search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்பேத்கர்"

    • அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.
    • நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    உயர்நீதிமன்ற அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.

    அப்போது, அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை அமைச்சர் ரகுபதி கடிதமாக வழங்கினார்.

    பேச்சுவார்த்தையின்போது, நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

    மேலும், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட செயலாளர் தம்பிசேவியர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • விழாவில் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மக்கள் தேசம் பறையர் பேரவை சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு டாக்டர் அம்பேத்கர் பிறந்த தின விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தம்பி சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மூணார் முருகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் மாரிராஜ், மாவட்ட அமைப்பாளர் டேனியல், மாவட்ட துணைசெயலாளர் சங்கர் ஷா, விழா ஒருங்கி ணைப்பாளர் சுபாஷ், நகர செயலாளர் முத்துக்குமார், நகர தலைவர் சங்கர லிங்கம், நிர்வாகிகள் ராமர், கண்ணன், கரன், கார்த்திக் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமா னவர்கள் கலந்து கொண்டனர்.

    • தலைவர்களின் சிலையை வைக்க வருவாய் துறை,காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.
    • இருப்பினும், அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே சித்தம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சர்ச் அருகே இளைஞர்கள் சிலர் ஒன்றரை அடி உயரம் கொண்ட மார்பளவு அம்பேத்கர் சிலையை சிமெண்ட் மூலம் செய்து அதற்கு தங்க முலாம் பூசி அதனை வைக்க முயன்றனர்.

    ஆனால், தலைவர்களின் சிலையை வைக்க வருவாய் துறை,காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இங்குள்ள காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக அம்பேத்கரின் சிலையை வைக்க முயன்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் தலைமையில் வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு இன்று விடியற்காலை விரைந்து சென்றனர். அம்பேத்கர் சிலையை உரிய அனுமதியின்றி வைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.

    இது குறித்து திருவள்ளூர் தாசில்தார் மதியழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அனுமதி பெற்று அம்பேத்கார் சிலையை வைக்க அறிவுறுத்தினார். மேலும் அங்கு வைத்திருந்த அம்பேத்கர் சிலையை துணியை கொண்டு மூடி சீல் வைத்தார். இதன் பின்னர், அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.இருப்பினும், அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • வாடிப்பட்டியில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது.
    • தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா பஸ் நிலையம் முன்பு நடந்தது. ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமை தாங்கினார்.

    துணைச் செயலாளர் சிறுத்தை பாலன், பாசறை பேரூர் செயலாளர் யுவராஜா, தொகுதி செயலாளர் வளவன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் அரசு விஜயார் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் தளபதி, அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார்.

    நில உரிமை மீட்பு துணை அமைப்பாளர் விடுதலை வீரன் இனிப்பு வழங்கினார். தி.மு.க முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், த.மா.க வட்டாரத் தலைவர் பால சரவணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மச்சராசன், குண்டுமலை, பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். தாதம்பட்டி வளவன் நன்றி கூறினார்.

    • எங்கள் அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.
    • பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.

    தெலுங்கானா அரசு சார்பில் ஐதராபாத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிலேயே உயரமான 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது.

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும்போது பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

    இதுகுறித்து தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது:-

    அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி சந்திரசேகர ராவ் பேசினார்.

    ஆனால் ஒரு பெண் கவர்னருக்கு அழைப்பு இல்லை. அது ஒரு பெரிய நிகழ்வு. எனக்கான அழைப்பிதழ் எதுவும் இல்லை.

    எனக்கு அழைப்பிதழ் கிடைத்திருந்தால், எங்கள் மாண்புமிகு அம்பேத்கர் ஜியின் மகத்தான ஆளுமையில் நான் வந்து பங்கேற்றிருப்பேன்.

    அவர் நமது அரசியலமைப்பின் தந்தை மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சிக்காகவும், பெண்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் அவர் தனது வார்த்தைகளை முன்வைத்துள்ளார்.

    நேற்றைய தினம் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்றார்.

    • அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, மக்கள் தேசம் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க பேரவையின் சார்பில் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகி சேரன்யாக்கோப்பு, மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே போல பல்லடம் சமூகஆர்வலர்களின் கூட்டமைப்பு சார்பில், அம்பேத்கார் பிறந்த நாள் விழா, பல்லடம் கடைவீதியில் நடைபெற்றது.

    இதில் அண்ணாதுரை, டாக்டர் ராஜ்குமார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம் ,பாலாஜி ஈஸ்வரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    • நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் அம்பேத்கர் 132-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்திராநகர் அருகே உள்ள அவரது சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் நகர செயலாளர் ராஜா முன்னிலையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கவுன்சிலர் கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    தி.மு.க. சார்பில் நகரசெயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரைஆனந்த் தலைமையில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராஜ பாண்டி, சரவணன், கார்த்தி கேயன் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் அ கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் பொதுக்குழு உறுப்பினர் சோணை, மதியழகன் வட்டார தலைவர், சிதம்பரம், வெள்ளைசாமி, உடையார், முன்னாள் கவுன்சிலர்கள் சண்முக ராஜன், மோகன்ராஜ், மாவட்ட சிறுபான்மைபிரிவு தலைவர் சையதுஇப்ராஹீம்,, மாவட்ட மகளிர்தலைவி இமயமடோனா, விஜயகுமார், வள்ளியப்பன், லட்சுமணன், சீனிவாசன், மற்றும் பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்,

    தமிழ்நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் சங்கரசுப்பிரமணியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் இளங்கோ, மாநிலச் செயலர் செல்வ குமார், மாவட்டத் தலைவர் சரோஜினி, செயலர் குண சேகரன், துணைத்தலைவர் தமிழ்ச் செல்வம், கிளைத்தலைவர் ராசாமணி, கிளைச் செயலர் பிரபா கரன், குமரேசன், செந்தில் குமார், கருப்புச்சாமி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் கண்ணகி, சிவகங்கை நகர செயலாளர் மருது, மாவட்ட துணைச் செயலாளர் கோபால், நகரத் துணைச் செயலாளர் பாண்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பு, மாதர் சங்க நிர்வாகிகுஞ்சரம் காசிநாதன், தொழிற்சங்க நிர்வாகிகள் காளை, உடையார் உள்ளிட்ட பலர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • திமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    சட்ட மேதை அம்பேத்கரின் 132வது பிறந்த தினத்தை முன்னிட்டு சோழவரம் ஒன்றியம் வெள்ளி வாயல் ஊராட்சி அடுத்த பள்ளிபுரம் அம்பேத்கர் சிலைக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திமுக நிர்வாகி வடிவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் சிறப்பு அழைப்பாளராக திமுக நிர்வாகி மனோஜ் கலந்துகொண்டு வெள்ளிவாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள 8 ம் வகுப்பு 17 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் மற்றும் பாட புத்தகங்கள் வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மரகதம் நடராஜன், திமுக ஊராட்சி செயலாளர் துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் தலைமையில் பா.ம.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட செயலாளர் அக்கிம், மாவட்ட தலைவர் சந்தானதாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட பசுமை தாயகம் செயலாளர் கர்ண மகாராஜா முன்னிலை வகித்தார்.கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி வரவேற்றார்.

    மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, மாவட்ட பசுமை தாயகம் தலைவர் திருஞானம், கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர்,மாவட்ட இளைஞர் சங்க தலைவர் பாலா,மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ்,மாவட்ட மாணவர் சங்கத் தலைவர் செரீப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    நந்திவரம் கூடுவாஞ்சேரி அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கேசவலு தலைமையில் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் ஆர்.கலைச்செல்வன், தேவி தனசேகரன், எம்.கண்ணன், முன்னாள் கவுன்சிலர் என்.சரவணன் நிர்வாகிகள் பார்கவி வெங்கடேசன், பெருமாள், டெய்லர் கன்னியப்பன், டி.பிரபு, ஆர்.முருகன், அருள் குமரன், பப்பு, அசோகன், குமரன், செல்வராஜ், அரவிந்தராஜா, ஆதித்தன், எம்.கோதண்டம், கே.எஸ்.விஜயகுமார், பினகபாணி, எஸ்.நட்ராஜ், என்.மாணிக்கவாசகம், சுந்தரம், தங்கவேல், வி.கார்த்திக், எம்.கே.முனியாண்டி, மகேஷ், மாரி, தணிகாச்சலம், தனசேகர், அருண், மணிகண்டன், பிரவின், தினேஷ், நித்தியானந்தம், ராஜ்குமார்,சூர்யா,எஸ்.வினோத், வி.விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இரவில் முளைப்பாரி எடுத்து வானவேடிக்கை முழங்க பலர் ஊர்வலமாக வந்தனர். அப்போது யார் முதலில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவது என்பதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    அதன்பிறகு இருதரப்பினரும் கலைந்து சென்றபோது போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்கினர். அப்போது போலீஸ் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் கல்வீசி தாக்கியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரையும் அந்த கும்பல் கல்வீசி தாக்கினர். ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் பலத்த காயமடைந்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார், மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஸ்டோங்கரே வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டனர்.

    இதனையடுத்து இரவு முழுவதும் விடியவிடிய தேடுதல் வேட்டை நடத்தி கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் போலீசாரிடம் ஒருதரப்பை சேர்ந்தவர்களை மட்டுமே அதிகளவில் கைது செய்திருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.

    கல்வீச்சு சம்பவத்தால் பெரியகுளத்தில் பதட்டமான சூழல் உருவானதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இன்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் முக்கிய இடங்களில் பேரிகார்டுகளை போட்டு பிரச்சினை ஏற்படாத வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு அம்பேத்கார் பிறந்தநாள்விழாவில் இதேபோன்று மோதல் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்தனர் என்றும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த ஆண்டு இரவு நேரத்தில் பிரச்சினைக்குரிய இடத்தில் அதிகளவு மக்களை அனுமதித்தால் கலவரம் வெடித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    • அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.
    • ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஐதராபாத் ஹூசைன் சாகர் பகுதியில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அம்பேத்கர் சிலையை இன்று மதியம் 2 மணியளவில் திறந்து வைக்கிறார்.

    இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று கட்டப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட உள்ளது.

    ரூ.148.50 கோடியில் சுமார் 11.80 ஏக்கர் நிலத்தில் என்டிஆர் கார்டன் பகுதியில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கட்டுமானப் பணிகளுக்கு எஸ்சி நலத்துறை நிதி வழங்கிய நிலையில், கட்டுமானப் பொறுப்பு சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஸ்தூபியை நிர்மாணித்த பிறகு, சிலையின் பாகங்கள் டெல்லியில் தயாரிக்கப்பட்டு ஐதராபாத்திற்கு கொண்டுவரப்பட்டன. கனரக கிரேன்களின் உதவியுடன் அவை முறையாக நிறுவப்பட்டுள்ளன.

    இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வலிமையான உலோகப் பொருட்கள் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையின் அடிப்பாகத்தில் இருந்து, சிலையை முழுவதுமாக கண்டுக்களிக்க படிக்கட்டு மற்றும் சாய்வுதளத்துடன் 15 பேர் அமரக்கூடிய 2 லிப்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் அமைக்கப்படுகிறது.நூலகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் வைக்கப்பட உள்ளது. சிலையின் கீழ், தூணில் உள்ள நினைவு கட்டிடத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது.

    அம்பேத்கரின் வாழ்க்கை தொடர்பான முக்கிய நிகழ்வுகள் அடங்கிய அருங்காட்சியகம் மற்றும் புகைப்படத் தொகுப்பு இங்கு நிறுவப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே ஆடியோ காட்சி அறைகள் உள்ளன.

    நினைவிடத்திற்கு வெளியே பசுமைக்காக. 2.33 ஏக்கர் காலி நிலம். ராக் கார்டன், லேண்ட்ஸ்கேப்பிங், தோட்டம், நீர் ஊற்று உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 450 கார்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 750 பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 50 ஆயிரம் பேர் உட்காருவதற்கு வசதியாக நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

    ×