search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு எந்திரம்"

    • 26 மாவட்டங்களில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் 33 மையங்களில் 350 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • ஒவ்வொருவரின் விவரங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ள நோட்டில் பதிவு செய்யப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்தன.

    இந்த நிலையில் முழுவதும் உள்ள 26 மாவட்டங்களில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் 33 மையங்களில் 350 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில ஆயுதப்படை போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன.

    மேலும் வெளி ஆட்கள் மையத்திற்குள் செல்லாதவாறு இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

    மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் மாநில ஆய்த படை போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அப்பகுதிக்கு வரும் ஒவ்வொருவரின் விவரங்களும் அங்கு வைக்கப்பட்டுள்ள நோட்டில் பதிவு செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு வேட்பாளரின் முகவர்களும் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை சுற்றிலும் இரவு நேரத்திலும் தெளிவாக படம் பிடிக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கேமராக்கள் மூலம் வெளியே அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்காக தினமும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது ஒவ்வொரு தொகுதியிலும் ஓட்டு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்டுள்ள அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

    கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் வெளியே அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

    சுமார் 100 மீட்டர் தொலைவில் ஒரு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய கட்சிகள் தங்கள் தொண்டர்களையும் பாதுகாப்புக்கு அனுப்பி உள்ளனர். சுமார் 10 முதல் 20 பேர் தினமும் சுழற்சி முறையில் விடிய விடிய காவல் இருக்கிறார்கள்.

    எந்த நேரத்தில் கேமராக்கள் பழுது பட்டாலும் உடனடியாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தங்கள் கட்சி தலைமைக்கும், தேர்தல் அதிகாரிக்கும் தகவல் தெரிக் கிறார்கள்.

    ஒரே கொட்டகையில் ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து இருப்பதால் ஒருவருக்கொருவர் பகைமையை மறந்து பேசி கொள்கிறார்கள். உணவுகளையும் பரிமாறி கொள்கிறார்கள்.

    இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டர்களுக்காக தினமும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்குகிறார்கள். இது தவிர மூன்று வேளையும் உணவும், நொறுக்கு தீனிகளும் வழங்கப்படுகிறது.

    இந்த பணிகள் ஓட்டு எண்ணும் நாளான அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை தொடரும் என்று கூறினார்கள்.

    • போதமலை தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
    • இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது போதமலை. தரை மட்டத்திலிருந்து 7 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கீழூர், மேலூர், கெடமலை என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து சாலை போக்குவரத்து வசதி இல்லை. கரடு முரடான பாதைகளில் தான் பொதுமக்கள் சென்று வந்தனர். தற்போது ரூ.140 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு எந்திரங்களை தலைச் சுமையாக தான் கொண்டு செல்வது வழக்கம். தற்போது நாளை நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக கீழூரில் ஒரு வாக்குச்சாவடி மையமும், கெடமலையில் ஒரு வாக்குச் சுவடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கீழூர் வாக்குச்சாவடி மையத்தில் 428 ஆண் வாக்காளர்களும் 417 பெண் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் கெடமலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் 159 ஆண்களும் 138 பெண்களும் வாக்களிக்க உள்ளனர். நாளை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு வாக்குச்சாவடி மையங்களிலும் மொத்தம் 1142 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இன்று காலை மேற்கண்ட இரண்டு வாக்குச் சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்களை ராசிபுரம் தாலுகா அலுவலகத்தில் இருந்து ராசிபுரம் தேர்தல் அதிகாரி முத்துராமலிங்கம், தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

    கீழூர் வாக்குச்சாவடி மையத்திற்கு இன்று காலை 7.30 மணியளவில் வடுகம் அருகே உள்ள மலை அடிவாரத்தில் இருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள், விவி பேட் எந்திரம், கண்ட்ரோல் யூனிட் உள்பட 5 எந்திரங்களை மண்டல அலுவலர் விஜயகுமார், உதவி மண்டல அலுவலர் ஜெயக்குமார் வாக்குச்சாவடி மைய அதிகாரி ராஜாமணி உள்பட 4 தேர்தல் அலுவலர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஏட்டு ரமேஷ், ஊராட்சி செயலாளர் பரமசிவன் உள்பட 10 பேர் வாக்கு பதிவு எந்திரங்களை நடந்தே தலைச்சுமையாக பொதுமக்கள் உதவியுடன் மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    அதேபோல் கெடமலை வாக்குச்சாவடி மையத்திற்கு புதுப்பட்டி மலை அடிவாரத்திலிருந்து 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்பட 5 எந்திரங்களும் நடந்தே கொண்டு செல்லப்பட்டன. மண்டல அலுவலர் பழனிச்சாமி, உதவி மண்டல அலுவலர் சுரேஷ், வாக்குச்சாவடி மைய அதிகாரி பிரபாகரன் மற்றும் போலீசார் உள்பட 10 பேர் சென்றனர். 

    • 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
    • வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

     சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறு கிறது. இதையொட்டி வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்களை மையங்களுக்கு ஒதுக்குவது, வாக்குச் சாவடி அலுவர்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளது.

    இதில் வடசென்னையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டசபை தொகுதியும், தென்சென்னை தொகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியும் கூடுதலாக வருகிறது.

    இதை சேர்த்து பார்க்கும் போது 18 சட்டசபை தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 4,680 வாக்குச் சாவடி மையங்களில் 14,891 ஒட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    வடசென்னைக்கு ராணி மேரி கல்லூரியிலும் மத்திய சென்னைக்கு லயோலா கல்லூரியிலும், தென்சென்னைக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் பதிவாகும் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    ஓட்டு எண்ணப்படும் கல்லூரிகளில் இதற்காக 2 பெரிய அறைகள் ஒதுக்கப்பட்டு பெட்டிகளை வைக்க வரிசைப்படி நம்பர் எழுதப்பட்டுள்ளது. இதே போல் ஓட்டு எண்ணுவதற்கு 2,500 முதல் 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    அங்கு சவுக்கு தடுப்பு கம்புகள், கம்பி வலைகள் கட்டப்பட்டு ஓட்டு எண்ணும் அலுவலர்கள், பொது பார்வையாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் அமர வசதி செய்யப்பட்டு வருகிறது. பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படும் போது அதை வைப்பதற்கான அறை தயார் செய்யப்பட்டுள்ளதால் அந்த அறைக்கு யார்-யார் பொறுப்பு அதிகாரிகள் என்று பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.


    இதே போல் அந்த அறையை பூட்டி யார் சீல் வைக்க வேண்டும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க எந்தெந்த போலீசார் நிறுத்தப்பட வேண்டும் என்ற பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    இதோடு ஓட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் வளாகம் முழுவதும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க இப்போதே ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இவற்றை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்குள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கினார். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அரசு அலுவலர்கள், பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் யார்-யார்? என்ற பட்டியலும் இப்போதே தயார் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டு வர 18 வகையான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
    • 588 மிக உயர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் இந்த முறை வாக்களிக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தினமும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்கள், புதிய வாக்காளர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று காலையில் திருவான்மியூர் கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியத்தினை வலியுறுத்தி 'பாரா செய்லிங்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு கூடி இருந்த அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பாரா கிளைட்டில் பறந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    பின்னர் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டு வர 18 வகையான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 40 சதவீதத்திற்கு குறைவாக வாக்குப்பதிவான 35 வாக்குச்சாவடிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    தீவுத்திடல் பகுதி, நிர்வாக கட்டிடங்கள், குடிசைப் பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது சரி செய்யப்படுகிறது. அதே போல ராணுவ பணியாளர்கள் மற்றும் தி.நகர், பாண்டிபஜார் பகுதியில் வசிக்கும் வியாபார பிரமுகர்கள் முறையாக வாக்களிக்கவில்லை. அதனையும் இந்த முறை சரி செய்ய விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

    மேலும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியிலும் வாக்குப்பதிவு குறைவாக இருந்துள்ளது.

    மேலும் 588 மிக உயர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் இந்த முறை வாக்களிக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது. வெயில் பாதிப்பு இருப்பதால் பந்தல், குடிநீர் வசதி போன்றவை செய்யப்படுகின்றன.

    இதுவரையில் தபால் ஓட்டு 1,175 பதிவாகி உள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நாளை (சனிக்கிழமை) வரை தபால் ஓட்டு போடலாம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி, 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் முடிந்து விட்டது. சோழிங்கநல்லூர் தொகுதியில் 600 வாக்குச்சாவடிகள் உள்ளதால் அங்கு மட்டும் இன்று இரவு வரை சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
    • அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது.

    கோவை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் கோவை தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக மாறி இருக்கிறது. இதனால் இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள் ளது.

    இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை உள்பட 59 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் 41 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 18 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    41 பேரில் 4 பேர் நேற்று வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் இறுதி வேட்பாளர் பட்டியலில் 37 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம்தமிழர் கட்சி, பகுஜன சமாஜ் கட்சி உள்பட 11 கட்சிகளை சேர்ந்தவர்களும், 26 சுயேச்சைகளும் இடம்பெற்றுள்ளனர். 37 பேர் போட்டியிடுவதால் 3 வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இறுதி வேட்பாளர் பட்டியலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை கொண்ட பலர் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பெயரை கொண்ட ராஜ்குமார் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகிறார்கள். கோ.ராஜ்குமார், கோ.பா.ராஜ்குமார், எம்.ராஜ்குமார், ராஜ்குமார் ஆகிய 4 பேர் சுயேச்சை வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

    அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை பெயரை கொண்ட ராமச்சந்திரன் பெயரில் மேலும் 2 பேர் போட்டியிடுகிறார்கள். ரா. ராமச்சந்திரன், எம்.ராமச்சந்திரன் ஆகியோர் சுயேச்சைகளாக களமிறங்கி உள்ளனர்.

    வேட்பாளர்களின் பெயரை குழப்பும் வகையில் ஒரே பெயரை கொண்டவர்களை எதிர்க்கட்சியினர் நிறுத்தி உள்ளதாக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர்.
    • அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.

    கடலூர்:

    பாராளுமன்ற தொகுதிக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது.

    கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

    இதையொட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவை ஊழியர்கள் திறக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்களால் திறக்க முடியவில்லை. இதனால் கலெக்டர் மற்றும் அரசு அலுவலர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் நீண்ட நேரமாக வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் வெளியே காத்திருந்தனர்.

    இது மட்டுமின்றி தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக பல்வேறு இடங்களில் வாக்குபதிவு எந்திரத்தில் பல்வேறு சங்தேகங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் எழுப்பி வரும் நிலையில் திடீரென்று வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்ட அறையின் பூட்ட திறக்கபட முடியாமல் இருந்து வருவதால் அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவ வருகின்றன்றர்.

    • பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது.
    • எந்திரங்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.

    காஞ்சிபுரம்:

    பாராளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிலிருந்து, முதல் நிலை சரிபார்ப்பு முடிவுற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலிருந்து, அலுவலர்களுக்கு பயிற்சியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் ஆகியவை, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பொது மக்களின் விழிப்புணர்வுக்காக, வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.

    • வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள பாது காப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு சரி பார்க்கும் எந்திரங்கள் ஆகியவைகளின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை கலெக்டர் ஆஷா அஜித் அங்கீகரிக் கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்கு சரிபார்க்கும் எந்தி ரங்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரப்பெற்றுள்ளன.

    இந்த எந்திரங்களில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய-மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு பெட்டக அறையில் உள்ள 2670 பேலட் யூனிட், 1936 கன்ட்ரோல் யூனிட் 2088 வி.வி.பேட் எந்திரங்களில் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை பெல் நிறுவன தொழில்நுட்ப பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

    இப்பணியானது வருகிற ஆகஸ்டு 10-ந்தேதிக்குள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சில் வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா தேவி, தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை
    • இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் குடோனில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் பாஸ்கரபாண்டி யன் ஆய்வு செய்தார்.

    முன்னதாக அனைத்து அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு, ஏற்கனவே இருப்பில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந் திரங்களையும் கண்காணிப்பு கேமரா ஒளிப்பதிவுகளையும் கலெக்டர் பார்வையிட்டு தணிக்கை செய்தார்.

    மேலும் தேர்தல் ஆணையத் தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ.எம்.எஸ். 2.0 என்ற செயலி மூலமாக தமிழ் நாட்டிலேயே முதன் முதலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காலாண்டு தணிக்கை மாவட்ட கிடங்கில் இருந்து நேரடியாக இ.எம்.எஸ். 2.0 செயலி மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டது.

    இதில் க.தேவராஜி எம். எல்.ஏ, உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தனி தாசில்தார் பத்மநாபன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.

    • மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரத்தில் மென்பொருளை பதிவேற்றம் செய்வதன் மூலம் குறிப்பிட்ட வேட்பாளரின் சின்னத்தில் அதிக வாக்குகளை பெற வைக்க முடியும்.
    • மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை வேறொரு வேட்பாளர் பெற்று இருந்தாலும், அவர் குறைவான வாக்குகள் பெற்றதாகவே காட்டும்.

    சென்னை:

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதாக அரசியல் கட்சிகள் புகார்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த என்ஜினீயர் கண்ணன் என்பவர், மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரத்தில் மென்பொருளை பதிவேற்றம் செய்து, வேட்பாளரின் வெற்றியை மாற்ற முடியும் என்று கூறுகிறார். இதனை அவர் மாதிரி எந்திரம் மூலம் செய்தும் காண்பித்தார்.

    சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று அவர் மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்து, அதில் எந்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டுமோ? அவரை வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற வைக்கிறார். இது குறித்து என்ஜினீயர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரத்தில் மென்பொருளை பதிவேற்றம் செய்வதன் மூலம் குறிப்பிட்ட வேட்பாளரின் சின்னத்தில் அதிக வாக்குகளை பெற வைக்க முடியும். இதன் மூலம் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை வேறொரு வேட்பாளர் பெற்று இருந்தாலும், அவர் குறைவான வாக்குகள் பெற்றதாகவே காட்டும். ஆனால் இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மென்பொருளை உருவாக்கலாம்.

    இதை தடுக்க ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை பிரித்து எண்ணுவதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காகவும் நான் மெஷின் தயாரித்து இருக்கிறேன். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடமும் எடுத்துரைத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 15 ஆண்டுகளை கடந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கக் கூடாது.
    • அந்த வகையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2007-ம் ஆண்டிற்குரிய வாக்கு பதிவு எந்திரம் 1260, கட்டுப்பாட்டு எந்திரம் 580 என மொத்தம் 1840 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன.

    நாமக்கல்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 15 ஆண்டுகளை கடந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்பாட்டில் வைத்திருக்கக் கூடாது. மேலும் அவற்றை பெங்களூரில் உள்ள பாரத் கவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 2007-ம் ஆண்டிற்குரிய வாக்கு பதிவு எந்திரம் 1260, கட்டுப்பாட்டு எந்திரம் 580 என மொத்தம் 1840 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. இவை அனைத்தும் நகர் புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகும்.

    நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பதிவு எண்களை சரி பார்க்கும் பணி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேலாளர் செல்வராசு மேற்பார்வையில் அந்த துறை ஊழியர்கள் பெல் நிறுவன பணியாளர்கள் ஆகியோர் இதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

    ×