என் மலர்
நீங்கள் தேடியது "பட்ஜெட்"
- மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை கண்டித்து கோஷம்.
தஞ்சாவூர்:
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர்சக்திவேல், பொருளாளர்பாலசுப்பிர மணியன், மாவட்ட நிர்வாகிகள்சந்திரகுமார், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
கோரிக்கையை விளக்கி மூத்த தலைவர் கிருஷ்ணன், விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரமகன் , வி.தொ.ச மாவட்ட தலைவர்கோவிந்தராசு, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் சேவையா ஆகியோர் உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய பட்ஜெட்டை கண்டித்தும், அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கட்சி நிர்வாகிகள் கலியபெருமாள், பாஸ்கர், திருநாவுக்கரசு, ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க நிர்வாகிக ள்கோவிந்தராஜன், துரை.மதிவாணன், தாமரைச்செல்வன், செல்வம், பாலமுருகன், ஆசிரியர் ஓய்வு சுந்தரமூர்த்தி, விசிறி சாமியார் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில்ராமலிங்கம் நன்றி கூறினார்.
- கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
- ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது, கர்நாடகாவின் ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார். அடுத்த 2 ஆண்டுகளில் கோயில்கள் மற்றும் மடங்கள் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கர்நாடாகவில் ஆளும் பா.ஜ.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ராய்ப்பூர் :
காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் சத்தீஸ்கரில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மாநில முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான பூபேஷ் பாகல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சத்தீஷ்காரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பெண்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்-மந்திரி பூபேஷ் பாகல் வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட்டின் சில முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:-
* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் குடும்பங்களை சேர்ந்த 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையிலான வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரு.2,500 உதவி தொகை வழங்கப்படும்.
* ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.3,250-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், ரூ.6,500-ல் இருந்து ரூ.10,000 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் அங்கன்வாடி உதவியாளர்களுக்கு வழங்கப்படும் கவுரவ ஊதியம் ரூ.4,500-ல் இருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது
- தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் தவிர்த்து அவிநாசி, பல்லடம், பொங்கலூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத் தொழில் தான் பிரதானம்.தென்னை, வாழை, கரும்பு, பருத்தி, சோளம், நிலக்கடலை என அந்தந்த பகுதியின் மண், மழை வளத்துக்கேற்ப பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீப ஆண்டுகளாக விவசாய நிலங்களில் உழவு செய்வது, களை எடுப்பது, உரமிடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, விளைபொரு ட்களை அறுவடை செய்வது, சந்தைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதற்கு 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் தான் முக்கிய காரணம் என விவசாயிகள் கூறுகின்றனர். கிராமங்களில் கல், மண் வரப்பு, தென்னை மரங்களை சுற்றி அகழி எடுப்பது, உரக்குழி அமைப்பது, குளம், குட்டையோரம் மரக்கன்று நடுவது, சாலையோரம் உள்ள புதர் செடிகளை வெட்டுவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளில் 100 நாள் திட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தினசரி சம்பளமாக 265 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை மூலம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கூடுதலாக 50 நாள் வேலை நாள் உயர்த்தப்படும் என சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள் கூறுகையில், 100 நாள் திட்டத்தில், ஊராட்சிகளில் வேலை அதிகமுள்ள சமயங்களில் தினமும் 40 ஆயிரம் பேர் வரை பணி செய்வர் என்றனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், 100 நாள் திட்டத்தில் பல இடங்களில் பணிகள் முறைப்படி நடப்பதில்லை.100 நாள் வேலை உறுதியளிப்பு திட் டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் கட்டுமானப்பணி, சாலை அமைத்தல் போன்ற கடினமான பணிகள், தனியாருக்கு கான்ட்ராக்ட் விடப்பட்டு, உடல் உழைப்பு தொழிலாளர்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 நாள் திட்ட தொழிலாளர்களின் பெயரில் வழங்கப்படுகிறது. விவசாய தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் 100 நாள் திட்டம் தான். எனவே 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாய தொழிலில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
அரசு வழங்கும் சம்பளத்துக்கு நிகரான சம்பளம் வழங்க விவசாயிகளும் தயாராக உள்ளனர். இதன் மூலம், தொழிலாளர்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். விவசாயமும் செழிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நகர்ப்புற வளர்ச்சி ரூ.38,444 கோடி, ஊரக வளர்ச்சி ரூ.22,562 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடியிருப்பு போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
திருப்பூர் :
தமிழக பட்ஜெட் குறித்து திருப்பூர் ரைசிங் உரிமையாளர் சங்க தலைவர் கருணாம்பிகா ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது :- தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு மூலம் நகர்ப்புற வளர்ச்சி ரூ.38,444 கோடி, ஊரக வளர்ச்சி ரூ.22,562 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் நகர உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்று நம்பலாம். வெளிமாநில வெளி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு வரும் பொழுது அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடியிருப்பு போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதன் வேலை வாய்ப்பு பெருகும். நெடுஞ்சாலை துறைக்காக ரூ.19,465 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் சீரமைக்கப்பட்டு சரக்கு வாகனங்கள் விரைவில் துறைமுகத்தை சென்றடையும் வகையில் நிலைமை மேம்படும் என்று தொழில்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சரக்குகளை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொண்டு செல்ல முடியும். எரிசக்தி துறைக்காக ரூ.10,694 கோடி ஒதுக்கப்பட்டு ள்ளதால், 'பைப்லைன் கேஸ்' திட்டம் மூலமாக தொழிற்சாலைகளுக்கு மானிய விலையில் எரிசக்தி வழங்குவதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. அரசின் பட்ஜெட் காகித பூ; மக்களுக்கு எந்த நன்மையும் தராது என முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் பேசினார்.
- தி.மு.க. தாக்கல் செய்த பட்ஜெட் ஸ்டாலின் குடும்பத்தை பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது.
மதுரை
ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் அம்மா பேரவையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட பேரவை அலுவலகத்தில் நடந்தது.
இதில் தூய்மை பணியா ளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட பேரவை செயலாளரும், முன்னாள் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.சரவணன் வழங்கி பேசியதாவது:-
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கிளைக் கழக செயலாளர், ஒரு அடிமட்ட தொண்டர் உழைப்பால் முதல்-அமைச்சராகவும், கட்சியின் பொதுச் செயலாளராக வர முடியும் என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை, சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க. தான் காவல் அரணாக உள்ளது என்று கூறிவருவது உண்மையல்ல.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிறுபான்மை இன மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி னார்கள். புனித ஜெருேசலம் செல்லவும், மெக்கா பயணம் மேற்கொள்ளவும் சிறுபான்மையின மக்களுக்கு மானியத்தை அதி.மு.க. அரசு வழங்கியது.
மதுரை தெற்கு தொகுதியில் சவுராஷ்டிரா இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை தெப்பக் குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கி 40 ஆண்டு கால கோரிக்கையை நிறை வேற்றி தந்தார் எடப்பாடி பழனிசாமி.
குறிப்பாக நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது மக்களின் கோரிக்கையான வைகை ஆற்றில் 2 தடுப்பணைகள், உயர் மட்ட மேம்பாலங்கள், மதுரை அரசு மருத்துவ மனையில் கூடுதல் கட்டி டங்கள் என மக்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் வைத்தேன்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து ஒரே ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதுதான் மக்களுக்கு பயன் தரும் பட்ஜெட்டாகும்.
தற்பொழுது 3 முறை பட்ஜெட்டை தி.மு.க. தாக்கல் செய்துள்ளது. மக்களுக்கான திட்டங்கள் எதுவுமில்லை.
தி.மு.க.வின் பட்ஜெட் காகித பூவாக உள்ளது. இந்த பட்ஜெட் மக்களுக்கு எந்த நன்மையும் தராது. கடந்த 10 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டுள்ள பட்ஜெட் மக்களை காக்கும் பட்ஜெட்டாக இருந்தது. தற்போது தி.மு.க. தாக்கல் செய்த பட்ஜெட் ஸ்டாலின் குடும்பத்தை பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ்நாட்டை தலைநிமிரச்செய்யும் சமூகநீதிக்கான பட்ஜெட் என பசும்பொன் பாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.
- மதுரை மெட்ரோ ெரயில் திட்டம் ரூ. 8,500 கோடியில் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்க றிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது-
தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை கடந்தாண்டு ரூ.62ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு ரூ.30கோடியாக குறைக்கப்பட்டிருப்பதும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 8,500 கோடியில் செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
குறிப்பாக குடும்பத்தலை விகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றிப்பதோடு பெண்கள் மகிழ்ச்சி கடலில் உள்ளார்கள். மேலும் ஏரி, குளங்கள் சீரமைப்பு, பன்னோக்கு மருத்துவ மனைகள், 16.500மெகாவாட் புதிய மின்திட்டங்கள் என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கான திட்டங்க ளை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்,
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.1500கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்படும் வகையில் ரூ. 500கோடி மதிப்பில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப் படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வருங்காலங்களில் மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு போன்றவைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது என்பதை தி.மு.க. அரசு எதிர்காலத்தில் சரி செய்யும் என்று நம்புகிறேன்.
இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுவதை நிதிநிலை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. இது தமிழ்நாட்டை தலை நிமிரச்செய்யும் சமூக நீதிக்கான பட்ஜெட்டாகும்.
தி.மு.க.வின் திராவிட முன்மாதிரி அரசு உருவாக்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கையை தயாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜ னுக்கும் எனது சார்பாகவும், அ.தி.ம.மு.க. சார்பாகவும் பாராட்டுக் களையும், வாழ்த்துக்க ளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தெலுங்கு புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டது.
- பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம், ரூ.1,131 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டு இருந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பக்தர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டிற்கான 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்தது. ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்கனவே கடந்த மாதம் ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்தது. ஆனால், தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
தெலுங்கு புத்தாண்டான யுகாதியை முன்னிட்டு திருமலை அன்னமா பவனில் வருடாந்திர பட்ஜெட் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டது.
தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
பக்தர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆட்சி மன்ற குழு 2023-24 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட்டை சுமார் ரூ.4,400 கோடியில் தயாரித்துள்ளது.
உண்டியல் மூலம் ரூ.1,591 கோடி வரை வருவாய் வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் உள்ள டெபாசிட் பணம் மூலம் வட்டி சுமார் ரூ.1000 கோடியும், பிரசாத விற்பனை மூலம் ரூ.500 கோடியும் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விடுதி வசதிகள், அறைகள், கடைகள் வாடகை என ரூ.100 கோடி வருவாய் கிடைக்கும். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.3,200 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று தாக்கத்தால், உண்டியல் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது, அதற்கேற்ப வருடாந்திர பட்ஜெட் மதிப்பீடுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
2021-22 ஆம் ஆண்டிற்கான, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆட்சி மன்ற குழு ரூ.2,937.82 கோடி மதிப்பீட்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒப்புதல் அளித்தது. இதில், பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம், ரூ.1,131 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டு இருந்தது.
பிரசாத விற்பனை மூலம், ரூ.375 கோடி, அறைகள், கடைகள் வாடகை மூலம் ஆண்டுதோறும் பெரும் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் அந்த ஆண்டு ரூ.3 ஆயிரம் கோடி மட்டுமே வருவாயாக கிடைத்தது.
ஒவ்வொரு ஆண்டும் உண்டியல் வருமானம் பெருமளவில் அதிகரிக்கிறது மற்றும் பட்ஜெட் திட்டங்களும் அதிகமாக உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தமிழக பட்ஜெட்டில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
- தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த காவரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசா யிகள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் எம்.அர்ச்சுனன் கூறியதாவது:-
காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கூட்டமைப்பு 20 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு 14.2.21-ல் அ.தி.மு.க. ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் விராலிமலை அருகில் அடிக்கல் நாட்டப்பட்டது.
காவிரி ஆற்றின் கரூர் மாயனூர் கதவணையில் இருந்து புதுக்கோட்டை, தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் முதல் நிலையாகவும், தெற்கு வெள்ளாறில் இருந்து வைகை ஆறு வரை 108 கிலோமீட்டர் 2-ம் நிலை யாகவும், வைகை ஆற்றில் இருந்து காரியாபட்டி புதுப்பட்டி குண்டாறு வரை 34 கிலோமீட்டர் 3-ம் நிலையாகவும் என மொத்தம் 260 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் வெட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கால்வாய் திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 8 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த திட்டத்திற்கு 2021-22 அ.தி.மு.க. ஆட்சியில் பட்ஜெட்டில் ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டது.
2022-23-ல் தி.மு.க. ஆட்சியில் ரூ.280 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
மாயனூர் ஜீரோ பாய்ண்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரம் வரை 4 பேக்கேஜ்கள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நடப்பு 2023-24 பொது பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்த்த 7 மாவட்ட விவசாயிகளுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இருக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு பட்ஜெட் விவாதத்தின் போது காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு இந்த ஆண்டு கூடுதல்நிதி ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்ஜெட் கூட்டத்தில் மூன்று பணிமனைகள் ரூ.1,347 கோடி செலவில் மேம்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- பூந்தோட்ட பள்ளி தெருவில் உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் அஜாக்ஸ் அருகே விளையாட்டு திடல் அமைப்பதற்கான இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
சென்னை:
திருவொற்றியூர் பஸ் நிலையத்தில் இருந்து தாம்பரம், ஐகோர்ட்டு, வேளச்சேரி, கோயம்பேடு போன்ற பல்வேறு இடங்களுக்கு மாநகரப் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகர்கோவில், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தில் திருவொற்றியூர், தாம்பரம் சைதாப்பேட்டை ஆகிய மூன்று பணிமனைகள் ரூ.1,347 கோடி செலவில் மேம்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும முதன்மை திட்ட அதிகாரி ரவிக்குமார், கே.பி.சங்கர் எம் எல் ஏ மற்றும் அதிகாரிகள் நேற்று திருவொற்றியூர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது பஸ் நிறுத்துவதற்கான இடம், டிரைவர் மற்றும் கண்டக்டர் தங்கும் அறை பயணிகளுக்கான கழிவறை அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி தெருவில் உள்ள அரசு கலைக் கல்லூரி மற்றும் அஜாக்ஸ் அருகே விளையாட்டு திடல் அமைப்பதற்கான இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
- விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் என்பதை சிவசேனா வரவேற்கிறது.
- அரிசி, கேழ்வரகு, பருப்பு உள்ளிட்டவைகளை இந்து அறநிலையத்துறை மூலம் வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
சிவசேனா உத்தவ் பால் தாக்கரே கட்சி மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாநில முதன்மைச் செயலாளர் சுந்தர வடிவேலன் ஆகியோர் நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விவசாயிகள் எதிர்பார்த்த திட்டங்கள் இல்லாததால் விவசாய பட்ஜெட் ஏமாற்றம் அளித்துள்ளது. விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட் என்பதை சிவசேனா வரவேற்கிறது.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை அரசு மேம்படுத்த வேண்டும். சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கருத்துக்கள் சொல்ல உரிமை உள்ளது.
அதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நாகை மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.
மீன்பிடித்தொழிலை தவிர வேறு எதுவும் இல்லாததால், மக்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை உருவாகி உள்ளது.
எனவே தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆடி மாதம் கோயில்களில் நடைபெறும் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல என்ற புரிதலை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
ஆடி மாதம் கோயில்களில் கூழ் ஊற்றும் வகையில், அதற்கு தேவையான அரிசி, கேழ்வரகு, பருப்பு உள்ளிட்டவைகளை இந்து அறநிலையத்துறை மூலம் வழங்க வேண்டும்.
இது குறித்து சிவசேனா கட்சி சார்பில் இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின் போது மாநில இளைஞரணி செயலாளர் விஜய் உடன் இருந்தார்.
- கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிடுவார்.
- 70-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெற உள்ளதாக தெரிகிறது.
சென்னை :
சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016-ம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார். மேயராக பதவியேற்ற குறுகிய காலகட்டத்திலேயே 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேயர் பிரியா தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஒரு சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிடுவார். மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்துள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை கூடுதலான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, 70-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று மேயர் பிரியா தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் இதுவாகும்.
இந்த முறை பட்ஜெட்டில் கவுன்சிலர் வார்டு வளர்ச்சி நிதி உயர்வு, சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல், மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி திட்டங்கள், சிங்கார சென்னை 2.0 திட்டப்பணிகள், மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மைத் துறைக்கு புதிய திட்டங்கள், துறை ரீதியாக காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய கூட்டம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடுவதோடு நிறைவுபெறும்.
இதைத்தொடர்ந்து, நாளை (28-ந்தேதி) பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். கட்சி வாரியாக கவுன்சிலர்கள் விவாதத்தின் மீது பேசுவார்கள். இறுதியில் மேயர் பிரியா பதிலுரை நிகழ்த்துவார். கூட்டத்தின் இறுதியில் 2023-24-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும். கடந்த ஒரு வருடத்தில் சென்னை மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த சொத்து வரி, நீண்டகால வாடகைகள் போன்றவை வசூலிக்கப்பட்டு உள்ளதால் நிதி ஆதாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 2022-23-ம் ஆண்டைக்காட்டிலும் இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.