என் மலர்
நீங்கள் தேடியது "ராஜ்நாத்சிங்"
- அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 40 லட்சம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 1871ம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நம் அதிகாரிகள், மாநில பேரிடர் மீட்டு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களை திரட்டியுள்ளோம். தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இணைப்பு சாலைகள் இருப்பதால், இந்த பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும்.
தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன. பேரழிவின் தன்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் மூழ்கப்பட்டிருப்பதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் தேவை.
எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர்களை உடனடியாக நிலைநிறுத்த உங்கள் அவசரத் தலையீட்டைக் கோருகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
- சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
- தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதா தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது.
தொகுதி உடன்பாடு ஏற்படும் முன்னதாகவே சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ளது.
இதனால் பா.ஜ.க. அதிர்ச்சி அடைந்துள்ளது நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் 10 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி உள்ளது. ஆனால் சந்திரபாபு நாயுடு கூட்டணி கட்சிகளுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகளின் கருத்துக்களை ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
டெல்லி மேலிட தலைவர்கள் ஆலோசனைக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என அந்த மாநில தலைவர் புரந்தேஸ்வரி தெரிவித்தார்.
ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே 1999-ம் ஆண்டு இந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கூட்டணியில் திருப்பதி தொகுதியை பா.ஜனதாவுக்கு ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பதி தொகுதியில் பா. ஜனதா வேட்பாளராக மாநில செயலாளர் முனி சுப்பிரமணியம் அல்லது கர்நாடக மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ரத்தன பிரபாவின் மகள் நிகாரிகா ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
- ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
- பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,
"ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசியுள்ள அஜய் சிங்கின் தந்தை, "அக்னிவீரர் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ராணுவத்தில் வழக்கமான முறையில் வீரர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை.
- உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரர் அஜய் சிங்கிற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வீர மரணம் அடைந்த வீரரின் தந்தை, உண்மை நிலையை கூறும் வீடியோவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில்,
"ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அக்னிவீரருக்கு நிதியுதவி அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொய் சொல்லியுள்ளார். கடவுள் சிவன் புகைப்படம் முன்பு ராஜ்நாத்சிங் பொய் பேசியுள்ளார்.
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த அஜய் சிங்கின் தந்தையே, ராஜ்நாத் சிங்கின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்திலும், நாட்டு மக்களிடமும், ராணுவத்திடமும், அஜய் சிங் குடும்பத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தியின் குற்றச்சாட்டிற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளதில். அதில் அஜய் சிங் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.98.39 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை சரிபார்ப்பிற்கு பின்பு மீதமுள்ள 67 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ராணுவத்தில் உயிரிழந்த அக்னிவீரர் அஜய் குமார் குடும்பத்திற்கு மத்திய அரசு தற்போது வரை எந்தவொரு இழப்பீடும் வழங்கவில்லை. தனியார் வங்கியில் ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் பணமும் ராணுவ குரூப் இன்சூரன்ஸ் நிதியில் இருந்து ரூ.48 லட்சமும் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது.
அஜய்குமாரின் சம்பள பாக்கியை இன்னமும் ஏன் அவரது வங்கிக்கணக்கில் செலுத்தவில்லை என கேள்வியெழுப்பிய அவர், இன்சூரன்ஸ் பணம் தான் அஜய்குமார் குடும்பத்திற்கு கிடைத்துள்ளது. அரசாங்கத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்கவில்லை. இழப்பீட்டிற்கும் இன்சூரன்ஸ் பணத்திற்கும் வேறுபாடு உள்ளது. உயிரிழந்த அஜய் குமாரின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் பணம் கொடுத்துள்ளது. மத்திய அரசு அல்ல.
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் குடும்பத்தை நாம் மதிக்க வேண்டும். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு பாரபட்சம் காட்டுகிறது. இது ஒரு தேசிய பிரச்சனை இதற்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.
நம் நாட்டில் ராணுவ வீரர் அக்னிவீரர் இருவரும் உயிர் தியாகம் செய்கிறார்கள். ஆனால் ராணுவ வீரருக்கு தியாகி பட்டம் கிடைக்கிறது. அக்னீவீரருக்கு தியாகி பட்டம் கிடைப்பதில்லை. ஒருவருக்கு பென்ஷன் கிடைக்கிறது. இன்னொருவருக்கு கிடைப்பதில்லை. நாட்டிற்காக யார் தியாகம் செய்தாலும் அவரை நாம் மதிக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அஜய்குமாரின் தந்தை, மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த நிதியுதவியும் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ், கேன்டீன் கார்டு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான 21-வது கூட்டம்
- உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
மாஸ்கோ:
இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். நேற்று இரவு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற ராஜ்நாத் சிங்கை இந்திய ரஷ்ய தூதர் வினய்குமார் மற்றும் ரஷ்ய துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்சாண்டர் போமின் வரவேற்றனர்.
ரஷ்யாவில் தயாரிக்கப் பட்ட ஐ.என்.எஸ். துஷில் போர் கப்பல் இன்று கலினியின் கிராட்டில் உள்ள யந்த்ரா கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படையுடன் சேர்க்கப்படும் விழா நடக்கிறது.
இதில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கலந்து கொள்கின்றனர். மல்டி ரோல் ஸ்டெல்த்-கைடட் ஏவுகனை போர் கப்பல் உலகளவில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போர் கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது இந்தியப் பெருங்கடலில் இந்திய கடற்படையின் செயல்பாட்டு திறனை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை (செவ்வாய்க் கிழமை) மாஸ்கோவில் ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-ரஷ்யா அரசுகளுக்கு இடையேயான 21-வது கூட்டம் நடக்கிறது. இதில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கும், ரஷ்ய பிரதிநிதியான ஆண்ட்ராய் பிளசோவ் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.
இதில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு துறையில் ராணுவம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு உள்பட பலத்தரப்பட்ட உறவுகள் குறித்து ஆலோசனை நடக்கிறது.
உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பார் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சந்திப்பு நடைபெறும் நாள், இடம் பற்றிய விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
- பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றும்.
- 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது: நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. தற்சார்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு முக்கியமாக உள்ளன.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அதிநவீன ஆயுதங்கள், தளவாடங்களுடன் ஆயுதப் படைகளைத் தயார் படுத்துவதில் பாதுகாப்புத் துறை கவனம் செலுத்தி வருகிறது. 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ்.விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பத்து ஆண்டுகளில், விண்வெளி பாதுகாப்பு தளங்களை உற்பத்தி செய்யத் தொடங்கும்.அரசின் பார்வையில் மற்றொரு முக்கிய அம்சமாக இருப்பது எல்லைப் பகுதி மேம்பாடு. சவாலான சூழ்நிலையிலும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள சிறப்பான ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது.
பெரும்பாலான நாடுகள் இன்று பொருளாதார மந்த நிலையின் சிக்கலை எதிர் கொள்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், அது இன்னும் 6.1 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக தவறாக நினைக்கக் கூடாது.
- தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்.
பதோலி:
நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நத்சிங் கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களின் குடும்பத்தினருக்கு நாடு என்றென்றும் கடன் பட்டுள்ளது. ஒழுக்கம், கடமையில் அர்ப்பணிப்பு, தேசபக்தி மற்றும் தியாகம் மூலம் மக்களுக்கு குறிப்பாக, இளைஞர்களுக்கு பாதுகாப்பு படையினர் எப்போதும் உந்து சக்தியாக திகழ்கின்றனர்.

பின்னணியோ, மத நம்பிக்கையோ அவர்களுக்கு ஒரு பொருட்டு கிடையாது. நம்முடைய மதிப்பிற்குரிய மூவர்ணக் கொடி தொடர்ந்து உயரத்தில் பறக்கவேண்டும் என்பது முக்கியம். நமது ராணுவத்தின் துணிச்சல் உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
உலகில் அமைதி நிலவ வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஒரே நாடு இந்தியா. அமைதியை விரும்பும் இந்தியா, போருக்கு தயங்குவதாக எந்த நாடும் தவறாக நினைக்கக்கூடாது. எந்த ஒரு நாட்டையும், இந்தியா தாக்கவில்லை, ஒரு இஞ்ச் அன்னிய நாட்டு நிலத்தைக்கூட கைப்பற்றவில்லை. இந்தியாவின் நல்லிணக்கத்திற்கு யாராவது ஊறு விளைவித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும்.
வடக்கு எல்லைப்பகுதியில் சீனாவுடன் நமக்கு கருத்து வேறுபாடு உள்ளது. எந்தவொரு பெரிய சக்தியாக இருந்தாலும், அது பொருட்டல்ல என்பதை கல்வான் சம்பவம் மூலம் நமது தைரியமிக்க வீரர்கள் நிரூபித்தனர். நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், புதிய இந்தியாவை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது. அதற்கு தீங்கு விளைவிக்க விரும்புபவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்தியா-எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை.
- தமது பயணத்தின்போது எகிப்து அதிபரையும், சந்தித்து பேசுகிறார்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நாளை மறுநாள் 19ந் தேதி எகிப்து நாட்டிற்கு செல்கிறார். இந்த பயணத்தின் போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் முகமது சாக்கியுடன் இருதரப்பு உறவுகள் பேச்சுவார்த்தை நடத்துவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரு நாட்டு ராணுவங்களுக்கிடையே தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான புதிய முன்முயற்சிகளை கண்டறிதல், இரு நாடுகளின் பாதுகாப்பு தொழில் துறைகளுக்கிடையே ஒத்துழைப்பில் கவனம் செலுத்துதல் ஆகியவை பற்றி இரு மந்திரிகளும் விவாதிக்கி உள்ளனர்.
இந்தியா எகிப்து இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் அப்போது கையெழுத்திடப்படும் என கூறப்பட்டுள்ளது. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசியையும் தமது பயணத்தின்போது ராஜ்நாத் சிங்கின் சந்தித்து பேசுகிறார்.
- இந்தியா முழு திறனை எட்டுவதற்கு போதை பொருள் தடையாக உள்ளது.
- அதிகமானோர் போதையின் பிடியில் உள்ளனர்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் தலைநகர் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காணொலி காட்சி வழியாக தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், சில தடைகள் நமது முழு திறனை தடுக்கின்றன, அதில் போதைக்கு அடிமையாதலும் ஒன்று. அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள போதும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இணைய முடியவில்லை.
அதிகமான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போதையின் பிடியில் உள்ளனர். இளைஞர்களே இந்த தேசத்தின் எதிர்காலம். அவர்கள் போதைக்கு அடிமையாகி விட்டால் அவர்களது எதிர்காலம் வீணாகி விடும். எனவே, நமது சுதந்திரத்திற்காக நாம் மேற்கொண்ட போராட்டத்தை போதை ஒழிப்பிற்காக தற்போது கையிலெடுக்க வேண்டும்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டும். தேசிய மாணவர் படை மாணவர்கள் போதையால் பாதிக்கப்பட்டவர்களிடம் அதன் பாதிப்புகளை எடுத்துக் கூறி அவர்களை மீட்க வேண்டும்.
ராணுவம் எல்லையில் பாதுகாப்பது போல, தேசிய மாணவர் படையினர், போதைக்கு அடிமையாதல் போன்ற கண்ணுக்கு புலப்படாத எதிரியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை.
- ஆறு வருட காலக் கெடுவின் கீழ் கொள்முதல் செய்யப்படும்.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பாதுகாப்புத்துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியத் தொழில்துறை அதிக பங்களிப்பை அளிக்கும் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2028 வரையிலான காலக்கட்டத்தில், இந்த பொருட்களின் இறக்குமதி தடைக்கான குறிப்பிட்ட காலக்கெடுவை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து 3வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் ஆறு வருட காலக் கெடுவின் கீழ் இந்திய தொழில்துறையினரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022-இல் வெளியிடப்பட்ட இரண்டு உள்நாட்டு உற்பத்தி பட்டியல்களின் தொடர்ச்சியாக தற்போது இந்த 3வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியல்களின்படி, 2500 பொருட்கள் ஏற்கனவே உள்ளூர்மயமாக்கப் பட்டுள்ளன.
458 பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உள்ளூர் மயமாக்கப்படும். அவற்றிலும் இதுவரை 167 பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
==
- தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைய இந்தியா உறுதி பூண்டுள்ளது.
- தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தாஷ்கண்ட்:
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில், பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு எதிராக தீவிரவாதம் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. தீவிரவாதத்தை அனைத்து வழிகளிலும் களைந்து பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவச் செய்ய இந்தியா உறுதி பூண்டுள்ளது.
தீவிரவாதிகளின் புகலிடமாக ஆஃப்கன் பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ இந்தியா ஆதரவு அளிக்கிறது.பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தேசிய அளவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அனைத்து வழிகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
ரஷியா உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வுகாண இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா ஆதரவு அளிக்கிறது.அங்கு மனிதநேய உதவி அளிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஐ நா பொதுச் செயலாளர், ஐ நா அமைப்புகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக தாஷ்கண்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலைக்கு ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்தினார். அவரது எளிமை மற்றும் நேர்மைக்காக, மறைவுக்கு பின்னர் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
- நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும்.
ராணுவத்திற்கு நவீன கருவிகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நடவடிக்கைகளை மத்திய பாதுகாப்புத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதையடுத்து காலாட்படை சிப்பாய்க்கான பாதுகாப்பு சாதனம், கண்ணி வெடியை கண்டு பிடிக்கும் புதிய தலைமுறை சாதனம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனம், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் ஆகியவற்றை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார்.
இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகளுக்கு எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.