search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருட்கள்"

    • அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை பொத்தேரியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கல்லூர் மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதைதொடர்ந்து, 60 இருசக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனை

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 கட்டண படுக்கையறை பிரிவை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு தொடங்கப்பட்டது. 15 ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. சத்தியமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    பவானி அரசு மருத்துவ மனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் பல்வேறு வகையான கூடுதல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலின் போது தன்னார்வ அமைப்பு நிறுவனங்கள் புற்றுநோய் தாக்கம் குறித்து கோரிக்கை வைத்தார்கள்.

    ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்ப தால் புற்றுநோய் கண்டறியும் சோதனை கண்டறிய அழைப்பு விடுத்தது. இந்த 4 மாவட்டங்களிலும் மொத்தம் 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 4.19 லட்சம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

    13 ஆயிரத்து 89 பேருக்கு சந்தேக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 1.27 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 3 ஆயிரத்து 39 பேர் சோதனை மேற்கொண்டதில் 50 பேருக்கு புற்று நோய் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறியப்படி 14 இடங்களில் கட்டண படுக்கை அறை திறந்து வைக்க உள்ளோம். இதில் குளிர்சாதன வசதி, கழிவறை, டி.வி உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் நடமாட்ட த்திற்கு எதிராக எடுக்க ப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32 ஆயிரத்து 404 கடைகளில் குட்கா பொருட்கள் இரு ப்பது கண்டறியப்பட்டது.

    அந்த கடைகளில் இருந்து ரூ.20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 468 ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 86 ஆயிரத்து 681 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், போதை பொரு ட்களை விற்பனை செய்ததாக 17 ஆயிரத்து 481 கடை களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற வணிக கடைகள் சீல் வைக்கப்படுவது வருத்தமளிப்பத்தாக இருந்தாலும், சிறிய லாபம் தரும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதை வணிகர்கள் தவிர்த்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் முழுவதுமாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் போதை பொட்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.
    • வடமாநில வாலிபர்களிடம் போலீசார் சோதனை

    கோவை:

    கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர கேரள மாநிலத்திற்கு செல்லக்கூடிய ரெயில்களும் கோவை சந்திப்பு ரெயில் நிலையம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் ரெயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

    பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் இன்று மதியம் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயிலில் போதைப்பொருள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ரேஸ்கோர்ஸ் உதவி கமிஷனர் அருண்குமார் தலைமையில் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்திற்கு சென்று, பீகாரில் இருந்த வந்த ரெயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அந்த ரெயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டி மற்றும் பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெட்டியில் தடை செய்யப்பட்ட 10 கிலோ போதை பொருட்கள் இருந்தன.

    அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 வடமாநில வாலிபர்களையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் போதை பொருட்களை கடத்தி வந்தனரா? அல்லது வேறு யாராவது கடத்தி இதில் வைத்தனரா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
    • அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் தெரிவிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில் நடைபெற்றது.

    முதுநிலை மண்டல மேலாளர் நர்மதாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள், கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா பேசுகையில், `ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் தற்போது 20 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிந்துள்ளது, இதற்கு கள்ளச்சாராய விற்பனை தான் காரணமா என்று கடை மேற்பார்வையாளர்களிடம் கேட்டார்.

    அப்போது சில அதிகாரிகள் மழையின் காரணமாக விற்பனை குறைந்தாகவும், இன்னும் சிலர் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் மற்ற பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டார்கள் அதனால் மது விற்பனை குறைந்து விட்டதாகவும் கூறினர்.

    தொடர்ந்து பேசிய நர்மதா தேவி , டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் சப்ளை செய்யும் நபர்கள் குறித்தும் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் மதுபான சில்லறை விற்பனை கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

    அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து மதுக்கூடங்களுக்கும் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் கட்டாயம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் மற்றும் கலால் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜய லலிதாம்பிகைக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

    இதையடுத்து இன்று காலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மங்கலம் ரோடு, மில்லர் பஸ் நிறுத்தம், போயம்பாளையம், தென்னம்பாளையம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 5 கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது இதையடுத்து 5 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    மேலும் ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் வியாபாரியான கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
    • போலீசார் வாகனத்தில் இருந்து தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    ராமநாதபுரம்:

    தமிழகம் முழுவதும் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் பேரில் வெளி மாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட் போதைப்பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் போதைப் பொருள் கடத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்ப டையில் கேணிக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு இரவு ரோந்து பணிகள் மற்றும் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் நகர் பகுதிகளான கான்சாகிப் தெரு, நாகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக வாகன சோதனை மற்றும் தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் சுமார் 700 கிலோ எடையில் மூடை, மூடைகளாக தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த 6 பேரையும் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் எங்கிருந்து, யாருக்காக கடத்தி வரப்பட்டது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

    மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இரவு நேரங்களில் வாகன சோதனைகளில் தீவிரமாக ஈடுபட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் அறிவுறுத்தியுள்ளார்.

    இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகேயுள்ள வேதாளை பகுதியில் நள்ளிரவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

    சற்று தூரம் தள்ளிச் சென்று நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    இந்த மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்து வரப்பட்டு இருக்கலாம் என்று கருதிய போலீசார் வாகனத்தில் இருந்து தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். 

    • ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
    • ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஆனாலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதுடன் மாநில எல்லைகள் மற்றும் ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 22 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், புதுச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் புதுச்சேரி சாரம் பாலாஜி நகரில் உள்ள தனியார் கூரியர் நிறுவன குடோனில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.

    இருப்பினும் அங்கிருந்த ஊழியர்களிடம், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏதாவது பார்சல் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    • கஞ்சா முதல் கொக்கைன் வரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் போலீசார்.
    • சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதை அடிமைப்படுத்தி வைத்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தொழில் விஷயமாக வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகிறார்கள். இதுபோன்று வருகை தருபவர்களில் பெரும்பாலானோர் பல நாட்கள் வரையில் தங்கி இருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் இரவு நேர மதுபான விடுதிகளை நாடிச் செல்வார்கள்.

    சென்னையில் போதை பொருட்களை பயன்படுத்துவதற்காகவே இரவு நேர நடன விடுதிகள் பல செயல்படுகின்றன. இந்த விடுதியில் இளம் வாலிபர்களுக்கு இணையாக இளம் பெண்கள் பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு போதையில் மிதப்பது நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    கஞ்சா முதல் கொக்கைன் வரை போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் போலீசார்.

    வெளிநாடுகளில் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விமானம் மூலமாக கடத்தி வரப்பட்டு சத்தமில்லாமல் சப்ளை செய்யப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்பிலான கொக்கைன் பிடிபட்டது.

    தொடர்பாக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். 'பப்' என்று அழைக்கப்படும் இரவு நேர விடுதிகளில் 'கொக்கைன்' பயன்படுத்தப்படுகிறது. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக இளம் பெண்களிடம் கொக்கைன் பயன் படுத்தும் பழக்கம் அவர்களது ஆண் நண்பர்களிடமிருந்தே தொற்றிக் கொண்டுள்ளது. இது போன்று போதை பழக்கத்துக்கு அடிமையாகும் பெண்களால் அதில் இருந்து எளிதாக மீண்டு வர முடிவது இல்லை.

    சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை கஞ்சா போதை அடிமைப்படுத்தி வைத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா பொட்டலங்கள் சென்னை மாநகர் முழுவதும் ஏதாவது ஒரு வழியில் மாணவர்களையும், இளம் வயதுடையவர்களையும் சென்றடைந்து விடுகிறது. உணவு டெலிவரி செய்பவர்களில் சிலர் கஞ்சா பொட்டலங்களை கடத்தி விற்பனை செய்தும் வருகிறார்கள். செல்போனில் தொடர்பு கொண்டு பேசியும் பலர் விற்பனை செய்கிறார்கள். சென்னை மாநகரில் குட்கா போன்ற பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் கடைகளில் அது தாராளமாக கிடைத்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி சென்னையில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாமல் அதிகாரிகள் தவிக்கும் நிலையே நீடித்து வருகிறது.

    • ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களும் குவியல் குவியலாக பறி முதல் செய்யப்பட்டுள்ளன.
    • சென்னையில் இதுவரை 14 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி கடந்த வாரம் சனிக்கிழமை மாலையில் அறிவிக்கப்பட்டது. அப்போதில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

    இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் கடந்த 8 நாட்களாக வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மாலை வரையில் ரூ.11கோடியே 41 லட்சம் பணம் பிடிபட்டு உள்ளது.

    இந்த சோதனையில் மதுபாட்டில்கள், போதை பொருட்கள் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. கடந்த 8 நாட்களில் மட்டும் ரூ.38 லட்சம் மதிப்பி லான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களும் குவியல் குவியலாக பறி முதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.13 கோடியே 22 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறக்கும் படையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சென்னையில் நேற்று பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 7½ கிலோ தங்கம் பிடிபட்டு உள்ளது. தி.நகரில் 5½ கிேலா தங்கமும், சைதாப்பேட்டையில் 2 கிலோ தங்கமும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கி உள்ளது. சென்னையில் இதுவரை 14 கிலோ தங்கம் பிடிபட்டிருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
    • கூடுதலான எண்ணிக்கையில் அதிகாரிகள், பொது மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டையில் 9 வயது சிறுமி போதை ஆசாமிகளால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் புதுச்சேரி காவல்துறை, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை ஆலோசனை நடத்தினார்.

    உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத்சவுகான், டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் உட்பட அரசு துறை செயலர்கள், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் , மற்றும் அனைத்து பிரிவு சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியும் கவர்னர் மாளிகையில் நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

    புதுவையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய போதை மறுவாழ்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். மனநல ஆலோசனை வழங்க 24 மணி நேரம் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

    அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கண்காணிப்பு குழுக்கள் அமைத்து இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும்.

    போதைப் பொருள் தடுப்புப் பிரிவு செயல்பாடு களை தீவிர படுத்த வேண்டும். கூடுதலான எண்ணிக்கையில் அதிகாரிகள், பொது மக்களை ஈடுபடுத்த வேண்டும்.

    போதைப்பொருள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த வேண்டும். போதை பொருள் புதுவைக்குள் கொண்டு வரப்படுவதை தடுக்க வேண்டும். இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து காக்க வேண்டும். மாநில எல்லை களில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். பறக்கும் படைகளை அமைக்க வேண்டும்.

    போதை பொருள் மூளையை மழுங்கடித்து உடலை கெடுத்துவிடும். மாணவர் சமுதாயம் நினைத்தால் இந்த உலகத்தை புரட்டிப் போடலாம்.

    நாம் அனைவரும் சேர்ந்துதான் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும். அரசு கடத்தலை, பதுக்கலை தடுக்கலாம். ஆனால் தனி மனித போதை பழக்கத்தை தடுக்க முடியாது. கவர்னர் மாளிகையில் 73395 55225 என்ற ஒரு வாட்ஸ்அப் எண் வெளியிடப்படுகிறது.

    போதை தடுப்பு சம்பந்தமாக எந்த தகவலாக இருந்தாலும் இந்த எண்ணில் தெரியப்படுத்தலாம். இது கவர்னர் மாளிகை அதிகாரிகளால் நேரடியாக கண்காணிக்கப்படும். சமுதாய உணர்வோடு இந்த எண் தரப்படுகிறது.

    கவர்னர் அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். மக்களோடு நேரடி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த எண் அறிவிக்கப்படு கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
    • 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 22 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் குப்பாண்டபாளையம் பகுதியில் பள்ளிக்கு அருகே இருந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்ததில் போதை பொருளான குட்கா உள்ளிட்டவை விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 700 கிராம் குட்காவை பறிமுதல் செய்த அதிகாரி கடை உரிமையாளர் சுந்தர்ராஜனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் கடைக்கு சீல் வைத்தார்.

    அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் உடனிருந்தார். இது குறித்து உணவுப்பொருள் அலுவலர் ரங்கநாதன் கூறுகையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • 24 மூட்டைகளில் பதுக்கிய போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா, மது கடத்தல், புகையிலை விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகூரை அடுத்த தெத்தியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை முட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக நாகூர் இன்ஸ்பெ க்டர் சதீஷ்குமார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து தெத்தி ஜம்மியத் நகரில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது முகம்மது சித்திக் என்பவரது வீட்டில் மூட்டை, மூட்டையாக அடுக்கி வைத்த பட்டிருந்த குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனையடுத்து 24 மூட்டைகளில் இருந்த 300 கிலோ மதிப்புள்ள புகையிலை பாக்கெட் முட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போதை பொருளை கடத்திய முகம்மது சித்தீக் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய ஒருவரை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.

    ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை நாகூர் காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.

    இதில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்க் சதீஷ்குமார், முதல் நிலை காவலர்கள் மதியழகன், காமேஷ்,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×