலெக்டர் அர்ச்சனா, ஒன்றிய குழு தலைவர்கள் ஜெயபிரகாஷ், காமாட்சி, மகேந்திரன், நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பராயன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கனிவண்ண ன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏவிசி கல்லூரி தமிழ் துறை தலைவர் தமிழ் வேலு நன்றி கூறினார்.

    • மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள், நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்க உள்ளது.
    • மாணவர்கள் குலுக்கல் சீட்டு மூலம் தலைப்பினை தேர்வு செய்து பேச வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா் மற்றும் கருணாநிதி ஆகியோர் பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள், நாளை (13-ந்தேதி) தொடங்கி 14ந்தேதி வரை 2 நாட்கள் நடக்க உள்ளது.

    இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள், ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் ஜூலை 13, 14ந்தேதிகளில் நடக்க உள்ளன.

    இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் மூன்று பரிசாக தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    மேலும் பள்ளிகளில் நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரை தோ்வு செய்து, அவா்களுக்கு சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ. 2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

    முன்னதாக பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் குலுக்கல் சீட்டு மூலம் தோ்வு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேச வேண்டும். எனவே மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவா்கள் உரிய படிவத்தை பூா்த்தி செய்து பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் இன்று (12ந்தேதி) மாலை 6 மணிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.
    • முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது மின்னஞ்சலில் 24-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது. 

    கடலூர் மாவட்டத்தி லுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடை பெற உள்ளன. அப்போட்டி களில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும், பள்ளி மாண வர்களுக்கென நடத்தப் பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் களுள் அரசுப் பள்ளி மாண வர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொரு வருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 வீதம் வழங்கப்பெறவும் உள்ளன.

    பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவி லான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 24-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

    பள்ளி களுக்கான பேச்சுப் போட்டி தலைப்பு கள் கலைத் தாயின் தவப்புதல்வன், முத்தமிழறி ஞர், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி. கல்லூரி களுக்கான பேச்சு ப்போட்டி தலைப்பு கள் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகார், நட்பு, குறளோ வியம், கலைஞரின் எழுது கோல், அரசியல் வித் தகர் கலைஞர், சமூக நீதி காவலர் கலைஞர்.பள்ளிப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்கும். இப்போ ட்டிகளில் கட லூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவி கள் கலந்து கொண்டு பயன்பெ றலாம். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.

    ×