என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம்"

    • இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 முதல் மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.
    • நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும்.

    பழனி:

    இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்வு தெரியாது என்பதால் நாளை பழனி முருகன் கோவிலில் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    வானியல் நிகழ்வுகளில் கிரகணங்கள், கிரகண காலங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த வகையில் நாளை (29-ந் தேதி) இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது.

    இந்த நிகழ்வு இந்தியாவில் தெரியாது என்பதால் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே நாளை வழக்கம் போல் 6 கால பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும்போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வழக்கமாக சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின் போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழனி முருகன் கோவிலில் அனைத்து சன்னதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

    கிரகணம் முடிந்து பரிகார பூஜைகளுக்கு பின்னே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நாளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உப கோவில்களான திருஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகி அம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பூக்குழி திருவிழா நாளை நடக்கிறது.
    • நாளை மறுநாள் தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரின் மையப்பகுதியில் ஆண்டாள் கோவிலுக்கு வடக்கு புறத்தில் இருக்கிறது.

    இந்த கோவிலில் மூலவராக பெரிய மாரியம்மன், வடக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலுக்கு விருது நகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர்.


    இந்த கோவிலில் கருப்பசாமி, வீரபத்திரர், துர்க்கை, பைரவர், சப்தகன்னியர், வராகி அம்மன் ஆகியோர் தனி சன்னிதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    குழந்தை வரம் கேட்டு இந்தக் கோவிலுக்கு எண்ணற்ற பேர் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்களது கணவருடன் சேர்ந்து இந்தக் கோவிலில் உள்ள மரத்தில் தொட்டில் கட்டி அம்மனை வழிபடுகின்றனர்.

    கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், தங்களின் குறை நீங்க வேண்டும் என்பதற்காக அம்மனை வேண்டி கண்மலர் வாங்கி போட்டு தரிசனம் செய்கின்றனர். அதேபோல திருமணத்தடை, தோல் வியாதி உள்ளவர்களும் இங்குள்ள அம்மனை மனமுருக வேண்டிச் செல்கின்றனர்.

    இவர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மறு வருடம், கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழாவில் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனால் ஆண்டுதோறும் தீமிதி திருவிழாவில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

    இந்தக் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வ வழிபாடு, பவுர்ணமி சிறப்பு பூஜை, பஞ்சமி திதி அன்று வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், நவராத்திரி உற்சவம் என ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.

    இருப்பினும் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பூக்குழி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டத்துடன் விழா நிறைவடைகிறது.

    இந்த கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது.

    • கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி முதல் தொடங்குகிறது.
    • 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.

    அன்று காலை 5 மணிக்கு ராஜ அனுக்ஜை, (பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபடுதல்), விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், பாத்ர பூஜை, தன பூஜை, விப்ரனுக்ஞை, கிராம தேவதானுக்ஞை, ஸ்ரீமகா கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.


    காலை 8.30 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலையில் தீர்த்தம் எடுத்து வருதல், ஹோமம் ஆகியவை நடக்கிறது.

    4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், யாகசாலை ஸ்தண்டிலம் அமைத்தல், காலை 10.15 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 7-ந் தேதி வரை 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது.

    7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் உலகம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


    கும்பாபிஷேக நாட்களில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடக்கிறது. கும்பாபிஷகேத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவாகம பாடசாலை முதல்வர் செல்வம்பட்டர், ஆலய தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர்.

    கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மேற்பார்வையில் உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி, ஆய்வாளர் சரவணக்குமார், அறங்காவலர்கள் முருகேசன், புவிதா, சஷீலா குமார், மூக்கன் மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா.
    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-14 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி இரவு 7.24 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 9.44 மணி வரை பிறகு உத்திராட்டாதி

    யோகம்: நாளை முழுவதும் சித்தயோகம்

    ராகுகாலம்: பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை

    உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் விடையாற்று விழா. மன்னார்குடி ராஜகோபால சுவாமி, பரமபதநாதர் திருக்கோலம். திருவாரூர் தியாகராஜர் பவனி. திருப்புவனம் கோதண்டராம சுவாமி விழா தொடக்கம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-தாமதம்

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-வரவு

    துலாம்- பொறுமை

    விருச்சிகம்- மகிழ்ச்சி

    தனுசு- பாசம்

    மகரம்-விருப்பம்

    கும்பம்-நன்மை

    மீனம்-ஜெயம்

    • பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது.
    • ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த விரத காலம் உள்ளது.

    திருச்சி:

    சக்தி தலங்களில் முதன்மையான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இங்கு வருடந்தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

    உலக மக்களின் நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தோய்கள், தீவினைகள் அணுகாது இருக்கவும், சவுபாக்கி யங்கள் கிடைக்கவும் இந்த பச்சைப்பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான அம்மனின் பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. வருகிற ஏப்ரல் 6-ந்தேதி வரை இந்த விரத காலம் உள்ளது.

    சமயபுரத்தில் வழக்கமாக அம்பாளுக்கு தினந்தோறும் 6 கால பூஜையில், 6 விதமான தளிகையும் நை வேத்தியமாக வைக்கப்படும். சமைத்த உணவுப் பொருட்களையே 'தளிகை' என்று என்று சொல்வார்கள்.

    ஆனால் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்மனுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படுவதில்லை. இளநீர், பானகம், உப்பில் லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்பட்டு வருகிறது.

    அம்மன் பட்டினி விரதம் இருக்கும் காலங்களில் அம்மனின் முகம் சோர்வு டன் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த காலத்தில் அம்மனை குளிர்விப்பதற்காக கூடை கூடையாக மலர்களை கொண்டு வந்து பூச்சொரி தல் விழா நடத்துகின்றனர்.

    அம்மன் விரதம் இருக்கும் காலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பூச்சொரிதல் விழா நடக்கிறது. அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4-வது வார பூச்சொரிதல் விழா வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் குழு, குழுவாகப் பிரித்து பூக்களை கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் விதத்தி லும், அவர்களின் பாது காப்பு கருதியும், சன்னதி வீதியின் நுழைவு வாயிலில் இருந்து ராஜகோபுரம் வரை 10 இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.

    • சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர்.
    • நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.

    திருநள்ளாறு

    புதுச்சேரி அருகே உள்ள காரைக்கால் யூனியன் பிரதேசத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அமைந்துள்ளது. புராதான சிறப்பு கொண்ட இந்த கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாகும்.


    பக்தர்கள் முதலில் நள தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு அதன் பிறகே சனீஸ்வர பகவானை தரிசனம் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால் தான் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

    நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ, அல்லது கிழக்கு முகமாகவோ 9 முறை ஸ்நானம் செய்து தலை குளிக்க வேண்டும். அதன்பின்பு பிரம்மதீர்த்தம், சரஸ்வதி குளத்திலும் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.

    தொடர்ந்து கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து சொர்ண கணபதியை முதலில் வழிபட்டு சுப்பிரமணியர் சன்னதியை தரிசனம் செய்து கொண்டு கர்ப்ப கிரகத்தில் தர்ப்பாரண்யேஸ்வரர் எனும் திரு நாமம் கொண்டு எழுந் தருளியள்ள சிவ பெருமானை வழிபட வேண்டும்.


    அவரை தரிசித்து வலம் வரும் போது கட்டை கோபுரச்சுவரில் சிறிய மாடத்தினுள் எழுந்தருளியுள்ள சனிபகவானை தரிசிக்கலாம். இவரை வழிபடத்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள்.

    இத்தலம் பேரளம் காரைக்கால் ரெயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. அரிசொல் நதிக்கும். வாஞ்சை நதிக்கும் இடையில் இத்தலம் அமைந்திருப்பது சிறப்பு. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாக போற்றப் படுகின்றது.

    இத்தலத்திற்கு ஆதிபுரி, தர்பிபராண்யம் நகவிடங்கபுரம், நாளேச்சுவரம் என்ற வேறு பெயர்களும் உண்டு. நளனுக்கு நல்வழியை கொடுத்ததால் நல்+ஆறு திருநள்ளாராயிற்று.

    இறைவன் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர். இத்தலத்தில் சனீஸ்வர பகவானுக்கென தனி ஆலயம் உள்ளது. இது வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் உகந்த தலமாகும்.

    இறைவி ஸ்ரீபிராணாம்பிகை, போகமார்த்த பூண் முலையாள். தல விருட்சம் தர்ப்பை. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நளதீர்த்தம்.

    சனி பகவான் ஆயுள் காரகனாக விளங்குபவர். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பது பழமொழி. அதனால் அனைவரும் இவரை பயபக்தியுடன் வணங்குவர்.

    இத்தலத்தில் அனுக்கிரக மூர்த்தியாக விளங்கும் இவருக்கு தனியே அஷ்டோத்ரம், சஹஸ்ர நாம அர்ச்சனைகள் உண்டு. திருமால், பிரம்மன், இந்திரன், தசை பாலர்கள், அகத்தியர், புலங்தியர், அர்ச்சுனன், நளன் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகும்.

    இச்சன்னதியின் முன்புறம் மகர, கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் போடும் பிரார்த்தனை இங்கு விஷேசம். நளதீர்த்தம் கோவிலுக்கு சற்று தள்ளியுள்ள இத்தீர்த்ததில் எண்ணெய் தேய்த்து நீராடுவது நல்லது. இதில் நவ கிரகங்களுக்கும் தனித் தனி கிணறுகள் உள்ளன.

    கோவில் முகவரி:

    அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருநள்ளார் (அஞ்சல்), காரைக்கால், புதுவை மாநிலம்.


    குச்சனூர்

    திருநள்ளார் சனீஸ்வர பகவானுக்கு சாப விமோசனம் அளித்தவர் குச்சனூர் சனிபகவான். இந்தியாவிலேயே சனீஸ்வரருக்கு என்று கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்டு விளங்கிவரும் தலம்.

    சனிபகவான் சுயம்புவாக உள்ளது கூடுதல் விசேஷம். அட்டமத்துச் சனி, கண்டசனி, அர்த்தாஷ்டம சனி பிடித்தவர்கள் குச்சனூர் சென்று சுயம்பு சனி பகவானை வழிபட்டு சுகம் பெறலாம். மேலும் மூர்த்தியான குச்சனூர் சனிபகவானை வழிபட்டால் தீராத வயிற்று வலி தீரும்.

    திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். மந்தமான வியாபாரம் லாபத்தில் இயங்கும். நிலங்களில் அமோக விளைச்சல் இருக்கும். தேனியிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் குச்சனூர் உள்ளது.


    திருகொல்லிக்காடு

    மங்கு சனியால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு 30 வயதிலிருந்து 60 வயதிற்குள் பொங்குச்சனி கண்டிப்பாக வரும். அப்படிப்பட்டவர்கள் சனிபகவானை மனதார வணங்கி வரக்கூடிய தலம்தான் பொங்கு சனி தலம்.

    திருக்கொள்ளிக்காடு சென்று வணங்கி வாருங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். செல்லும் வழி திருவாரூர். விக்கிரவாண்டியத்தில் இருந்து 2½ கிலோமீட்டர் தொலைவில் கோவில் உள்ளது.

    • சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள்.
    • சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட மக்களிடம் பிரபலமானவர்.

    சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள். இப்படி சனியை பலகோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.

    குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73 ஆயிரம் மைல். குமரிமாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையர் கோவிலில் கல்சிலையாக தூணில் பெண்உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்தில் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார்.


    மனித உடலில் தொடைகளுக்கு உடையவர், குடல் வாதநோய் இவரால் ஏற்படும்,

    மேலும் ஹிரண்யா, முதுகு வலி, விரைவீக்கம், முடக்கு வாதம் யானைக்கால், பேய்தொல்லை, மூலநோய்.

    மனதளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பிடித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்.

    சனி ஜாதகத்தில் 3,6,10,11-ல் இருந்தால் நிலபுலம் வாங்குதல், வீட்டு வசதி, விவசாயத்தில் ஈடுபாடு, உத்யோகம், வருவாய் பெரியோர் ஆதரவு தலைமை தாங்கும் பொறுப்பு இவையாவும் சுலபத்தில் வந்து விடும்.

    8-ம் இடத்து சனி, தொல்லைகள் அளித்தாலும் ஆயுளை அதிகரிக்கச்செய்வார். ரேகை சாஸ்திரத்தில் நடுவிரலுக்கு நேர் கீழ்பாகம் உள்ள சனி மேட்டில் அதிக ரேகைகள் செங்குத்தாக காணப்பட்டால் ஒன்றல்ல பல வீடுகள் சுலபமாக அவர்களை நாடிவரும்.

    12-ல் சனி இருக்க பிறந்தோர் வாழ்க்கைத் துணைக்கு வேட்டு வைக்கும் சுபாவம் நிலைக்கும்.

    ஊதாரித்தனம் வந்த வருமானம் நாலாவிதமாக தீய வழியில் செல விடுதல் போன்றவை நிகழும்.


    பெருவிரலை அடுத்த சுக்கிரமேட்டில் பலவித குறுக்கு கோடுகள் அடியில் காணப்பட்டால் சனிபாடாய்படுத்தப் போவதற்கான அறிகுறி என உறுதியாக நம்பலாம்.

    4-ல் சனி அன்னைக்கு அற்ப ஆயுள், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, வேண்டாத வம்பில் நம்மை இணைப்பது நிகழும்.

    சனிபகவான் ஜாதகத்தில் சீராக அமைந்திந்தால் இரும்பு, மெஷினரி, இரும்பு தொழிற்சாலை, தோல், சிமென்ட் ஏஜென்ட்., தயாரிப்பு, கரும்பலகை, ரோஸ்உட், நல்லெண்ணை மொத்த வியாபாரம் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டால் வெற்றிதரும்.

    சனியன்று சந்திராஷ்டம தினமாக மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு அமையப்பெற்றால் அன்று கண் பார்வைக்காக அறுவை சிகிச்சை செய்தல் கூடாது.

    • நாகங்களுக்கு பால் - பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும்.
    • கோவில் இருக்கிற இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது, பேய்குளம் கிராமம். இது முற்காலத்தில் பெரும் காடாக இருந்தது. இந்த வழியாக வரும் வழிப்போக்கர்கள் இவ்விடத்தில் தங்கவே அஞ்சி நடுங்கினர்.

    தற்போது பேய்குளம் பஜார் இருக்கும் இடம், இருண்ட காடாகவும், நுழைய முடியாத அளவுக்கு நெருக்கமான அதிக மரங்கள் கொண்ட இடங்களாகவும் இருந்தது. இதனால் மதிய வேளையில் கூட இவ்விடம் இருண்டு, பேய் குடிகொண்டிருக்கும் இடமாக தோன்றிய காரணத்தினால் 'பேய்குளம்' என பெயர் பெற்றது.

    இந்த பகுதியில் பஞ்ச தலங்களில் ஒரு தலமான கட்டாரி மங்கலம் நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலைக் கட்டிய வீரபாண்டியன் என்ற மன்னன், ஆலயத்தை கட்டி முடித்ததும் கொடிமரம் நடுவதற்காக யாகம் ஒன்றை செய்தான்.

    அப்போது வேதவிற்பன்னர்கள், ஐந்து தேவதைகளை அழைத்து கொடிமரத்தில் அமர வைத்தனர். ஊர்மக்கள் கூடி கொடிமரத்தை கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது எங்கள் ஊருக்கு காவல் தெய்வமாக இந்த தேவதைகளும் இடம்பெற வேண்டும் என்று பக்கத்து ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு அவர்கள் அந்த தேவதைகளை அழைத்துப் போய் தங்கள் ஊர்களில் காவல் தெய்வமாக குடிவைத்துக்கொண்டார்களாம்.

    கட்டாரிமங்கலம், அம்பலச்சேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்குளம் ஆகிய ஐந்து கிராமங்களில் தான் அந்த தேவதைகள் குடிபுகுந்தன. அதன்பிறகு வேதவிற்பன்னர் அந்த தேவதைகளை கொடிமரத்துக்கு வர எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால் அந்த தேவதைகள் கொடிமரத்திற்கு வர மறுத்தனர்.

    தங்களை விரும்பி அழைத்த மக்களின் ஊருக்குச் சென்று, அந்த ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக அமர்ந்து கொண்டனர். எனவே தேவதை இல்லாத கொடிமரத்தை கோவிலில் நாட்டவில்லை. ஆகவே கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில் கொடிமரம் இன்றியே காணப்படுகிறது.

    பேய்குளம் தேவதை குடிகொண்ட இடமாக மாறிய காரணத்தினால் இவ்வூர் காடு அழிந்து நகரமாக மாறிவிட்டது. தமிழ் கடவுள் முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சென்று வழிபடும் பக்தர்கள், அக்காலங்களில் பாத யாத்திரையாக செல்வார்கள்.

    எனவே அவர்கள் தங்குவதற்காக வழி நெடுகிலும் அன்னதான சத்திரங்கள் அமைத்தனர். பொதிகைமலை அடிவாரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாத யாத்திரீகர்கள் தங்குவதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்த்தாண்டன் என்ற ஒரு சிவ பக்தர் இந்த பகுதியில் ஒரு மடம் அமைத்தார். அந்த மடத்தில் சில பசுக்களையும் பராமரித்து வந்தனர். அதனால் இந்த மடம் 'பசு மடம்' என்று அழைக்கப்பட்டது.


    பின்னாளில் இங்கு வந்து தங்கிய சிவனடியார்களில் ஒருவர் இங்கு சிவபூஜை செய்து வந்தார். ஆண்டு தோறும் ஆடி தபசு காட்சியை காண சங்கரன்கோவில் சென்று வருவார். வயதான காரணத்தினால் அவரால் சங்கரன்கோவில் செல்ல இயலவில்லை. அதனால் மிகுந்த வருத்தத்தில் சங்கரலிங்க சுவாமியையும், கோமதி அம்மாளையும் நினைத்து சிவசிந்தனையில் அமர்ந்து தியானம் செய்தார்.

    அதன் பலனாக சங்கரன்கோவிலில் நடந்த தவசுக் காட்சியானது இவ்வூரில் இருந்த அவருக்கு தெரிந்தது. இதனால் ஆனந்தம் அடைந்தார். 'தென்னகத்தில் இறைவன் தபசு காட்சி தந்த இந்த இடம் அல்லவா சின்ன சங்கரன்கோவில்' என்று எண்ணினார்.

    இறைவனிடம் 'தனக்கு காட்சி தந்தது போலவே, இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காட்சி தரவேண்டும்' என்று கோரினார். இறைவனும் 'அவ்வாறே ஆகட்டும்' எனக் கூறி மறைந்தார்.

    இதையடுத்து அந்த சிவனடியார், இங்கு சுவாமி மற்றும் அம்பாளை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தோறும் இங்கும் ஆடி தபசு காட்சி மிகச்சிறப்பாக நடைபெற வழி ஏற்படுத்தினார்.

    சங்கரன்கோவில் சென்று காட்சி காண முடியாத பக்தர்கள், இங்கேயே ஆடிதபசு காட்சியை கண்டு மகிழ்ந்தனர். அதன்பின் இந்த ஆலயத்தை வழிபட்ட சில பக்தர்கள், காசி விஸ்வநாதரைப் போன்று சிறிய லிங்கத்தையும் சிவ ஆகம விதிப்படி இங்கே பிரதிஷ்டை செய்தனர்.

    ஆலயத்தையும் சிறப்பான முறையில் அமைத்து, கருவறையில் கிழக்கு நோக்கி சங்கரலிங்க சுவாமியையும், அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி கோமதி அம்பாளையும் அமைத்தனர்.


    இந்த மண்டபத்தில் நடராஜப் பெருமாள், சிவகாமி அம்மாள், ஐம்பொன்னால் ஆன மாணிக்கவாசகர், அதிகார நந்தி உள்ளது.

    முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், துர்க்கை அம்மன் மற்றும் பைரவர் போன்ற பரிகார தேவதைகளும் உள்ளனர்.

    ஆலய பிரகாரத்தில் வேம்பு உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனடியில் புற்று மற்றும் சாஸ்தா சன்னிதி இருக்கிறது. இவ்விடத்தில் நாகங்களுக்கு பால் - பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும். இத்திருக்கோவிலில் தல விருட்சம், வில்வ மரம் ஆகும்.


    இந்த கோவில் இருக்கிற இடம் சங்கரநயினார்புரம் என அழைக்கப்படுகிறது. கூட்டம் பெருக பெருக ஒவ்வொரு வருடமும் ஆடித்தபசு 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டகப்படியும், அருகில் உள்ள ஊர்களுக்கு வழங்கப்படும்.

    குருகல்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், தேர்க்கன்குளம், வீராக்குளம், ஸ்ரீவெங்கடேசபுரம், பழனியப்பபுரம், கோமநேரி, சங்கரநயினார்புரம், மீரான்குளம் ஊர் பொதுமக்கள் இந்த மண்டகப்படியை நடத்தி வருகிறார்கள்.

    பேய்குளம் ஊரின் மேல் புறம் உள்ள பிள்ளையார் கோவிலில் அம்மன் தபசு இருப்பார். இதையொட்டி அம்மன் காலை 10.15-க்கு தபசுக்கு புறப்படுவார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சீர்வரிசையுடன் அம்பாளை அழைக்க புறப்படுவார்.

    அம்பாளை அழைத்துக் கொண்டு வரும் சுவாமிக்கு, பேய்குளம் பஜாரில் மக்கள் வரவேற்பளிப்பர். அப்போது அப்பகுதியில் விளையும் கடலை, உளுந்து, பருத்தி போன்ற விளை பொருட்களை சந்தோஷமாக வீசி மகிழ்வார்கள்.

    இதனால் அடுத்த ஆண்டு விளைச்சல் மிக அதிகமாகும் என விவசாயிகளுக்கு நம்பிக்கை. இரவு 8.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பெண்கள் மாவிளக்கேற்றி சிறப்பாக வழிபாடு செய்கிறார்கள்.

    இத்திருக்கோவிலில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு வைத்து திருமணம் புரியும் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.

    முதலில் மடமாக இருந்த கோவிலில் பின் கருவறை மட்டும் கட்டப்பட்டது. அதன் பிறகு கும்பாபிசேகத்தின் போது இரண்டாவது பிரகாரத்தில் புதிதாக மகா மண்டபமும், அதில் கொடிமரம், நந்தி, பலிபீடம், நவக்கிரகம் மற்றும் ஆஞ்சநேயர் சன்னிதி, பைரவர் சன்னிதி, சாஸ்தா, பூதத்தார் திருக்கோவில் கல்யாண மண்டபம் போன்றவையும் உள்ளன.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    நாங்குநேரியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பேய்குளம் உள்ளது. திருநெல்வேலி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் இருந்து பஸ் வசதி உண்டு.

    • புதன் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள பதவி உயர்வு கிடைக்கும்.
    • பிள்ளைவரம் கிடைக்க சனிக்கிழமை பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்.

    சிவாலயங்களில் இரவு நடை சாத்தும் முன்பாக, சுவாமி மற்றும் அம்பாளை பள்ளியறை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடி பூஜிப்பார்கள். இதனை பள்ளியறை பூஜை' என்பார்கள். தமிழ்நாட்டின்

    44 ஆயிரம் பழமையான சிவாலயங்களில், 36 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலயங்களில் சுமார் 200

    ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளியறை பூஜை நடைபெற்று வந்துள்ளது. இப்போது மிகக்குறைவான சிவன் கோவில்களில்தான் இந்த பள்ளியறை பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியறை பூஜையின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.


    பிரிந்த வாழ்க்கைத் துணை சேரவும், காணாமல் போன துணைவர்கள் திரும்பி வரவும் அசுபதி நட்சத்திரம் சேர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

    திங்கட்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்போர் மகத்தான திட்டங்களை செயல்படுத்துவர். ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் ஒரு வருட காலம் செவ்வாய் தோறும் இந்த பூஜையில் பங்கேற்றால் விரைவில் திருமணம் கைகூடி வரும்.

    புதன் கிழமை பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள பதவி உயர்வு கிடைக்கும். அனைத்து விதமான சித்திகளும் கிடைக்க, அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும்.

    கணவருடைய நீண்ட கால நோய் தீர விரும்பும் மனைவிகள், வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்கலாம். பிள்ளைவரம் கிடைக்க சனிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்.

    பள்ளியறை பூஜைக்கு பால், நைவேத்தியங்கள் கொடுப்பவர்களுக்கு, ஒழுக்கமும் பக்தியும் நிறைந்த குழந்தை பிறக்கும். பள்ளியறை பூஜையில் கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்று முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்து வந்தால், அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழும்.

    குழந்தையும் இறை சிந்தனையுடன் பிறக்கும். பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்களுக்கு, தொழில் அமோக வளர்ச்சி காணும்.

    பள்ளியறை பூஜைக்கு எண்ணெய், நெய் தொடர்ந்து தருபவர்களுக்கு முதுமைக் காலத்தில் கண் சார்ந்த வியாதிகள் வராது. வெகு காலமாக திருமணம் நடக்காமல் இருக்கும் இளைஞர்களும், இளம்பெண்களும் சுமார் ஒரு வருட காலம் இந்த பள்ளியறை பூஜையில் பங்கேற்று இறைவனை வழிபட்டால், இனிமையான மண வாழ்க்கை அமையும்.

    வேலை அல்லது தொழிலில் இருக்கும் மந்தநிலை அகல, ஒரு வருட காலம் பள்ளியறை பூஜையில் பங்கேற்பது நல்லது.

    பள்ளியறை பூஜை நடைபெறாத ஆலயங்களில் பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் தொடங்க முயற்சி மேற்கொள்வதும் கோடி புண்ணியத்தைத் தரும்.


    தன் கருவறையில் பல்லக்கில் புறப்படும் சிவபெருமானை, பக்தர்கள் பலரும் சுமந்து செல்வார்கள். அப்போது சிவபுராணம், பதிகங்கள் பாடுவர். பள்ளியறை முன்பாக வரும் சிவனை, அம்பாள் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து அழைத்துச் செய்வார்.

    பின்னர் சுவாமி- அம்பாளுக்கு பால், பழங்கள் நைவேத்தியமாக வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தி, பாசுரங்கள் பாடி திருக்கதவுகள் மூடப்படும். இந்த பள்ளியறை பூஜையானது சுமார் அரை மணி நேரம் வரை நடைபெறும்.

    இந்த பூஜையை காண்போருக்கு புண்ணியமும், வளமான வாழ்வும் அமையும். பூஜைக்கு ஈசனைச் சுமந்து வருவோர் மறுபிறவியில் கல்விக்கும், செல்வத்திற்கும் அதிபதியாவார்கள் என்பது ஐதீகம்.

    • இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-13 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி இரவு 9.23 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: சதயம் இரவு 11.01 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் விடையாற்று. திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி. தண்டியடிகள் நாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சுவாமி அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபக வான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-பயணம்

    கடகம்-செலவு

    சிம்மம்-வரவு

    கன்னி-சுபம்

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-ஈகை

    தனுசு- மாற்றம்

    மகரம்-சாந்தம்

    கும்பம்-அன்பு

    மீனம்-ஆசை

    • சனிப் பிரதோஷம் மிக மிக விசேஷமானது.
    • எள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

    பிரதோஷம் என்றால் என்ன? பிரதோஷ காலம் என்பது - வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு காலங்களிலும், "திரயோதசி திதி" வருகிறது அல்லவா! இவை சனிக் கிழமைகளில் வருமாயின் சனி பிரதோஷம் என்பர். இது, கிருஷ்ணபட்ச திரியோதசி எனின் மகாப் பிரதோஷம் என வழங்கப்படும்.


    பிரதோஷ கலம் பரமேஸ்வரனை வழிபட உகந்த காலம் ஆகும். "திருப்பாற்கடலில் பொங்கி வந்த ஆலகால விஷத்தை அமரர்களுக்கும் அடியார்களுக்கும் எவ்வித தோஷமும் ஏற்படா வண்ணம் வேண்டி, சிவபெருமான் பருகிய வேளை தான் பிரதோஷ வேளை" ஆகும். அவ்வாறு பாம்பணிந்த பரமன் நஞ்சுண்ட நாள் சனிக்கிழமை தான். எனவே சனிப் பிரதோஷம் மிக மிக விசேஷமானது ஆகும்.

    இது போல திங்கட்கிழமை வரும் திரயோதசியை "சோம பிரதோஷம்" என்றும், "செவ்வாய் பிரதோஷம்" என்றும், வியாழக்கிழமைகளில் வரும் திரயோதசியை "குரு பிரதோஷம்" என்றும் கூறுவது மரபு.

    திரயோதசி தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி நித்ய பூஜையில் பக்தியோடு ஈடுபட்டு உபவாச மிருந்து சனி பகவானை ஆத்ம சுத்தியுடன் ஆராதித்து எள் முடிச்சுடன் நல்லெண்ணைய் விளக்கேற்றி எள் கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

    மாலையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் பிரதோஷ கால பூஜையில் கலந்து கொண்டு சிவபெரு மானை உளமாற ஆராதிக்க வேண்டும். அன்றைய தினம் மௌன விரதமிருத்தல் மிக விசேஷமானது ஆகும்.

    பிரதோஷ விரதமிருந்து சனீஸ்வர பகவானையும் சர்வேஸ்வரனையும் வழிபட்டால் நமது ஈடுஇணையற்ற பக்திக்கு திருவுள்ளம் கசிந்து சிவபெருமான் சனீஸ்வர பகவான், நந்திதேவர், முருகன், விநாயகர் போன்றோர் சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வும் தகமை சால் சிவஞான பக்தியும், புத்தியும் அளித்து சர்வ மங்களமுடன் வாழ அருள்பாலிப்பர்.

    • ஒன்பது கிரகங்களில் அனைவரும் பயப்படக்கூடிய கிரகம் சனி.
    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.

    ஒன்பது கிரகங்களில் அனைவரும் பயப்படக்கூடிய கிரகம் சனி. ஜாதகரீதியாக இருந்தாலும் சரி, தசாபுக்தி கிரக பெயர்ச்சிகள் இப்படி எதனால் சனிதோஷம் ஏற்பட்டிருந்தாலும் சரி, பாதிப்புகள் நிச்சயம் கடுமையாகத்தான் இருக்கும்.

    கெடுக்கும் சனியே கொடுக்கவும் செய்வார் என்றாலும் ஏனோ இவர் பெயரைச் சொல்வதில் பலருக்கும் தயக்கம் உண்டு ஏன்றாலும் இவர்தான் ஆயுள்காரன். உங்களுக்கு சனி தோஷ பாதிப்பு இருந்தால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

    முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், பணியிடத்தில் அதீத அலைச்சல், பணிச்சுமை அதிகரிப்பு, அரசு வழியில் எதிர்ப்புகள், செய்யும் தொழிலில் முடக்கம், விளைச்சல் பாதிப்பு, சோம்பல் அதிகரிப்பு, விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டு உடல் உறுப்புகளுக்கு ஊறு ஏற்படுதல் இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் ஏற்படலாம்.

    உடல் நலத்தில் அடிக்கடி காயம்படுதல், வெட்டுக்காயம், தீக்காயம் ஏற்படுவது, தோல் நிறமாற்றம் ஏற்படுதல், நரம்புப்பிரச்சினைகள், வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய் மானம், சர்க்கரை நோய் போன்ற உபாதைகள் ஏதாவது வரக்கூடும்.


    சங்கடம் தரும் சனிதோஷத்திற்கு என்ன பரிகாரம் செய்தால் பிரச்சனைகள் பெரிதாக வாட்டாமல் இருக்கும்?

    தினமும் ஒரு கைப்பிடி அன்னம் சிறிதளவு எள் சேர்த்து காகத்திற்கு வைப்பது மிக மிக நன்மை தரும்.

    சனிக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபம் நல்லெண்ணை விட்டு ஏற்துவதும்,

    சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது.

    தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன் காயத்ரிகளைச் சொல்வதோடு, சனிபகவான் காயத்ரியையும் சொல்லுங்கள்.

    சனிப்பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.

    திருநள்ளாறு போய் நளதீர்த்தத்தில் நீராடி அங் குள்ள வழக்கப்படி சனிபகவானை வழிபடுவதும், திருக் கொள்ளிக்காடு திருத்தலத்தில் உள்ள பொங்கு சனி பகவானை அர்ச்சனை செய்து ஆராதிப்பதும் நற்பலன் தரும். (திருவாரூர் திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது திருக்கொள்ளிக்கோடு. இங்கிருப்பவர் பொங்கு சனி பகவான் என்பதால், இவரது பிரசாதத்தை எடுத்து வரலாம்).

    இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணை நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இருப்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது.

    வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக்கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். கோவில்களில் பக்தர்களுக்கு புளியோதரை பிரசாதம் கொடுங்கள்.

    அடிக்கடி சிவாலயம் செல்வதும் அங்குள்ள பார்வதியை வழிபட்ட பின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்துவிட்டு வருவதும் நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் உள்ள ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது சிறந்தது. இவற்றுள் உங்களால் இயன்ற பரிகாரத்தினைச் செய்யுங்கள். சனிபகவானால் சங்கடம் ஏதும் வராது.

    ×