என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் திருவிழா"

    • 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது.
    • 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நிர்மால்ய தரிசனம் தொடர்ந்து கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. 10.30 மணிக்கு கோவில் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிரதான அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றி 20 கிமீ சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்பட்டது.

    பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக சக்குளத்துகாவு பகவதி அம்மன் கோவிலில் இம்மாதம் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறுகிறது. அன்று முதல் 27-ந் தேதி வரை நோன்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது. 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    திருப்பூர் : 

    நிட்மா மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரில் நொய்யல் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக தடைபட்டிருந்த விழா இந்தாண்டு கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நிட்மா அலுவலகத்தில் நடந்தது.

    மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிட்மா தலைவர் ரத்தினசாமி, ஜீவநதி நொய்யல் அமைப்பு செயலாளர் பொறியாளர் சண்முகராஜ், சலங்கையாட்ட குழுவை சேர்ந்த குமார், அருணாசலம், விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து நிட்மா தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:- நொய்யல் கரையில் பாரம்பரிய வழக்கப்படி தை பொங்கல் விழா ஜனவரி 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. காலை 6 மணி முதல்7மணிவரை 3000 பொங்கல் வைக்கப்படும்.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாலையில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அமைச்சர், எம்.எல்.ஏ., மேயர் உட்பட மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்கின்றனர். மாநகராட்சியுடன் இணைந்து நடக்கும் விழாவில் சலங்கையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஜனவரி 17-ந் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜீவநதி நொய்யல் சங்கம் ஜீவானந்தம், மோகன் கார்த்திக் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.
    • தேசிய விருது பெற்ற பாடகி அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியன இணைந்து திருப்பூர் நொய்யல் கரையில் திருப்பூர் பொங்கல் திருவிழா என்ற பெயரில் ஜனவரி 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 3 நாள் திருவிழாவாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளன.திருவிழா குறித்த இலச்சினை(லோகோ) வெளியிடப்பட்டது. மேயர் தினேஷ்குமார் இதை வெளியிட்டார். துணை மேயர் பாலசுப்ரமணியம், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, ஜீவநதி நொய்யல் சங்கம் ஜீவானந்தம், மோகன் கார்த்திக் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    பொங்கல் திருவிழாவுக்காக நொய்யல் கரையில் யுனிவர்சல் தியேட்டர் ரோடு சந்திப்பு பகுதியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட உள்ளது. அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.தை முதல் நாளான ஜனவரி 15-ந்தேதி சமத்துவ பொங்கல் வைத்து விழா துவங்குகிறது. தொடர்ந்து மண்ணின் புகழ் பாடும், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    வள்ளி கும்மி, பெருஞ்சலங்கை ஆட்டம், பெண்கள் தப்பாட்டம், களரி-சிலம்பாட்டம் மற்றும் திருவண்ணாமலை பெரிய மேளம் ஆகியன முதல் நாள் நிகழ்ச்சியில் இடம் பெறவுள்ளன.16-ந் தேதி, கரகாட்டம், காவடியாட்டம், கட்டைக்கால் ஆட்டம், தேவராட்டம், டொல்லு குனிதா (கர்நாடக மலையக கலை) நிகழ்ச்சி, நாட்டுப்புறப்பாடல்கள் இசை நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளது. தேசிய விருது பெற்ற பாடகி அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது.

    3-ம் நாள் நிகழ்ச்சியாக 3 ஆயிரம் குடும்பங்கள் இணைந்து புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைக்கும் சமூக நல்லிணக்கப் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன.17-ந் தேதி திருப்பூர் மண்ணின் மைந்தர்கள் பங்கேற்கும் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    அன்று காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. புத்தாடை அணிந்து புதுப்பானையில் 3 ஆயிரம் பேர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கிறது. பொங்கல் பானைகளுக்கு நாதஸ்வரம், தவில் இசையுடன் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின் தமிழர்களின் சிறப்பான காவடியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம் என்னும் தமிழ் பேரொளி வழிபாடு, இதைப் பயின்று முதன் முதலாக அரங்கேற்றும் 250 பேர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு வெளிநாடுகளில் தமிழ் கலாசாரம் பரப்பிய குழுவினர் 500 பேர் பங்கேற்கும் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி, ஒயில் கும்மி, கோலாட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. தமிழர்களின் வீரத்தைப் பறை சாற்றும் சொட்டை முனை, கட்டுத்தடி, வேல் கம்பு, சுருள் வாள், சிலம்பாட்டம் நடக்கிறது. கொங்கு மண்ணின் வழிபாடான கம்பத்தாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் மற்றும் நையாண்டி மேளம், பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெறவுள்ளன. 

    • அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் .34 -க்கு உட்பட்ட புதுத்தெரு ஈசன் காம்ப்ளக்ஸ் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • முன்னதாக தமிழகத்தின் பாரம்பரிய பெருமை களையும், தொன்மைமிக்க அடையாளங்களை பறைசாற்றும் வகையில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் .34 -க்கு உட்பட்ட புதுத்தெரு ஈசன் காம்ப்ளக்ஸ் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்களான பொங்கல்பானையுடன் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு ஆகிய பொருட்களை வழங்கினார்.

    முன்னதாக தமிழகத்தின் பாரம்பரிய பெருமை களையும், தொன்மைமிக்க அடையாளங்களை பறைசாற்றும் வகையில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. எனது குப்பை, எனது பொறுப்பு, எனது நகரம் எனது பெருமை என்ற தூய்மை திட்டத்தின் கீழ் தூய்மையை வலியுறுத்தியும், தூய்மை இயக்கப் பணியில் மக்களை ஈடுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    புகையில்லா போகி, மாசு இல்லா போகியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. மேலும், போகி பண்டிகையால் ஏற்படும் புகை மாசுவை தவிர்க்க பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், வேலு சரவணனின் கடல் பூதம் என்ற தலைப்பில் நாடகமும் நடைபெற்றது.

    இவ்விழாவில் அம்மாப்பேட்டை மண்டல குழுத்தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள் இளங்கோ, உதவி ஆணையாளர் கதிரேசன், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சுமதி மற்றும் தன்னார்வ அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் தை பொங்கலை கொண்டாடும் விதமாக சமத்துவ பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தமிழர் பாரம்பரிய முறையில் பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் திருவிழாவினை கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் ஏ.கே.முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், திமுக பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் பலூன் உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ரஜினி ரசிகர் மன்றமும், பெரியசாமி நகர் பொதுமக்களும் இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு தைத்திருநாள்விழா நடைபெற்றது. வக்கீல் மாரீஸ்வரன், ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட இணை செயலாளர் தவமணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்கொடி, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் மகேஷ்பாலா, பா.ஜனதா வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் பழனிமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பெண்க ளுக்கான கோலப்போட்டி, பெரியவர் சிறியவர் மியூசிக்கல் சேர், பெரியவர் சிறியவர் பலூன் உடைத்தல், சிறுவர்க ளுக்கான ஓட்டப்பந்தயம், சிறுவ ருக்கான ஸ்லோ சைக்கிள் ரேஸ், சிறுவருக்கான சாக்கு போட்டி, தண்ணீர் நிரப்புதல். சிறுவர், சிறுமிகளுக்கான நடனப்போட்டி, பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் சிறுவர், சிறுமிகளுக்கான பரிசுப் பொருட்களை கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை முன்னாள் வியாபாரிகள் சங்கத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான முத்துராஜன், ரஜினி ரசிகர் மன்றமாவட்ட துணை செயலாளர் பெரியசாமி, நாதன், விஜய் ஆனந்த், வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம், ஐக்கிய அரபு அமீரக பொருளாளர் பொன்முருகன்லட்சுமண ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.

    தொழிலதிபர் அண்ணாதுரை, ஆசிரியர் வரப்பிரசாதம் கண்ணன், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திரசேகர், ஜோதி காமாட்சி, சையத் அலி, காளி ராஜன், சந்தன மாரியப்பன், முருகன், சதீஷ், ராஜீவ் காந்தி, மலர் மாடசாமி, கணேசன், சேக் முகமது உள்ளிட்ட ஏராளமான ரஜினி ரசிகர்கள் பெரியசாமி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • செவ்வாய்கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம்.
    • பொங்கல் வைப்பவர்களின் பெயர்களை ஒரு பானையில் போட்டு குலுக்கி எடுப்பார்கள்.

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி அம்மன் கோவில் முன்பு ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நகரத்தார்கள் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் தவறாமல் வந்து விடுவார்கள். கோவிலுக்கு முன்பாக உள்ள பொட்டலில் குடும்பத்திற்கு ஒரு புள்ளி என்ற கணக்கில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    ஒரு குடும்பத்தில் உள்ள ஆணுக்கு திருமணம் முடிந்தவுடன் அவர்கள் "ஒரு புள்ளியென" கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

    இதில் பொங்கல் வைப்பவர்களின் பெயர்களை ஒரு பானையில் போட்டு குலுக்கி எடுப்பார்கள். அதில் வரும் நபர் முதன்முதலில் பொங்கல் வைப்பார். அதன்பின்னர் தான் மற்றவர்கள் பொங்கல் வைப்பார்கள்.

    இந்த ஆண்டு நகரத்தார் சார்பில் 914 பேர் பொங்கலிட்டனர்.இதே போல் மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களும் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தனது குடும்பத்துடன் வந்து பார்த்தார்.

    • கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    • நிகழ்ச்சியில் இயற்கை விவசாயம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

    சார்ஜா:

    கிரீன் குளோபல் மற்றும் சார்ஜா புடினா லூலூ இணைந்து நடத்திய பிரமாண்ட பொங்கல் திருவிழா, சார்ஜா புடினா லூலூ ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கோலப் போட்டி, சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், ஓவிய போட்டி மற்றும் ஆண்கள், பெண்கள், சிறுவர்களுக்கான கலாச்சார உடை அணிவகுப்புகள் மற்றும் தமிழக பாரம்பரிய பரதம், சிலம்பம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஈமான் கலாச்சார மையம் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், அன்வர் குரூப்ஸ் ஆப் கம்பெனி உரிமையாளர் அன்வர்தீன், Sarab engineering உரிமையாளர் முஹமது அஸ்ஹர், S Events ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் இயற்கை விவசாயம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள். வணக்கம் Habibi குழுவினர் சார்பாக விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள்.

    இந்த நிகழ்வினை சமீர் மற்றும் ஆன்ட்ரியா தொகுத்து வழங்கினர், கிரீன் குளோபல் முனைவர் டாக்டர் ஜாஸ்மின் மற்றும் அல்மாஸ் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


    • தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கத்துடன் பெண்கள் முளைப்பாரி கொண்டு வந்து கும்மி அடித்து வழிபட்டனர்.
    • தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.

    அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) இணைந்து நடத்திய தித்திக்கும் பொங்கல் திருவிழா துபாய் அல் கிஸ்சாஸ் பகுதியில் அமைந்துள்ள வுட்லம் பள்ளி மைதானத்தில் டாக்டர். ஷீலா தலைமையில் நடைபெற்றது. பொங்கல் வைத்து, தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கத்துடன் பெண்கள் முளைப்பாரி கொண்டு வந்து கும்மி அடித்து வழிபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.

    இதில் தலைமை விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் Dr. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் துபாய் ஈமான் கலாச்சார மையம் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்கள் அரவிந்தன் குழும நிறுவனர் பிரபாகர், சல்வா குரூப்ஸ் நிறுவனர் பகவதி, செய்தியாளர்கள் அஸ்கர், நஜீம் மரிக்கா, கமால் K.V.L, ராஜு, கமால் பாட்சா பாலு, சாகுல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை ஜெகநாதன் மற்றும் அருணா தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    • மாசிக்கொடை விழா மார்ச் 5-ந்தேதி தொடங்குகிறது.
    • இந்த விழா 14-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு மாசிக்கொடை விழா அடுத்த மாதம் (மார்ச்) 5 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழா தொடங்குவதற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நேற்று முதல் கேரள பக்தர்கள் மண்டைக்காட்டிற்கு வர தொடங்கி உள்ளனர். அவர்கள் சுற்றுலா வேன்கள், பஸ்களில் வந்தனர். கேரள பக்தர்கள் கடலில் கால் நனைத்து கோவில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர்.

    கேரள பக்தர்களின் வருகையால் மண்டைக்காடு கோவில் சன்னதி, கோவில் வளாகம், பீச் சந்திப்பு, கடற்கரை போன்ற பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளது.

    • இன்று மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை நடைபெறும்.
    • ஏப்ரல் 3-ந்தேதி பகல் 11.25 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது.

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இப்பிறவியிலேயே துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதி கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய சக்தி சொரூபினியான பார்வதிதேவி. உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத இறுதியில் பொங்கல் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலும் பொங்கல் விழா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    2023-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதன்படி நாளை காலை 9.20 மணிக்கு தேவியை பாட்டுபாடி காப்புகட்டி குடியிருத்தி விழா தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு கேரள கல்வித்துறை மந்திரி வி.சிவன் குட்டி கலாசார கலை விழாவை தொடங்கி வைக்கிறார்.

    திருவிழாவை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், உஷபூஜை, கணபதி ஹோமம், திரவ்யகலசாபிஷேகம், மதியம் அன்னதானம், மாலையில் பஞ்சாலங்கார பூஜை, புஷ்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெறுகிறது.

    7-ம் திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி காலை வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு பகல் 11.25 மணிக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து மதியம் 1 மணி முதல் தாலப்பொலி உருள் நேர்ச்சை, மதியம் 2.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம், மாலை 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 6.45 மணிக்கு பஞ்ச அலங்கார பூஜை, 7.20 மணிக்கு குத்தியோட்டம், சுருள் குத்து, இரவு 10.35 மணிக்கு யானை மீது தேவி பவனி வருதல், 4-ந்தேதி இரவு 7.25 மணிக்கு காப்பு அவிழ்ப்பு, 12 மணிக்கு குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மோகன்தாஸ், செயலாளர் விஜயன், துணை தலைவர் சந்திர சேனன், இணை செயலாளர் விஜயகுமார் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

    • பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
    • ஒவ்வொறு வருடமும் சித்திரை மாத பவுர்ணமியன்று இக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் முத்து மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொறு வருடமும் சித்திரை மாத பவுர்ணமியன்று இக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல், நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு முத்து மாகாளியம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்பட்டது.

    விழாவில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், மாவிளக்குகளை கொண்டு சென்று மாவிளக்கு பூஜையும் செய்தனர். அதனைத் தொடர்ந்து வானவேடிக்கை நடைபெற்றது.

    நள்ளிரவு 12 மணியளவில், முத்து மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் திருவீதி உலா வந்தார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள், அம்மனுக்கு தேங்காய் உடைத்து, பழம் வைத்து வழிபட்டனர்.

    ×