search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை தேர்தல்"

    • காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீர், அரியானா, மராட்டியம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்ட சபை தேர்தலை நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.

    இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

    இதேபோல அரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 3-ந்தேதியுடன் அங்கு சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 4-ந்தேதி நடக்கிறது.

    இந்த தேர்தலோடு மராட்டியம் மாநிலத்துக்கான தேர்தல் தேதியை அறிவிக்காததால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன.

    இந்த நிலையில் காஷ்மீர், அரியானா மாநிலங்களுக்கான தேர்தல் முடிவு வெளியான பிறகே மராட்டியம், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப் படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    அக்டோபர் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடை பெறுகிறது. அதன் பிறகு தான் மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்க ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி வெளியாகும்.

    மராட்டிய மாநில சட்ட சபையின் பதவி காலம் நவம்பர் 26-ந்தேதியும் , ஜார்க்கண்ட் மாநில சட்ட சபையின் பதவிகாலம் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைகிறது.

    மராட்டிய மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் மராட்டிய தேர்தலோடு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

    புதுடெல்லி:

    மராட்டிய மாநில சட்ட சபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ந்தேதி நிறைவு பெற உள்ளது. அதுபோல அரியானா மாநில சட்டசபை யின் 5 ஆண்டு கால பதவி காலம் நவம்பர் 3-ந்தேதி நிறைவு பெறுகிறது.

    ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 5-ந்தேதி முடிய உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மராட்டியம், அரியானா, ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களிலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் முதல் செய்ய தொடங்கியது.

    இதனால் இந்த 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். முதல் கட்டமாக இந்த 4 மாநி லங்களிலும் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அரசு உயர் அதிகாரிகளை மாற்றம் செய்யும் பணி நடந்தது.

    இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் 4 மாநிலங்களிலும் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்தது. அதோடு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தியது. அடுத்த கட்டமாக அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஓட்டுப்பதிவை எப்போது நடத்தலாம் என்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 மாநிலங்களுக்கும் சென்று வந்தனர்.

    குறிப்பாக காஷ்மீரில் பாதுகாபபு ஏற்பாடுகள் பற்றி கடந்த சில தினங்களாக தீவிர ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

    இதையடுத்து 4 மாநில சட்டசபை தேர்தல் தேதி அட்டவணையை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதனால் இந்த 4 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

    இதையடுத்து 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வை நடத்த தொடங்கி உள்ளன.

    இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. மராட்டி யத்தில் பா.ஜ.க.-சிவசேனா (ஷிண்டே அணி) கூட்டணி ஆட்சி உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

    காஷ்மீரில் யூனியன் பிரதேச கவர்னர் மூலம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மிக மிக தீவிரமாக உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் இப்போதே களை கட்ட தொடங்கி உள்ளது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க போகிறேன் என்று காங்கிரஸ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது.
    • எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது.

    சென்னை:

    சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சட்டமன்றப் பொதுத்தேர்தலை கருத்திற்கொண்டு, முதலமைச்சர் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வலைதளத்தில் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலைக் கண்ணீர் வடித்துள்ளார்.

    தி.மு.க. அரசின் முதலமைச்சருடைய அம்மா உணவகம் பற்றிய எக்ஸ் வலைதள செய்தியைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி, கடந்த மூன்றாண்டுகளில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ, மேயரோ, எவரேனும் நேரில் சென்று அம்மா உணவகங்களை ஆய்வு செய்தனரா என்று கேள்வி எழுப்பி இருந்தார். எடப்பாடி பழனிசாமி அறிக்கையிலே இருந்த உண்மை, முதலமைச்சரையும், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளையும் உறுத்தியவுடன், ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விடுகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களுக்கு முறையாக பதில் சொல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து ஆதாயம் தேடி தி.மு.க.வுக்கு சென்றவர்களை வைத்து அறிக்கை விட வைப்பது வாடிக்கையாகி விட்டது.

    முதலமைச்சரின் நடவடிக்கையால், அ.தி.மு.க. காணாமல் போய்விடுமோ என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்துவிட்டது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி இருக்கிறார்.

    'அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா'' என்ற புரட்சித் தலைவரின் வைர வரிகளை சிரமேற்கொண்டு, அரசியலில் வீரநடை போடுபவர் எங்கள் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து வீண்வம்பு வளர்த்தால், அவர்கள் பாணியிலேயே எசப்பாட்டு பாட எங்களுக்கும் தெரியும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

    எத்தனை சேகர்பாபுக்கள் வந்தாலும் தமிழக மக்களின் மனதை மாற்ற முடியாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் கோபம் எதிரொலிக்கும். ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. அரசு, நாங்கள் செயல்படுத்திய திட்டங்களைத்தான் இன்றும் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இந்த அம்மா உணவகம் ஒன்றே 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதைக் கூறி, இனியாவது உங்கள் மூளையில் உதித்த நல்ல வளர்ச்சித் திட்டங்களை தமிழக மக்களுக்குத் தாருங்கள், வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என்று தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம்.
    • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டலான் அறிவித்துள்ளார்.

    அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

    அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை மாண்புமிகு கழகத் தலைவருக்கும் - தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்

    "ஒருங்கிணைப்புக்குழு" பின்வருமாறு அமைக்கப்படுகிறது.

    அமைச்சகர்கள் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டசபை தேர்தலில் தங்களின் அரசியல் நிலைப்பாடு மாறுமா ? என்று கேள்வி.
    • செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில் அளித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் வரும் 2026ம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தங்களின் அரசியல் நிலைப்பாடு மாறுமா ? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பா.ரஞ்சித் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

    பிரச்சனையின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை கேட்கிறோம். ஆனால், பிரச்சனைகளை தீர்த்து வைக்காத, பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயலாத, தீர்த்து வைப்பதற்கான காரணங்களை ஆராயததால் நாம் நிச்சயமாக நமது முடிவையும் மாற்ற வேண்டிய தேவை இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஆனால், இது ஒரு எச்சரிகை தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.
    • இளைஞர்களை அதிகளவில் சேர்த்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக தகவல்.

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்ததை அடுத்து பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஆலோசனை நடத்தினார்.

    அதன்படி, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தின்போது, 2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மக்களவைத் தேர்தல் தோல்விக்கு கூட்டணி பலம் இல்லாததே காரணம் என நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மகளிர் உரிமை தொகை, விடியல் பயணத் திட்டம் போன்ற திட்டங்களும் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கட்சியில் தற்போதைய நிலையே தொடரட்டும், புதிதாக யாரையும் கட்சியில் சேர்க்க வேண்டாம் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியபோது எடப்பாடி பழனிசாமி அமைதியாக கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும், எங்கெல்லாம் பிரச்சினை உள்ளதோ, அவைகளை சரி செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு, ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

    இளைஞர்களை அதிகளவில் சேர்த்து அவர்களுக்கு வாய்ப்பளிக்க ஈபிஎஸ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இருப்பினும், இன்றைய கூட்டத்தில் பிரிந்த சென்ற தலைவர்களை இணைப்பது குறித்து பேசப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.
    • கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இதன்மூலம் கேரளாவில் கால்பதித்த பெருமையை அக்கட்சி பெற்றது.

    அது மட்டுமின்றி கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலை விட, தற்போது நடந்த தேர்தலில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீத மும் அதிகரித்தது. இதனால் கேரள மாநி லத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    வருகிற உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெரும்பான்மையான வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் பா.ஜ.க. செயல்படத் தொடங்கியிருக்கிறது.

    இந்நிலையில் பா.ஜ.க. புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.

    அதில் பா.ஜ.க. தேசிய தலைவரும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியுமான ஜெ.பி.நட்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊழல் மற்றம் குடும்ப அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் அதிகாரத்தை பெற பொய் தகவல்களை பரப்புகின்றன. அந்த கட்சிகள் பா.ஜ.க.வை வடமாநில கட்சி போல் சித்தரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டன.

    ஆனால் அவை அனைத்தும் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் உடைத்தெறியப்பட்டது. இந்த தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பைவிட அதிக வாக்குகளை பா.ஜ.க. பெற்றது. தென் இந்தியாவிலும் பா.ஜ.க. வலுவாகி வருகிறது.

    கேரள மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் திருச்சூர் தொகுதியில் மட்டும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையை பெற்றார்.

    திருவனந்தபுரம் மற்றும் அட்டிங்கல் தொகுதியில் தோல்வியடைந்தாலும் பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 6 மாநகராட்சிகளில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது வெற்றிக்கு சமம்.

    கேரளாவில் எதிர் அணியாகவும், அகில இந்திய அளவில் ஒரே அணியாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர். இங்கு பா.ஜ.க.வினர் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர்.

    2016-ம் ஆண்டு நடைபெற உள்ள கேரள சட்டசபை தேர்தலில் அமோக வெற்றிக்காக காத்திருக்கிறோம். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் பிரதான கட்சியாக பா.ஜ.க. உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

    • மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
    • சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    மும்பை:

    மராட்டியத்தில் 2019 பேரவைத் தோ்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால், முதல்-மந்திரி பதவியைத் தர மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்த சிவசேனா, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ்-காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவா் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    ஆனால், 2022-ம் ஆண்டு சிவசேனா மூத்த தலைவா் ஏக்நாத்ஷிண்டே கட்சியை உடைத்து, பா.ஜனதாவுடன் கைகோர்த்தாா். இதனால், உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தாா். ஷிண்டே புதிய முதல்- மந்திரி ஆனார்.

    பா.ஜனதாவின் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதல்-மந்திரி ஆனார். இதன்பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்த சரத்பவாரின் நெருங்கிய உறவினா் அஜித்பவாரும் ஆளும் கூட்டணியில் இணைந்து துணை முதல்-மந்திரி பதவியைப் பெற்றாா்.

    சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணி மொத்தமுள்ள 48 இடங்களில், 30 தொகுதிகளில் வென்றது. பாராளுமன்றத் தோ்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு மராட்டியத்தில் ஏற்பட்ட தோல்வியும் முக்கியக் காரணமாக இருந்தது.

    இந்த நிலையில், சட்டசபை தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆளும் கூட்டணிக்கு கடும் சவால் அளிக்க இருக்கிறது.

    இந்த நிலையில் புனேயில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத்பவாா் கூறியதாவது:-

    மராட்டியத்தில் ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது. அதை மக்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டியது எதிா்க்கட்சிகள் கூட்டணியின் கடமையாகும். எனவே, சட்டசபைத் தோ்தலில் (சரத்பவாா் தலைமை) தேசியவாத காங்கிரஸ், (உத்தவ்தாக்கரே தலைமை) சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியாகப் போட்டியிடும்.

    தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. எனினும், விரைவில் இது தொடா்பாக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறும். பாராளுமன்றத் தோ்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் நல்ல வரவேற்பை அளித்தாா்கள்.

    இடதுசாரிகள், பி.டபிள்யூ.பி. கட்சி ஆகியவையும் எங்கள் கூட்டணியில் உள்ளன. பாராளுமன்றத் தோ்தலில் அக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை. எனினும், சட்ட சபைத் தோ்தலில் அவா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது எங்கள் கடமை என்றாா்.

    பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி, ஆண்டுக்கு மூன்று எரிவாயு சிலிண்டா் இலவசம் உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை மராட்டியத்தில் ஆளும் கூட்டணி இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 'இந்த அறிவிப்புகள் எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.

    சில நாட்களுக்கு வேண்டுமானால் இதை வைத்து பரபரப்பாகப் பேச முடியும். கையில் பணம் இல்லாமல் சந்தைக்கு பொருள் வாங்கச் செல்வதுபோல உள்ளது ஆளும் கட்சியின் நிலை.

    இவ்வாறு சரத்பவாா் கூறினார்.

    • 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் களம் வித்தியாசமானதாகவே இருக்கும்.
    • புதிய கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட தொடங்கி உள்ளது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் தனித்தனி கூட்டணியை ஏற்படுத்தி உள்ள நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சீமானுடன் விஜய் கைகோர்க்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இப்படி இருவரும் கை கோர்க்க இருக்கும் புதிய கூட்டணி தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சீமானுடன் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளையும் எதிர்க்கும் முக்கிய கட்சிகள் பலவும் கை கோர்க்க இருப்பதாக பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள கட்சிகளோடும், சிறிய கட்சிகள் சிலவற்றுடனும் கூட்டணி அமைத்து 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை நாம் தமிழர் கட்சி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சி 8 சதவீத ஓட்டுகளை எட்டிப்பிடித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நிலையில் விஜயும் கைகோர்க்கிறார்.

    அதுபோன்ற சூழலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளை ஒருங்கிணைப்பதால் நிச்சயம் பெற்றி பெற முடியும் என்பதே புதிய கூட்டணியின் கணக்காக உள்ளது.

    இதுபற்றி அரசியல் நிபுணர் ஒருவர் கூறும்போது, 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் களம் வித்தியாசமானதாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. சீமானின் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறி இருப்பதும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்குவதுமே அதற்கு முக்கிய காரணமாகும்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்தலை சந்தித்தாலே அது திராவிட கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும். இவர்களோடு மற்ற கட்சிகளும் சேரும்பட்சத்தில் புதிய கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அது போன்று ஒரு கூட்டணி உருவானால் நிச்சயம் அது 2 திராவிட கட்சிகளின் வாக்குகளை பிரிக்கும் வகையிலேயே அமையும் என்றார்.

    • மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் ஆணையம் தொடங்கியது.
    • மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

    புதுடெல்லி:

    18-வது பாராளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அக்டோபர் மாதம் முதல் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சவாலாக இருந்தது. இதேபோல 4 மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா கூட்டணிக்கு இந்தியா கூட்டணி கடும் போட்டியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

    அரியானா சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 3-ந்தேதியும், மகாராஷ்டிராவில் நவம்பர் 26-ந்தேதியும், ஜார்க்கண்டில் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைகிறது. இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் தொடர்பான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது.

    இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

    2024 ஜூலை 1-ந்தேதியை தகுதி தேதியாக வைத்து வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் பணி வருகிற 25-ந்தேதி தொடங்கும். வாக்காளர் இறுதி பட்டியல் ஆகஸ்டு 20-ந்தேதி வெளியிடப்படும்.

    காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்களின் பெரும் பங்களிப்பை பார்த்து தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் ஜூலை 1-ந்தேதி, 2024 தகுதி தேதியாக கொண்டு புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அமர்நாத் யாத்திரை ஆகஸ்டு 19-ந்தேதி முடிவடைந்து. அதன் பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    • நாகிரெட்டி பாலத்தில் போலீசார் நேற்று வீடு வீடாக சோதனை நடத்தினர்.
    • அரசு தன்னார்வலர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வாக்குபதிவின் போது பல்வேறு இடங்களில் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அப்போது வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வீட்டில் சோதனை செய்தபோது வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் வெடிகுண்டுகள் இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் பல்நாடு மாவட்டத்தில் பெல்லம் கொண்டா நாகிரெட்டி பாலத்தில் போலீசார் நேற்று வீடு வீடாக சோதனை நடத்தினர்.

    அப்போது அரசு ஊழியராக வேலை செய்து வரும் தன்னார்வலர் ஒருவர் வீட்டிலிருந்து வெடிகுண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவரின் தந்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அப்பகுதி தலைவராக இருந்து வருகிறார். அரசு தன்னார்வலர் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பா.ஜ.க கூட்டணி தென் மாநிலங்களில் பல இடங்களில் டெபாசிட் கூட இழக்க நேரிடலாம்.
    • இந்தியாவின் ஒருமைப்பாடு எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

    கேரளா மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மத நல்லிணக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.

    தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 130 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பா.ஜ.க கூட்டணி தென் மாநிலங்களில் பல இடங்களில் டெபாசிட் கூட இழக்க நேரிடலாம்.

    தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் இருந்து அவர்கள் 20 இடங்களுக்கு கீழ் தான் வெற்றி பெறுவார்கள்.

    குஜராத், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த முறை கிடைத்ததில் பாதி இடங்கள் தான் பா.ஜ.க.விற்கு கிடைக்கும். இதனால் அவர்கள் எங்கிருந்து 400 இடங்களில் வெற்றி பெறப் போகிறார்கள் என தெரியவில்லை.

    இந்தியாவின் ஒருமைப்பாடு எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த முறை வகுப்புவாத சக்திகள் வெற்றி பெற்றால் நமது நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் இட ஒதுக்கீடுக்கும் ஆபத்தானது.

    அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்கள்.

    கேரளா மாநிலத்தில் மதவாத சக்திகள் நுழைய மக்கள் ஒருபோதும் அனுமதிக்காததால் ஒவ்வொரு முறையும் கேரளாவுக்கு வரும்போது பொறாமைப்படுகிறேன்.

    அடுத்த தலைமுறையை பாதுகாக்க வகுப்புவாத சக்திகளை எப்படி எதிர்த்து போராடுவது என்பதை நான் கேரளாவிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×