search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தர்கள் பலி"

    • வடமாநிலங்களில் புகழ் பெற்றது கன்வார் யாத்திரை.
    • 3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர்.

    வடமாநிலங்களில் புகழ் பெற்ற கன்வார் யாத்திரை நடந்து வருகிறது. நேற்று கன்வார் பக்தர்கள் பீகாரில் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில் ஜலஅபிஷேகம் செய்வதற்காக கார்களில் சென்று கொண்டிருந்தனர்.

    வைசாலி மாவட்டத்தில் அந்த யாத்திரை சென்று கொண்டிருந்த போது சுல்தான்பூர் என்ற கிராமத்தில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. மின்சார வயர் ஒரு காரின் மீது விழுந்ததில் அந்த காரில் இருந்த 9 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

    3 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர். இதுகுறித்து வைசாலி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுற்றுலா வேன் அல்க்நந்தா ஆற்றுப்பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சுற்றுலா வேனில் பத்ரிநாத் கோவிலுக்கு 17 பேர் சென்றனர்.

    அலக்நந்தா ஆற்றுப்பகுதியில் சுற்றுலா வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    • ருத்ரபிரயாக்கில் நடந்த சாலை விபத்து குறித்து சோகமான செய்தி கிடைத்தது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 12 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் நடந்த சாலை விபத்து குறித்து சோகமான செய்தி கிடைத்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உள்ளூர் நிர்வாகம் மற்றும் SDRF குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.

    இதனிடையே, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ருத்ரபிரயாக் சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்த பயணிகள் விமானம் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

    • அல்க்நந்தா ஆற்றில் டெம்போ வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • பக்தர்கள் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சுற்றுலா வேனில் பத்ரிநாத் கோவிலுக்கு 17 பேர் சென்றனர்.

    அல்க்நந்தா ஆற்று பகுதியில் சுற்றுலா வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த விபத்தில் பக்தர்கள் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் வழிபாடு நடந்து கொண்டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது.
    • சூறைக்காற்றில் கோவில் முன்பு இருந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பாலபூர் தேசில் பகுதியில் பிரசித்தி பெற்ற பாபுஜி மகராஜ் மந்திர் சன்ஸ்தான் உள்ளது.

    இக்கோவிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வழிபாடுக்கு வருவது வழக்கம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் மாலை நேர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

    இக்கோவிலின் முன்பு தகர கொட்டகை ஒன்று போடப்பட்டு உள்ளது. அதன் அருகே மிகவும் பழமையான வேப்பமரம் ஒன்று இருந்தது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டு நேரத்தில் தகர கொட்டகையில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம்.

    நேற்று வழிபாடு நடந்து கொண்டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் கோவிலுக்கு முன்பு நின்ற வேப்ப மரம் பேயாட்டம் ஆடியது. இதை கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் தகர கொட்டகையில் ஒதுங்கினர்.

    100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தகர கொட்டகைக்குள் நெருக்கியடித்த படி நின்றனர். அப்போது வீசிய சூறைக்காற்றில் கோவில் முன்பு இருந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது.

    இதில் தகர கொட்டகை இடிந்து விழுந்தது. அதனுள் நின்ற மக்கள் அனைவரும் தகர கொட்டகைக்குள்ளும், மரத்தின் அடியிலும் சிக்கி கொண்டனர். இதனை கண்டு கோவிலுக்கு உள்ளே இருந்த பக்தர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்தனர். அவர்கள் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட பக்தர்களை மீட்க முயன்றனர்.

    மேலும் இதுபற்றி தீயணைப்பு நிலையத்தினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். விடிய, விடிய இந்த மீட்பு பணி நடந்தது.

    இந்த விபத்தில் மரத்தின் அடியில் சிக்கி கொண்ட 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அகோலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் பற்றி தெரியவந்ததும் மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அகோலா மாவட்ட நிர்வாகத்தை அழைத்து விபரம் கேட்டார். பின்னர் மீட்பு பணிகளை முடுக்கி விடும்படி அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

    இந்த விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், பக்தர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் கிடைக்க முதல் மந்திரி ஏக்நாத் சின்டே நடவடிக்கை எடுப்பார் எனவும் கூறினார்.

    • ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.
    • ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஆனைக்கட்டி என்ற இடம் உள்ளது.

    இங்கு பிரசித்தி பெற்ற ஆணிக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. நீலகிரியில் வாழும் மலைவாழ் மக்களான படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். இவர்களை தவிர சுற்றுவட்டார பகுதி மக்களும் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தனர்.

    தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அந்த கோவிலில் தீப வழிபாடு நடந்து வந்தது. இதனால் இந்த மாதம் முழுவதும் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்படும்.

    மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியின் நடுவில் உள்ள இந்த கோவிலுக்கு அங்குள்ள கெதறல்லா ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். ஆற்றை கடக்க தரைப்பாலம் ஒன்று உள்ளது. அதன் வழியாகத்தான் பக்தர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.

    நேற்று மாலையும் அந்த கோவிலில் 800-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு இருந்தனர். வழிபாடு முடிந்து பக்தர்கள் இரவு நேரமானதும் அங்கிருந்து வீட்டுக்கு புறப்படத் தயாரானார்கள்.

    பக்தர்களில் ஒரு பகுதியினர் தரைப்பாலத்தை கடந்து ஆற்றின் மறுகரைக்கு வந்து கொண்டு இருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டோடியது. இதை சற்றும் எதிர்பாராத பக்தர்கள் அலறி அடித்து மீண்டும் கோவில் உள்ள ஆற்றங்கரைக்கு தப்பி ஓடினர்.

    ஆனால் 4 பெண் பக்தர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். அவர்களை ஆற்று வெள்ளம் காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. தண்ணீர் பெருக்கெடுத்து வந்ததாலும், இருள் சூழ்ந்து இருந்ததாலும் 4 பேரையும் மீட்க முடியவில்லை.

    இதுபற்றி தீயணைப்பு வீரர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கரைக்கு வர முடியாமல் கோவில் பகுதியில் தவித்தவர்களை கயிறு கட்டி மீட்டனர். குழந்தைகள், பெரியவர்கள் என ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். மொத்தம் 800 பேரை கயிறு கட்டி மீட்டனர்.

    வெள்ளத்தில் சிக்கிய பெண்கள் குறித்து மசினக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கவரட்டி, ஜெக்கலொரை என்ற இடத்தைச் சேர்ந்த சரோஜா (வயது 65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடும் பணி தொடங்கியது. இரவு வெகு நேரமாகி விட்டதால் அவர்களை தேடும் பணி பாதிக்கப்பட்டது.

    இன்று காலை மாயமான 4 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். படகு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஆற்றில் இறக்கி மீட்பு பணி நடந்தது.

    வெள்ளத்தில் சிக்கி மாயமான பெண்களை உயிருடன் மீட்க முடியவில்லை. அவர்கள் இறந்த நிலையில் பிணமாக த்தான் மீட்கப்பட்டனர்.

    முதலில் வாசுகி, சரோஜா ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையில் மற்ற 2 பெண்களின் உடல்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அவர்களின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வரும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண் பக்தர்கள் பலியான சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது மனதை உருக்குவதாக இருந்தது.

    • எதிரே வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
    • மோதிய வேகத்தில் டிராக்டரை லாரி 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சூர்யா பேட்டை அடுத்த முனுகளா பகுதியே சேர்ந்த 38 பேர் அருகில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜையில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை டிராக்டரில் சென்றனர்.

    நள்ளிரவு பூஜை முடிந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் அதிகாலை 3 மணிக்கு டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    நெடுஞ்சாலை வழியாக சென்றால் சுமார் 2 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு வரவேண்டும்.

    எனவே நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் டிராக்டரை டிரைவர் ஓட்டிக்கொண்டு வந்தார்.

    அப்போது எதிரே வேகமாக வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் டிராக்டரை லாரி 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது

    டிராக்டரில் சென்றவர்கள் நாலாபுறமும் சிதறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து அபய குரல் எழுப்பினர்.

    இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தனர். அவர்கள் விவரம் வருமாறு, கோட்டைய்யா (வயது 45), ஜோதி (38), பிரமிளா (35), சிந்த காய் பிரமிளா (32), லோகேஷ் (10). மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சூர்யா பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிருஷ்ணன் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா வீடு-பான்கே பிகாரி என்ற கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நள்ளிரவு விசேஷ பூஜை நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
    • கோவில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தனர்.

    மதுரா:

    கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடந்தது.

    கிருஷ்ணன் பிறந்த இடமாக கருதப்படும் மதுரா வீடு-பான்கே பிகாரி என்ற கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நள்ளிரவு விசேஷ பூஜை நடந்தது.

    இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

    கோவில் நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தனர்.

    அப்போது கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சில பக்தர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது கூட்டத்துக்குள் மாட்டிக்கொண்ட ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.

    6 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

    ×