search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பிறந்தநாள்"

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
    • தலைமைக் காவலர் கருப்பசாமி என்பவரின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியாக இருந்து உள்ளார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் மாவட்ட அலுவலர் வரையிலான 8 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைத்துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல் படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைதளபதி வரையிலான 4 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் தடய அறிவியல் துறை பிரிவில் 2 அலுவலர்கள் துணை இயக்குநர் மற்றும் அறிவியல் அலுவலர் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் "மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்" வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    மேலும், சாயல்குடி காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில், கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொள்ளை குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு தலைமறைவான குற்றவாளிகளை 25.03.2022 அன்று கைது செய்யும் பணியில் ஈடுபட்டபோது திரு கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர், தீவிர குற்றத்தடுப்பு பிரிவு, இராமநாதபுரம் மாவட்டம், எதிரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு இடது தொடையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்தபோதும், சற்றும் தளர்வில்லாமல் தனது தைரியச் செயலினால் இரண்டு எதிரிகளையும் கைது செய்ய உதவியாக இருந்துள்ளார்.

    இந்த தாக்குதலில் தலைமைக் காவலர் கருப்பசாமி என்பவரின் உயிரை காப்பாற்ற மிகவும் உதவியாக இருந்து உள்ளார். கே.நவநீத கிருஷ்ணன், உதவி ஆய்வாளர்களின் துணிச்சலையும், செயலையும் பாராட்டி அவருக்கு காவல் துறையின் வீரதீர செயலுக்கான "மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கம்" வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

    மேற்கண்ட பதக்கங்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் வேறு ஒரு விழாவில் வழங்கப்படும்.

    • இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம் வழியாக சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு முதலமைச்சர் செல்கிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

    சென்னை:

    காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வரலாற்றுப் பெருமை வாய்ந்த காஞ்சிபுரம் மண்ணில் பிறந்து தனது அடுக்கு மொழி பேச்சாற்றலாலும்-எழுத்தாற்றலாலும்-அறிவாற்றலாலும் தமிழக மக்களை கவர்ந்த மாபெரும் அரசியல் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதி அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் காலை 10 மணியளில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கிடும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

    தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த உளுந்தையிலிருந்து வருகிற 15-ந்தேதி காலை 8 மணியளவில் புறப்பட்டு காஞ்சிபுரத்திற்கு வருகிறார்.

    ஸ்ரீபெரும்புதூர் நகரிலிருந்து இவ்விழா நடைபெறும் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானம் வரை 40 கி.மீ. தூரத்திற்கு வழி நெடுகிலும் கழகத்தினரும், பொதுமக்களும் எழுச்சியுடன் நின்று மகிழ்ச்சியுடன் வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அண்ணா பிறந்த புனித பூமிக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொன்னேரி கரை, கம்மாள தெரு சந்திப்பு, சங்கரம் மடம், மேற்கு ராஜா வீதி வழியாக காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் வந்து அடைகிறார். அங்குள்ள பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்குகிறார்.

    பின்னர் அவர் இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், காந்தி சாலை, ரங்கசாமி குளம் வழியாக சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு செல்கிறார்.

    அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்துகிறார். அதன் பிறகு அவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி விளையாட்டு அரங்கில் நடைபெறும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்கிறார்.

    இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

    இதே போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு கூறி உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் அவருடன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    • அண்ணா உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தலைமைக் கழகச் செயலாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
    • கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளான வருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், தலைமைக் கழகச் செயலாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் மற்றும் பாசறை நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன.
    • இன்னும் ஓரிரு நாளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது.

    சென்னை:

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த பணம் குடும்ப தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தன. குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.

    இதற்காக இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், நடைபாதையில் வணிகம் செய்திடும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியக் கூடிய பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதியோர்கள் பலர் இதில் பயன் அடைய உள்ளனர்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாத சம்பளம் அதிகம் வாங்குபவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது. ஒவ்வொரு குடும்பத்தலைவியின் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் கிடைக்கும் வகையில் அரசு 1 கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

    இந்த பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இதில் குடும்ப தலைவி யார்-யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளை தேர்வு செய்வது, அதில் அவர்களது ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

    வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளது.

    அதனை அடிப்படையாக வைத்து குடும்ப தலைவிகள் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் தகுதியாக இருக்கும் பட்சத்தில் ரூ.1000 பணம் அவரவர் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.

    இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறுகையில், 'மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கு யார்-யார் தகுதியானவர்கள் என்பதை கண்டறிய வருமானத்தை கணக்கிடுவது முக்கியம் என்பதால் அதை அடிப்படையாக வைத்தும், ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்தும் பணம் வழங்கப்படும்.

    எனவே அந்த விதிமுறைகளை அரசு விரைவில் வெளியிட உள்ளது. அதை படித்து பார்த்து ஒவ்வொரு குடும்ப தலைவிகளும் ரூ.1000 பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    அந்த மனுக்களை பரிசீலனை செய்து அரசு பணம் ஒதுக்கும். அவை வங்கி கணக்கு மூலம் குடும்ப தலைவிகளுக்கு சென்றடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார்.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி சாம்பவலசு பகுதியில் திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கி பேசினார்.ஒன்றிய துணை செயலாளர் ஏ.என்.திருச்செந்தில், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

    விழாவில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும்,திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.விழாவில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் முத்துவெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான குணசேகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகவேல் என்ற ஏ.எஸ்.ராமலிங்கம், முத்தூர் பேரூர் செயலாளர் ஜி.முத்துக்குமார், காங்கயம் தொகுதிக்குப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
    • மதுரை மத்திய ஜெயிலில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள ஜெயில்களில், சிறைவாசம் அனுபவித்து வரும் நீண்ட நாள் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரக் குறிப்புகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி, சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்திருந்தது.

    அதன் அடிப்படையில் மதுரை மத்திய ஜெயிலில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்து மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    • பரமக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பரமக்குடி

    பரமக்குடியில் காந்திசிலை முன்பு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்திற்கு போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, காளிமுத்து, பரமக்குடி அவைத்தலைவர் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் எம்.கே.ஜமால் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.

    இக்கூட்டத்தில் அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் சிறப்பு பேச்சாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, டாக்டர் முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் பாலாமணி மாரி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் அனிதா முருகேசன், நகர்மன்றத் உறுப்பினர்கள் ஜெய்சங்கர், கண்ணன் உட்பட ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர் அம்மா பேரவை செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான வடமலையான் நன்றி கூறினார். 

    • பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அண்ணாவின் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

    ஊட்டி

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் மற்றும் தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆலோசனைக்கிணங்க, ஊட்டி கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையில் மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல்கில் ரவி, காந்தல் ரவி, செல்வராஜ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னுபிரபு, கஜேந்திரன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், எல்.பி.எப் ஜெயராமன், மார்கெட் ரவி, ராமன், தியாகு, ஜெகதீஷ், மத்தீன், குண்டன், குரூஸ், மாதன், சங்கர், இலியாஸ், பொன்சிசெல்வம், ராஜம்மா, ராஜ்குமார், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியன்நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றப்பட்டது.
    • அண்ணாவின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

     மங்கலம் :

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இந்தியன்நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியானது தி.மு.க. வர்த்தகஅணி திருப்பூர் ஒன்றிய அமைப்பாளர் சுல்தான்பேட்டை கோபால் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் மு.சர்புதீன் முன்னிலை வகித்தார் . மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மு.ரபிதீன் , ஒன்றிய கழக அவைத்தலைவர் மு.அப்துல்பாரி, மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, , திருப்பூர் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஷா.தம்பிரஹீம், மு.ஐக்கிரியா, மு.முஜிபுர்ரகுமான் க.முபாரக்ராஜா மற்றும் மங்கலம் தி.மு.க. ஊராட்சி கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கெ௱ண்டனர்.

    • அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர்.
    • பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்து வாழ்ந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதில் காஞ்சிபும் மாநகராட்சி மேயர் யுவராஜ் மகாலட்சுமி, வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடிகுமார், தேவேந்திரன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, ஜெயராஜ், திலக்குமார், வாலாஜாபாத் அரிக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன் ராஜா, கவுன்சிலர் பானு பிரசாத், நகர செயலாளர் செல்வகுமார், முன்னாள் தலைவர் பா. சங்கர், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் செந்தில், சுரேஷ், அபிராமி விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத காலத்தில், பேச்சையும் எழுத்தையும் வைத்து ஓர் இயக்கத்தை சாத்தியப்படுத்தியவர் அண்ணா.
    • வாழும்போது கிளையாக விரிந்து, நிழலையும் கனிகளையும் தமிழர்க்கு தந்த பெருமகன். இன்று மண்ணுக்குள் வேராக தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கிறார்.

    பெரியார் சூரியன் என்றால் அண்ணா மழை. பெரியார் லட்சியவாதி. அண்ணா யதார்த்தவாதி. பெரியார் நாளையைப் பற்றி சிந்தித்தார். அண்ணா இன்றைய பொழுதை தமிழர்க்கு கையளிக்க செயல்பட்டார்.

    இரண்டு அறிவுசீவிகள் ஒரே கட்சியில் இருக்க முடியாது என்கிற நடைமுறை யதார்த்தத்திலிருந்து உருவானதே தி.மு.க. பெரியார் திருமணம் என்பதெல்லாம் பிரிவதற்காக உருவாக்கப்பட்ட காரணங்களே.

    அதிகாரத்துக்கு வெளியே இருந்ததால்தான் பெரியாரால் சமரசமின்ற சமராட முடிந்தது. சிறிய அளவில் தேர்தல் ஜனநாயகத்தோடு சமரசம் செய்து கொண்டதால்தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த பல முட்களைப் பிடுங்க முடிந்தது அண்ணாவால்.

    கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார். எந்த பக்தி இலக்கியங்களை பெரியார் கழுவி ஊற்றினாரோ அதே திருமூலரிடமிருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்' என்கிற பதத்தை உருவி கையாண்டார் அண்ணா.

    மாநிலங்களவை கன்னிப் பேச்சிலேயே திராவிட நாடு குறித்து அனல் கக்கினார். ஆனாலும் சீனப்போர் வந்தபோது, திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டார். வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என அதற்கொரு விளக்கமும் தந்தார்.

    தான் நிதானமானவன். அவசரப்பட்டு குழிக்குள் விழுந்து விடமாட்டேன். அதற்காக அச்சப்பட்டு அடங்கிப்போகவும் மாட்டேன் என அரசியல் நுட்பம் கூடியவர் அண்ணா.

    ஈரடி முன்னே, ஓரடி பின்னே எனும் யுக்தியை வகுத்தவர். இத்தகைய சாதுர்யத்தால்தான் முதல்வராக பதவி வகித்த குறுகிய காலத்தில் (2 ஆண்டுகள்) மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்ற முடிந்தது. சுயமரியாதை திருமணத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்க முடிந்தது.

    தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மனதில் கொண்டு, தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழி திட்டம் கொண்டுவர முடிந்தது.

    ஆகாஷ்வாணி வானொலியாக மாறியதும். ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசியும் சாத்தியமானது. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்ய முடிந்தது.

    பேருந்துகள் அரசுடைமை ஆகியது. ஏழை பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிந்தது. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற்றன.

    சென்னை செகரட்டேரியட், தலைமைச் செயலகமானது.

    விதவைகளைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க முடிந்தது.

    கூட்டத்தில் நின்றால் கண்டுபிடிக்க முடியாத தோற்றம். குள்ளமான உருவம். மாற்று சிந்தனை, தீவிரமாக செயலாற்றும் திறன், ஜனநாயகப் பண்பு, நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், ஆங்கில அறிவு, எளிமை, நேர்மை இத்தகைய எல்லா படிக்கட்டுகளிலும் அயராது ஏறி, தன்னை உயரமாக்கி, உலகுக்கு காண்பித்தார் அண்ணா.

    பிறர் பேச அஞ்சியதைப் பேசியவர். மாநில சுய உரிமை பற்றி மாநிலங்களவையில் அவர் பேசியபோது நம் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அண்ணாவுக்கு ஆதரவாக இல்லை.

    தனித்து களமாடியவர். இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசை நிறுவிய இரண்டாவது முதல்வர் அண்ணா. மாநிலக் கட்சியொன்றின் முதல் முதல்வர்.

    தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத காலத்தில், பேச்சையும் எழுத்தையும் வைத்து ஓர் இயக்கத்தை சாத்தியப்படுத்தியவர் அண்ணா.

    வாழும்போது கிளையாக விரிந்து, நிழலையும் கனிகளையும் தமிழர்க்கு தந்த பெருமகன். இன்று மண்ணுக்குள் வேராக தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கிறார்.

    -கரிகாலன்

    • அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அருகில் மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அருகில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல். ஏ., சு.குணசேகரன், முன்னாள் எம். பி.,சி.சிவசாமி, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர் , பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் அன்பகம் திருப்பதி, கே.பி.ஜி. மகேஷ்ராம், ஹரிஹரசுதன், திலகர் நகர் சுப்பு, கருணாகரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×