என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஜைகள்"

    • குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க உள்ளார்.
    • இன்று இரவு 9 மணிக்கு குருபகவானுக்கு விசேஷ யாகம் மற்றும் மகா அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானம்புசாவடி ஆட்டுக்கார தெருவில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் குரு பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார்.

    இன்று இரவு 10 மணிக்கு மேல் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்க உள்ளார் .

    இதை முன்னிட்டு இரவு 9 மணிக்கு குரு பகவானுக்கு விசேஷ யாகம் மற்றும் மகா அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.

    பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் மீனம், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம் தனுசு ஆகும்.

    பரிகார கட்டணம் ரூ.100 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் யாக அபிஷேக பூஜை பொருட்களை பக்தர்கள் முன்னதாகவே கோவிலில் வந்து சேர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    • குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தார்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் சாட்சிநாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ராஜகோபுர வாயிலுக்கு வெளியே தனிக்கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக குருபகவான் குடிகொண்டுள்ளார்.

    தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குருபகவான் எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம் இதுவாகும்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    இதேபோல், திருவிடைமருதூர் அருகே சூரியனார்கோயிலில் உள்ள உஷா தேவி சாயா தேவி உடனாகிய சிவசூரிய பெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று குருபகவானுக்கு மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு கட அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், வெள்ளி கவச அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தார்.

    குருபெயர்ச்சி அடையும் நேரமான 11. 21 மணிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    மேலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.

    • மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.
    • வாசல் திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை உள்ளே சென்றன.

    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பணிகள் செய்து நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில் சட்டை நாதர் சுவாமி கோவிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வைக்கப்பட்டு இருந்தது.

    மற்ற கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

    தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன.

    அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றனர்.

    40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டி ருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்ப ட்டுள்ளது.

    இதில் தம்பி ரான் சுவாமிகள் மற்றும் கோயில் காசாளர் செந்தில், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, துணைத்தலைவர் கோவி.நடராஜன், உபயதாரர் முரளிதரன், வர்த்த த சங்க செயலாளர் துரை, திருமு ல்லை வாசல் கணேஷ், ரவிச்சந்தி ரன், பொறியாளர் செல்வ குமார், முன்னா ள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

    • பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு அடுத்த மணக்குடியில் உலகநாயகி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 29-ந் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, 4-ம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹுதி நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியர்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, தான்தோன்றீஸ்வரர், உலகநாயகி அம்பாள், விநாயகர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி மூலவர், உற்சவர் பாலமுருகனுக்கு நேற்று காலை பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கொண்டு வந்த பாலால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பாலமுருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பாலமுருகனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் வைகாசி விசாகத்தையொட்டி அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சுப்ரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    வைகாசி விசாகத்தையொட்டி ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலிலும், வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • முயலகனுடன் கூடிய நடராஜரின் கால் பகுதி மட்டும் உள்ள சிலையும் கண்டெடுக்கப்பட்டது.
    • சம்பவ இடத்துக்கு வந்து சிலைகளுக்கு பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் கீழ் கோபிநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் கோவில் தொடர்பான எல்லையை வரையறுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளின் போது அங்குள்ள புதர்களு க்கிடையே கலைநயத்துடன் கூடிய தவ்வை, பிரம்மி, வராஹி உள்ளிட்ட சப்த கன்னிகள் சிலையும், முயலகனுடன் கூடிய நடராஜரின் கால் பகுதி மட்டும் உள்ள 8 சிலைகள் இருப்பது தெரிய வந்தது.

    இந்த சிலைகளை மீட்டெடுத்த கோவில் பணியாளர்கள் சுத்தப்படுத்தி அருகில் இருந்த பகுதியில் சிலைகளை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து சிலைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர். சிலை கண்டெடுக்கப்பட்ட இடம் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் என்பதால் கிராம மக்கள் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள் சிலைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவில் செல்வமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து அம்மனுக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானமும்,பால், பன்னீர்,இளநீர், சந்தனம்,குங்குமம், மாப்பொடி ,திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், பூச்சொரிதல் நடைபெற்றது.

    தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான தீமிதி மற்றும் சாமி வீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.
    • அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை யொட்டி ஊஞ்சல் உற்சவ திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை அம்மனுக்கும் மற்றும் பெரியாயி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு அம்மனுக்கு படையல் போட்டு வேண்டிக்கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து, உடுக்கை, பம்பை சத்தத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்பு பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை விக்கிரவாண்டி பருவத ராஜகுலத்தார் மற்றும், கோயில் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் முன்னின்று செய்திருந்தனர்.

    • கோவில்களில் ஆடிப்பூர விழா நடந்தது.
    • பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்ட சோழவந்தான் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடிப்பூர விழா நடந்தது. ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 21 வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    வளையல், ஜாக்கெட் துணி மற்றும் சீர்வரிசை வைத்து அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சியளித்தார். பின்னர் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் சார்பில் வளையல், ஜாக்கெட்துணி மற்றும் பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, அர்ச்சகர் சண்முகவேல் பூபதி, கவிதா, வசந்த் செய்திருந்தனர்.

    தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தார். இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் படி ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 4 வீதிகளில் உலா வந்தார். இதைத்தொடர்ந்து பூஜைகள் நடந்தது. செயல் அலுவலர் பாலமுருகன், மகளிர்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    உச்சி மகாகாளியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். சோழ வந்தான் திரவுபதி அம்மன்கோவில், காடுபட்டி திரவுபதி அம்மன்கோவில் ஆகிய கோவில்களிலும் ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.

    சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதைத்தொடர்ந்து ஆண்டாள் சிறப்பு அலங்கா ரத்துடன் கேடயத்தில் வீதி உலா வந்தார். பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
    • புதுமண தம்பதிகள் ஏராளமானோர் பண்ணாரி அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆடிப்பெரு க்கையொட்டி இன்று அதி காலை முதலே கோவி ல்களில் பக்தர்கள், பொது மக்கள் வழிபட குவிந்த வண்ணம் இருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை முதலே நடை திறக்க ப்பட்டு பண்ணாரி அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்ய ப்பட்டது. புதுமண தம்பதி கள் ஏராளமானோர் பண் ணாரி அம்மனை தரிசித்து வழிபட்டனர். பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதைப்போல் கோபி செட்டி பாளையத்தில் உள்ள புகழ் பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று அம்மனை வழிபட்டனர். இதே போல் கோபி சாரதா மாரியம்மன் கோவில், முடச்சூர் பால மாரியம்மன் கோவில் மற்றும் முருகன் கோயில்களில் ஆடிப்பெ ருக்கை ஒட்டி சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைப்போல் அந்தியூ ரில் பிரசித்தி பெற்ற பத்திர காளி அம்மன் கோவிலில் காலை முதலே நடை திறக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அந்தியூர் பேட்டை பெருமாள் செல் ஈஸ்வரர் கோவில், வரத ராஜ பெருமாள் கோவி லிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஈரோடு மாநகரில் மிகவும் புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் நீண்ட வரிசை யில் நின்று பெரிய மாரிய ம்மன் தரிசித்து சென்றனர்.

    இதைப்போல் சின்ன மாரியம்மன், காரை வாய் க்கால் மாரியம்மன், கொங் காலம்மன் வீரப்பன்சத்தி ரம் மாரியம்மன் போன்ற பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைக நடைபெ ற்றது. ஆடிப்பெருக்கையொ ட்டி மாவட்டம் முழுவதும் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    • கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    கிருஷ்ணகிரி, 

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    கிருஷ்ணகிரி புதுப் பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி அமாவாசை நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்து வேண்டுதல் நிறைவேற்றினார்கள். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, உற்ச வருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ராசுவீதி, சேலம் சாலை, ரவுண்டானா வழியாக நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கிருஷ்ணகிரி பழைய பேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதே போல மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

    • கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 3-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • தொடர்ந்து, கஜ பூஜை, கோ பூஜை, குதிரை பூஜை செய்யப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அபய பிரதாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாத சுவாமி பெரிய திருக்கோயிலில் வருகின்ற செப்டம்பர் மாதம் 3-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருக்கோயில் திருப்பணி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கு முன்பாக கணபதி பூஜை செய்து பாராம்பரியத்துடன் தெற்கு கோபுர வாசல் திறப்பு விழா 24 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து கஜ பூஜை, கோ பூஜை, குதிரை பூஜை செய்து அவ்வழியே நுழைய விட்டு கோயிலை அடைந்தது.

    இந்நிகழ்ச்சியில் பாடசாலை தலைமை குருக்கள் சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதினம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர்வெங்கடேசன், விழா குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார்உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள், ஆண்கள் பெண்கள் என திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×