என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரங்கப்பாதை"

    • சுரங்க பாதை பேருந்து, லாரி உள்ளிட்ட எந்த கனரக வாகனங்களும் செல்ல முடியாமல் விபத்து நேரும் வகையில் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி செல்லும் ெரயிலை மறிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே 132 c சொர்ணக்காடு ெரயில்வே பாதை உபயோகிப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் சொர்ணக்காடு தனியார் திருமண மஹாலில் வளப்பிரமன்காடு ஊராட்சி மன்ற தலைவர் சி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் அகல ரயில் பாதையில் பேராவூரணி அருகே சொர்ணக்காடு கேட் எண் 132 சி, பல கிராமங்களை இணைக்கும் சாலையாகும். ரயில்வே நிர்வாகம் கேட்டை நீக்கி, ெரயில்வே சுரங்கப்பாதையாக மாற்றம் செய்தனர். ஆனால் இந்த சுரங்க பாதை பேருந்து, லாரி உள்ளிட்ட எந்த கனரக வாகனங்களும் செல்ல முடியாமல் விபத்து நேரும் வகையில் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக பலமுறை ரயில்வே நிர்வாகத்திலும் எடுத்துக் கூறியும் சரியாக கட்டி தருவதாக கூறி இறுதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. தவறாக வடிவமைத்து தரை கீழ் பாலம் கட்டியுள்ளனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுமார் 5 அடி அளவிற்கு மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் எந்த வாகனமும் செல்ல முடியாத அவல நிலை உள்ளது.

    சொர்ணக்காடு ரயில்வே சுரங்கப்பாதை தவறாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் கட்டப்பட்டுள்ளது. ரயில்வே பாதையை பயன்படுத்தும் சொர்ணக்காடு, வலப்பிரமன்காடு, மாத்தூர் ராமசாமிபுரம் ஊராட்சிகளை சேர்ந்த பாலகிருஷ்ணாபுரம், பனஞ்சேரி ஆகிய ஊர்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வது எனவும், எதிர்வரும் டிசம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி அளவில் அனைத்து ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை திரட்டி மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடி செல்லும் ரயிலை மறிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என போராட்டக் குழுவை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சொர்ண க்காடு விஜயபாஸ்கரன், மணக்காடு விஜயகுமார், மாத்தூர் ராமசாமிபுரம் பழனி முருகன், ஒன்றிய கவுன்சிலர் ரஜினி ராஜா மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது.
    • அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் ,வீரபாண்டி மெயின் ரோடு வேங்காம்பட்டி அருகே உள்ள ெரயில்வே கேட் பல்வேறு கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது.

    இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் வந்து

    செல்கின்றன. அதன் வழியாக ெரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சியில் கடந்த 2011 -ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டது .

    மேலும் கடந்த 2021 -ம்

    ஆண்டு மல்லூர் பேரூ ராட்சி பொதுமக்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் வேங்காம்பட்டி ெரயில்வே கேட் முன்பு

    ெரயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.

    இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் ஆத்தூர் துணைக்கோட்ட அலு வலகத்திற்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது. அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று நடைபெறவிருந்த ெரயில் மறியல் போராட்டம் தற்கா

    லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை

    அய்யனார் தெரி வித்துள்ளார். பாலம் அமைப்பதால் அந்த வழியாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் அந்த பகுதி மக்கள் மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை அய்யனாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.
    • மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ராதா நகர் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை ஜி.எஸ்.டி. மெயின் ரோட்டில் இணையும் இடத்தில் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய அரச மரம் இருந்தது.

    சுரங்கப்பாதை பணிக்காக ஜி.எஸ்.டி. சாலையில் இருந்த அரசமரம் நெடுஞ்சாலைத் துறையினரால் வெட்டி அகற்றப்பட்டது. இதுநாள் வரை பல லட்சம் பேருக்கும் நிழலாக இருந்த அரச மரம் வெட்டப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த மரத்தை வெட்டாமல் பணியை தொடர்ந்து இருக்கலாம் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அரச மரம் வெட்டப்பட்டதற்கு சமூகநல ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அரச மரம் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் அமைப்பு சார்பில் இன்று காலை மரம் இருந்த இடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பசுமைத்தாயகம் மாநில துணை பொது செயலாளர் ஐநா கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சுரங்கப்பாதை பணிக்காக அரசமரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனை வேராடு பிடுங்கி வேறு இடத்தில் நடமுடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வனத்துறையினர் மூலம் மரக்கன்று நடப்படும். இதுவரை சுரங்கப்பாதை பணிகள் 70 சதவீதம் முடிந்து உள்ளது. ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப்பாதையை இணைக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற மே மாதத்தில் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இப்போது இந்த அரச மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம் என்றனர்.

    • ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ரெயில் நிலையத்தில் 2 மார்க்கங்களிலும் ரெயில்கள் வந்து செல்கின்றன. இதனால் அடிக்கடி ரெயில்வே கேட் அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு பகுதியில் இருந்து வட பகுதிக்கும், வட பகுதி யில் இருந்து தெற்கு பகுதிக்கும் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இது மட்டுமின்றி ஆம்புலன்சு வாகனமும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் சோழவந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சுமார் 12 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணிகள் நடந்தன.

    தற்போது இந்த பணிகள் நிறை வடையும் தறுவாயில் இருக்கிறது. விரைவில் ரெயில்வே மேம்பாலம் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. ரெயில்வே மேம்பாலம் திறந்தவுடன் ரெயில்வே கேட் நிரந்தரமாக அடைக்கப்படுகிறது. இதனால் சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு நடவடிக்கை எடுத்து சைக்கிளில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்காக மதுரை அருகே பரவையில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை போன்று சோழவந்தானிலும் அமைக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    சோழவந்தான் ரெயில்வே கேட்டுக்கு வடபுறம் பெரும்பாலும் விவசாய பகுதியாகும். இங்கு விவசாய பணிக்கு செல்லக்கூடிய தொழிலா ளர்கள் நடந்து செல்லக் கூடியவர்கள். இவர்கள் செல்வதற்கு கண்டிப்பாக சுரங்கப்பாதை அவசியமாகும்.

    அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சோழவந்தானில் சுரங்கப்பாதை அமைத்து நடந்து செல்லக் கூடியவர்களுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
    • இந்த சுரங்கப்பாதையானது ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் உள்ளது. இங்கிருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையின் நடுவில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையானது ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் அதை வெளியே எடுப்பதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதுதவிர இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அருகே கண்மாய் ஒன்று உள்ளதால் அந்த கண்மாயில் இருந்து வரும் கசிவு நீரானது இந்த சுரங்கப்பாதையில் வந்து நிரம்பி வருகிறது.

    இதனால் ஆண்டு முழுவதும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் முத்துப்பட்டி, நெற்புகப்பட்டி, நடராஜபுரம், பணங்குடி, பாகனேரி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று கல்லல் நகருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:- கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் இருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் மூழ்கிவிடும். அப்போது இந்த தண்ணீரை அகற்றுவதற்கு குறைந்தது ஒருவார காலம் வரை ஆகும். மேலும் இந்த சுரங்கப்பாதை உள்ள இடத்தின் அருகே விவசாய தேவைக்காக கண்மாய் ஒன்று உள்ளது.

    இந்த கண்மாயில் உள்ள தண்ணீர் கசிவு காரணமாக அங்கிருந்து கசிந்து வந்து இந்த சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி வருகிறது. தற்போது கோடைக்காலமாக இருந்தாலும் கூட கண்மாயில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளதால் அந்த தண்ணீர் இ்ந்த சுரங்கப்பாதைக்கு வந்து நிரம்புகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைகளுக்கு செல்பவர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி சென்று கல்லல் சென்று அதன் பின்னர் காரைக்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர இந்த கிராமத்தில் இரவு நேரத்தில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தால் இங்கு தேங்கி நிற்கும் இந்த தண்ணீரை காரணம் காட்டி அவர்கள் வரமறுத்து விடுகின்றனர்.எனவே மாவட்ட கலெக்டர் நேரில் இங்கு வந்து பார்வையிட்டு அருகில் கண்மாயில் இருந்து வெளியேறும் கசிவு தண்ணீரை சரி செய்ய பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ரெயில்வே துறை சார்பில் இதற்கு நிரந்தர தீர்வும் காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22671) நாளை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும்
    • ரெயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    நாகர்கோவில் :

    மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட திண்டுக்கல்-திருச்சி ரெயில் பாதையில் உள்ள தாமரைப்பாடி-வடமதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ஒரு சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16848) இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இதற்காக அந்த ரெயில் இன்று ஒரு நாள் மட்டும் மானாமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ரெயில், மேற்கண்ட நாட்களில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன் றம், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. மறு மார்க்கத்தில், மயிலாடுதுறை-செங் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16847) நாளை திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் சென்றடையும். அதேபோல, குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயிலுக்கு மானாமதுரை யில் தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) நாளை (புதன்கிழமை) திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் சென்ற டையும். இந்த ரெயில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    சென்னை-மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22671) நாளை திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.22672) நாளை மதுரையில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருச்சியில் இருந்து வழக்கமான நேரத்துக்கு சென்னை புறப்பட்டு செல்லும். இந்த திடீர் மாற்றத்தால் மேற்கண்ட ரெயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    • திருப்புவனம் அருகே பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் ெரயில்வே சுரங்கபாதை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நெல்முடிக்கரை பகுதிக்கு செல்ல மதுரை-ராமேசுவ ரம் நான்கு வழிசாலையில் ராமேசுவரம் செல்லும் தண்டவாளத்தை கடக்க ஆளில்லா லெவல் கிராசிங்கை அகற்றி விட்டு 2 ஆண்டுகள் முன்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.

    இது அமைக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுரங்க பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் அதை பயன்படுத்த முடியவில்லை.

    மேய்ச்சல் நிலங்களுக்கு கால்நடைகளையும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்க பாதை அமைக்கும் போதே மழைநீர் வராத அளவிற்கு வடிகால் வசதி செய்யவில்லை. மழைநீர் தேங்காமல் இருக்க சுரங்க பாதை மீது மேற்கூரை ஏதும் அமைக்காததால் இன்று வரை கட்டி முடிக்கப் பட்டு மழைநீர் தேங்குவதற்கு மட்டுமே ெரயில்வே சுரங்க பாதை வசதியாக உள்ளது.

    எனவே உடனடியாக ெரயில்வே நிர்வாகம் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தகவல்
    • மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ெெரயில் நிலையத்தில் ரூ.1 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டும் கட்டமான பணியை ெரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அங்கிருந்து ஒப்பந்ததாரர்களிடமும், அதிகாரியிடமும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில் குமார் எம்எல்ஏ மற்றும் ெரயில்வே துறைகளில் உடன் இருந்தனர்.

    சென்னை கோட்ட ெரயில்வே மேலாளர் கணேஷ் கூறியதாவது:-

    வாணியம்பாடி நியூடவுன் ெரயில்வே கேட் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையின்படி சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுவதாக இருந்தது முதலில் நிறுத்தப்பட்டது அது இன்னும் நிலுவையில் உள்ளது.

    ஏனெனில் ெரயில்வே சுரங்க பாதை அமைய உள்ள இடத்தின் மிக அருகில் ஏரி உள்ளது. மேலும் அதில் இருந்து வெளியேறும் உபரி நீர் பாலம் கட்டும் பகுதியின் அருகாமையில் தான் வெளியேறிச்செல்லும் நிலையும் உள்ளது.

    இதனால் உபரி நீர் சுரங்கப் பாதையில் நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, ஆதலால் சுரங்கப்பாதை கட்டும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார் வழங்கி உள்ள மாற்று வழி மூலமாக மேம்பாலம் கட்ட ஆலோசனை வழங்கி உள்ளார். அதன் அடிப்படையில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அதற்காக மாநில அரசு நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றி இடத்தை ஒதுக்க வேண்டும்.

    மேலும் ெரயில் நிலையம் வளர்ச்சிக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் கட்டமாக ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய ெரயில் நிலைய அலுவலக கட்டிடம் பணிகள் துவக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் நவீன கட்டிடங்கள் கட்டப்படும், பயணிகள் நிற்பதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதி பணிகளும் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது.

    அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் தளி வாய்க்கால் மூலமாக ஏழுகுளம் பாசனமும் நடைபெற்று வருகிறது.பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான பிரதான கால்வாய்க்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக தளி வாய்க்கால் கடந்து செல்கிறது. தளி வாய்க்கால் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளை ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் துளையை சீரமைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் தளி சுரங்கப்பாதை சந்திக்கும் பகுதியில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அப்போது பி.ஏ.பி, கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 4 மாதம் கேட் மூடப்படும்
    • இந்த ரெயில்வே கேட் தினசரி 24 மணி நேரத்தில் 13 மணி நேரம் பூட்டியே இருக்கும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத் தலைவரும், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் பின்புறம் ஊட் டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி போன்ற 5 சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500 வீடுகளுக்கு மேல் உள்ளது. ரெயில்வே பாதைகள் அமைத்தமையால் வடி வீஸ்வரத்திலிருந்து ஊட்டுவாழ்மடத்திற்கு ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய வகை யில் சாலை அமைக்கப் பட்டு இருந்தது. அதில் ரெயில்வே கேட்டும் அமைக் கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயில்வே கேட் தினசரி 24 மணி நேரத்தில் 13 மணி நேரம் பூட்டியே இருக்கும். இதனால் 5 கிராம மக்கள் நகரினுள் வர இயலாமல் தவித்தனர். தங்களுக்கு அந்த கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வேயை வலியுறுத்தி வந்தனர். மக்கள் தில் செல்ல ரூ.4.5 கோடி எளி செலவில் சுரங்க பாதை அமைக்க திட்டமிட்டனர். இந்த பணிகள் டெண்டர் தற்பொழுது விடப்பட்டு சுரங்கபாதை வேலைகள் உடன் துவங்க உள்ளது. இந்த சுரங்கபாதை வேலை முடிவடைய 4 மாதங்கள் ஆகும் என்பதால் அது வரை தற்பொழுதுள்ள ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்வதாக ரெயில்வே அதிகாரிகள் அந்த பகுதியில் போர்டு வைத்துள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாகர்கோவில் வர சுசீந்திரம், ரெயில்வே மேம்பாலம் அடுத்துள்ள சோழன்திட்டை அணைக் கட்டு வரை வந்துதான் நாகர்கோவில் வர 4 கி.மீ தூரம். சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் அடுத்து. வடக்கு பகுதியில் தற்போதைய ரெயில்வே பாதையும் கேட்டும் உள்ளது. இதன் அடுத்து வடக்குப் பகுதியிலுள்ள இடத்தில் தற்போ தைய ரெயில்வே கேட்டை மாற்றியமைக்க நல்ல வச தியும் வாய்ப்பும் உள்ளது.

    புதிய சுரங்கப் பாதை வேலைகள் முடியும் வரை தொடர்ந்து மேற்படி புதிய ரெயில்வே கேட் வழியாக பயணிகளும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட முயற்சி நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதால், மூடப்பட்ட ரெயில்வே கேட்டுக்கு மாற்றாக டி.பி.மில்ஸ் சாலையையும், எதிர்ப்புற சாலையையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறாமல் சுலபமாக ரெயில் பாதையை கடக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணிகள் நிறைவேறி இடையூறில்லாத போக்குவரத்து உருவாகும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

    அந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்க வேண்டி உள்ளது. அந்த திட்டவரைவை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரெயில்வே துறை தனது பொறுப்பில் சுரங்கப் பாதை நிறுவுவதற்குரிய காங்கிரீட் பாலங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பணிகளை முற்றிலும் கைவிடும் முயற்சிகள் மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாத கையறு நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் நகரின் கிழக்கு பகுதியில்தான் அமைந்துள்ளன. மாணவர்கள், பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேருதவியாக அமையும் சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு திட்டப்பணிகள் தாமதம் காரணமாக துவண்டு போய் கிடக்கும் நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    இந்தநிலையில் உள்ளாட்சி மக்கள் மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், தொழில் நிறுவன நிர்வாகங்கள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இந்த திட்டம் கை விடப்படுவதை தடுத்துநிறுத்தி, சுரங்கப் பாதை திட்டத்தை எந்த தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும் என ராஜபாளையம் ரெயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.
    • சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம், ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    மாதவரம் பால் பண்ணை -சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித் தடங்களில் 118 கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற உள்ளன.

    இதையடுத்து மெட்ரோ ரெயில் பாதைகளில் தற்போது சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் வேகம் எடுத்து உள்ளது. மாதவரம் மற்றும் கிரீன்வேஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.

    இதைத்தொடர்ந்து சேத்துப்பட்டு முதல் நுங்கம்பாக்கம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி ஜூலையில் தொடங்கும் என்று தெரிகிறது.

    ஸ்டெர்லிங் சாலை சந்திப்பின் கீழ் 850 மீட்டர் நீளத்துக்கு இரட்டை சுரங்கப்பாதை அமைய உள்ளது. இது மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடத்தில் சிறிய பகுதி ஆகும்.

    இதற்காக சுரங்கப்பாதை துளையிடும் எந்திரம் சேத்துப்பட்டு ஏரிக்கு அருகில் உள்ள மெட்ரோ ரெயில்நிலைய பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, `சுரங்கப் பாதை துளையிடும் எந்திரம் விரைவில் தயார் செய்யும் பணி தொடங்கப்படும். இது அடுத்த மாதத்தில் முடிவடையும். எனவே ஜூலை மாதம் முதல் சேத்துப்பட்டில் சுரங்கப்பாதை பணி தொடங்க வாய்ப்பு உள்ளது.

    சேத்துப்பட்டில் 22 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை பணி தொடங்கப்படும். இது ஸ்டெர்லிங் சாலை சந்திப்பை நோக்கி செல்லும் போது சுரங்கப்பாதையின் ஆழம் 15 மீட்டராக குறையும். ஏற்கனவே அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது என்றார்.

    ×