search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன போராட்டம்"

    • நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தலித் மக்களின் அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தனர்.

    நகர இணைச் செயலர் ம.விஜய் தலைமை வகித்தார். இளஞ்சி றுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.டேனியல், நகர்மன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன், தொகுதி துணைச் செயலர் சு.வீரமுத்து, மாவட்ட அமைப்பாளர் சி.விநாயகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர துணைச் செயலர் மு.காளிதாசன் வரவேற்றார்.

    மண்டல துணைச் செயலர் ம.கு.மேத்தாரமேஷ், மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, மாநில துணை அமைப்பாளர் இரா.மூவேந்தன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தலையை மொட்டையடித்து கொண்டார். முன்னதாக வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகிலிருந்து பாடை கட்டி ஊர்வலமாக சென்றனர்.

    • சுடுகாட்டுக்கு பாதை அமைக்ககோரி நடத்தினர்
    • விவசாய குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமையில் விவசாய குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அப்போது கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், ஆச்சமங்கலம், கீழ்நமண்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சுடுகாட்டு க்குப்பாதை அமைத்து தரக்கோரி பாடை கட்டி ஊர்வலமாக வந்து நூதன முறையில் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த வரு வாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சுடுகாட்டுக்கு பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மேலும் ஒரு வாரத்தில் சுடுகாட்டுப் பாதை அமைத்து தர விட்டால் வாக்காளர் அட்டை குடும்ப அட்டை உள்ளிட்டவை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்து போ ராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனால் விவசாய குறை தீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நூதன போராட்டம் நடந்தது.
    • கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. நகர் குழு உறுப்பினர் பிரபு தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். கிருஷ்ணன்கோவிலில் இருந்து பூவாணி, கூட்டுறவு நூற்பாலை, ராமகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் உள்ள பாலங்களை விரிவுபடுத்த வேண்டும், சாலையின் இரு புறங்களிலும் உள்ள மணல் குவியல்களை அப்புறப்படுத்த வேண்டும்,

    மதுரை-தென்காசி சாலையை பழுது பார்ப்பதற்கு பதில் புதிய சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. சேதமடைந்த சாலைகளால் பொதுமக்கள் விபத்தில் சிக்குவதை பிரதிபலிக்கும் வகையில் தலை மற்றும் கைகளில் கட்டு போட்டு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பழுதடைந்த சாலைகளை செப்பனிட கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
    • ரெயில்வே பீடர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள சொக்கர் கோவில் முன்பு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்றவர்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பது போல் நடித்துக் காண்பித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம் பகுதியில் உள்ள மோசமாக உள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும். பஞ்சு மார்க்கெட் முதல் சொக்கர் கோவில் வரை பாதாள சாக்கடை தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்துள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீர் அமைத்திட வேண்டும். காந்தி சிலை ரவுண்டானாவில் இருந்து ராஜபாளையம் ரயில் நிலையம் நோக்கிச் செல்லும் ரயில்வே பீட்டர் சாலையில் பதிக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையை அகற்றிவிட்டு காங்கிரட் சாலை அமைத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    • 24-வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்

    கீழ்பென்னாத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், விவசாயிகளின் 10- அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என 24-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், செயலாளர் ஏழுமலை, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் என்கின்ற கோபி, கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன், அமைப்பு செயலாளர் நடராஜன்உட்பட பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணை பொதுசெயலாளர் நேதாஜி, இயற்கை விவசாயி அலெக்ஸ், இயற்கை வாழ்வியல் வல்லுநர் வத்தலக்குண்டு சௌந்தரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு 10-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினர்.

    வேப்பிலை மந்திரிப்பு செய்து கோரிக்கை வைத்தனர், விவசாயிகள் அரைநிர்வாணத்துடனும், கோவணத்துடனும் நின்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்திய கிரக போராட்டம் இன்று நடந்தது.
    • கலந்து கொண்டவர்கள் வாயில் கருப்பு துணியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகர்கோவில் :

    ராகுல் காந்தி பதவி நீக்கத்திற்கான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. அலுவலகம் முன்பு நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்திய கிரக போராட்டம் இன்று நடந்தது.

    போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், மண்டல தலைவர்கள் சிவபிரபு, செல்வன், கண்ணன், ஆதிராம், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சவுந்தர் மற்றும் நிர்வாகிகள் சோனி விதுலா, ஐரின் சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாயில் கருப்பு துணியுடன் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது
    • இயற்கை பாதிக்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த புனல்காடு கிராமம் அருகே உள்ள மலையடிவாரத்தில் திருவண்ணாமலை நகரம் முழுவதிலும் சேகரமாகும் குப்பைகளை கொட்டும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புனல்காடு கிராம மக்கள் கடந்த 13-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 12-வது நாளான நேற்று, மலையடிவாரத்தில் இயற்கை சூழல் பாதிக்கப்படுவதை எடுத்துரைக்கும் வகையில் அப்பகுதி மக்களில் சிலர் தலைகீழாக நின்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இயற்கையான கிராமப் பகுதியில் அதிக அளவில் குப்பைகளை கொட்டுவதால், தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    • துர்நாற்றம் வீசுவதாக புகார்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே திருவண்ணாமலை மெயின் ரோடு பகுதியில் வெங்களாபுரம் ஊராட்சிக்கு சொந்தமான நீர்நிலை பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் நகராட்சி சார்பில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் குப்பைகளை கொட்டி வருவதால் துர்நாற்றம் ஏற்பட்டு பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளது என கூறி பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த தசரதன் என்பவர் குப்பை மேட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, நகராட்சி நிர்வாகத்திடம் பேசியதை தொடர்ந்து குப்பைகள் வாரப்படும். என உறுதியளித்தனர். அதனைதொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • அ.தி.மு.க.வினர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுகா கொரட்டி அருகே உள்ள பஞ்சனம்பட்டி, எலவம்பட்டி, கிராமம் மற்றும் நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் குறவன் இனத்துக்கு பட்டியலின வகுப்பு (எஸ்சி) சான்றுக்கு ஆன்லைன் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட அனைவருக்கும் குறவன் எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி பின்னர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

    தொடர்ந்து மாணவ மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டம் கண்ணை கட்டி தவளை போல் தவழ்ந்து வந்து உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் நேற்று 6,வது நாளாக தூக்கு கயிறு மாட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அதிமுக கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் டி.டி.குமார் தலைமையில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என் திருப்பதி, ஒன்றிய செயலாளர் செல்வம், தொகுதி செயலாளர் கே. எம். சுப்பிரமணியம், நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தாலுகா அலுவலகம் வந்து தாசில்தார் சிவப்பிரகாசம் வருவாய்த் துறையினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பின்னர் போராட்டக்காரர்களிடம் நகர செயலாளர் டி.டி. குமார் பேசியபோது:

    குறவன் சாதி சான்றிதழ் அதிமுக ஆட்சியில் கேட்டிருந்தால் தாங்கள் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மூலம் கூறி அதற்கான நடவடிக்கை எடுத்து வழங்கி இருப்போம், தங்களுக்கு சான்றிதழ் கிடைக்க அதிமுக சார்பில் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி கவனத்திற்கு எடுத்துச் சென்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என ஆதரவு தெரிவித்து, போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துச் சென்றனர். தொடர்ந்து ஜாதி சான்றிதழ் கேட்டு தூக்கு கயிறு மாட்டி போராட்டம் நடத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், ரம்பா கிருஷ்ணன், டிடிசி சங்கர், ஆர் நாகேந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கவர்னர் அறியாமையினால் காரல்மார்க்சை பற்றி இழிவான கருத்துக்களை கூறி உள்ளார்.
    • வருகிற 28-ந்தேதி மாவட்டந்தோறும் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும்.

    சென்னை:

    மாமேதை காரல் மார்க்சை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இழிவாக பேசினார் என கூறி இன்று காலை கவர்னர் மாளிகை அருகே சைதாப்பேட்டை சின்னமலை ராஜீவ்காந்தி சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கவர்னர் அறியாமையில் பேசுகிறார் என்று கைதட்டி சிரிக்கும் நூதன போராட்டம் நடந்தது.

    போராட்டத்துக்கு மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். அகில இந்திய செயலாளர் அமர்ஜித் கவுர், மாநில துணை செயலாளர் வீர பாண்டியன், பெரியசாமி, ஆகியோர் கலந்துகொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் பேசியதாவது:-

    கவர்னர் அறியாமையினால் காரல்மார்க்சை பற்றி இழிவான கருத்துக்களை கூறி உள்ளார். அவர் இதுபோன்று அடிக்கடி பேசி வருகிறார். கவர்னர் கூறிய கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடைபெறும்.

    வருகிற 28-ந்தேதி மாவட்டந்தோறும் கறுப்பு கொடி போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    போராட்டத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
    • தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் .

    கடலூர்:

    ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்காக சிஐடியு சார்பில் நடைபெற்ற இயக்கத்தில் டியூட்டி ஆப் மற்றும் விடுப்பு கொடுத்துவிட்டு கலந்துகொண்ட தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டதற்கு நீதி கேட்டு பாய், தலையணை மற்றும் போர்வையுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை கடலூர் போக்குவரத்து அலுவலக பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் மண்டல தலைவர் மணிகண்டன் துணை பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கண்ணன் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கையில் பாய் தலையணை மற்றும் போர்வைகளை கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் . இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டு வந்தது

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்
    • மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என புகார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நெற்றியில் நாமம் போட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டம் இன்று நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் ஆல்வின், பொருளாளர் ஏழுமலை, துணைத் தலைவர் லோகேஷ், துணை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் தேவதாஸ் சிறப்புரையாற்றினார்.

    ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகத்தால் இயக்கப்படும் தனியார் பஸ்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் நோயாளிகளை ஆட்டோவில் அழைத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதையடுத்து அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களிடம் ஆட்டோ தொழிலாளர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×