என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புவிசார் குறியீடு"

    • புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சட்டசபையில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற் குறிப்பு அரசிடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-

    சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளுக்கு புவிசார் குறியீடு பெறும் செயற்குறிப்பு தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை. புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும்.

    புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவுப் பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்திய அளவில் 64 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு 2-ம் இடத்தில் உள்ளது. கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, பண்ருட்டி பலாப் பழம்-முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, பெரம்பலூர் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பாகவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆத்தூர் வெற்றிலை, கோவில்பட்டி கடலை மிட்டாய், உடன்குடி பனங் கருப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவற்றிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், செட்டிநாடு கைமுறுக்கு-சீடை, கோவில்பட்டி சீவல், ராமநாதபுரம் பட்டறை கருவாடு-பனங் கற்கண்டு ஆகியவற்றிற்க்கு எம்.எஸ்.எம்.இ. துறையின் மூலம் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    ஒரு பொருளுக்கு புவி சார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும். அப்பொருள்களுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் .

    தீப்பெட்டி தொழிலை பொருத்தமட்டில் சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் 566 நிறுவனங்களும் கோவில்பட்டியில், சுமார் 400 நிறுவனங்களும், தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்று வருகிறது.

    தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூலம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த சுமார் 28 ஆயிரத்து 300 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதோடு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தீப்பெட்டி களின் தனித்துவத்தை உலகம் முழுவதும் அறிய செய்யவும், விற்பனையை அதிகரிக்கவும் எம்.எஸ். எம்.இ. துறையின் சார்பில் ஆல் இந்தியா சேம்பர் ஆப்-மேட்ச் பேக்டரி சிவகாசி, தமிழ்நாடு சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சிவகாசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

    இதற்கான செலவினத்தில் 50 சதவிகிதத் தொகையை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் மானியமாக வழங்கப்படும் என அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் சங்க உறுப்பினர்கள் தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், சிவகாசி, சாத்தூர், கோவில்பெட்டி ஆகிய பகுதிகளில் உற்பத்தி செய்யபடும் தீப்பெட்டி தோன்றியதற்கான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆவணங்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. எழுந்து இதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், வரலாற்று ஆவணத்தை அளித்தால் ஆய்வு செய்து, சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

    • கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
    • புவிசார் குறியீடு அங்கீகாரத்தில் இந்திய அளவில் 69 பொருட்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

    சமீபத்தில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் ராமநாதபுரம் சித்துறைகார் அரிசி ஆகிய பொருட்களுக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

    தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

    புவிசார் குறியீடு அங்கீகாரத்தில் இந்திய அளவில் உத்தரப்பிரதேசம் 79 பொருட்களுடன் முதல் இடத்திலும், 69 பொருட்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்திலும் உள்ளது.

    • மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
    • வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு வட்டார பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து விளாச்சேரி களிமண் பொம்மை உட்பட பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன

    இந்நிலையில் கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதல்முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது.

    சென்னை:

    உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றை பிற பகுதியினர் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

    உலக வர்த்தக மையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் பொருட்களுக்கு இங்கு விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது.

    இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பொருளுக்கான உரிமை மற்றும் தொழில் பாதுகாப்பை பெற முடியும். டெல்லியிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ ஒரு பட்டுப் புடவையை நெய்து, அதனை 'காஞ்சிப் பட்டு' என்று விற்க முடியாது. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கும்பகோணம் வெற்றிலை, மதுரை மல்லி, கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் என ஏராளமான பொருட்களுக்கு 'புவிசார் குறியீடு' கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பாக கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை, ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி மற்றும் சேலம் கண்ணாடி கத்திரி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டு சென்னையில் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

    இந்தப் பொருட்கள் உற்பத்தியாகும் உள்ளூர் சங்கங்கள் இணை விண்ணப்பதாரர்களாகவும், நபார்டு மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் பார்ம் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. வக்கீல் சஞ்சய் காந்தி மூலம் இந்த விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக நாட்டுச் சர்க்கரை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள், தங்களுக்கென சொந்தமாக உள்ள நிலத்தில் கரும்பு பயிரிட்டு, அந்த கரும்பை தங்களின் சொந்த ஆலையிலேயே ஆட்டி, அந்த கரும்பு பாலில், தூய கலப்படமில்லாத நாட்டுச் சர்க்கரையை தயாரிக்கின்றனர். பழனி பஞ்சாமிர்தம் ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்ற நிலையில் அந்த பஞ்சாமிர்தத்தை ருசிக்க செய்வது கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரையே.

    ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது. இதுவே ஆரம்பகால சிவப்பு அரிசி வகை என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின்போது நெல் வகை முற்றிலும் அழிந்த நிலையில் அதன்பின், அருகில் உள்ள சிக்கல் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை அரிசி கஞ்சி பல மணி நேரம் பசியைத் போக்குகிறது.

    சேலம் கண்ணாடி கத்திரிக்கு விண்ணப்பித்த சேலம் விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-

    சேலம், ஈரோடு பகுதிகளில், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது. அது பளபளப்பாகவும் ஊதா நிறமாகவும் இருந்தது. இந்த குறிப்பிட்ட கத்திரிக்காய் மெல்லிய தோல் மற்றும் அதிக அளவு சதை கொண்டது. அதிக விதைகள் இருந்தாலும், அவை மென்மையாகவும், உணவில் சுவையை கூட்டுவதாகவும் உள்ளது.

    • வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுடலாம், பார்பிக்யூட் செய்யலாம், வறுக்கவும், வேகவைக்கவும் அல்லது ஊறுகாய்களாகவும் செய்யலாம்.
    • ராமநாதபுரம் குண்டு மிளகாய் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக விளையும் வேலூர் இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய், ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு (ஜி.ஐ) புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம், புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற மொத்த தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து, மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. கர்நாடகா 46 அதிகபட்ச புவிசார் குறியீடுகளைப் பெற்றுள்ளது. கேரளா 36 தயாரிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    தமிழில் இலவம்பாடி முள்ளு கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய, முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும்.

    இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும். ஒரு கத்தரிக்காயின் சராசரி எடை 40 கிராம் ஆகும், மேலும் அறை வெப்பநிலையில் 3 நாட்களும், குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறத்தில் சுமார் 8 நாட்களும் இருக்கும்.

    புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது மற்ற கத்தரி வகைகளை விட சுவையாக இருக்கும்.

    பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இதற்கு உண்டு. செடியின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் முட்கள், பயிரை மிகவும் தனித்துவமாகவும், அடையாளம் காணக்கூடியதாகவும் ஆக்குகின்றன.

    இது மென்மையாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் உள்ளது. மேலும் இது கொத்தாகத் தொங்கும் இது 140-150 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 40-45 டன்கள் மகசூல் தரும்.

    வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுடலாம், பார்பிக்யூட் செய்யலாம், வறுக்கவும், வேகவைக்கவும் அல்லது ஊறுகாய்களாகவும் செய்யலாம்.

    இது பிரியாணி, பிரிஞ்சி சேர்வா, சாம்பார், பொரியல் மற்றும் மாலை நேர சிற்றுண்டிகளுடன் விருப்பமான உணவாகும்.

    இது அதிக வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டது.

    "முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வேலூர் உழவர் சந்தை தொடங்கி வைக்கும் போது, குறிப்பாக வேலூர் முள்ளங்கி கத்தரிக்காயை குறிப்பிட்டு, அதன் அரிய குணங்களை விவரித்தார்.

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் தமிழில் 'கொழுப்பு மற்றும் உருண்டை' என்று பொருள்படும், கேபிசுமன்னம் இனத்தைச் சேர்ந்தது.

    இது தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமான ஒரு குண்டு வடிவ மிளகாய். இது கருமையான பளபளப்பான மற்றும் அடர்த்தியான தோலைக் கொண்டுள்ளது.

    திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி பகுதிகளில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியான சாகுபடி செய்து வருகின்றனர். அதன் செழுமையான சுவை நறுமணத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    ராமநாதபுரம் குண்டு மிளகாய் இலங்கை, நேபாளம், அமெரிக்கா, ஐரோப்பா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    • முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கொண்டது.
    • ராமநாதபுரம் முண்டு மிளகாய் வர்த்தக சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் முண்டு மிளகாய் மருத்துவ குணம் கொண்டது என்பதால் அதற்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. இலங்கை, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் இந்த முண்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது.

    இதன் மகத்துவம் உணர்ந்து ராமநாதபுரம் மாவட்ட முண்டு மிளகாய்க்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்க தலைவர் மங்களசாமி கூறி யதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலை பயிர்களில் 'முண்டு மிளகாய்' ரகமும் ஒன்று என்பதால், அதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று ராமநா தபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பில் 2013-ம் ஆண்டு முதல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். தற்போது புவிசார் குறியீடு கிடைத்து இருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் வரப் பிரசாதம்.

    இதன் மூலம் முண்டு மிளகாய் விலை அதிகரித்து விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர்கள் மத்தியில் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். அங்கீகாரம் வழங்கிய மத்திய அரசுக்கு ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் வர்த்தகர்கள் வணிகர்கள் சங்கம் சார்பாக நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புவிசார் குறியீடு ஊட்டி வர்க்கிக்கு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது.
    • ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி சுற்றுலா தலங்களுக்கு மட்டும் பிரபலமானது அல்ல. நீலகிரியில் கிடைக்கும் சுவையான, மொறு மொறுப்பான வர்க்கிக்கும் பிரபலமானது தான்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் விருப்பமான ஒரு நொறுக்கு தீனியாகவே இது இருந்து வருகிறது.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இதனை வாங்காமல் மலையை விட்டு இறங்குவது கிடையாது. அந்தளவுக்கு இந்த வர்க்கி அனைவர் மத்தியிலும் பிரபலம் அடைந்துள்ளது.

    இப்படி பிரபலமான இந்த வர்க்கி எப்படி உருவானது என்பதை பார்க்கலாம். ஆங்கிலேயேர்கள் ஆட்சியில் அவர்கள், அதிகமான பேக்கிங் பொருட்களை தயாரித்து உட்கொண்டனர். அப்படி அவர்கள் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதான் குக்கிஸ் (பிஸ்கெட்). அது அவர்களின் பிரதான நொறுக்குத்தீனியாகவே இருந்தது.

    காலையில் நீலகிரியின் மணம் கமழும் தேநீரோடு, சில, பல குக்கிகளை விழுங்குவது, அவர்களது வழக்கம். அப்போது அவர்களிடம் பணியாற்றிய சில சமையல்காரர்கள், அந்த பிஸ்கட்டை அடிப்படையாக வைத்து புதுச்சுவையில் ஒரு வகை நொறுக்குத்தீனியை உருவாக்கினர்.

    அந்த நொறுக்குத்தீனி தான் வர்க்கி. மொறுமொறுவென்று இருந்த அதன் புதுச்சுவை ஆங்கிலேயர்களுக்கு பிடித்து போக தற்போது அது நீலகிரியின் அடையாளமாகவே மாறி விட்டது.

    குக்கிஸ் பொருளுக்கு மாற்றாக, 'வற வற' என, இருந்ததால், அந்த தின்பண்டம் 'வறக்கிஸ்' என முதலில் அழைக்கப்பட்டது. பின்பு வர்க்கி என பெயர் மருவியது. ஆங்கிலேயர் காலத்தில், நெய் கலந்த மாவு பொருளை, நெய்யில் வறுத்து எடுத்ததால் இதற்கு வர்க்கி' என்ற பெயர் வந்தது என மற்றொரு தகவலும் உண்டு.

    நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வர்க்கிகள், தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள பேக்கரிகள், டீ கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் விற்கப்படுகின்றன.

    உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இந்த ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு பெற அதன் உற்பத்தியாளர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது அவர்களின் முயற்சியின் பலனாக ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    பல கட்ட ஆய்வுக்கு பின் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி புவிசார் குறியீடு இதழில் ஊட்டி வர்க்கிக்கு, புவிசார் குறியீடுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குள் அதாவது மார்ச் 30-ந் தேதிக்குள் இதற்கு ஆட்சேபம் எழுந்தால் அந்த விண்ணப்பம் மறுபரிசீலனைக்கு உள்ளாகும்.

    இல்லாவிடில் அந்த பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு விடும். அதன்படி வருகிற 31-ந் தேதியில் இருந்து ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு என்கிற மகத்தான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.

    புவிசார் குறியீடு ஊட்டி வர்க்கிக்கு கிடைப்பது ஊட்டியின் பாரம்பரியத்துக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக கருதப்படுகிறது. மேலும் ஊட்டியை தவிர வேறு எங்கு தயாரிக்கும் வர்க்கியையும் ஊட்டி வர்க்கி என்ற பெயரில் விற்பனை செய்வதை, சட்டப்பூர்வமாக தடுக்க முடியும்.

    இதுகுறித்து வர்க்கி உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் முகம்மது பரூக் கூறும் போது, ஊட்டி வர்க்கிக்கு கிடைக்கும் இந்த அங்கீகாரம் எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இதனை தரமானதாக தயாரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வை இந்த அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஏற்கனவே குறியீடு பெற்றுள்ள ஊட்டி டீயுடன் வர்க்கியும் சேர்வது இணையற்ற சுவையாக அமைய உள்ளது என்றார்.

    இதேபோல் ஊட்டி வர்க்கியுடன் சேர்த்து அதே நாளில் மணப்பாறை முறுக்குக்கும் புவிசார் குறியீடு கிடைக்க உள்ளது. இது தமிழகத்தின் பாரம்பரிய உணவு பொருளுக்கான பெருமையை உலகறிய செய்யும். இவற்றுடன் மண்பாண்டத்துக்கு பெயர் பெற்ற மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக்கருவியான கடம், கன்னியாகுமரி மாவட்டத்தில் தயாராகும் கைவினை பொருளான மயிலாடி கல் சிற்பங்களுக்கும் புவிசார் குறியீடு என்ற பெருமை கிடைக்க உள்ளது.

    • இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது.
    • இந்தியாவிலேயே புவிசார் குறியீடு அதிக அளவில் பெற்றுள்ள மாநிலமாக முதல் இடத்தில் தமிழ்நாட்டில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை மாவட்டம் தைக்கால் பிரம்பு வேலைப்பாடு உள்பட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான சஞ்சய்காந்தி கூறினார்.

    இது தொடர்பாக அவர் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    இந்தியாவில் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே தஞ்சாவூர் வீணை, பொம்மை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்பட 45 பொருட்களுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    அந்த வகையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு , ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி ஆகிய 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு ஏற்கனவே விண்ணப்பிக்கபட்டது.

    பல ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்து இந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டோம். அனைத்து ஆய்வுகளும் முடிந்த பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. 4 மாதங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. மேற்கூறிய 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைப்பதில் எந்தவித எதிர்ப்பும் இல்லாததால் அந்த பொருட்கள் அனைத்தும் சட்டப்படி புவிசார் குறியீடு பெற்றதாக அறிவிக்கப்படும். இன்று அரசு அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடும். இதன் மூலம் 11 பொருட்களுக்கும் புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 15-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்க தமிழ்நாடு அரசு விண்ணப்பம் செய்துள்ளது. அந்த பொருட்களுக்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கும்.

    புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அந்த பொருள் தனி தன்மை பெறுகிறது. வெளிநாடுகளுக்கும் எளிதாக ஏற்றுமதி செய்யலாம். பொருட்களை தயாரிப்பவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக பார்க்கப்படுவர். அவர்களுக்கு அதிகளவில் லாபம் கிடைக்கும். இன்று கிடைக்கும் 11 பொருட்களையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே புவிசார் குறியீடு அதிக அளவில் பெற்றுள்ள மாநிலமாக முதல் இடத்தில் தமிழ்நாட்டில் உள்ளது.

    இரண்டாம் இடத்தில் கர்நாடகம், மூன்றாவது இடத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்டதாகும்.
    • கொல்லிமலையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளன.

    நாமக்கல்:

    ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச்சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி மரச்சிற்பம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, பத்தமடை பாய் உள்ளிட்ட பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. சேலம் ஜவ்வரிசி உள்பட 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரை தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, மற்ற பகுதி மிளகுகளை காட்டிலும் காரத்தன்மை அதிகம் கொண்டதாகும். எனவே கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்பது அங்கு வாழும் பழங்குடியின விவசாயிகளின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இதற்கான நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படும் கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 4,663 அடி உயரம் கொண்டது. 280 சதுர கி.மீட்டர் பரப்பளவை கொண்ட இந்த மலைப்பகுதியில் 14 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் பழங்குடியின மக்கள் மா, பலா, வாழை, அன்னாசி, மிளகு, நெல், மரவள்ளி, சிறு தானியங்கள் பயிரிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

    இதில் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குவது கொல்லிமலை மிளகு. கொல்லிமலையில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிடப்பட்டு உள்ளன.

    சில்வர்ஒக் மரங்களில் ஊடுபயிராக பரவ விடப்படும் மிளகு கொடிகள் வளர்ந்து பருவநிலையை எட்ட 4 ஆண்டுகள் வரை ஆகும். அறுவடைக்கு ஏற்றவாறு மிளகு கொடி படர்ந்து விட்டால், குறைந்தபட்சம் 15 முதல் 18 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மிளகு வகைகளில் பன்னியூர்1, கரிமுண்டா, பன்னியூர்5 ஆகியவை இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. கொல்லிமலை மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மிளகு வளர்ப்பிற்கான சீதோஷ்ண நிலை கொல்லிமலை பகுதியில் நன்றாக உள்ளது. இங்கு பன்னியூர் மற்றும் கரிமுண்டா ரக மிளகுகள் விளைந்து வருகிறது. இருந்தபோதிலும் பன்னியூர் ரகமே அதிக அளவில் காணப்படுகிறது. மலைவாழ் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக செம்மேடு மற்றும் பவர்காடு பகுதியில் தலா ஒரு மிளகு சேமிக்கும் குளிர்பதன கிடங்கை அமைத்து கொடுக்க வேண்டும்.

    கொல்லிமலையில் இயற்கை விவசாய முறையில் மிளகு விளைவிக்கப்படுவதால் இங்குள்ள மிளகிற்கு புவிசார் குறியீடு கிடைத்தால், சீரான விலை கிடைக்கவும், ஏற்றுமதி அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும் என்கின்றனர் விவசாயிகள்.

    • ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
    • கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்கு றிச்சி, தென்கீரனூர், ஜே.ஜே நகர், சின்னசேலம், நைனார்பாளையம், தகடி, கூத்தனூர், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 50 ஆண்டு காலமாக மரச் சிற்பங்களை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு மரத்தாலான சாமி சிற்பங்கள், பூஜை அறைக்கு தேவையான சிற்பங்கள், கோவில் மற்றும் பூஜை அறை கதவு, கோவில் தேர் உள்ளிட்ட கலை அழகு மிகுந்த மரச் சிற்பங்கள் செய்யப்படுகிறது. இந்த மரச்சிற்பங்களை தமிழகத்தைச் சேர்ந்த பலரும் வாங்கிச் செல்கின்றனர். அது மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இணை யதளம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில வெளிநாட்டவர்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த மரச்சிற்ப தொழிலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு தமிழக அரசு புவிசார் குறியீடு வழங்கியது.

    இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மர சிற்பம் செதுக்கும் கலைஞர்களுக்கு அவர்களின் செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் நவீன தொழில்நுட்ப எந்திரங்களைக் கொண்ட ஒரு பொது வசதி மையம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மரச் சிற்ப தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மரச் சிற்பம் தயாரிப்பு கைவினைத் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மரச் சிற்பம் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் மரச் சிற்பங்கள் மிகவும் நேர்த்தியாக, கலைவண்ணம் மிகுந்து காணப்படும். இதனால் மரச்சிற்பத்திற்கு தமிழக அரசின் புவிசார் குறியீடை பெற்றுள்ளோம். இங்கு தயாரிக்கப்படும் மரச்சிற்பங்கள் ரூ. 3 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசு மர சிற்ப தொழிலாளிகள் பயனடையும் வகையில் ரூ. 50 லட்சம் மதிப்பில் தொழில்நுட்ப எந்திரங்களை கொண்ட வசதி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் பயனடைவார்கள் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். எனவே இந்த அறிவிப்பு மரச்சிற்ப தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என கூறினார்.

    • திண்டுக்கல் மாவட்டம் வெயில், மிதமான வெயில், குளிர் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு தட்பவெட்ப ங்களை கொண்ட மாவட்டமாகும்.
    • தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைக்க பெற்று அதன் அங்கீகார சான்றி தழை கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களுக்கு வழங்கும் விழா கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.

    கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலா, சென்னை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டம் வெயில், மிதமான வெயில், குளிர் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு தட்பவெட்ப ங்களை கொண்ட மாவட்டமாகும். கொடைக்கானல் பகுதியில் விளையவைக்கும் பூண்டிற்கு உலக அளவில் தனித்துவம் பெற்று மருத்துவ குணத்துடன் இருந்து வருகிறது. இப்பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடைக்கா னல் மலைப்பூண்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது இப்பகுதி விவசாயிகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளும் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது.

    கொடைக்கானல் மலைப்பூண்டின் மகத்துவம் மற்றும் மலைப்பூண்டின் மருத்துவ குணத்தினை உணர்ந்து மலைப்பூண்டு ஊறுகாய், மலைப்பூண்டு மாலை உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்களை விவசாயிகள் தயார் செய்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் அதற்கு விவசாய கடன் மானியத்துடன் வழங்க மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இவ்விழாவில் கொடைக்கானல் மலைக்கிராம விவசாயிகள் மலைப்பூண்டினால் உருவாக்கப்பட்ட மாலையை கலெக்டருக்கு வழங்கினர்.

    மலைப்பூண்டிற்கு கிடைக்கப்பெற்ற புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழை கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மலைக்கிராம விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் விசாகன் வழங்கினார்.

    இவ்விழாவில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் சீலா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாராதேன்மொழி, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் நாட்ராயன், செல்லய்யா, பாலகிரு ஷ்ணன், தனமுருகன், கோபால்சாமி, அருள்ஜோதி, கொடைக்கானல் மேல்மலை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • ஜடேரி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் 300 ஆண்டுகளாக நாமக்கட்டிகளை தயாரித்து வருகின்றனர் ‌.
    • கன்னியாகுமரி மாவட்டம் வாழை சாகுபடியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டு வக்கீலும், அறிவு சார் சொத்துரிமை அட்டார்னியுமான சஞ்சய் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புவிசார் குறியீடு ( பதிவு மற்றும் பாதுகாப்பு ) சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டு 2003-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.

    இந்தியாவில் 450-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே 55 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருந்தது.

    இன்று செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனையும் சேர்த்து தமிழ்நாட்டில் மட்டும் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 2 ஆண்டுகளிலே 17 பொருட்களுக்கு அரசு வழக்கறிஞரான நான் புவிசார் குறியீடு அங்கீகாரத்தைப் பெற்று கொடுத்துள்ளேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் போலீசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த முதல் இடத்தில் உள்ளது.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா வீரவாநல்லூர் சவுராஷ்ட்ரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு அதிகாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். 2 ஆண்டுகள் பரிசோதனைக்கு பிறகு இன்று செடிபுட்டா சேலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த சேலையின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அணியும்போது குளிர்காலத்தில் வெப்பமாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் 300 ஆண்டுகளாக நாமக்கட்டிகளை தயாரித்து வருகின்றனர் . இது முக்கியமாக திருநாமத்தை பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக நாமக்கட்டிக்கு சப்ளை செய்து வரும் ஒரே கிராமம் ஜடேரி. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஜடேரி நாமக்கட்டிக்கு இன்று புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    கன்னியாகுமரி மாவட்டம் வாழை சாகுபடியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல்வேறு வகையான வாழைப்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அதில் மட்டி வாழைப்பழம் புகழ் பெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டத்தில் அதிகளவில் மட்டி வாழைப்பழம் பயிரிடப்படுகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் வாய்ந்த இந்த கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்திற்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

    இதன் மூலம் தமிழ்நாட்டில் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×