search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் காவலர்"

    • பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.
    • பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றும், பெண் காவலர் டில் ராணிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.

    பணி முடிந்து வீடு திரும்பியபோது, வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு மர்மநபர் தப்பியோடினார்.

    இதையடுத்து, வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த பெண் காவலர் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் தொடர்பாக, குடும்ப பிரச்சினையில் கணவரே அரிவாளால் வெட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, கணவன்- மனைவி இடையே விவாகரத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்ததாகவும் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவர் மேகநாதன் தான் வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    பெண் காவலர் மீண்டும் இணைந்து வாழ மறுத்ததால் கணவர் மேகநாதன் வெட்டியதாகவும், பிறகு தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, பெண்காவலரின் கணவர் மேகநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    • சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார்.
    • பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார்.

    சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பூதாகரமாக மாறியுள்ளது.

    பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசினார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

    குல்விந்தர் கவுருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் குலவுந்தருக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் மாபெரும் அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளது.

    பலரும் அந்த பெண் காவலருக்கு வேலை வாய்ப்பும், ரொக்க பணமும், தங்க மோதிரமும் பரிசளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் மேலும் ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

    2022 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகர் வில் ஸ்மித் அவரது மனைவியை தரக்குரைவாக பேசியதால் காமெடியனை மேடையில் வைத்து அறைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அச்சம்பவம் மிகப்பெரிய வைரல் ஆகி பேசுப்பொருள் ஆனது. அச்சம்பவத்திற்கு 2022 ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் பதலளிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டது தற்பொழுது வைரலாகி வருகிறது.

    அப்பதிவில் "என் அம்மாவையோ தங்கையின் உடல்நல குறைவை வைத்து யாராவது ஒரு இடியட் கிண்டல் செய்தால் நானும் வில் ஸ்மித்தை போல் அவனை அடித்திருப்பேன் " என்று வில் ஸ்மித்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவு செய்து இருந்தார்.

    இப்பொழுது அதே சம்பவம் இவருக்கு நடக்கையில் அதை வேறு விதமாக கையாளுகிறார். இவரை அறைந்த பெண் காவலர் மீது புகாரளித்து, தீவிரவாதி, சீக்கியர்களே முரடர்கள் என பேசி வருகிறார். கங்கனாவின் பழைய இன்ஸ்டா பதிவை நெட்டிசன்கள் தற்போது பதிவிட்டு கமென்ட் செய்து வருகின்றனர்.

    • இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் கங்கனா ரனாவத்
    • 'கத்தியால் குத்துவது மற்றும் வன்புணர்வு செய்வதும் ஒருவரை அடிப்பது போல் பெரிய விஷயம் இல்லை என்று ஆகிறது'

    சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து எம்.பி.யும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.

    மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார். இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர் எம்.பியாக இருக்கும் ஒருவரை தாக்கியதற்காக கைது நேற்று கைது செய்யப்பட்டார்.

    குல்விந்தர் கவுருக்கு ஆதர்வாக விவசாய சங்கங்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வரும் கங்கனா ரனாவத் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், திருட்டு, கொலை, கற்பழிப்பு ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கும் கூட அதில் ஈடுபடுவதற்கு உடல்க ரீதியாக மன ரீதியாக பல காரணங்கள் உள்ளன.யாரும் காரணம் இல்லாமல் குற்றத்தில் ஈடுபடுவதில்லை.

    காரணம் இருப்பதால் அவர்கள் குற்றம் செய்தார்கள் என்பதற்காக அவர்களை அப்படியே விட்டு விடுவதில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். சட்டத்தை கையில் எடுத்து ஒருவரை தாக்குபவருக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்களாயின் நீங்கள் கொலை மற்றும் கற்பழிப்புக்கு ஆதரவு வழங்குபவராக கருதப்படுவார்கள்.

    ஏனெனில் கத்தியால் குத்துவது மற்றும் வன்புணர்வு செய்வதும் ஒருவரை அடிப்பது போல் பெரிய விஷயம் இல்லை என்று ஆகிறது. எனவே உங்களின் மனசாட்சியை ஆழமாக ஆராய்ந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். 

    • 'எனக்கு அபராதம் விதிக்கப் போறீங்களா டார்லிங்' எனக்கேட்ட நபருக்கு 1 மாதம் சிறை தண்டனை
    • முன்பின் தெரியாத பெண்ணை 'டார்லிங்' எனக் கூறுவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும்

    மதுபோதையில், பெண் காவலரிடம் 'எனக்கு அபராதம் விதிக்கப் போறீங்களா டார்லிங்' எனக்கேட்ட நபருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் 1 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.

    துர்கா பூஜையை ஒட்டி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, லால் டிக்ரே பகுதிக்கு காவலர்கள் சென்று கொண்டிருந்தனர். வேபி ஜங்ஷன் வழியாக வந்த காவல்துறையினருக்கு, அப்பகுதியில் ஒருவர் பிரச்சனை செய்வதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றனர். அந்த இடத்தில பிரச்சினை செய்த ஜனக் ராம் என்ற நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    அந்த நேரத்தில் ஜனக் ராம், ஒரு பெண் காவலரிடம் 'ஹாய், அன்பே, அபராதம் விதிக்க வந்தீர்களா?' என கேட்டுள்ளார். இது தொடர்பாக மாயாபந்தர் காவல் நிலையம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

    கடந்த வருடம், இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஜனக் ராமிற்கு 3 மாத சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஜனக் ராம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

    அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், "முன்பின் தெரியாத பெண்ணை 'டார்லிங்' எனக் கூறுவது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும். குறிப்பாக , குடித்திருக்கும் ஒரு ஆண், முன்பின் தெரியாத பெண்ணை டார்லிங் என அழைப்பது இன்னமும் தீவிரமான குற்றம் என கருத்து தெரிவித்தது.

    பின்னர், குற்றவாளியின் 3 மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம்பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
    • இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது.

    செங்குன்றம்:

    பெங்களூரை சேர்ந்தவர் ஜெயந்தி (32). இவர் செம்மஞ்சேரியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நந்தம் பாக்கம் போலீசாரால் ஜெயந்தி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ஜெயந்தி சிறையில் இருந்த போது பார்வையாளர்கள் நுழைவு பகுதி வழியாக சென்று புழல் ஜெயிலில் இருந்து தப்பி வெளியே சென்றுவிட்டார்.

    அவர் தப்பி சென்றது உடனடியாக போலீசாருக்கு தெரியவில்லை. இரவு கைதிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் கணக்கெடுத்த போதுதான் ஜெயந்தி ஜெயிலில் இருந்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது. கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது பார்வையாளர்கள் நுழைவு வாயில் வழியாக ஜெயந்தி வெளியே செல்வது பதிவாகி உள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகிய 2 பேரையும் சஸ்பெண்டு செய்து சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டு உள்ளார். புழல் ஜெயிலில் இருந்து தப்பிய ஜெயந்தியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அதிகம் உள்ள புழல் ஜெயிலில் இருந்து பெண்கைதி தப்பி சென்ற சம்பவம் அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அவமானம் அடைந்த அந்த பெண் காவலர் விஷத்தை குடித்துவிட்டார்.
    • சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    டெல்லி அருகில் உள்ள காஜியாபாத் ஹவுசிங் சொசைட்டியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது பெண் காவலர் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் பணியில் இருந்தபோது அவரது மேற்பார்வையாளர் அஜய்(32) என்பவர் உள்ளிட்ட 3 பேர் தாக்கியுள்ளனர். பின்னர் 3 பேரும் சேர்ந்து அவரை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதனால் அவமானம் அடைந்த அந்த பெண் காவலர் விஷத்தை குடித்துவிட்டார்.

    உடனே அவரை சக காவலர்கள் மீட்டு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய்யை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பெண்காவலர்கள் ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • கடைவீதிகளிலும், வாகனங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் பயமின்றி நடமாட முடியும்.

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இரவு நேரத்திலும் எந்தவித பயமுமின்றி நடமாட மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக பெண்கள் இரவில் சுதந்திரமாக கடைவீதிகளுக்கு சென்று வர மாநில போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக ஜம்முவில் உள்ள 6 முக்கிய சந்திப்புகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதற்காக அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆயுதங்களுடன் அவர்கள் ஆண் காவலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

    இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பெண்காவலர்கள் ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் காஷ்மீர் மாநிலத்தில் பெண்கள் இனி சுதந்திரமாக இரவிலும் நடமாடலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கை மூலம் ஜம்முவில் உள்ள பெண்கள் கூறும்போது, கடைவீதிகளிலும், வாகனங்களில் பயணம் செய்யும்போது பெண்கள் பயமின்றி நடமாட முடியும் என்று கூறினர்.

    • சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
    • குருப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் சிவகுமார் மற்றும் குரல் குட்டை திமுக. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள குருப்பநாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்தவர் கீதா. ஊர்க்காவல் படையில் பணியாற்றிய இவர் சில தினங்களுக்கு முன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து உடுமலை திமுக. நிர்வாகியும் பழனியம்மாள் டிரான்ஸ்போர்ட் உரிமையாளருமான ராமசாமி கீதாவின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அப்போது குருப்பநாயக்கனூர் கிளைச்செயலாளர் சிவகுமார் மற்றும் குரல் குட்டை திமுக. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    ×