search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காப்பீட்டு நிறுவனம்"

    • போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
    • இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

    இறந்ததாக போலி சான்றிதழ் வாங்கி 1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

    மும்பையில் 2021 ஆம் ஆண்டு 11 ஆம் தேதி கஞ்சன் ராய் என்பவர் இதய நோயால் மரணமடைந்துள்ளார். கஞ்சன் ராயின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது மகன் தன்ராஜ் 20.4 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுள்ளார்.

    இதே இறப்பு சான்றிதழை பயன்படுத்தி இன்னொரு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் 25 லட்ச ரூபாயை தன்ராஜ் பெற்றுள்ளார்.

    பின்பு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பவித்ரா என்பவர் உயிரிழந்துள்ளார். பவித்ராவின் இறப்பு சான்றிதழை சமர்ப்பித்து அவரது கணவர் ரோகித் 24.2 லட்ச ரூபாயை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி 30 ஆம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனம் ஆடிட்டிங் செய்த போது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு பெயர்களில் இன்சூரன்ஸ் பெற்றுள்ளதை பார்த்து சந்தேகம் அடைந்தது.

    இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் இது சம்பந்தமாக போலீசில் புகாரளித்தது.

    இந்த வழக்கின் விசாரணையில், 2 தனித்தனி ஆதார் மற்றும் பான் கார்டுகளை பயன்படுத்தி 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காஞ்சன் ராய் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பது தெரிய வந்தது.

    மேலும், காஞ்சன் ராய், பவித்ரா என்ற பெயரில் சமர்ப்பிக்கப்பட்ட போலியான 2 இறப்பு சான்றிதழ்களிலும் டாக்டர் யாதவ் என்பவர் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.

    இந்த மோசடி அம்பலமானதும் குற்றம் சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்த மோசடியில் இன்சூரன்ஸ் நிறுவனம், நகராட்சி அதிகாரிகள் உட்பட பலருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும்.
    • போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனம் என்னும் ஆட்சேர்ப்பு நிறுவனம் பயிர் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதற்காக பசல் பீமா உதவியாளர்களை ஆட் சேர்ப்பு செய்வதாக போலியாக விளம்பரம் செய்து, ஆந்திர மாநிலத்தில் 829 பசல் பீமா உதவியாளர் பணியிடங்களுக்கு அழைப்பு விடுத்து விண்ணப்ப கட்டணமாக ரூ.250/- வசூலித்து உள்ளது தெரிய வருகிறது. இந்த நிறுவனம் இந்திய வேளாண் அமைச்சகத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக பதிவு செய்யப்படாத ஒரு போலி நிறுவனம் ஆகும்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பதாரர்கள் எவரும் பாரதிய கூட்டுறவு பொது காப்பீட்டு நிறுவனத்தால் பயிர் காப்பீட்டு பணிக்காக வெளியிடப்படும் போலியான விளம்பரங்களை நம்பி பசல் பீமா உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் கோரிக்கை மனு அளித்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
    • தமிழ்நாடு அரசே முழு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கருப்பு பேச்சு அணிந்திருந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக குறுவைக்கு பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்காததை கண்டித்தும், சம்பா பயிருக்கு இதுவரை காப்பீடு அறிவிக்காததை கண்டித்தும் அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-காவிரி நடுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் படி தமிழ்நாட்டிற்கு மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் அரசு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    குறுவைக்கான பயிர் காப்பீடு திட்டத்திற்கு காப்பீட்டு நிறுவனங்கள் முன்வராத நிலையில் தமிழ்நாடு அரசே காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கி செயல்படுத்த வேண்டும்.

    ஆற்று பாதுகாப்பு கோட்டம் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் அய்யாசாமி பட்டி பகுதியில் முழுமை யாக தூர்வாரப்படாமல் பணி நடைபெற்றது. எனவே உரிய ஆய்வு மேற்கொண்டு தூர்வாரப்பட வேண்டும். தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசே முழு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதேபோல் ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • காப்பீட்டு நிறுவனம் ரூ.12.10 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு வழங்கியுள்ளது
    • லாரி காணாமல் போன வழக்கில் தீர்ப்பு

    கரூர்:

    காணாமல் போன லாரிக்கு காப்பீடுத்தொகை வழங்காத நிறுவனம் ரூ.12.10 லட்சம் வழங்க கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கரூர் கருப்பகவுண்டன்புதூர் கிழக்கை சேர்ந்தவர் பாலுசாமி. இவர் மனைவி ப்ரியா. இவர்கள் மகன்கள் நிதிஷ் (வயது 17), வேலுசாமி (9). பாலுசாமி கடந்த 2012-ம் ஆண்டு சொந்தமாக லாரி வாங்கியுள்ளார். கரூரை சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் 2012-ம் ஆண்டு பிப்.6-ந் தேதி ரூ.10 லட்சத்திற்கு லாரியை காப்பீடு செய்துள்ளார். வீட்டு முன் நிறுத்தியிருந்த லாரி மார்ச் 3-ந் தேதி காணாமல் போயுள்ளது.

    இதுகுறித்து போலீசில் புகார் அளித்த பாலுசாமி, காப்பீடு நிறுவனத்தில் இழப்பீடு கோரியுள் ளார். ஆனால், காப்பீடு நிறுவனத்திற்கு தாமதமாக தகவல் தெரிவித்ததாகக்கூறி காப்பீடு இழப்பீடு வழங்க மறுத்துவிட்டது.

    இதையடுத்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைத்தில் பாலுசாமி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நடந்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த 2016 -ம் ஆண்டு செப்டம்பர் 10 -ந் தேதி பாலுசாமி உயிரிழந்தார்.

    இவ்வழக்கை விசாரித்த ஆணையத்தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்னசாமி ஆகியோர் காப்பீட்டு தொகை ரூ.10 லட்சத்தை லாரி காணாமல் போன தேதியிலிருந்து 7.5 சதவீதம் வட்டியுடனும், சேவை குறைப்பாட்டுக்காக இழப்பீடாக ரூ.2 லட்சத்தை புகார் அளித்த தேதியிலிருந்து 7.5 சதவீதம் வட்டியுடனும் இத்தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் வழங்கவேண்டும். வழக்கு செலவாக ரூ.10,000 வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

    ×