என் மலர்
நீங்கள் தேடியது "நூதன தண்டனை"
- வாகன ஓட்டிகள் போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
- போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாநகரில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாநகர போலீசார் பல்வேறு தடுப்பு நடவ டிக்கைகளை எடுத்து வரு கின்றனர்.
வாகன ஓட்டிகள் போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எடுத்து வருகின்றனர்.மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் அணியாமலும், செல்ேபானில் பேசியபடி வாகனங்களை ஓட்டிச் செல்வோர், அதிக வேகமாக செல்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் என கண்காணிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தற்போது கோவை மாநகர போலீஸ் சார்பில் சாலை போக்குவரத்து வார விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டில் போலீசார் மாநகரில் உள்ள முக்கிய சிக்னல்களில் முகாம் அமைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலமாகவும், போலீசாரும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா காலனி சிக்னலில் போலீசார் முகாம் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை அந்த வழியாக வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலும், சீட்பெல்ட் அணியாமலும், சிலர் செல்போனில் பேசியபடியும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றனர்.
இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முகாமுக்குள் அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்களின் ஓட்டுனர் உரிம விபரம் மற்றும் செல்போன் எண்கள் குறித்த தகவலை பெற்றுக்கொண்டனர். பின்னர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைத்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதாக ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னகொடிக்கு தகவல் வந்தது.
- உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திண்டி வனம் மேல் பேட்டை பகுதியில் இருந்து திண்டி வனத்திற்கு அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகா சத்தில் ஈடுபடுவதாக ரோஷ னை இன்ஸ்பெக்டர் அன்ன கொடிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்ற ரோசனை இன்ஸ்பெக்டர் படிக்கட்டில் தொங்கிகொண்டு வந்த மாணவர்களை கீழே இறங்க சொல்லி இனி நாங்கள் படிக்கட்டில் தொங்க மாட்டோம் எனவும், படிக் கட்டில் தொங்கி அட்டகா சத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார். இனி இது போல் ெதாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
- இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
- போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.
புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடலில் இறங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் காலை முதல் மாலை வரை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கடலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையில் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்தனர்.
அதோடு நிற்காமல், கொளுத்தும் வெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளில் எழுதியுள்ள வாசகங்களை வாசிக்க செய்தனர்.
சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று அனைத்து விழிப்புணர்வு பதாகைகளிலும் எழுதியுள்ள வாசகங்களை படித்த பின்னரே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.
- தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.
சீனாவில் நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்த்த 3 வயது குழந்தை கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை.
விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் ஜியாஜியா அழத் தொடங்கினாள்.
இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து, இந்த கிண்ணத்தை உன் கண்ணீரால் நிரப்பியவுடன் நீ டிவி பார்க்க மீண்டும் தொடங்கலாம் என்று கூறி உள்ளார்.
ஜியாஜியா தனது கண்களுக்கு கீழே கிண்ணத்தை வைத்து கண்ணீரை சேகரிக்க முயற்சி செய்தார். பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.
இந்த வீடியோ ஜியாஜியா அம்மா பகிர்ந்துள்ளார். பின்னர் ஜியாஜியா தந்தை அவளை சிரிக்கச்சொல்லி போட்டோ எடுத்தார். பின் சிரிக்கும் புகைப்படத்தையும் அழும் புகைப்படத்தையும் அவளிடம் காண்பித்தது வேடிக்கையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின் பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்தினாலும் அவர்களின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
- நீதிபதி அளித்த நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் கனிகிரி பகுதியை சேர்ந்தவர் அங்கய்யா (வயது 28) கடந்த 13-ந்தேதி அங்குள்ள கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கோவிலுக்குள் நுழைந்த அங்கய்யா அங்கிருந்து பித்தளை அண்டா உள்ளிட்ட 3 பாத்திரங்களை நைசாக திருடி சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருட்டு நடந்த சில மணி நேரத்தில் அங்கய்யாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கோவில் அண்டா உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரை கனிகிரி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அங்கய்யா தான் தற்போது தான் முதன் முதலில் திருட்டில் ஈடுபட்டேன். என்னை மன்னித்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரத் சந்திரா இந்தியாவில் புதிதாக அமல்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் அங்கய்யாவுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அதில் நவம்பர் 2-ந் தேதி (இன்று) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கனிகிரி முக்கிய சந்திப்புகள் மற்றும் தெருக்களை காலை 6 மணி முதல் 9 மணி வரை அங்கய்யா சுத்தம் செய்ய வேண்டும். நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசார் இதனை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
கோர்ட்டு அளித்த இந்த சமூக சேவை நூதன தண்டனை ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சித்தார்த் தனது பைக்கை திரும்ப பெற திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
- போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அடுத்த வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த் (வயது19). இவர் தனது பைக்கை புதிய ரகத்தில் வடிவமைப்பு செய்து திருப்பத்தூர் டவுன் பகுதியில் வண்டியை ஓட்டி வந்தார்.
பைக்கின் நிறத்தை மாற்றி, புதிய தோற்றத்தை உருவாக்கியதோடு முகப்பு விளக்கு மற்றும் வாகன எண்ணில் (நம்பர் பிளேட்) மண்டை ஓடு இருப்பது போல புதிய உருவ தோற்றத்தை உருவாக்கி இருந்தார். இந்த பைக்கின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்து, திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து சித்தார்த் தனது பைக்கை திரும்ப பெற திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சிறுவனுக்கு, திருக்குறளை எழுத்துப்பிழை இல்லாமல் கூறிவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு நூதன தண்டனை கொடுத்தார். அதன்படி சித்தார்த் திருக்குறளை போலீசாரிடம் ஒப்புவித்தார்.
பின்னர் போலீசார் சிறுவனை, இனிமேல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டியை ஓட்டக்கூடாது. இது போன்ற வடிவமைப்புகளில் வாகனங்களை மாற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
- தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டியதால் நடவடிக்கை
- அதிகாரிகள் எச்சரிக்கை
வேலூர்:
சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வேலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலர் குப்பைகளை கொட்டி க வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் கோழிக்கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவினர் பல்வேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையோரம் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து குப்பைகளை கொட்டினார். அதை பார்த்த கண்காணிப்பு குழுவினர் அவர் மீது வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை அழைத்து விசா ரித்தனர். விசாரணையில், அவர் கொணவட்டம் பகுதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்வது தெரியவந்தது. அந்த நபரிடம் கொட்டிய குப்பைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கொட்டிய குப்பைகளை அந்த நபர் அகற்றினார்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது குப்பைகள் கொட் டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.