search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரூப்-4 தேர்வு"

    • போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது.
    • எக்ஸ் சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, அறிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை செயல் பணியாளர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், வனக்காப்பாளர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-4 பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை, தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 தேர்வர்கள் எழுதினர்.

    இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில், குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதற்கான, அறிவிப்பை 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, வெளியிட்டுள்ளது.

    • சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது.
    • 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான, போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு முழுவதும் 38 மையங்களை உள்ளடக்கி 7 ஆயிரத்து 247 தேர்வு அறைகளில் நடைபெறுகிறது. தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெறும்.

    தேர்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு சென்றுவிட வேண்டும் என்று தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் 432 இடங்களில் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 276 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவை அறிவித்தது.
    • குரூப்-4 பணியிடங்களுக்கு 2022 ஜூலை மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது.

    சென்னை :

    கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 10 ஆயிரத்து 117 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது தாமதமாகி 8 மாதங்களுக்கு பிறகு, கடந்த 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. முடிவை அறிவித்தது.

    18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதிய இந்த தேர்வு முடிவில், தட்டச்சர் பணியிடங்களுக்கு வெளியான முடிவில், குளறுபடி இருந்ததாக தேர்வர்கள் புகார்கள் தெரிவித்தனர். அதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'அதுபோல் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தட்டச்சர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு எந்த அடிப்படையில் வெளியிடப்படுகின்றன என்பது குறித்த விவரங்களையும் தெரிவித்தனர். இந்த குளறுபடி குறித்த சர்ச்சை புகாருக்கு பதில் கிடைப்பதற்குள், தென் மாவட்டத்தில் ஒரே பயிற்சி மையத்தில் படித்த சுமார் 2 ஆயிரம் பேர் இந்த குரூப்-4 தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக ஒரு தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு குரூப்-4 தேர்வு எழுதிய தேர்வர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் தாங்கள் எழுதிய தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடவில்லை என்றும், அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. கூறியபடி தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 மதிப்பெண் பெறாத தேர்வர்களுடைய தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. அந்தவகையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று தகவல்கள் வெளியானது. ஆனால் தேர்வு எழுதிய பலர் ஏற்கனவே பலமுறை குரூப்-4 தேர்வு எழுதியவர்கள் என்பதால், அவர்கள் எளிதில் தமிழ் தகுதித்தாள் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்ற வகையில், டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த தகவலும் தேர்வர்களால் ஏற்றுக்கொள்வதாக இல்லாமல் போனது.

    இதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 1,089 நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வெளியானது. இந்த தேர்வு முடிவிலும் முறைகேடு நடந்திருப்பதாக நேற்று முன்தினம் தகவல்கள் வெளியாகின.

    அதாவது தேர்வு எழுதியவர்களில், காரைக்குடி தேர்வு மையத்தில் மட்டும் எழுதிய சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக சொல்லப்பட்டது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு இதேபோல் கீழக்கரை, ராமநாதபுரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய தேர்வர்கள் மட்டும் அதிக அளவில் தேர்ச்சி பெற்றது விஸ்வரூபம் ஆன நிலையில், தற்போது அரங்கேறி இருப்பதாக கூறப்படும் இந்த முறைகேடும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அதுவும் இந்த முறைகேடு கருவூல அலுவலர்களின் உதவியுடன் நடந்ததாக ஒரு குற்றச்சாட்டும் பரவலாக எழுந்து வருகிறது.

    இவ்வாறாக குரூப்-4 தேர்வு முடிவு வெளியானது முதல் தொடர்ந்து குளறுபடி, நில அளவையர், வரைவாளர் தேர்வு முடிவுகள் முறைகேடு என சர்ச்சை புகார்கள் நீடித்து வருகிறது. மேலும் இந்த விவகாரம் சட்டசபையிலும் நேற்று எதிரொலித்திருக்கிறது.

    எனவே டி.என்.பி.எஸ்.சி. இந்த குரூப்-4 தேர்வு முடிவு குளறுபடி விவகாரம் மற்றும் நில அளவையர், வரைவாளர் பணியிடங்களில் வெளியாகிவரும் முறைகேடு குறித்த தகவல்களுக்கும் உரிய விளக்கத்தை வெளியிட்டு, குளறுபடி, முறைகேடு குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தேர்வர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் பலத்த குரலாக ஒலித்து வருகிறது.

    • ஒரு பணியிடத்துக்கு 253 பேர் போட்டியிட்டு இருக்கின்றனர்.
    • தங்களுடைய ஆதங்கத்தை ‘மீம்ஸ்’ மூலமும் தெரிவிக்கின்றனர்.

    சென்னை :

    397 கிராம நிர்வாக அலுவலர், 2 ஆயிரத்து 792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 509 நில அளவையர், 74 வரைவாளர், ஆயிரத்து 901 தட்டச்சர், 784 சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 22-ந் தேதி தேர்வு நடந்தது.

    இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேர் எழுதினார்கள். அதாவது ஒரு பணியிடத்துக்கு 253 பேர் போட்டியிட்டு இருக்கின்றனர். தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட போதே தேர்வு முடிவு அக்டோபர் மாதத்தில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட்டு தீர்ப்பை பின்பற்றி தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு முடிவு வெளியாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் முடிவு வெளியிடப்படவில்லை.

    அதைத் தொடர்ந்து தேர்வாணையம் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவை வெளியிட வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த அறிவிப்பின்படியும் கடந்த மாதத்தில் தேர்வு முடிவு வெளியாகவில்லை. கடந்த மாதம் 14-ந் தேதி இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில், மார்ச் மாதத்தில் முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையில் கூடுதலாக இடங்கள் சேர்க்க டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

    இது ஓரளவுக்கு ஆறுதலான செய்தியாக இருந்தாலும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பதே தேர்வை எழுதிய 18 லட்சத்து 50 ஆயிரத்து 471 பேரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி தேர்வை எழுதிய தேர்வர்கள் டுவிட்டரில் 'வி வான்ட் குரூப்4 ரிசல்ட்' என்பதை 'ஹேஷ்டேக்'காக 'டிரெண்டிங்' செய்து வருகின்றனர்.

    இதுமட்டுமல்லாது, தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருப்பதற்கு தேர்வர்கள் 'மீம்ஸ்' மூலம் நகைச்சுவை கலந்த ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில், தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி.யிடம் சொல்வதுபோல, 'வீட்டுல எவ்வளவு நாள்தாண்டா சோறு சாப்பிடுவனு கேக்குறாங்க. சொந்தக்காரங்க இன்னும் உனக்கு வேலை கிடைக்கலையாடா வீட்லயே இருக்கனு சொல்றாங்க', 'எக்சாம் நல்லா பண்ணிருக்கேன், இந்த மாதம் ரிசல்ட் மட்டும் விட்டீங்கனா வேலைக்கு போய்டுவேன்' என பதிவிட்டுள்ளனர்.

    இதேபோல் மற்றொரு மீம்சில், 'குரூப்-1 எழுதினவன் எப்போ ரிசல்ட் வரும்னு காத்திருக்கான், குரூப்-2 முதன்மைத் தேர்வு எழுதினவன் எப்படி திருத்துவாங்களோ, எந்த வருசம் ரிசல்ட் போடுவாங்கனு இருக்கான், குரூப்-4 எழுதினவன் ரிசல்ட்ன்னு ஒண்ணு இருக்கானு தேடிட்டு இருக்கான்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    • இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர்.
    • பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகஅரசின்பல்வேறு துறைகள் மற்றும்நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும்வகையில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், ஸ்டெனோகிராபர், இளநிலை உதவியாளர்கள், பில் கலெக்டர்கள், நில அளவையர் போன்ற பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் 239 மையங்களில் குரூப்-4 தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு 67 ஆயிரத்து 728 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 8 மணி முதலே மையத்துக்கு தேர்வர்கள் வர தொடங்கினர். 9 மணிக்கு அவர்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். அறைக்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

    தேர்வு சரியாக 9.30 மணிக்கு தொடங்கிமதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. 12.45 மணிக்கு பிறகே அவர்கள் மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மாவட்டத்தில் பூதலூர் உள்ளிட்ட சில இடங்களில் உள்ள மையங்களில் தாம தமாக வந்த தேர்வர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியாமல் திரும்பி சென்றனர். தேர்வை முன்னிட்டு மாவட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டன.

    • கைக்குழந்தைகளுடன் மையங்களுக்கு வந்தவர்கள் உறவினர்களிடம் கொடுத்து சென்றனர்
    • தேர்வை எழுத 11 ஆயிரம் பேர் வரவில்லை

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட வில்லை.

    இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இறுதி யில் குரூப் 4 தேர்வு தொடர் பான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையத்தால் வெளியிடப் பட்டது. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டலர், நில அளவர், வரைவாளர் உள்ளிட்ட 7,382 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தேர்வு எழுத 22 லட்சம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். குமரி மாவட்டத்தில் 71 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான அழைப்பாணை ஆன்லை னில் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதுபவர்கள் அதை பதிவிறக்கம் செய்தனர். அதில் தேர்வு மையம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து தேர்வு எழுதுபவர்கள் அந்தந்த மையம் எந்த பகுதியில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஒரு சிலருக்கான தேர்வு மையத்தை கண்டுபிடிப்ப தில் சிக்கல் ஏற்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட பகுதி யில் உள்ள இளைஞர் கள், இளம்பெண்கள் பல ருக்கு மேற்கு மாவட்ட பகுதி யில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அவர்கள் இன்று காலையிலேயே இரு சக்கர வாகனங்களில் தேர்வு மையங்களுக்கு புறப்பட்டு சென்றனர். பெண்களை தங்களது பெற்றோர் மற்றும் கணவர்கள் இருசக்கர வாகனங்களில் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்றனர்.

    நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பள்ளி, எஸ்.எல்.பி. பள்ளி, குமரி மெட்ரிக் பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி உட்பட 38 மையங்களில் குரூப் 4 தேர்வு நடந்தது. தேர்வுக்கு வந்த இளைஞர்கள், இளம்பெண்கள் காலை யிலேயே தேர்வு மையத் திற்கு வந்திருந்தனர். அவர்கள் பலத்த பரிசோ தனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முககவசம் அணிந்து வந்திருந்தனர்.

    ஒரு சில பெண்கள் கை குழந்தைகளுடனும் தேர்வு மையத்திற்கு வந்தனர். அவர்கள் தேர்வு மையத்திற்கு உள்ளே சென்றபோது தங்களது கணவர்கள் மற்றும் உறவினர்களிடம் கை குழந்தையை கொடுத்து விட்டு சென்றனர்.

    கால்குலேட்டர், செல் போன்கள் போன்ற எலக்ட்ரா னிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை யடுத்து செல்போன்களை தங்களது உறவினர்களிடம் சிலர் கொடுத்து சென்றனர். மற்றவர்கள் அதற்கான ஒதுக்கப்பட்ட அறையில் செல்போன்களை வைத்து விட்டு தேர்வு மையத்திற்குள் சென்றனர்.

    தேர்வு மையத்திற்கு சென்ற இளம்பெண்களை அழைத்து வந்த பெற் ேறார்கள் தேர்வு மையத் திற்கு வெளியே கொழுத் தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் காத்திருந்த னர். தக்கலை, குளச்சல், குழித்துறை, கன்னியாகுமரி, மார்த்தாண் டம், கருங்கல் உள்பட மாவட்டம் முழு வதும் 240 மையங்களில் இன்று தேர்வு நடந்தது தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    240 வீடியோ கிராபர்கள் மூலம் தேர்வு முழுவதும் பதிவு செய்யப்பட்டது. தேர்வை கண்காணிக்க 15 பறக்கும் படைகள் மற்றும் 240 அலுவலர்கள் 48 மொபைல் பறக்கும் படையினர் நியமிக்கப் பட்டிருந்தனர். இவர்கள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் தேர்வுக்கு 71 ஆயிரத்து 452 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 11 ஆயி ரத்து 568 பேர் இன்று தேர்வு எழுத வரவில்லை. 59 ஆயி ரத்து 884 பேரே தேர்வை எழுதினர்.

    • 7,180 பேர் தேர்வு எழுத வரவில்லை.
    • தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

    வேலூர்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 பல்வேறு பதவிகளுக்கான தேர்வு இன்று நடந்தது.

    வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    வேலூர் மையத்தில் 65, அணைக்கட்டு 13, குடியாத்தம் 27, கே.வி.குப்பம் 8, காட்பாடி 25, பேர்ணாம்பட்டு 4 தேர்வு கூடங்களில் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டம் முழுவதுமாக 41,307 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

    ஒவ்வொரு தேர்வு மையம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுத 41,307 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இன்று காலை 34,127 பேர் தேர்வு எழுதினர். 7,180 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழக தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (24-ந்தேதி)தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை 63 ஆயிரத்து 16 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

    தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு அலுவலர்கள் 201 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் 43 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் 16 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை வீடியோவாக படம் பிடிக்க 208 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு பாதுகாப்பு பணியில் 260 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    ஒவ்வொரு தேர்வர்களும் நாளை காலை சரியாக 8.30 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வு சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவடையும். அதன்பின் 12.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் சீட்டை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா என்று பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 12.45 மணிக்கு பிறகு தேர்வர்கள் அறைய விட்டு வெளியே செல்ல வேண்டும்.

    தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது.அதன்படி தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    முக கவசம் அணியாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வில் கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார், டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேர்வு நடைபெறும்.

    செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு வர அனுமதி இல்லை. இவ்வாறாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    தேர்வுக்குறிய வினாத்தாள்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • காலை 9 மணிக்கு பிறகு வந்தால் அனுமதி இல்லை
    • முகக்கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தல்

    வேலூர்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாளை காலை நடைபெற உள்ளது.

    வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி. குப்பம், காட்பாடி மற்றும் பேர்ணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் தேர்வமைப்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    வேலூர் மையத்தில் 65, அணைக்கட்டு 13, குடியாத்தம் 27, கே.வி.குப்பம் 8, காட்பாடி 25, பேர்ணாம்பட்டு 4 தேர்வு கூடங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

    வேலூர் மாவட்டம் முழுவதுமாக 41,307 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

    இது தவிர, ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் பாதுகாப்பிற்கு ஒரு போலீஸ் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் செல்போன் கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது.

    கொரோனா காலமாக இருப்பதால் கொரோனா விதிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும், முகக்கவசம் கட்டாயம் அணியுமாறும், சிறிய அளவிலான கை சுத்தம் செய்யும் திரவத்தினை எடுத்து செல்லுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

    தேர்வர்கள் 8.30 மணி முதல் 9 மணிக்குள்ளாக தேர்வுக் கூடத்திற்குள் சென்றிருக்க வேண்டும். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வுக் கூடங்களிலும் விண்ணப்பதாரர்கள் எவ்வித இடையூறும் இன்றி தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
    • தொலை தூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் மாற்றுத்திறனாளி அதிர்ச்சி

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் உள்ள கன்னியாபுரத்தை சேர்ந்தவர் நாட்ராயன்(32). மாற்றுத்திறனாளியான இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்.

    அவருக்கு ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையகோட்டை தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு ஹால்டிக்கெட் வந்துள்ளது. கால்கள் வளைந்த நிலையில் உள்ள அவரால் உதவியாளர் இல்லாமல் தொலைதூரங்களுக்கு செல்லமுடியாது. தேர்வுக்கு அவர் செல்ல வேண்டுமானால் தனது இருப்பிடத்தில் இருந்து திண்டுக்கல் வந்து பின்னர் ஒட்டன்சத்திரம் வரவேண்டும். அதன்பிறகு மார்க்கம்பட்டி செல்லும் பஸ்சில் ஏறி இடையகோட்டைக்கு வரவேண்டும்.

    காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு இவரால் வந்து சேரமுடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் அதிகாரிகள் தனது தேர்வு மையத்தை மாற்றி திண்டுக்கல் அல்லது நத்தம் பகுதியில் ஒதுக்கீடு செய்வார்களா என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×