search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்கள்"

    • அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது.
    • அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது.

    மனிதர்களின் வாழ்க்கையே நம்பிக்கையில் தான் அமைந்துள்ளது. இந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்த பல்வேறு சாஸ்த்திரங்கள் உள்ளது. அவற்றை நம்புபவர்களுக்கு பலனளிக்கின்றது. ஒருவரது பிறக்கும் நேரத்தை வைத்து அவர்களுக்கு நட்சத்திரம் குறிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. அந்த வகையில் 27 நட்சத்திரங்களையும், அதன் கோவில்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    அஸ்வினி : இந்த நட்சத்திரத்தில்பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

    பரணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    கார்த்திகை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது. இதன் மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சாலையில் அரை கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    ரோகிணி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அவசியம் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

    மிருகஷீரிஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

    திருவாதிரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று, அங்கிருந்து 12 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.

    புனர்பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் 67 கிலோமீட்டர் தொலைவில் வாணியம்பாடி உள்ளது. அங்கிருந்து 3 கிலோமீட்டரில் பழைய வாணியம்பாடி இருக்கிறது.

    பூசம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கிலோமீட்டர் சென்றால் விளங்குளம் என்ற ஊர் வரும். அங்கிருந்து தெற்கே 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளம் வந்தடையலாம்.

    ஆயில்யம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிசநல்லூர். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் தொலைவில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.

    மகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு உள்ளது. இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    பூரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருவரங்குளம் உள்ளது.

    உத்தரம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லால்குடி சென்று, அங்கிருந்து 5 கிலோமீட்டர் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.

    அஸ்தம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    சித்திரை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோவில். மதுரையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் இருக்கிறது.

    சுவாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம் தாத்திரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது. சென்னை-பூந்தமல்லி சாலையில் தண்டுரை என்ற ஊரில் இருந்து, 8 கிலோமீட்டர் தொலைவில் சித்துக்காடு உள்ளது.

    விசாகம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம். முத்துக்குமாரசாமி திருக்கோயில். இந்த ஆலயம் திருமலைக் கோவிலில் உள்ளது. மதுரையில் இருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலயத்தை அடையலாம்.

    அனுஷம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    கேட்டை : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் பசுபதிகோயில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது.

    மூலம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் சாலையில் 22 கிலோமீட்டரில் மப்பேடு உள்ளது.

    பூராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது கடுவெளி என்ற ஊர்.

    உத்திராடம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் 12 கிலோமீட்டர் தூரத்தில் ஓக்கூர் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கிலோமீட்டர் சென்றால் பூங்குடி தலத்தை அடையலாம்.

    திருவோணம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பாக்கம் உள்ளது. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம். ஆற்காடு, வாலாஜாவில் இருந்தும் பஸ்வசதி உள்ளது.

    அவிட்டம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் இங்கு செல்லலாம்.

    சதயம் : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இத்திருத்தலம் இருக்கிறது.

    பூரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவானேஷ்வர் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த ஆலயம் இருப்பது ரங்கநாதபுரம் என்ற ஊர். திருவையாறில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்காட்டுப்பள்ளி. இங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்தத் திருத்தலம் உள்ளது.

    உத்திரட்டாதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள ஆவுடையார் கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவன வாசல் செல்லும் சாலையில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.

    ரேவதி : இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று, அங்கிருந்து 21 கிலோ மீட்டரில் உள்ள தாத்தய்யங்கார் பேட்டை செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.

    • கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
    • சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் ஆலயங்கள் உள்ளன.

    1. குடம் என்றால் மேற்கு என்று பொருள். மூக்கு என்றால் மூக்கு போன்று குறுகிய வடிவம் என்று அர்த்தமாகும். அதாவது குடந்தை நகரம் மேற்கே மூக்கு போன்று குறுகியும் கிழக்கில் அகன்றும் விளங்குவதால் குடமூக்கு என்ற பெயரை பெற்றதாக சொல்கிறார்கள்.

    2. சங்க இலக்கியங்களில் குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் 1384-ம் ஆண்டு முதல் கும்பகோணம் என்று அழைக்கப்பட்டது. சாரங்கபாணி கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதை உறுதிபடுத்துகிறது.

    3. கும்பகோணம் என்ற சொல் வடமொழி சொல் ஆகும். வடமொழியில் குடம் என்றால் கும்பம், மூக்கு என்றால் கோணம் என்று அர்த்தமாகும். அந்த அடிப்படையில் ஏற்பட்ட கும்பகோணம் என்ற பெயர் கடந்த 600 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

    4. "குடமெடுத்து ஆடிய எந்தை" என்ற பாடல் வரியே குடந்தையாக மாறியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

    5. கும்பகோணத்துக்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டனம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம், சாரங்கராஜன்பட்டினம், சேந்திரசாரம், ஒளிர்மிகு பட்டணம் உள்பட பல பெயர்கள் இருந்தன. இந்த பெயர்கள் தற்போது வழக்கில் இல்லை.

    6. கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.

    7. சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் ஆலயங்கள் உள்ளன.

    8. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தன்னுடைய திருக்குடந்தை புராணம், மங்களாம்பிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களில் கும்பேசுவரரையும், மங்களாம்பிகையையும் போற்றி பாடியுள்ளார்.

    • காசி விசுவநாதர் கோவில்
    • அபிமுகேசுவரர் கோவில்

    1. கோடீஸ்வர சுவாமி கோவில்

    2. சக்ரபாணி சுவாமி கோவில்

    3. சங்கராச்சாரியார் மடம்

    4. காளஹஷ்தீஸ்வரர் சுவாமி கோவில்

    5. அய்யனார் கோவில்

    6. கோபாலசாமி கோவில்

    7. கும்பேசுவரர் கோவில்

    8. ராமசாமி கோவில்

    9. சாரங்கபாணி கோவில்

    10. சோமேஸ்வரன் கோவில்

    11. நாகேசுவரன் கோவில்

    12. காசி விசுவநாதர் கோவில்

    13. அபிமுகேசுவரர் கோவில்

    14. பிரம்மன் கோவில்

    15. கம்பட்ட விசுவநாதர் கோவில்

    • கோவிலின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது.
    • இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது.

    நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஏராளமான கோவில்களைக் கொண்ட இந்தியா, 'கோயில்களின் பூமி' என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்கள் முதல், அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் வரை என பட்டியலில் கோவில்களை சேர்த்துக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் எளிமையான, அல்லது சில உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலைகளை உள்ளடக்கியது. இதில் இன்று நாம் பணக்கார கோவில்களான முதலிடத்தில் இருக்கும் நாட்டிலுள்ள சில பணக்காரக் கோயில்களைப் பற்றி பார்க்கலாம்.

    ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்

    கேரளா இந்தியாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமி திருக்கோவில். இந்தியா மட்டுமல்ல உலகின் பணக்கார இந்து கோவிலும் இது தான். இந்த கோவிலை அடிப்படையாக வைத்து தான் திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்ற பெயரே உருவானது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது. 2011 ல் திறக்கப்பட்ட ரகசிய அறை ஏ வில் இருந்த தங்கம் உள்ளிட்டவைகளின் மதிப்பு தான் இது. இதுவரை பி அறை திறக்கப்படவில்லை.

    திருப்பதி

    ஆந்திராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏறக்குறைய 80,000 வரையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவிலில் தினமும் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.4.5 கோடி கிடைக்கிறது. இந்த கோவிலில் சொத்து மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதிகம் என சொல்லப்படுகிறது.

    ஷீரடி சாய்பாபா மந்திர், மகாராஷ்டிரா

    உலகில் வருடம் முழுவதும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்று ஷீரடி சாய்பாபா கோவில். இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது.

    வைஷ்ணவ தேவி கோவில், ஜம்மு

    அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாகும், அதிக சொத்து மதிப்பையும் கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது காஷ்மீர் மாதா வைஷ்ண தேவி கோவில். இந்த கோவிலுக்கு வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் வருகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த குகை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 1.2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


    மகாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவில்

    இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாகும். மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.90,000 கோடிக்கும் அதிகமாகும். தங்கம், தங்கம் சிலை, வெள்ளி, வைரம் உள்ளிட்ட பொருட்களும் இதில் அடங்கும்.


    புரி ஜெகந்நாதர் கோயில்

    இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் புரி ஜெகந்நாதர் கோவிலில் தினமும் சராசரியாக 30,000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்த செல்கிறார்கள். இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கோவிலின் கருவூலங்களில் உள்ள ஏழு அறைகளில் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மற்ற அறைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளன. இவற்றில் தான் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்கம், வெள்ளி நகைகள் சேமித்து வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.


    குருவாயூர் கிருஷ்ணன்

    காக்கும் கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்தாலும் அதில் அனைவருக்கும் பிடித்து கிருஷ்ணன் அவதாரம். பிறந்தது முதல் கீதை உபதேசம் வரை அவரின் லீலைகள் பல. அப்படி குட்டி கிருஷ்ணராக சில லீலைகளை செய்தவராக கேராளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக காட்சி தருகின்றார். கிருஷ்ணரின் தனிப்பெரும் சிறப்பு மிக்க குருவாயூர் ஸ்ரீ கிருணன் கோயில் பணக்கார கோவில்களில் ஒன்று.


    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில்

    தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் கோவிலாக விளங்குகிறது. பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை, பிரசாதம் விற்பனை என ஆண்டுக்கு சுமார் 33 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.


    காசி விஸ்வநாதர் ஆலயம், வாரணாசி

    இந்தியாவில் புண்ணிய தலங்களில் தலைமை தலமாக உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இரண்டு தங்கத்தால் ஆன கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவில் வருடத்திற்கு 4 முதல் 5 கோடி வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.


    பஞ்சாபின் பொற்கோயில்

    பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக பொற்கோயில் (Golden Temple) என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். இந்த கோயில் இந்தியாவின் பணக்கார கோவிலாகும்.

    • ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதத்தையும்,
    • ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் அதில் 10 சதவீதத்தையும் தார்மிக பரிஷத்துக்கு வழங்க வேண்டும்.

    கர்நாடக சட்டசபையில் போக்குவரத்து மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி, கர்நாடக இந்து வழிபாட்டு நிறுவனங்கள் அதாவது இந்து கோவில்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

    இதில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதத்தையும், ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் அதில் 10 சதவீதத்தையும் தார்மிக பரிஷத்துக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசு கோவில் வருவாயை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு ஆளும் காங்கிரஸ் தலைவர்களும் உரிய பதிலடி கொடுத்தனர்.

    இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் நேற்று மந்திரி ராமலிங்கரெட்டி, இந்து வழிபாட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மீது பேசிய பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

    இறுதியில் மேலவை தலைவர் இருக்கையில் இருந்த துணைத்தலைவர் பிரானேஷ், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்ற முயன்றார். மசோதாவுக்கு எதிராக அதிக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

    இதையடுத்து மசோதாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவிப்போரின் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் மசோதாவுக்கு 7 பேரும், எதிராக 18 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா தோல்வி அடைந்தது. இது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேல்-சபையில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மசோதா தோல்வி அடைந்ததும் பா.ஜனதா உறுப்பினர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெய் பீம் என்று முழக்கமிட்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    மேல்-சபையில் மசோதா தோல்வியடைந்தது சித்தராமையாக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    • கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.
    • இச்சட்டம் காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநில சட்டசபையில் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.

    ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோவில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை அரசு வசூலிக்க இந்தச் சட்ட மசோதா அனுமதிக்கிறது.

    இந்நிலையில், இந்தச் சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என கண்டனம் தெரிவித்த பா.ஜ.க, முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக, கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மசோதா மூலம் காங்கிரஸ் அரசு தனது கஜானாவை நிரப்ப முயற்சிக்கிறது. மாநில அரசு ஏன் இந்துக் கோவில்களில் இருந்து வருமானம் ஈட்டப் பார்க்கிறது? தொடர்ந்து இந்து விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, தற்போது இந்துக் கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், புதிய ராஜகோபுரங்களை கட்டுதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் அக்கோவிலுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமடம், தங்கமேடு, தம்பிக்கலை அய்யன் சுவாமி கோவிலில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகம், பவானி சங்க மேஸ்வரர் கோவிலில் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை மணிமண்டபம் மற்றும் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலான பணியாளர் குடியிருப்பு மராமத்துப் பணிகள், அந்தியூர், செல்லீஸ்வரர் கோவிலில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவர் கட்டும் பணி என மொத்தம் 5 கோவில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    இப்பணிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலான பணி உபயதாரர் நிதியின் மூலமாகவும், ரூ. 2.65 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அந்தந்த கோவில் நிதியின் மூலமாகவும் மேற்கொள்ளப் படுகின்றன. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் ப.செல்வராஜ் ஏ.ஜி.வெங்கடாசலம், டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி. பரஞ்சோதி, துணை ஆணையர் ரா.மேனகா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    • இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது.
    • இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கோவில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக, 260 கோவில்களுக்கு 315 கையடக்க கருவிகளை மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்.


    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்து உள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவினை எடுக்கும். ஆகவே தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
    • ரேணுகா தேவி துணை ஆணையர் நித்யா, மாநகராட்சி மன்ற உறுப்பினர் காமராஜ் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சென்னை, திருவல்லிக்கேணி பார்த்த சாரதி சுவாமி கோவிலில், கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில், அழகர்கோவில் கள்ளழகர் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய கோவில்களுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் 5 கோவில்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 15,000 பக்தர்களும், விசேஷ மற்றும் திருவிழா நாட்களில் சுமார் 50,000 பக்தர்களும் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள். பிரசாதங்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்திட அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளதோடு, அவற்றை பக்தர்களுக்கு வழங்கிட அந்தந்த கோவில்களில் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே 2 கோவில்களில் இருந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு திருவண்ணாமலை திருச்செந்தூர் உட்பட மேலும் 6 கோவில்களில் இந்த முழு நேர அன்னதான திட்டத்தை விரிவுப்படுத்தி 8 கோவிலில் அந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கின்றது.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில், ஆனைமலை மாசாணி அம்மன் ஆனைமலை கோவில் ஆகிய 3 கோவில்கள் இணைக்கப்பட உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் இந்த மூன்று கோவிலிலும் முழு நேர அன்னதான திட்டத்தை துவக்கிட உள்ளார்.

    அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் சன்னிதானத்தில் தைப்பூசத்தன்று இருபதாயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட திட்டமிடப்பட்டு இந்த ஆண்டு அதை துவக்க வைக்க இருக்கின்றோம்.

    இதோடு மட்டுமல்லாமல், ஒருவேளை அன்னதான திட்டத்தில் ஏற்கனவே இருந்த 754 கோவிலோடு இணைத்து இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 10 கோவில்கள் கூடுதலாக இணைக்கப்பட்டன. இந்த ஆண்டு 7 கோவில்கள் கூடுதலாக இணைக்கப்பட உள்ளன.

    கோவில்களின் பிரசாதம் மற்றும் அன்னதான உணவுகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிப்பதை உறுதிப்படுத்தி ஒன்றிய அரசினால் வழங்கப்படுகின்ற தரச்சான்றிதழ்களை 523 கோவில்களுக்கு இதுவரையில் பெற்று இருக்கின்றோம். இந்தியாவிலேயே அதிகமான கோவில்களுக்கு உணவு தர கட்டுப்பாட்டுக்காக வழங்கப்பட்ட சான்று தமிழகத்தில் தான் அதிகம்.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசிக்கு 73 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்த போதும் சிறு அசம்பாவிதம் இல்லாமல் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்கின்ற நல்ல சூழலை உருவாக்கி தந்தோம். அதுபோல் ஆங்கில புத்தாண்டிற்கு கடந்த ஆண்டுகளில் எந்தெந்த கோவில் எல்லாம் இரவு 12 மணிக்கு திறக்கப்பட்டிருந்ததோ, ஒரு சில கோவில் காலையில் திறக்கப்பட்டதோ அந்த நடைமுறையை பின்பற்ற சொல்லியும் எந்த கோவிலிலும் அர்ச்சகர்களுக்கு அழுத்தம் தராமல் பக்தர்களுக்கு இலகுவான தரிசனத்தை ஏற்படுத்தித் தர உத்தரவிடப்பட்டிருந்தது.

    48 முதுநிலை கோவில்களுக்கும் சிசிடிவி பொருத்தப்பட்டு இந்து சமய அறநிலையத்துறையின் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம். அதிகமான பக்தர்கள் வருகின்ற கோவில்களை ஆணையாளர் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றார்.

    ஆகவே கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டிற்கு சிறப்பாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றோம். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தவரை சுமார் 30-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. அவை முறையாக ஆய்வு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நீதிமன்றத்தில் என்னென்ன விதி மீறல்கள் இருக்கிறது என்பதை சமர்ப்பிக்க இருக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சோழவந்தான் அருகே சக்திவிநாயகர், பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின்னர் கும்பாபிஷேகம் நடக்க வில்லை. இந்த நிலையில் இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. மதுரை வீரராகவ பெருமாள் கோவில் பட்டர்கள் ரவி, வீர ராகவன் ஆகியோர் தலைமையில் சிவாச்சா ரியார்கள் யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து நான்காம் கால ஹோமம் நடந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். பின்னர் கோவில் கோபுரத்தின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சக்தி விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கொடிமங்கலம் கிரா மத்தில் பெரியபுன மங்கை என்ற பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாளில் திருவிளக்குபூஜை, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடும், 2-ம் நாள் கோ பூஜை, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல், களை ஈர்ப்பு வழிபாடும், 3-ம் நாள் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. 4-ம் நாளில் நான்காம் கால யாகபூஜை நடந்து நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் மேளதா ளத்துடன் திருக்குடங்கள் எடுத்துக் கோவிலை வலம் வந்தனர். பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்க ளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நாகமலை புதுக்கோட்டை போலீசார் 

    • தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
    • கோவில்களில் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களும் வசூல் செய்யக்கூடாது.

    தஞ்சாவூர்:

    தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ, வைணவ கோவில்களிலும் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களையும் வசூல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தை தேசிய பொதுச்செயலாளர் வக்கீல் சந்திரபோஸ் பெருமாள் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ் மாநில முதன்மை செயலாளர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.

    கரந்தை கண்ணன், மாநில இணை செயலாளர் மகேந்திரன், மாஸ்டர் சுரேஷ், மாநில துணை தலைவர் கோவி ந்தராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

    முடிவில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை மையக்குழு உறுப்பினர் கே.ஆர்.ஜி. ராஜா செய்திருந்தார்.

    இதில் முன்னாள் காவல் அதிகாரி வைத்தியநாதன், மகளிர் அணி கோமதி, அலமேலு, சண்முகம், சக்தி, மாவட்ட பொரு ளாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்களை அகற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • நவம்பர் 17-ந்தேதிக்குள் கோவில்களை அகற்றக்கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள வி.புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மினுக்கம்பட்டியில் கருப்பணசாமி, அங்காள பரமேஸ்வரி, பாப்பாத்தியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கோவில்கள் ஓடைப்புறம்போக்கு பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.

    இதனையடுத்து இதேபகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதனை தொடர்ந்து இப்பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் 3 கோவில்கள் மற்றும் 2 குடிநீர் தொட்டிகள் மட்டும் அகற்றப்படவில்லை.

    இதனிடையே அப்பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கோவில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தார். ஆனால் ஏற்கனவே வழக்கு தொடர்ந்து சுப்பிரமணி மீண்டும் நீதிமன்றத்தை அணுகியதால் ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படவேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து வேடசந்தூர் தாசில்தார் விஜயலட்சுமி ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்களை அகற்ற முயன்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பழனி ஆர்.டி.ஓ சரவணன் தலைமையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்துர் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் கோவில்களை இடிக்க கூடாது என்றும், வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல வசதியாக மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நவம்பர் 17-ந்தேதிக்குள் கோவில்களை அகற்றக்கூடாது என ஒரு தரப்பினர் தெரிவித்தனர். அதன்படி கெடு இன்றுடன் நிறைவடைவதால் தாசில்தார் விஜயலட்சுமி, வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி மற்றும் அதிகாரிகள் கோவில்களை அகற்றும் முயற்சியில் இறங்கினர். ஆனால் பொதுமக்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தியும், ஜே.சி.பி எந்திரத்தை சிறைபிடித்தும் போராட்டம் நடத்தினர்.

    அதிகாரிகள் சமரசம் செய்தும் கேட்காமல் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

    ×