search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூசாரி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லாட்டரி சீட்டில் ஒரு இலக்க வித்தியாசத்தில் முதல் பரிசான ரூ.70லட்சத்தை தவறவிட்டார்.
    • பூசாரி மதுசூதனன் பக்தர்களிடம் மிகவும் கனிவாக நடப்பவர் என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மேப்பாறை பகுதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் மேல்சாந்தியாக இருப்பவர் மதுசூதனன். இவர் அந்த கோவிலில் 20 ஆண்டுகளாக தலைமை பூசாரியாக பணியாற்றி வருகிறார். பூசாரி மதுசூதனனுக்கு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.

    அவர் வாங்கிய லாட்டரி சீட்டுகளுக்கு சிறிய தொகை பரிசாக விழுந்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர், தான் வாங்கிய லாட்டரி சீட்டில் ஒரு இலக்க வித்தியாசத்தில் முதல் பரிசான ரூ.70லட்சத்தை தவறவிட்டார். இந்நிலையில் தற்போது அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல்பரிசான ரூ.1கோடி விழுந்திருக்கிறது.

    பூசாரி மதுசூதனன் பக்தர்களிடம் மிகவும் கனிவாக நடப்பவர் என்று கூறப்படுகிறது. அவரது அர்ப்பணிப்பான தெவ்வீக பணியின் ஆசீர்வாதத்தின் காரணமாகவே அவருக்கு லாட்டரியில் ரூ.1கோடி கிடைத்திருக்கிறது என்று அவர் பணிபுரியக்கூடிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    மதுசூதனனுக்கு லாட்டரியில் ரூ.1கோடி விழுந்திருப்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அவருக்கு ஆதிரா என்ற மனைவியும், வைஷ்ணவ் மற்றும் வைகலட்சுமி ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.

    • பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார்.
    • மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான வடிகால் கட்டுமானம் செய்யப்படவில்லை

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பாஜக அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

     

    இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்த அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது தொடக்கத்திலிருந்தே இந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் லாபத்துக்காகவே பாஜக ராமர் கோவிலை காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றமாசாட்டி வருகின்றன.

    மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமான ஊடக வெளிச்சத்துடன் நடத்தப்பட்ட ராமர் கோவில் திறப்பு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. இருப்பினும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்து இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அப்பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறாத நிலையில் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட ராமர் கோவிலும், விமான முனையமும் அந்த பகுதிக்கு புதிய பளபளப்பை கொடுத்தாலும் அங்குள்ள மக்களின் மனநிலை தேர்தலில் வெளிப்பட்டுள்ளதாகவே இந்த முடிவுகளை பார்க்கமுடிகிறது.

    இதற்கிடையில் அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சமபவங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தனது துப்பாக்கியை கையாளும்போது தவறுதலாக அது வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

    இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

     

     

     

    மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றமசாட்டியுள்ள்ளது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவில் கட்டி முடிக்கப்படும் முன்னதாகவே அவசர அவசரமாக திறக்கப்பட்டதால் இன்னும் அங்கு கட்டுமனாப் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் ராமர் கோவில் கட்டுமானம் என்று பெயரில் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன. 

     

    • கோயிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர்
    • காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டித்துள்ளார்

    காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இப்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு காவி மற்றும் சிவப்பு நிறத்திலான புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடையிலான சீருடை அணிந்து காவலர்கள் பணியாற்றி ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து பேசிய வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்கு அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக சில புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் பூசாரிகள் பக்தர்களை தடுத்தால் அதை அவர்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலின் கருவறைக்கு அருகில் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பூசாரிகள் போல உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பக்தர்களிடம் கனிவாக எடுத்து சொல்லி கூட்டத்தை நகர செய்வார்கள். கோயிலின் மற்ற பகுதியில் காவலர்கள், சீருடை அணிந்தே பணியாற்றுகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    காவி நிறத்திலான இந்த புதிய சீருடை முறையை கண்டித்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், "காவல் துறையின் வழக்கத்தின்படி இது சரியா? பூசாரிகளை போல காவலர்கள் உடை அணிந்து பணி செய்யலாமா? இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், 'இதை சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது" என்று கூறியுள்ளார்.

    • எம்.ஜி.ஆரை நீண்ட நேரம் காத்திருந்து அவர் அருகில் நின்று பார்த்த நினைவுகள் இன்று வரை பசுமையாக உள்ளது.
    • பெற்றெடுத்த பிள்ளைகள் கூட உதவாத நிலையில், தங்களது உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நமது வாழ்க்கை முறையில் நமது ஆயுட்காலத்தை கணக்கிட்டு பார்த்தால் நமது முன்னோர்கள் அனைவரும் குறைந்தது 95 முதல் 102 வயது முடிந்தே இறந்தனர். நமது தாத்தா பாட்டியின் ஆயுட்காலம் 70 முதல் 90 வயது வரை இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 50 வயதை கடந்தாலே சாதனை என பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70.19 ஆக உள்ளது. தமிழக மக்களின் சராசரி ஆயுட்காலம் 71.4 ஆண்டுகள். இதில். ஆண்களுக்கு 68.5 வயதும், பெண்களுக்கு 74.8 வயது என ஆய்வறிக்கை கூறுகிறது.

    ஆனால் திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 105 வயது முதியவர் வாலிபரைப்போல் அங்கும் இங்கும் துணை ஏதும் இல்லாமல் நடைபோட்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, ரெட்டியார் சத்திரம் யூனியன் கன்னிவாடி அருகே உள்ள பாப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (105). கோவில் பூசாரியான இவரது மனைவி மாரியம்மாள் (90). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஆனந்த ராஜ் என்ற மகனும், ராமாயி, மல்லாயி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பேரன்கள், கொள்ளுப்பேரன்கள் ஆகியோரும் உள்ளனர்.

    ஊரில் சிறிய தகர செட் அமைத்து முத்து மாரியம்மன் சிலை வைத்து முத்து பூஜை செய்து வருகிறார். அங்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி ஆசி வழங்குகிறார். இவரது வாக்கு பலிப்பதாக பக்தர்கள் தேடி வருகின்றனர். அவர்கள் கொடுக்கும் காணிக்கையே இவருக்கு சிறிய வருமானமாக உள்ளது. இவருக்கு மகன், மகள்கள் மற்றும் பேரன், கொள்ளு பேரன்கள் இருந்த போதிலும் யாருடைய உதவியும் இன்றி வயதான தம்பதியர் தளராது உழைத்து வாழ்ந்து வருகின்றனர்.

    தள்ளாத வயதிலும், தளராமல் உறவுகள் துணையின்றி வசித்து வரும் முத்து பூசாரி கூறுகையில், நான் கடந்த 1920ல் பிறந்தேன். 19-வது வயதில் திருமணம் முடிந்தது. விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வந்தேன். 40 வருடங்களுக்கு மேல் தனியாக மனைவியுடன் வசித்து வருகிறேன். உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றெடுத்த பிள்ளைகள் வரை உதவி கரம் கேட்காமல் நாங்கள் இருவரும் வசித்து வருகிறோம் என்றார்.

    திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கசவனம்பட்டி மவுனகுரு நிர்வாண சுவாமிகளை நான் சிறு வயதாக இருக்கும்போதே பார்த்துள்ளேன். ஆடையின்றி நிர்வாணமாக யாரிடமும் பேசாமல் மவுனமாக சுற்றுவார். அவரிடம் நான் ஆசி பெற்றுள்ளேன். அதேபோல் காந்தி கிராமத்திற்கு வந்த மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, நேரு, சுந்தராம்பாள் ஆகியோரை அருகில் இருந்து பார்த்துள்ளேன்.

    திண்டுக்கல்லுக்கு முதல் முறையாக 1971ம் ஆண்டு வந்த எம்.ஜி.ஆரை நீண்ட நேரம் காத்திருந்து அவர் அருகில் நின்று பார்த்த நினைவுகள் இன்று வரை பசுமையாக உள்ளது.

    ஜவஹர்லால் நேரு, குல்ஜாரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிகாரி வாஜ்பாய், தேவே கவுடா, இந்தர் குமார் குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய 15 பிரதமர்களை பார்த்துள்ளேன்.

    அதேபோல் தமிழகத்தில் பி.டி. ராஜன், பொப்பிலி ராஜா, கர்மா வெங்கட ரெட்டி நாயுடு, ராஜ கோபாலச்சாரி, தெங்குட்டுரி பிரகாசம், ஓ.பி. ராமசாமி, பி.எஸ். குமாரசாமி, காமராஜ், எஸ். பக்தவத்சலம், வி.ஆர்.நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜானகி, ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் என 21 முதலமைச்சர்களையும் பார்த்துள்ளேன் என்றார்.

    தள்ளாத வயதில் தளராது நடந்து வருகிறார் முத்து பூசாரி. இதுவரை அரசிடம் இருந்து எந்த சலுகையும் எதிர்பார்க்காமல் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். முதியோர் உதவித்தொகை கூட இதுவரை அவர்கள் பெறவில்லை. மேலும் தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை கூட ஒரு மாதம் மட்டுமே வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் பிறகு அதுவும் வரவில்லை. பெற்றெடுத்த பிள்ளைகள் கூட உதவாத நிலையில், தங்களது உழைப்பை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    அரசின் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கிடைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆலம் விழுதுகள் போல் சொந்தம் 1000 இருந்தென்ன, வேரென நீயிருந்தால் நான் வீழ்ந்து விடாமல் இருப்பேன் என்ற வரிகளுக்கு ஏற்ப மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தள்ளாத வயதில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருவதை தற்கால தம்பதிகள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

    • கிராம பூசாரிகள் பேரவை கூட்டம் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிராம பூசாரிகளின் ஒன்றிய அளவிலான பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிராம பூசாரிகள் பேரவை மாவட்ட இணை அமைப்பாளர் முத்து தலைமை தாங்கினார். பேரவை ஒன்றிய அமைப்பாளர் அரிமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சோம சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.

    இக்கூட்டத்தில் பெரும்பான்மையான கிராம பூசாரிகளுக்கு ஓய்வூதியம் முறையாக கிடைக்க வில்லை எனவும், நலவாரிய உதவிகள் கிடைக்க வில்லையெனவும் பூசாரிகள் முறையிட்டனர். மேலும் கிராமப் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் நலவாரியம் கிடைக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டுமெனவும், அரசு வழங்கக்கூடிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிராமப்புற பூசாரிகளுக்கு கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டுமெனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
    • சுமார் ரூ.7 லட்சம் வரைக்கும் கொடுத்து நாககற்கள் வாங்கினேன்.

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் சுங்கான் கடை பகுதியில் ஒரு வீட்டில் சாமி சிலைகள் வைத்து சுரேஷ்குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் பூஜை செய்வதோடு அருள் வாக்கும் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் 2 பேர் மீதும் மோசடி புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த லாவண்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

    அதில்,அருள்வாக்கு கூறிய சாமியார்கள், தங்க ளுக்கு தெய்வீக சக்தி உள்ளதாகவும், தங்களிடம் உள்ள நாககற்களை வாங்கிச் சென்று வீட்டில் வைத்தால், நினைத்த காரியம் நடக்கும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்றெல்லாம் கூறினர்.

    இதை நம்பி அவர்களிடம் சுமார் ரூ.7 லட்சம் வரைக்கும் கொடுத்து நாககற்கள் வாங்கினேன். அவற்றை பரிசோதித்த போது சாதாரண கற்கள் என்ப தும், விலை குறைவானவை என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து என்னிடம் மோசடி செய்த சாமியார்கள் குறித்து விசாரித்த போது, அவரிடம் ஏராளமான பெண்கள் இது போன்று ஏமாந்து இருப்பது தெரியவந்தது. எனவே சாமியார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனை தொடர்ந்து இரணியல் போலீசார் சாமியார்கள் சுரேஷ்குமார் மற்றும் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை தேடி சுங்கான்கடை சென்றபோது, அவர்கள் வெளியூர் சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமனிடம் கேட்ட போது, புகார் சம்பந்த மாக இரணியல் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமார், அசோக்குமார் ஆகிய இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம். சம்மனுக்கு ஆஜராகி விளக்கமளிக்க தவறினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • நடவடிக்கை எடுக்க எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
    • பூசாரியை நம்பாமல் இருந்ததாலேயே எங்களின் தந்தை இறந்தார் என்று அவர் கூறிவருகிறார்.

    நாகர்கோவில் :

    நடிகர் விவேக் ஒரு படத்தில் சாலையில் எடுத்த கற்களை அதிர்ஷ்ட கற்கள் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றுவார்.

    இதுபோன்ற ஏமாற்று சம்பவங்கள் பல முறை நடந்தாலும் ஏமாறுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாகர்கோவில் பகுதியில் இதுபோன்ற சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது. இதுபற்றி எஸ்.பி. அலுவலகத்தில் ஒருவர் புகார் கொடுத்தார்.அதன்விபரம் வருமாறு:-

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் புறநகர் பகுதியில் கோவில் ஒன்று தொடங்கினார். அங்கு வரும் பக்தர்களிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்து வந்தேன். ஆன்மீகம் மீது கொண்ட பற்று காரணமாக பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கு வந்தேன்.

    இக்கோவிலுக்கு வருவோருக்கு நாக தோஷம் நீங்கும் என்று கூறி பூஜைகள் செய்தார்.

    பாம்புகளுடன் வாழ்வதாகவும், இரவில் பாம்புகள் வாந்தி எடுக்கும் போது மாணிக்க கற்கள் கிடைத்ததாகவும் எங்களிடம் கூறினார்.

    அந்த கற்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும் எனவும் தெரிவித்தார். பக்தர்களிடம் அந்த கற்களை கட்டாயப்படுத்தி வாங்க வைத்தார்.

    இதன்மூலம் லட்சக்கணக் கில் அவருக்கு பணம் கிடைத்தது. இதன்மூலம் குறுகிய காலத்தில் சொகுசு கார்கள் , பங்களாக்கள் கட்டினார்.

    ஆனால் பூசாரி கொடுத்த நவரத்தின கற்கள், மாணிக்க கற்களை வாங்கி சென்றவர்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. அவர்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.

    இதுபற்றி பூசாரியிடம் கூறிய போது தன்னிடம் உள்ள ஸ்படிக லிங்கத்தை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், இன்னல்கள் அகலும் என்றார். அந்த ஸ்படிக லிங்கம் ரூ.75 ஆயிரம் எனவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி ஏராளமான பெண்கள் ஸ்படிக லிங்கத்தை வாங்கி சென்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் அவர் மோசடி கற்களை கொடுத்து ஏமாற்றினார்.

    பூசாரியின் மோசடி தெரியவந்ததால் நாங்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்த்ேதாம். இந்த நிலையில் எங்களின் தந்தை உடல் நலக்குறைவால் இறந்தார். ஆனால் பூசாரியை நம்பாமல் இருந்ததாலேயே எங்களின் தந்தை இறந்தார் என்று அவர் கூறிவருகிறார்.

    மேலும் எங்களை தீர்த்து கட்டிவிடுவதாகவும் கூறிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும்.
    • 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கிராமங்களில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வார் பேரவை, பூ கட்டுவர் பேரவையின் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட அமைப்பாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில், கிராம கோயில் பூசாரிகளுக்கு மாதம் ரூ.2000 சம்பளம் வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதனை எந்த நிபந்தனையும் இன்றி மாதம் ரூ.10000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

    60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தரமூர்த்தி, சவுந்தரராஜன், கருணாகரன், பிரபாகரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோயில் பூசாரி பேரவை ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

    • கிராமக் கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி மாத ஊக்கத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.
    • அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் நிறுவனரும், கிராமக் கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான எஸ். வேதாந்தம், தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத், மாநில தலைவரும், கிராமக்கோவில் பூசாரிகள் பேரவையின் அறங்காவலருமான ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    2021-ம் ஆண்டு சட்ட சபை பொதுத் தேர்லையொட்டி, கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் மாநிலப் பொறுப்பாளர்கள் எழுத்துமூலமாக கோரிக்கைகளை அளித்தனர். அதை ஏற்றுக் கொண்ட இப்போதைய ஆளும் தி.மு.க., தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 406-வது வாக்குறுதியாக கிராமக் கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால், இன்றுவரை அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை. எனவே, கிராமக் கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி மாத ஊக்கத் தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட வேண்டும்.

    செயல்படாமல் முடங்கிக் கிடக்கும் கிராமக்கோவில் பூசாரிகள் நலவாரியத்தை சீர்படுத்தி, விரைவாக செயல்படுத்த வேண்டும். அனைத்து கிராமக் கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

    ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் மறைவுக்கு பிறகு, அவர்களது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20-ந் தேதி நடக்கிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடை பெறும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கிராமக்கோவில் பூசாரிகள், அருள்வாக்கு அருள்வோர் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • வைர முனீஸ்வரன் கோவில் பூசாரி மாரியப்பன் சாமி ஆடியபடி பட்டாகத்தி மீது ஏரி நின்றும் கத்தி மீது நடந்தும் 500 மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை வந்து அடைந்தார்.
    • வைர முனீஸ்வரன், காசி கால பைரவர் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி பகுதியில் எழுந்தருளிய காசி காலபைரவர், வைரமுனிஸ்வரர் கோவில் தை மாத திருவிழாவை முன்னிட்டு சரபங்கா ஆற்றில் இருந்து புனித தீர்த்தம், பூங்கரகம் எடுத்து கொண்டு பம்பை மேளம் முழங்க வரும் நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது வைர முனீஸ்வரன் கோவில் பூசாரி மாரியப்பன் சாமி ஆடியபடி பட்டாகத்தி மீது ஏரி நின்றும் கத்தி மீது நடந்தும் 500 மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று கோவில் வளாகத்தை வந்து அடைந்தார்,

    அப்போது கோவில் வளாகத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் குழந்தை வரம், தொழில் முன்னேற்றம், வேண்டி வணங்கியவர்களுக்கு தன்னிடம் இருந்த எலுமிச்சை கனியை கொடுத்து ஆசி வழங்கினார். பிறகு கத்தி மீது இருந்து இறங்கி கோவிலுக்குள் சென்றார்.

    தொடர்ந்து வைர முனீஸ்வரன், காசி கால பைரவர் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.
    • கோவில்களுக்கு நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையில் இந்திய கிராம கோவில் பூஜாரிகள் பேரவையின் திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.உடுமலையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மாநாட்டுக்கு முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.

    மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.நாகுமணி மாதாஜி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட அமைப்பாளர் சேகர் வரவேற்றார்.மாநாட்டில், நலிவடைந்த கிராம கோவில் பூஜாரிகள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ஓய்வூதியத்தொகையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.பூசாரிகளுக்கு பூஜை செய்யும் கோவிலுக்கு அருகிலேயே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.அனைத்து கோவில்களுக்கும் நிபந்தனையற்ற இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    • வேலை வாங்கி தருவதாக ரூ. 3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விருதுநகர்

    இருக்கன்குடியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக அதே பகுதியை சேர்ந்த ராமர் பூசாரி என்பவர் கூறியுள்ளார். இதனை நம்பி குருசாமி ரூ.3 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது.

    பணத்தை பெற்றுக்கொண்ட அவர் வேலையும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து சாத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ராமர் பூசாரி மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ×