என் மலர்
நீங்கள் தேடியது "மரியாதை"
- மருதுபாண்டியர் நினைவிடத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. வினர் மரியாதை செலுத்தினர்.
- கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினமான அக்டோபர் 24-ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 27-ந் தேதி (இன்று) காளையார் கோவில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் பொதுமக்களால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜ், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் தமிழ் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி, ஸ்டீபன், கோபி, கருணாகரன், சேவியர், தசரதன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு மருது சகோதரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கிராம மக்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
- நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
விருதுநகர்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டு தோறும் ஜெயந்தி விழா, குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
குருபூஜையின் போது ஆயிரக்கணக்கானோர் பால்குடம், காவடி, அக்னிசட்டி எடுத்து வருதல், மொட்டையடிப்பது வழக்கம். இங்கு கடந்த 2000ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. ஜெயந்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திபாலாஜி கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், விருதுநகர் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், சிவகாசி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி.
சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் கிழக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு பகுதி செயலாளர் சரவணகுமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன்.
ராஜபாளையம் நகர செயலாளர் பரமசிவம், விருதுநகர் நகர செயலாளர் முகமது நெய்னார், விருதுநகர் கிழக்கு ஒன்றியசெயலாளர் தர்மலி ங்கம், விருதுநகர்மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராசா, அருப்புக்கோட்டை நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன்.
அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாள கருபப்சாமிபாண்டியன், திருத்தங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் ரமணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பசும்பொன்னில் தேவர் சிலைக்கு கே.சி. திருமாறன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து 300 வாகனங்களில் பசும்பொன் தேவர் ஆலயத்திற்கு சென்றனர்.
அங்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ராஜேஷ், மாநில இளைஞரணி தலைவர் சபரி, இளைஞரணி பொதுச் செயலாளர் சோலை அறிவழகன், மாநில பொருளாளர் நாட்டார் முத்தையா.
மாநில அமைப்பு செயலாளர் தங்கம், மாநில ஐ.டி.விங் தலைவர் விஜயராஜன்,மாநில தொண்டரணி தலைவர் ஸ்ரீராம், மாநில வர்த்தக அணி செயலாளர் ஆழ்வார்புரம் ஆனந்த், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பிரதீப். மாநில செயலாளர் மாரிமறவன், தேனி மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தெய்வம், கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டியராஜன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் செல்லப்பாண்டி, திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் விஜி.
மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் ஊமச்சிகுளம் சுரேஷ், மதுரை இளைஞரணி தலைவர் ராஜாமாறன், வடக்கு மாவட்ட தலைவர் கரிகாலன், மக்கள் தொடர்பு அதிகாரி முத்துசரவணன்,மற்றும் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் மனோதங்கராஜ் பங்கேற்பு
- குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள் இன்று.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான இன்று வேப்பமூட்டில் உள்ளமார்ஷல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், பிரின்ஸ் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, செயற்குழு உறுப்பினர் சதாசிவம், நேசமணியின் பேரன் ரஞ்சித்அப்பலோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் பரிசு வழங்கினார்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட அவைத் தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள், ஒன்றிய செயலாளர் ஜெசீம், மாநகராட்சி கவுன்சிலர் அக்ஷயா கண்ணன், நிர்வாகிகள் சுகுமாரன், சந்துரு, ஜெயகோபால், முருகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம், பிரின்ஸ் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
- இதற்கான ஏற்பாடுகளை அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி மாவட்ட செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமையில் அந்த கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம், முத்துக்குமார், பாலா, என்.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கிரிவலப் பாதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
- ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சையில் அ.தி.மு.க. ( ஓ.பி.எஸ் . அணி ) சார்பில் கரந்தை பகுதி செயலாளர் அறிவுடை நம்பி தலைமையில் தஞ்சை ஆற்றுப்பாலத்தில் இருந்து நிர்வாகிகள் ஊர்வலமாக ரயில் நிலையம் முன்பு வந்தனர்.
பின்னர் அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பகுதி செயலாளர்கள் ரமேஷ், சாமிநாதன், சண்முக பிரபு, ஒன்றிய செயலாளர்கள் துரை வீரணன், சாமிவேல் , பாவா என்ற ராமச்சந்திரன், திருச்சி மண்டலதகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் நாஞ்சி சத்யராஜ், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தவமணி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் வீரராஜ், கரந்தை பகுதி துணை செயலாளர் சி.ஏ.தாஸ், குளிச்சப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி கலியமூர்த்தி, தஞ்சை சட்டமன்றத் தொகுதி இணை அமைப்பாளர் முரளி முருகன், கவுன்சிலர்கள் மணிகண்டன், சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று தஞ்சையில் அ.தி.மு.க. (இ.பி.எஸ். அணி) சார்பில் தஞ்சை சாந்தி கமலா தியேட்டர் அருகில் இருந்து மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
பின்னர் தஞ்சை ரயில் நிலையம் முன்பு உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மரியாதை செய்தனர்.
இதில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், அச்சகத் தலைவர் புண்ணியமூர்த்தி, நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் மேயர் சாவித்ரி கோபால், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிஷேகன், சிறுபான்மை பிரிவு தலைவர் ஜாபர், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோம ரத்தினசுந்தரம், மாணவரணி முருகேசன், அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலை ரவி , கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, 51-வது வட்ட செயலாளர் மனோகரன், கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இன்று நினைவு தினம்
- நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில்:
அம்பேத்கார் நினைவு நாளையொட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு உள்ள அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தினகரன் மாலை அணிவித்தார்.
தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை கழக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொருளாளர் கேட்சன், துணை செயலாளர் பூதலிங்கம், ஆதி திராவிட அணி அமைப்பாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், செல்வன், பிராங்கிளின், மாநகர செயலாளர் ஆனந்த், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணை தலைவர் இ.என்.சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அ.தி.மு.க. சார்பில் அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மாலை அணிவித்தார். தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம்,பொன்சுந்தர்நாத், அணி செயலாளர்கள் ஜெயசீலன், சுகுமாரன், மாநகர கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக் ஷயா கண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாதவன் மற்றும் சந்திரன், சந்துரு,சகாயராஜ், வெங்கடேஸ்,ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம். ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்தனர். மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் மனோகரன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அஜித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் செல்வகுமார், அலெக்ஸ்,எஸ்.சி., எஸ்.டி.பிரிவு தலைவர் மணிகண்டன், ராஜபாண்டியன், டைசன், செல்வன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- தஞ்சை மேலவீதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுபின்னர் முன்னாள்மேயர் சாவித்ரி கோபால், கவுன்சிலர் கோபால் ஆகியோர் ஏற்பாட்டின்படி பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் மன்ற இணை செய லாளர் ராஜமாணிக்கம், கூட்டுறவு அச்சகத் தலைவர் புண்ணி யமூர்த்தி, பகுதி செயலா ளர் சாமிநாதன், மாண வரணி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
- கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
சிவகங்கை
சட்டமேதை அம்பேத்கரின் 68-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சிவகங்கையில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்தன், கவுன்சிலர்கள் அயூப்கான், ராமதாஸ், விஜயகுமார், கார்த்திகேயன், மதியழகன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் அருள்ஸ்டீபன், கோபி, அவைத்தலைவர் பாண்டி, கவுன்சிலர்கள் கிருஷ்ணாகுமார், ராபர்ட், நிர்வாகிகள் மோகன், கே.பி.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா, கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், தங்கசாமி, மாவட்ட கவுன்சிலர் சாந்தாராணி, கணேசன் ஆரோக்கியசாமி, ரமேஷ் உட்பட்ட பலர்மாலை அணிவித்தனர்.
கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நிர்வாகிகள் மருது, சகாயம், பாண்டி உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, நகரபொது செயலாளர் பாலமுருகன், சதிஷ், பொருளாளர் கவுதம் உட்பட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதேபோன்று விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை செய்தனர்.
- பேரூராட்சி சேர்மன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- பெரியார்-எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு அ.தி.ம.மு.க. சார்பில் மரியாதை வருகிற 24-ந்தேதி நினைவு தினம் செலுத்தப்படுகிறது.
- அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
பகுத்தறிவு பகலவன், ஈரோட்டு வேங்கை மூட நம்பிக்கை எனும் முடைநாற்றத்தை அடியோடு ஒழித்த தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினமும், ஏழைகளின் ஒளி விளக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவு தினமும் வருகிற 24-ந்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த இருபெரும் தலைவர்களுக்கு வீர வணக்கமும், புகழ் அஞ்சலியும் அ.தி.ம.மு.க. சார்பில் கடைப்பிடிக்கப்படும், அவைத்தலைவர் தாஜுதீன் தலைமையில், துணைப்பொது ச்செயலாளர்கள் நெல்லை முத்துக்குமார், ஈரோடு செந்தில் குமார் ஆகியோர்கள் முன்னிலையில் கழகப் பொதுச்செயலாளாராகிய நானும், கழக தலைமை நிலையச் செயலாளர் முரளி ஆகியோர் சென்னையில் உள்ள பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நினைவு அஞ்சலி செலுத்துவார்கள். பின்பு கொளத்தூரில் முதன்மைச் செயலாளர் அகரம் சீனிவாசன் ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி நடத்தப்படும்,
பின்னர் பொருளாளர் பி.கே.மாரி ஏற்பாடு செய்துள்ள அன்னதான நிகழ்ச்சி சென்னை பூக்கடை பஜாரில் பகல் 12மணிக்கு நடத்தப்படும், அதன் பின்பு சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.ம.மு.க. சார்பில் புகழ் அஞ்சலி செலுத்தப்படும்,
இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன், அதைப் போல தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் பெரியார், எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவு தினத்தை கடைபிடித்திட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.