என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர் திருவிழா"

    • ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழா நடைபெற்றது.
    • காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

    கர்நாடகா தலைநகர் பெங்களூரு அடுத்த ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் திருவிழாவின்போது 150 அடி உயர தேர் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காற்றின் வேகம் அதிகரித்ததால், 150 அடி தேர் ஒரு பக்கமாக சாய்ந்தது

    இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 16 வகை வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
    • பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வலுப்பூர் அம்மனை வழிபட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் சேமலை கவுண்டம்பாளையத்தில் வலுப்பூர் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்திருவிழா கடந்த 26-ம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம் மற்றும் அலகுமலைக்கு சுவாமி திருவீதி உலா ஆகியன நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கட்டளைதாரர்களின் உபயத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதன் பின்னர் வலுப்பூர் அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அலகுமலை கைலாசநாதர் கோவில் பகுதியில் துவங்கி வலுப்பூர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து வலுப்பூர் அம்மனுக்கு, பால், சந்தனம், தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வலுப்பூர் அம்மனை வழிபட்டனர்.

    • 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.
    • அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே பெலாப்பாடி மலை கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் 300 ஆண்டுகள் பழமையான கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவில்கள் அமைந்துள்ளன.

    அருநூற்றுமலை வாழ் பழங்குடியின மக்கள், இக்கோவில்களில் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி தேர்த்திருவிழா நடத்தி வருகின்றனர். வாழப்பாடி பகுதியில் பிரசித்திப்பெற்ற இந்த விழாவில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி, வாழப்பாடி, பேளூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்தாண்டு தேர்த்திருவிழா ஒரு வார விழாவாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. முதலாவதாக கரியராமர் கோவிலிலும், அடுத்தடுத்து வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் கோவிலும் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன், பாரம்பரிய முறைப்படி திருவிழா நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று பிரசித்திப் பெற்ற வெங்கட்டராமர் கோவில் பல்லக்குத் தேர்த்திருவிழா நடைபெற்றது.

    இந்தவிழாவில் வெங்கட்டராமர், அண்ணாமலையார், காளியம்மன் உற்சவ மூர்த்திகளை 2 பல்லக்குத் தேர்களில் ரதமேற்றி, பக்தர்கள் தோளில் சுமந்தபடி ஆடிப்பாடி ஊர்வலமாக சென்று வினோத முறையில் தேரோட்டம் நடத்தினர். மாவிளக்கு ஊர்வலம் நடத்திய பெண்கள் 'குலவை' குரலோசை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இத்திருவிழாவில் பங்கேற்ற, ஏறக்குறைய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாழை இலை போட்டு சமபந்தி விருந்து வைத்து பழங்குடியின மக்கள் அன்பை பகிர்ந்து அசத்தினர்.

    இதுகுறித்து பேளூர் மணியக்காரர் திருமூர்த்தி, வாழப்பாடி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், பெலாப்பாடி மலை உச்சியில் அமைந்துள்ள 3 மலைக்கோவில் திருவிழாவிற்கும் ஆண்டு தோறும் தவறாமல் சென்று வருகிறோம். மலை கிராம மக்கள் குல தெய்வமாக வழிபட்டு வரும் கரியராமர், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமர் சுவாமிகள் மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக கருதுவதால் பயபக்தியோடு திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர்.

    தேர்த்திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களையும் கோவில் மைதானத்தில் அமரவைத்து வாழை இலை போட்டு பொங்கல் சோறுயும், தானியக்குழம்பும் பரிமாறி, மலை கிராம மக்கள் விருந்தோம்பலையும் அன்பையும் வெளிப்படுத்தி ஆண்டுதோறும் அசத்தி வருவது பாராட்டுக்குரியதாகும் என்றனர்.

    • முன்னாள் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்
    • பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் வழங்கபட்டது

    ஆரணி:

    ஆரணிஅடுத்த எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் 151-வது ஆண்டு தேரோட்ட பிரம் மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி காப்பு காட்டுதலுடன் தொடங்கியது,

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா நடந்தது. அதனை தொடர்ந்து ஆடு, கோழி பலியிட்டு தேரோட்டம் தொடங்கியது.

    இதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரனுக்கு கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டன.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி முரளி, ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா பாபு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் அசோக்கு மார் உள்பட திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த திருத்தேர் மாட வீதிகளின் வழியாக வலம் வந்தது. தேர் மீது உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட், இனிப்பு போன்றவற்றை வீசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பொதுமக்களுக்கு நீர், குளிர்பானம், மோர் ஆகியவை வழங்கபட்டது.

    • மலை மீது அமைந்துள்ள மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • தேர்திருவிழாவில் பக்தர்கள் நன்கொடையால் புதிதாக செய்யப்பட்டுள்ள தேருக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிரமராம்மா தேவி, மல்லிகார் ஜுன துர்கம் மலைகோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது.

    இதனையடுத்து தேர்திருவிழாவில் பக்தர்கள் நன்கொடையால் புதிதாக செய்யப்பட்டுள்ள தேருக்கு சிறப்பு பூஜை செய்யபட்டது.

    மலை மீது அமைந்துள்ள மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ, தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலுரெட்டி ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி கொண்டு வந்து நிலை நிறுத்தினர்.

    விழாவில் அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது. தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி முரளி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் நாகராஜ், குமரன் அகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    விழாவில் கோவில் திருவிழா கமிட்டியினர், அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை, காரண்டப்பள்ளி பஞ்சாயத்து ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 10-ம் தேதி தீர்த்தகிரி ஈஸ்வரர், வடிவாம்பிகை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
    • தேர் திருவிழாவுக்கு வருகை தந்து உற்சவத்தை பார்த்து சாமி தரிசனம் செய்வார்கள் என ஊர் பொது மக்கள் தெரிவித்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரி ஈஸ்வரர் திருத்தேர் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 5-ம் நாள் வருகிற 10-ம் தேதி தீர்த்தகிரி ஈஸ்வரர், வடிவாம்பிகை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

    ஏழாவது நாள் 12-ம் தேதி ஞாயிற்று கிழமை திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. அன்று விநாயகர் தேர், அம்மன் தேர், வடிவாம்பிகை உள்ளிட்ட மூன்று தேர் உற்சவம் ஒரே நாளில் நடைபெறுகிறது.

    விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தேர் திருவிழாவுக்கு வருகை தந்து உற்சவத்தை பார்த்து சாமி தரிசனம் செய்வார்கள் என ஊர் பொது மக்கள் தெரிவித்தனர்.

    • அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன் கோவிலில் இன்று காலை குண்டம் விழா நடந்தது.
    • பக்தர்கள் பலர் அழகு குத்தி வந்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் அழகு முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் குண்டம்- தேர் திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது.

    இதை தொடர்ந்த இந்த ஆண்டுக்கான குண்டம்- தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 28-ந் தேதி கொடிசேலை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி தினமும் சுவாமி சிங்கம் வாகனம் அன்ன பச்சி, காமதேனு, புலி, குதிரை, சட்டத்தேர், யானை, தொப்ப செட்டி ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை குண்டம் விழா நடந்தது. இதில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு குண்டம் தீ மிதித்தனர். மேலரும் பக்தர்கள் பலர் அழகு குத்தியும் வந்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி யும், இரவு சிங்காசனத்தில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9-ந் தேதி காலை அக்கினி கரகம் எடுத்து வருதல், அதனைத் தொடர்ந்து கம்பம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

    • 5 ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 4ந் தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    அவினாசி :

    அவினாசி அருகேயுள்ள கருவலூரில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருகிற 5 ந்தேதி தேரோட்டம் நடக்கி றது. முன்னதாக தேர்த்திரு விழாவின் முக்கிய நிக ழ்வான திருக்கொடி யேற்றம் நிகழ்ச்சி நேற்று கோவிலில் நடந்தது. கோவில் முன்புறமுள்ள கொடிகம்பத்தை தூய்மை ப்படுத்தி சிறப்பு பூஜை நடந்தது.

    இதில் கோவில் அர்ச்சகர் ஹோமமந்திரம் மற்றும் பக்தி பாடல்கள் பாடி மேள வாத்தியம் முழங்க கொடி மரத்தில் கொடியே ற்றப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு பூத வாகன காட்சி, 3ந்தேதி இரவு ரிஷப வாகன உலா, 4ந்தேதி புஸ்ப விமான மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    5ந்தேதி அதிகாலை அம்மன் திருத்தேருக்கு எழு ந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று பிற்பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது. தொடர்ந்து 6, 7-ந் தேதி களில் திருத்தேர் இழுக்க ப்பட்டு நிலை சென்றடை கிறது. 8 ந்தேதி தேர் திருவிழா நிறைவுபெறு கிறது. 9 ந்தேதி காலை 7 மணி அளவில் தரிசனம் நிகழ்ச்சியும் மாலை 3 மணிக்கு அம்பாள் சப்பர த்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் இரவு 8மணிக்கு மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. 

    • நார்த்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • காளியம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து பக்தர்களின் வெள்ளத்தில் தேர் திருவீதி உலா நடைபெற உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நார்த்தம் பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் வெகு விமர்சையாக நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இன்று காலை முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது.

    நார்த்தம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை காளியம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து பக்தர்களின் வெள்ளத்தில் தேர் திருவீதி உலா நடைபெற உள்ளது. இவ்விழாவினை ஊர் பொதுமக்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    • ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்
    • தேர் இழுக்கும் நிகழ்வு தொடங்கி திங்கட்கிழமை மாலை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும்

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வெகு விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு கடந்த 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கி கடந்த 5-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இன்று மாலை தேர் இழுக்கும் நிகழ்வு தொடங்கி திங்கட்கிழமை மாலை மீண்டும் தேர் நிலையை வந்து அடையும்.

    இதனை காண அந்தியூர் தவுட்டு ப்பாளையம் வெள்ளை யம்பாளையம், சின்னத்த ம்பிபாளையம், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், செல்லம்பாளையம் உள்ளி ட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை தேரில் அம்மன் அலங்கரிக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    • கடந்த 29-ந் தேதி கொடியேற்றம், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
    • பக்தர்களின் வெள்ளத்தில் தேர்கள் ஆடி அசைந்து சென்று பின்னர் நிலையடைந்தது.

    காங்கயம் :

    காங்கயம்அருகே மடவளாகத்தில் ஆருத்ர கபாலீ ஸ்வரர்மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்த கோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய 4 குலத்தவர்களின் குல தெய்வங்களாக அரு ள்பாலித்து வருகின்றன.

    சமீப காலமாக இக்கோ வில்கள் குலத்தவர், உபய தாரர், நன்கொடையாள ர்கள் மூலம் புனர மைப்பு செய்யப்பட்டு கடந்த 29-ந்தேதி பஞ்சமூ ர்த்திகள் பங்குனி உத்திர 7-ம் ஆண்டு தேர் திருவிழா கிராமசாந்தி , கொடியேற்றம், சுவாமி களின் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொட ங்கியது. தொடர்ந்து யாக பூஜை, தீபாரா தனைமற்றும் 4 குலத்தவ ர்களின் மண்டப கட்டளை, பஞ்சமூர்த்தி களின் திருவீதி உலா ,திருக்கல்யாண உற்சவம், மற்றும் காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் ஒயிலாட்டம், பெருசலங்கையாட்டம், மகா அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து பஞ்சமூ ர்த்திகள் எனும்5 தேர்களும் வண்ண மலர்அலங்கா ரத்துடன் வடம் பிடித்து இழுக்க ப்பட்டது.பல்லாயிர க்கணக்கான பக்தர்கள், குலத்தவர்கள், உபயதா ரர்கள்,நன்கொடையா ளர்கள் உள்பட அனைவரது கரகோஷத்துடன் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோவில்களை சுற்றி சுமார் ¾ கி.மீ., தூரத்திற்கு பக்தர்களின் வெள்ளத்தில் தேர்கள் ஆடி அசைந்து சென்று பின்னர் நிலையடைந்தது.விழாவில்\எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சின்னராஜ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கல்யாண சுந்தரம், திருப்பூர் மாநகரா ட்சியின் 4-வது மண்டல தலைவரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலா ளருமான இல.பத்மநாபன், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் மகேஷ்குமார், நகராட்சி தலைவர் சூரியபி ரகாஷ், மாவட்ட பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ,திருப்பூர்மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் குமரது ரை, காங்கயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், பாப்பினி பஞ்சாயத்து தலைவர் கலாவதி பழனிசாமி, யூனியன் கவுன்சிலர்களான மைனர் பழனிசாமி, சுதா ஈஸ்வரமூர்த்தி, காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் லதா மகேஷ்குமார், ராம்ராஜ் காட்டன் நிறுவ னர் நாகராஜன், காங்கயம் ஆடிட்டர் சண்மு கசுந்தரம், திருப்பூர் மாவட்ட அரிசி ஆலை உரிைமயாளர்கள் சங்க செயலாளர்தாராபுரம் மணி, திருப்பூர் மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் அப்பு சிவசுப்பி ரமணியன், ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி தாளாளர் பழனிசாமி மற்றும் பாப்பினி, வீரசோ ழபுரம் ஆகிய கிராம பொதுமக்கள் உள்பட பலரும் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து நடுவர் ராஜா தலைைமயில் சிறப்பு நகைச்சுவை பட்டிம ன்றமும் நடந்தது.மேலும்பா ரிவேட்டை, தெப்ப உற்சவ வீதி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 7-ந்தேதி கொடி இறக்குதல், தீர்த்தவாரி, மஞ்சள் நீராடுதல், பிரசாதம் வழங்குதல் ஆகியவற்றுடன் விழா முடிவடைந்த து. விழாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், மருத்து வஉத விக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக தலைவர் தங்கமுத்து தலைமையில் தலைவர் வரதராஜ், செயலாளர் ராமசாமி, பொருளாளர் அர்ஜூனன் முன்னிலையில் கோவிலின் கொங்கு வோளாளர் , தோடை, கண்ணந்தை, காடை, கீரை குலத்தோர் சங்கத்தினரும், பாப்பினி ,வீரசோழபுரம் கிராம பொதுமக்களும் மிக சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக அனைவரையும் பாப்பினி அம்மன் கோவில் தலைவர் தம்பி வெங்கடாசலம், அன்ன தான கமிட்டி பால சுப்பிர மணியம் மற்றும் வரவேற்பு குழுவினர் வரவேற்றனர்.

    • 300 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.
    • பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பனைமடல் கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும், 300 ஆண்டு பழமையான கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு தேர்த்திரு விழா கடந்த 2 நாட்களாக கொண்டா டப்பட்டது. இவ்விழாவில், அரவான் பலி கொடுத்தல், கூத்தாண்டவர் கண் திறப்பு நிகழ்ச்சிகளும் திருநங்கைகள் பங்கேற்புடன் மரபு மாறாமல் நடத்தப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகளும், திருத்தேர் ரதமேறும் வைபோவமும், சன்னிதானத்தை சுற்றி தேரோட்டமும் நடைபெற்றது.

    விழாவில் வாழப்பாடி, ஏத்தாப்பூர், பெத்தநா யக்கன்பாளையம், பேளூர், இடையப்பட்டி, தாண்டா னுார் மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த ஆயி ரக்க ணக்கான பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர். முன்னதாக, வேண்டுதல் நிறை வேற்றிய சுவாமிக்கு கர கம் எடுத்தும், அலகு குத்தியும், பொங்கலிட்டு ஆடு, கோழி பலியிட்டும் ஏராள மான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இடையப்பட்டி யில் இருந்து கல்யாணகிரி வரை வழிநெடு கிலும், பாரம்ப ரிய முறைப்படி பொதுமக்கள் நீர் மோர் பந்தல் அமைத்தும், தானி யக்கூழ், அன்னதானம் வழங்கியும் பக்தர்களின் தாகம் தீர்த்த னர்.

    ×