search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளஸ்-2 மாணவி"

    • வாலிபர் மீது போக்சோ வழக்கு
    • 'நீ என்னை காதலிக்காவிட்டால் கொன்று விடுவேன்' என மிரட்டினராம்.

    குளச்சல் :

    கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி கேரள மாநிலம் பொழிவூர் பருத்தியூர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தார். அப்போது அவரை வாலிபர் வின்சென் (வயது24).என்பவர் பார்த்து ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மாணவி பள்ளிக்கு செல்லும் வழியில் வின்சென் தனது காதலை மாணவியிடம் கூறினாராம். இதனை மாணவி வீட்டில் கூறியுள்ளார். வீட்டினர் கடந்த 6 மாதம் முன் வின்செனை கண்டித்தார்கள். கடந்த மாதம் 10 ம் தேதி மாணவி பள்ளிக்கு செல்லும்போது வின்சென் மீண்டும் மாணவியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 'நீ என்னை காதலிக்காவிட்டால் கொன்று விடுவேன்' என மிரட்டினராம்.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி மாலை வீடு வந்து மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.வீட்டினர் மாணவியை மீட்டு பாறசாலையில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு மாணவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று கடந்த

    21-ந் தேதி வீடு திரும்பினார்.

    இந்த சம்பவத்தால் பயந்து போன மாணவியின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வின்சென் மீது போக்சோ மற்றும் மாணவியை தற்கொலைக்கு தூண்டியது உள்பட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதலனுக்கு போலீஸ் வலை வீச்சு
    • கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அவர் திடீ ரென மாயமாகி விட்டார். இதைத் தொடர்ந்து உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் பெ ற்றோர் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த அனீஸ் குமார் என்பவரையும் காணவில்லை என பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. எனவே அவர் தான், தங்கள் மகளை கடத்தி சென்று உள்ளார் என்று கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    இதற்கிடையில் அனீஸ்குமாரும் இளம்பெண்ணும் காதலித்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வடக்கு குண்டல் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இளம்பெண் மட்டுமே இருந்துள்ளார். அனீஸ்குமார் தப்பி சென்று விட்டார். இதை த்தொட ர்ந்து போலீசார், மாண வியை மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் அனீஸ் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • பிளஸ்-2 மாணவி கர்ப்பமானார்.
    • வாலிபர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் மாணவியை சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு பரிசோதனை நடத்தியதில் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவியின் பெற்றோர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அங்கும் மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து மாணவியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    சிவகாசி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சுடலைமணி என்பவரும், மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுடலைமணி மாணவியிடம் நெருங்கி பழகி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுடலைமணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீரா தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.
    • வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் வீடுதிரும்பவில்லை

    கடலூர்:

    பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மீரா (17), தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார். இவர்,நேற்று காலை10மணிக்கு டியூஷன் சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்துபுறப்பட்டுசென்றவர் வீடுதிரும்பவில்லை.பலஇடங்களில்தேடியும் எங்கும் கிடைக்காததால் மீராவின் தந்தை முருகன்பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகிறார்.

    • இளம்பெண், பிளஸ்-2 மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் வில்வராணி(வயது40), இலுப்பைகுளம் நடுநிலைப்பள்ளியில் சத்துணவு பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் வில்வராணியின் தங்கை வீட்டில் தங்கி திருச்சுழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்த நிலையில் வெளியே செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து நரிக்குடி போலீஸ் நிலையத்தில் வில்வராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கட்டையதேவன் பட்டியை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி முத்து லட்சுமி(27). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. சிவா திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனால் முத்துலட்சுமி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    அங்கிருந்த அவர் குழந்தைகளை விட்டுவிட்டு மாயமானார். எங்கு சென்றார் என தெரிய வில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. மகளை கண்டுபிடித்து தருமாறு முத்துலட்சுமியின் தந்தை கண்ணன், நத்தம்பட்டி போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள ஏ.புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா(80). வெளியே செல்வதாக கூறிச்சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மகள் தமிழ்செல்வி அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பிளஸ்-2 மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை பெத்தானி யாபுரம் மேட்டுத்தெரு கோடாங்கி காம்பவுண்டை சேர்ந்தவர் விஜய்பாண்டி, ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அன்னலட்சுமி(42). இவர்களது மகள் அர்ச்சனா(19), பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

    அன்ன லட்சுமியும், மகனும் சேர்ந்து ஆரப்பாளையம் கண்மாய் கரை பகுதியில் சிக்கன் கடை வைத்துள்ளனர். கடந்த 6-ந் தேதி மதியம் அன்னலட்சுமி சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்தபோது அர்ச்சனா மாயமாகி விட்டது தெரியவந்தது.

    பல இடங்களில் தேடிப்பா ர்த்தும் தகவல் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து தாயார் கரிமேடு போலீசில் புகார் செய்தார். அதில், தங்கள் கடைக்கு வந்து செல்லும் கண்மாய் கரையை சேர்ந்த கவுதம் என்பவர் அர்ச்சனாவை அழைத்து சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிளஸ்-2 மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற வாலிபர் போதையில் இருந்தாரா?
    • இன்ஸ்டா காதல் மூலம் பழகிய மாணவி விபத்தில் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கன்னியாகுமரி :

    சமூக வலைதளங்கள் பல்வேறு நன்மைகளை அளித்தாலும் சில விரும்பதகாத செயல்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் குமரி மாவட்டத்தில் நடைபெற்று பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியை மயக்கிய வாலிபர் அவரை கடத்திச் சென்றபோது, விபத்தில் சிக்கி உள்ளார். இதில் மாணவி பலியான சம்பவம் தான் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவையைச் சேர்ந்தவர் லாசர்மணி. இவர் இறந்து விட்ட நிலையில் மகள் அபர்ணா (வயது 16) தனது தாய் மற்றும் சகோதரியுடன் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். பிளஸ்-2 தேர்வு எழுதிய இவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குளச்சல் களிமார் பகுதியைச் சேர்ந்த விஜூ (19) இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார்.

    இது பற்றி தெரியவந்ததும் அபர்ணாவை அவரது தாயார் தமிழரசி கண்டித்துள்ளார். மேலும் விஜூவையும் அவர் எச்சரித்துள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக அபர்ணாவை சந்திக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அபர்ணா வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்த விஜூ, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார்.

    மாணவி அபர்ணாவை சந்தித்த அவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். பின்னர் அவர் அபர்ணாவை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளார். மண்டைக்காடு அருகேஉள்ள வெட்டு மடை பகுதியில் சென்ற போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் அபர்ணா மாயமானது குறித்து, அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்தார். அப்போது தான் மகள் கடத்தப்பட்டதும், விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருப்பதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார். தொடர்ந்து மகள் அபர்ணாவை, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபர்ணா பரிதாபமாக இறந்தார். இன்ஸ்டா காதல் மூலம் பழகிய மாணவி விபத்தில் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் அபர்ணாவை கடத்திச் சென்ற விஜூ, போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பிறகு தலையில் காயம் அடைந்த அபர்ணாவை சாலையில் அப்படியே விட்டுவிட்டு விஜூ சென்று விட்டதாகவும், பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. விஜூ, மோட்டார் சைக்கிளில் செல்லும் போது போதையில் இருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • 18 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • மாணவி பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.

    கோவை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பரா ம்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு ஆனைமலையை சேர்ந்த பவின் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களது மகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் கற்க வைத்தனர். ஆனாலும் மாணவி பவினுடனான காதலை தொடர்ந்து வந்தார்.

    சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் தங்களது மகள் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடினர். அப்போது தனது காதலன் வீட்டில் உள்ள மொட்டை மாடியில் மாணவி இருப்பது தெரிய வந்தது. போலீசார் மாணவியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற பவினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
    • மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவானந்தா காலனியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கோவை,

    கோவை துடியலூர் அருகே உள்ள சாமிசெட்டி ப்பாளையத்தை சேர்ந்த 19 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சிவானந்தா காலனியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று மாணவியின் தந்தை அவரை தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று விட்டார். மாலையில் சென்று பார்த்த போது மாணவி மாயமாகி இருந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. கடந்த 19-ந் தேதி தனது தந்தையை தொடர்பு கொண்ட மாணவி தான் ஒரு வாலிபரை திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என கூறினார். பின்னர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டார்.

    இது குறித்து மாணவியின் தந்தை மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி பெரிய நாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • அம்ரிஷா பானு பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராஜா மில் ரோட்டை சேர்ந்தவர் மைசூர் ரகுமான். இவரது மகள் அம்ரிஷா பானு (வயது 16). இவர் பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு தனது அம்மாவின் கடைக்கு சோர்வுடன் சென்றார். பின்னர் அவரிடம் வீட்டு சாவியை வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த அவர் விஷத்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.

    இரவு 7.30 மணியளவில் அம்ரிஷா பானுவின் மாமா சதாம் உசேன் என்பவர் உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனையடுத்து அவர் தனது மனைவியுடன் சேர்ந்து கதவை திறந்து வீட்டிற்குள் சென்றார்.

    அப்போது வீட்டில் உள்ள படுக்கை அறையில் அம்ரிஷா பானு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி மேற்கு போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கான காரணம் குறித்து அம்ரிஷா பானுவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் தனது பள்ளியின் இயற்பியல் ஆசிரியை மற்ற மாணவிகள் மத்தியில் திட்டியதால் மனவேதனை அடைந்து வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறினார். இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள கொங்கன்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மாலதி. பிளஸ்-2 படித்து வந்த இவருக்கு வயிற்கு வலி இருந்து வந்தது. இதனால் விரக்தியடைந்த மாலதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    காரியாபட்டி பாண்டியன்நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மூக்காயி (48) இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக மூத்த மகள் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூக்காயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன் பாறையை சேர்ந்தவர் சோலைசாமி. இவரது மகன் சதீஸ்வரன் (28). திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தார். ஆனால் அதன் பின் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த சதீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் கல்யாணி(24). இவரது கணவர் கணேஷ் 2 மாதமாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்த கல்யாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கிருத்திகா அதே பகுதியில் உள்ள பேர்பெரியான்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கிருத்திகாவை பல இடங்களில் தேடினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல் காங்கேயன் குப்பத்தை சேர்ந்த வேல்முருகன். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள பேர்பெரியான் குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் பள்ளியில் இருந்து வகுப்பாசிரியர் மாணவி வீட்டுக்கு போன் செய்து கிருத்திகா ஏன் தேர்வு எழுத வரவில்லை என்று கேட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கிருத்திகாவை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து முத்தாண்டிகுப்பம் போலீசில் மாணவியின் தாயார் மங்கையர்கரசி புகார் கொடுத்தார். முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

    ×