search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலைகள்"

    • ரூ.100 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்
    • 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு

    வேலூர்:

    இந்துக்களின் முதல் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. களிமண்ணால் செய்யபட்ட விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

    வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் சிலை, குடைகள், வேர்க்கடலை, சோளம், கம்பு, வாழை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்ட தொடங்கிவிட்டது.

    வேலூர் மாவட்டத்தில் இந்து முன்னனி சார்பில் மட்டுமே 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. வேலூர் மாநகரில் மட்டுமே 1008 சிலைகள் அமைக்க இந்து முன்னனி ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி இன்று அதிகாலை முதல் முழு முதற்கடவுளான விநாயகர் பெருமானுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. விநாயகருக்கு உகந்த பொருளான அருகம்புல், எருக்கன் பூ மாலை, கம்பு, சோளம், நவதானியம், கொழுக்கட்டை மற்றும் பழங்களை படையலிட்டு வழிபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடைவீதிகளில் களிமண் விநாயகர் சிலைகள், அருகம்புல், எருக்கன்பூ மாலை, குடை மற்றும் பழ வகைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

    திருவண்ணாமலை மாவட் டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 1,200 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    இதையடுத்து விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் பணி 3-ம் நாளான நாளை மறுதினம் 20-ந் தேதி முதல் நடைபெற உள்ளன. இதற்காக 7 நீர் நிலைகள் தேர்வு செய்யப்பட்டு சிலைகள் கரைக்கப்பட உள்ளது. போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் 749 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையிலான 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை மறுநாள் 20-ந் தேதி வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளும், அன்றைய மறுநாள் 21-ந் தேதி ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளது.

    வாணியம்பாடி பள்ளிப்பட்டு ஏரி, ஆம்பூர் ஆணை மடுகு தடுப்பணை, திருப்பத்தூர் ஆதியூர்ஏரி, நாட்ரம்பள்ளி கல்லுகுட்டை ஏரி ஆகிய 4 இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் 252 இடங்களிலும், அரக்கோணம் உட்கோட்டத்தில் 211 இடங்களில் என மொத்தம் 463 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட போலீஸ் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கிரண்சுருதி தலைமையான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • திருவட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்க போலீசார் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.
    • பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    திருவட்டார் :

    கன்னியாகுமரி மாவட் டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப டவுள்ள நிலையில் மாவட்டத்தில் இந்து முன்னணி, சிவசேனா, இந்து மகா சபா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் 5000-க்கும் மேற்பட்ட சிலைகள் பொதுஇடங்கள் மற்றும் ஆலயங்களில் பூஜையில் வைக்கபட்டு வருகிற 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கன்னியா குமரி, சொத்த விளை கடற்கரை, குழித்துறை, தாமிரபரணி, திற்பரப்பு ஆறுகளில் விநாயகர் சிலைகள் பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்து கொண்டு விஜர்சனம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் மாவட்டத்தில் ஆற்றூர், திருவட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைக்க போலீசார் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்தனர்.

    இதேபோல் திருவட்டார் அருகே தோட்டவாரம் பகுதியில் சிவசேனா கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ்பிரகாஷ் என்பவரது வீட்டில் பொதுஇடங்களில் பூஜையில் வைப்பதற்கு வழங்குதற்கான வைக்க பட்டிருந்த விநாயகர் சிலை களை நள்ளிரவில் திரு வட்டார் தாசில்தார் முருகன் தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் காவல்துறையினர் நள்ளி ரவில் திடீரென வீட்டிற்குள் புகுந்து பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த வருடம் விநாயகர் சிலைகள் பூஜைகளில் வைக்கபட்ட பகுதிகளிலும் தற்போது விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
    • பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    நாகர்கோவிலில் மீனாட் சிபுரம், வடிவீஸ்வ ரம், கோட்டார், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பகுதி களில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று அதி காலையில் நடை திறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. கோவிலில் காலை முதலே கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இதேபோல் அகஸ்தீஸ்வ ரம், ராஜாக்கமங்கலம், மேல்புறம், குழித்துறை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்க ளிலும் அதி காலையில் நடை திறக்கப் பட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குடும்பத்தோடு வந்து பக்தர்கள் விநாயகரை வழி பட்டு சென்றனர்.

    விநாயகர் சதுர்த்தி யையொட்டி பொது இடங்களிலும், கோவில்களிலும், வீடுகளி லும் விநாயகர் சிலைகள் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சி விளை பகுதியில் உள்ள கோவிலில் 9 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. விநாயகர் சிலைக்கு அருகம்புல், கொழுக்கட்டை, பழம், சுண்டல் படைத்து வழிபட்டனர்.

    பின்னர் விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கட் டது. இதேபோல் நாகர் கோவில் நகரில் வடசேரி, பள்ளிவிளை, வைத்தியநா தபுரம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் இன்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர். அகஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், மேல்புறம் ஒன்றி யத்துக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு அலங்கார தீபாரதனைகள் நடந்தது. ½ அடி முதல் 9 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலை களுக்கு காலை, மாலை 2 வேளைகளிலும் பூஜைகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்க ளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வருகிற 22, 23, 24-ந்தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.

    • வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம்.
    • புரசைவாக்கம் தானா தெரு, கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ஏராளமாக குவிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம்.

    சென்னையில் கொசப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி, ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்தது.

    இந்த நிலையில் புரசைவாக்கம் தானா தெரு, கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ஏராளமாக குவிக்கப்பட்டு உள்ளன. சிறிய களிமண் விநாயகர் சிலைகள் ரூ. 150 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரை அடி முதல் 2 அடி வரையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்

    • விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபாடு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    அதன்படி சிலைகள் வைப்பதற்கான அனுமதியை பெற பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்தை நாடினர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்காக பந்தல், மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட் ஆகியவை அமைத்துள்ளனர். பந்தலில் வாழைதார்கள் , பூக்கள் அலங்காரம், ஒவ்வொரு நாளும் பூைஜ செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    1915 ஆயிரம் விநாயகர் சிலைகள்

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் சேலம் புறநகர் பகுதியில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய 5 போலீஸ் உட்கோட்டத்தில் மட்டும் 1050 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் சேலம் மாநகரில் மட்டும் 865 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று இரவு அந்த இடங்கயில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதவிர இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது.

    3,200 போலீசார் குவிப்பு

    இதற்காக சேலம் புறநகர் பகுதியில் 2000 போலீசாரும், மாநகர் பகுதியில் 1200 போலீசாரும் என மொத்தம் 3,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிலை வைக்கப்படும் இடங்களில் இன்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோந்து போலீசாரும் இந்த இடங்களில் அவ்வப்போது வாகனங்களில் சென்று கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் வீதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    16 இடங்களில் கரைக்க முடிவு

    விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைத்திட வேண்டும் என சேலம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் சேலம் மாநகர எல்லைக்குட்பட்டவர்கள் மூக்கனேரியில் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும். மேலும் சேலம் ஊரக பகுதிகளான சங்ககிரி உட்கோட்டம், தேவூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கல்வடங்கம் பகுதியிலும், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சந்தைபேட்டை, பில்லுக்குறிச்சி, கோம்பைக்காடு ஆகிய பகுதிகளிலும், ஆத்தூர் உட்கோட்டம், தம்மம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி ஏரியிலும், ஆத்தூர் ஊரகம் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் முட்டல் ஏரி மற்றும் ஒட்டம்பாறை ஏரியிலும் சிலைகளை கரைத்திட வேண்டும்.

    மேட்டூர் உட்கோட்டம் மேட்டூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் காவேரி பாலம் பகுதியிலும், கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சென்றாய பெருமாள் கோவில் பகுதியிலும், கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் திப்பம்பட்டியிலும், மேச்சேரி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கூனாண்டியூர், கீரைக்காரனூரிலும் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும்

    ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் டேனீஷ்பேட்டை ஏரியிலும், வாழப்பாடி உட்கோட்டம, வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஆணைமடுவு அணை பகுதியிலும், கருமந்துறை போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் மணியார்குண்டம் ஏரியிலும் சிலைகளை கரைத்திட நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தவிர பிற இடங்களில் சிலைகளை கரைப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இரவு நிலக்கோட்டை ஒன்றியத்தில் 115 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்த பின்னர் நாளை சதுர்த்திவிழா கொண்டாடப்படும்.
    • 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா 5 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நடத்தப்பட்டு அணைப்பட்டியில் சிலைகள் கரைக்கப்படும்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை பகுதியில் இந்து முன்னணி சார்பாக நிலக்கோட்டை, கொடை ரோடு, விளாம்பட்டி, அணைப்பட்டி, அம்மையநாயக்கனூர், சிலுக்குவார் பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஊர்வலம் தொடங்கப்பட்டு விநாயகர் சிலைகள் நிலக்கோட்டை நால்ரோடு வந்து அடையும். அங்கு இந்து முன்னணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த ஊர்வலத்தில் மொத்தம் 115 சிலைகள் கலந்து கொள்வதாக இந்து முன்னணி மதுரை கோட்ட பொறுப்பாளர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இரவு நிலக்கோட்டை ஒன்றியத்தில் 115 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்த பின்னர் நாளை சதுர்த்திவிழா கொண்டாடப்படும். அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி 115 கிராமங்களிலும் காலை முதல் ஊர்வலம் கிளம்பி நிலக்கோட்டை நால்ரோடு வந்தடைந்து

    அங்கு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு பின்னர் அணைப்பட்டி வைகை ஆற்றில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்படும் என தெரிவித்தார். இதை போன்று தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிசத் மற்றும் ஆன்மீக சேவா சங்கம் சார்பாக சிலுக்குவார் பட்டி, கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்காக சிலைகளை தயார் செய்து வருகின்றனர்.

    இது குறித்து விஸ்வ ஹிந்து பரிசத் மாவட்டச் செயலாளர் ராஜாராம் கூறியதாவது:- நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார் பட்டி யில் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் , மற்றும் ஆன்மீக சேவா சங்கமம் இணைந்து 32 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா 5 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து நடத்தப்பட்டு அணைப்பட்டியில் சிலைகள் கரைக்கப்படும் என தெரிவித்தார்.

    • 3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
    • இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. மயில்வாகன விநாயகர், சிவசக்தி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குபேர விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருப்பூர் மாநகர பகுதியில் 1,000 விநாயகர் சிலைகளும், மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளும் வருகிற 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்று இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்தார்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. நாளை 18-ந் தேதி காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    19-ந் தேதி பொங்கலூர், குண்டடம், காங்கயம், ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. வருகிற 20-ந் தேதி அவினாசி, உடுமலை, பல்லடம், செஞ்சேரிமலை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. 21-ந் தேதி திருப்பூரில் புதிய பஸ் நிலையம், செல்லம் நகர் பிரிவு, தாராபுரம் ரோடு ஆகிய 3 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி ஆலாங்காட்டில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், சிவலிங்கேஸ்வர சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்கள்.

    அதன்பிறகு விசர்ஜனம் செய்ய சிலைகள் சாமளாபுரம் குளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    • கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினார்
    • பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கரைக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் சிவசேனா, பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் தரப்பில், சிலை கரைக்கப்படும் இடங்களில் மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சொத்தவிளை பகுதியில் மின்விளக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்வலங்கள் சொல்லும் பகுதிகளில் மரக்கிளைகள் அதிகளவு உள்ளது. அந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். கீரிப்பாறை பகுதியில் புதிதாக விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஆட்டோக்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசிய போது கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கரைக்கப்படுகிறது. சிலைகள் கரைப்பதற்கு 10 இடங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர், சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று காவல் துறையின் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய காவல் ஆய்வாளரிடமிருந்து பெற வேண்டும். காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்காலிகக் கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஓலைப் பந்தல் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினிலாரி போன்ற வாகனங்களில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும். ஊர்வலம், சிலையை கரைக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது. விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும். ஊர்வலம் செல்லும் பாதை காவல் துறையினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும். சிலை கரைப்பு நடைபெற்ற பகுதிகளில் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும், விதிமீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து விஜர்சனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களையும் முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்கவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன
    • மரக்கூழ், மரவள்ளிக்கிழங்கினால் செய்யப்பட்டது என்பதால் சுற்றுசூழல் மாசு ஏற்படாது

    புதுக்கோட்டை 

    விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளில் பல வண்ணங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து, விநாயகருக்கு விருப்பமான அருகம்புல், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, பழங்கள் படைத்து வழிபடுவார்கள். விநாயகர் பூஜை முடிந்ததும் 3,5,7 அல்லது 10 வது நாளில் வீடுகளில் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    வழக்கமாக விநாயகர் சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருகிறது. பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம் துவங்கும் நாளிலேயே, முழு முதற்கடவுளான விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தியும் இணைந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதே விநாயகர் சிலை விற்பனை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் ஆங்காங்கு விநாயகர் சிலை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இதற்காக ஆந்திரா, ராஜஸ்தான், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான பல வண்ண சிலைகள் புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலமாக புதுக்கோட்டை திலகர் திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் பேப்பர் கூல், மரவள்ளி கிழங்கு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீர் நிலைகள் மாசு படாமல் பாதுகாக்கப்படும். இந்த சிலைகள் அனைத்தும் 50 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்காக காட்சி படுத்தப்பட்டு உள்ளன.

    இந்து முன்னணி சார்பில் ஆந்திராவில் இருந்து 67 விநாயகர் சிலைகள் வருவிக்கப்பட்டு உள்ளது. இதில் 48 விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதை தொடர்ந்து தற்போதே விநாயகர் சிலை விற்பனையானது புதுக்கோட்டையில் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.  

    • ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு தயாராக உள்ளதாக தகவல்
    • 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது

    ஜோலார்பேட்டை:

    வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.

    ஜோலார்பேட்டை ஒன்றியம் கட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட கட்டேரியம்மன் கோவில் பின்புறம் திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் ஒரு அடி முதல் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

    அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.

    • போலீசார்-தீயணைப்பு துறையிடம் சான்றுகள் பெறுவது கட்டாயம்
    • சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் கரைப்பதற்கு குமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சிலை வைக்க உத்தேசி க்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறையிடமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரிடம் தடை யில்லா சான்று பெறப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர், சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று போலீசாரின் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரிடமிருந்து பெற வேண்டும். காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலி பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிகக் கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறை யிடம் பெற வேண்டும். மின் இணைப்பு வழங்கப்படு வதை குறிக்கும் கடிதம் மின்சார துறையிடமிருந்து பெற வேண்டும்.

    விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்க ப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்தி லோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலு க்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஓலைப் பந்தல் அமைப்ப தைத் தவிர்க்க வேண்டும்.

    சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை கள் கல்வி நிறுவனங்கள், பிற வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலை வர்களின் தட்டிகள் கண்டிப்பாக வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் யாராவது 2 தன்னார்வலர்கள் பாது காப்புக்காக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 4 சக்கர வாகனங்களான மினிலாரி போன்ற வாகனங்களில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ, கரைப்பதற்கு கொண்டு செல்லும் ஊர்வலத்திலோ, சிலையை கரைக்கும் இடத்திலோ கண்டிப்பாக பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது.

    விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை கரைப்பதற்கான ஊர்வலம் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலைகள் கரைப்பதற்கு அறிவிக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை கரைப்புக்கான ஊர்வலம் போலீசார் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும்.

    பொது அமைதி, பொது மக்கள் பாதுகாப்பு, சமூக ஒற்றுமை ஆகியவற்றினை பாதுகாக்கும் நோக்கோடு வருவாய்த் துறை காவல் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி களால் பிறப்பிக்கப்படும் இதர நிபந்தனை மற்றும் கட்டுப்பாடு விதிகளை ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

    மோட்டார் வாகன சட்டம் 1988-ல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் நபர்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்.

    கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசா ணையின் அடிப்படை யில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கென அரசின் புதிய நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் வரும் பொழுது மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும் அனைத்தையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    சிலை கரைப்பு நடைபெற்ற பகுதிகளில் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் உள்ளாட்சி, பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்க ப்பட்டுள்ளதையும், விதி மீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து விஜர்சனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களையும் முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்கவும் வேண்டும்.

    • விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்காக

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் நபர்கள், அமைப்புகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 வாரங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் முன் அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டும். அதன்படி தாங்கள் சிலை வைக்கும் இடம், சிலை வைக்கும் நாள், சிலை கரைக்கும் இடம் மற்றும் தேதி, ஊர்வலம் செல்லும் பாதை, சிலை பாதுகாப்பிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகியவை குறித்து போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து, முறையான முன் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். இது தொடர்பாக போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் கூட்டங்களிலும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் சிலைகள் வைத்தல் கூடாது என்று பெரம்பலூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×