என் மலர்
நீங்கள் தேடியது "அரசு தேர்வு"
- விருதுநகரில் மத்திய அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
- தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
விருதுநகர்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல். தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 4500 பணி காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி ஆகும். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் கடந்த 6-ந் தேதி முதல் நேரடியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- வாலிபர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார்.
- சிறிது நேரத்தில் வாலிபர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது.
வேலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.
வேலூரை அடுத்த காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ் (வயது 27) என்ற வாலிபர் தேர்வு எழுத சென்றார். அவர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார். அறையின் மேற்பார்வையாளர் கேட்டதற்கு வலது காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அவரை தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது. உடனே அறை மேற்பார்வையாளர் அவரது காதில் இருந்த கட்டைப் பிரித்து பார்த்தபோது காதில் புளூடூத் ஏர்பட்ஸ் இருந்தது தெரியவந்தது. அதன் வழியாக அவர் யாரிடமோ கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது.
- ஆசிரியர்களை மீறி வினாத்தாளின் சீல் வைக்கப்பட்ட பெட்டியை சோதனை செய்து அதிலுள்ள வினாத்தாள்களை எடுத்து கிழித்தெறிந்துள்ளனர்.
குரூப் ஏ மற்றும் பி பதவிகளில் ஆட்களை சேர்ப்பதற்கான பிபிஎஸ்சியின் [BPSC] ஒருங்கிணைந்த முதன்மை[Prelims] போட்டித் தேர்வு [BPSC] நேற்று [வெள்ளிக்கிழமை] நடைபெற்றது. மாநிலத்தில் 945 மையங்களில் சுமார் 5 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
இருப்பினும், தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் வினியோகத்தில் தாமதித்துத் தேர்வு மையத்தில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம்சாட்டி தேர்வு மையங்களின் வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பாட்னாவில் உள்ள தேர்வு மையத்திற்கு வெளியே மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது மாவட்ட மாஜிதிரெட் மாணவர் ஒருவரை சரமாரிய தாக்கிய வீடியோ வைரலாகியது.
தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் போராட்டம் சதிவேலை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாட்னா தேர்வு மையத்தில் வெள்ளிக்கிழமை தேர்வு நடந்துகொண்டிருந்தபோது வினாத்தாள் தருவதில் 40 முதல் 45 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டதால் பொறுமையிழந்த மாணவர்கள் ஆசிரியர்களை மீறி வினாத்தாளின் சீல் வைக்கப்பட்ட பெட்டியை சோதனை செய்து அதிலுள்ள வினாத்தாள்களை எடுத்து கிழித்தெறிந்துள்ளனர்.
பலர் வினாத்தாள்களைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடிச்சென்றுள்ளனர். தங்கள் அறையில், சீல் வைக்கப்பட்ட பெட்டியை ஏன் திறக்கவில்லை என்று மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
சத்தம் கேட்டு மற்ற அறைகளைச் சேர்ந்த சில மாணவர்களும் வந்து கையேடுகள் மற்றும் வருகைப் பதிவேட்டை பறித்து கிழிக்கத் தொடங்கினர். இதனால், மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே கூடியுள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வை நிறுத்த அவர்கள் முயன்றதாகும் இருப்பினும் மற்ற தேர்வு 5,674 மாணவர்களுடன் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் போராட்டம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்திட ஏதுவாகவும் திருச்சி மாவட்டம், செம்புளிச்சாம்பட்டி கிராமத்தில் இலவச பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
- இந்த மையத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 50 பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெறலாம்
திருச்சி,
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்பற்ற பழங்குடியினத்தவர்கள் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் சேர்வதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் வங்கி போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்திட ஏதுவாகவும் திருச்சி மாவட்டம், செம்புளிச்சாம்பட்டி கிராமத்தில் இலவச பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி மையத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 50 பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெறலாம். 50 நபர்களுக்கு மேல் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமையின் அடிப்படையிலும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சிக்கான கையேடுகள் அனைத்தும் பயிற்சி மையத்தில் உள்ளன. இப்புத்தகங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய தகுதித் தேர்விற்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள பழங்குடியின இனத்தவர்கள் திருச்சி மாவட்ட, துறையூர் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்திச் செய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, திருச்சி மாவட்டத்தில் வசிக்கும், பழங்குடியின இனத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.