என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் குற்றம்"

    • தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
    • தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் எச்சரிக்கையாக இருங்கள்.

    மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

    இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்பவர்களால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அந்த வரிசையில், மியான்மர் - தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட பணியில் அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டு நேற்று முன் தினம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 266 இந்தியர்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

    வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 266 இந்தியர்களை நேற்று இந்திய விமானப்படை (IAF) விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்தது. முன்னதாக திங்களன்று, 283 இந்தியர்களும் இதேபோல் திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

    மேலும் இந்த விவகாரத்தில் இந்திய தூதரகங்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன்படி இதுவரை 549 இந்தியர்கள் மீட்டு தாயகம் அழைத்துவரப் பட்டுள்ளனர்.

    மேலும் தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    • டிஜிட்டல் பண பரிவர்த்தனை மற்றும் இணையவழி சேவைகள் அதிகரித்ததில் இருந்து சைபர்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • சைபர் குற்றங்களை தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசாங்கம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    சைபர் குற்ற செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 28 ஆயிரம் மொபைல் நம்பர்களை கண்டறிந்துள்ளதாக ஹரியானா காவல் துறையை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்து இருக்கிறார். சைபர்கிரைம் உதவி எண் 1930 மற்றும் சைபர் குற்றங்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் 27 ஆயிரத்து 824 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டதாக கூடுதல் காவல் துறை தலைவர் ஒ பி சிங் தெரிவித்து இருக்கிறார்.

    கண்டறியப்பட்டு இருக்கும் மொபைல் போன் நம்பர்களின் சேவைகள் விரைவில் துண்டிக்கப்பட்டு விடும் என காவல் துறை அதிகாரி தெரிவித்து இருக்கிறார். இந்த நம்பர்கள் சைபர்சேப் போர்டலில் பதிவேற்றம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் மையம் சார்பில் இந்த பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    குருகிராமில் இருந்து 7 ஆயிரத்து 142, பரிதாபாத்தில் இருந்து 3 ஆயிரத்து 896 நம்பர்களும், பஞ்ச்குலாவில் இருந்து 1420. சோனிபட்டில் இருந்து 1408, ரோடக்கில் இருந்து 1045, ஹிசரில் இருந்து 1,228, அம்பாலாவில் இருந்து 1,101 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டன என்று ஒ பி சிங் தெரிவித்துள்ளார். மொபைல் போன் நம்பர்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக மாவட்ட சைபர்கிரைம் அலுவலகங்களுக்கு தகவல் கொடுக்குப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1930 உதவி எண், 29 சைபர் காவல் நிலையங்கள், 309 சைபர் உதவி மையங்களில் இருந்து 47 ஆயிரத்திற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ரூ. 15 கோடிக்கும் அதிகமான பணத்தை காவல் துறை மீட்டுள்ளது என ஒ பி சிங் மேலும் தெரிவித்தார். இந்தியாவில் அக்டோபர் மாதம் தேசிய சைபர் செக்யுரிட்டி மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    • மும்பையில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்ற முதியவர் சைபர் மோசடியில் சிக்கி இருக்கிறார்.
    • இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்கள் 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் ஒடிடி தளங்களில் ஒன்றாக நெட்ஃப்ளிக்ஸ் இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் பயனர் ஒருவர் சந்தாவை புதுப்பிக்க முயன்று சைபர் மோசடியில் சிக்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த மோசடியில் மும்பையை சேர்ந்த முதியவர் ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய புகார் மும்பையை அடுத்த ஜூஹூ காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    காவல் நிலைய தகவல்களின் படி, முதியவருக்கு நெட்ஃப்ளிக்ஸ் ஆட்டோ-ஜெனரேட் செய்த மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாவை புதுப்பிப்பதற்கான நினைவூட்டல் தொடர்பான தகவல் இடம்பெற்று இருந்தது. அதில் அவர் மாதாந்திர கட்டணமான ரூ. 499 செலுத்தி ஸ்டிரீமிங் சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மின்னஞ்சலுடன் வந்த இணைய முகவரியை 73 வயதான நபர் க்ளிக் செய்துள்ளார்.

    இவர் க்ளிக் செய்ததும் திறந்த மற்றொரு வலைப்பக்கத்தில் இவரின் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட கேட்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு செய்து நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்-ஐ புதுப்பிக்கலாம் என்றும் அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. பின் இவரது மொபைல் எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒடிபி) அனுப்பப்பட்டு இருக்கிறது. அதற்கான குறுந்தகவலில் தொகையை சரியாக பார்க்காமல், முதியவர் ஒடிபி-யை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு செய்ததும், அவரின் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் உடனடியாக காணாமல் போய்விட்டது.

    சைபர் செக்யுரிட்டி வல்லுனர்கள், சட்ட நிறுவனங்கள் பொது மக்களிடம் ஒடிபி-யை யாரிடமும் பகிர வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும், இது போன்ற சைபர் குற்றங்களுக்கு மக்கள் தொடர்ந்து பலியாவது வாடிக்கையாகவே உள்ளது. இந்த சம்பவத்தில் வங்கி சார்பில் இவ்வளவு பெரிய தொகைக்கான பரிவர்த்தனையை உண்மையில் நீங்கள் செய்தீர்களா? என்ற கேள்வியுடன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த அழைப்பில் தான் முதியவர், ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க சைபர் குற்றங்களை பற்றிய தகவல் தெரிவிக்கும் முனையத்தில் புகார்களின் எண்ணிக்கை 15.3 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

    • 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தெலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

    எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை நடத்தினர்.

    இதில் 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இந்த துறையினர் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்ததில் இந்த செல்போன்கள் மூலம் 20 லட்சம் செல்போன் எண்களை பயன்படுத்தி மேற்படி குற்றங்கள் மற்றும் மோசடி அரங்கேறியது உறுதி செய்யப்பட்டது. இந்த எண்கள் மற்றும் செல்போன்கள் நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்தவை ஆகும்.

    இதைத்தொடர்ந்து இந்த 28,200 செல்போன்களை உடனடியாக முடக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

    மேலும் மேற்படி 20 லட்சம் செல்போன் இணைப்புகளையும் உடனடியாக மறு ஆய்வு செய்து, அதில் போலியானவை என கண்டறியப்படும் இணைப்புகளை துண்டிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    பொது பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதி செய்யும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு துறை மற்றும் மாநில போலீசார் இணைந்து இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    குறிப்பாக மோசடி நபர்களின் நெட்வொர்க்கை கூண்டோடு அகற்றுவதையும், டிஜிட்டல் அச்சுறுத்தல்களில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    5000 இந்தியர்கள் ஆள் கடத்தல் கும்பல்கள் மூலம் கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று கம்போடியாவில் 300 இந்தியர்கள் தங்கள் கையாள்களுக்கு எதிராக 'கிளர்ச்சி' செய்ததாக ஆந்திரப் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

    ஆந்திராவைச் சேர்ந்த 150 இளைஞர்கள் கம்போடியாவில் =ஒரு வருடமாக சிக்கிக் கொண்டுள்ளனர், அங்கு சீன ஏஜெண்டுகளால் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மற்றும் டாஸ்க் கேம் மோசடி, பங்குச் சந்தை மோசடி உள்ளிட்டவற்றை செய்ய சீன ஏஜெண்டுகளால் வற்புறுத்தப் படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் ஏ ரவிசங்கர் கூறுகையில், இந்த கடத்தப்பட்ட இந்தியர்கள் கம்போடியாவில் உள்ள ஜின்பே மற்றும் கம்பவுண்ட், சிஹானூக்வில் ஆகிய இடங்களில் பெரிய அளவிலான கலவரங்களை ஏற்படுத்தினர். இது சைபர் குற்றங்களுக்கான மையமாக கூறப்படுகிறது.

    காவல்துறையின் எண்களுக்கு போன் செய்து அதுதொடர்பான வீடியோக்களை அனுப்பியுள்ளனர். நேற்று சுமார் 300 இந்தியர்கள் கம்போடியாவில் தங்கள் ஏஜெண்டுகளுக்கு எதிராக பெரிய அளவில் 'கிளர்ச்சி' செய்தனர் என்று தெரிவித்தார். மேலும் அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னதாக சிங்கப்பூரில் டேட்டா என்ட்ரி வேலை வாங்கித்தருவதாக கூறி இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்துவதாக மே 18 அன்று, விசாகப்பட்டினம் காவல் துறையினர் சுக்கா ராஜேஷ், எஸ் கொண்டலா ராவ் மற்றும் எம் ஞானேஷ்வர் ராவ் ஆகியோரை மனித கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

    • நான் சொல்லும் வங்கிக்கணக்கில் 1 லட்சம் ருபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்
    • அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய் மால்தியை ஆறுதல் படுத்தியுள்ளார்.

    செல்போனில் போலி அழைப்புகளால் நடக்கும் ஏமாற்று வேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன் உச்சமாக போலி அழைப்பினால் அரசப் பள்ளி ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பலரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் பணியாற்றி வந்தவர் 58 வயதான மால்தி வர்மா[Malti Verma]. இவருக்கு காலேஜ் செல்லும் வயதில் மகள் ஒருவரும் மற்றொரு மகளும் உள்ளனர் .

    இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று பள்ளியில் வேலை செய்துகொண்டிருந்த மால்தியின் மொபைல் எண்ணுக்கு வாட்சப் கால் ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை செய்தவரின் ப்ரொபைல் டிஸ்பிலேவில் போலீஸ் உடையணிந்த ஒருவரின் படம் இருந்துள்ளது.

    போனை எடுத்து மால்தி பேசிய நிலையில் மறுபுறம் இருந்து பேசிய நபர், 'உங்களின் மகள் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசில் பிடிபட்டுள்ளார். நான் சொல்லும் வங்கிக்கணக்கில் 1 லட்சம் ருபாய் டெபாசிட் செய்தால் உங்கள் மகள் மீது எந்த வழக்கும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம். பணம் அனுப்பிய பின்னர் அவர் பத்திரமாக வீடு வந்து சேர்வார்' என்று கூறியுள்ளார்.

    இதைக் கேட்டு பதற்றமடைந்த மால்தி தனது மற்றொரு மகளுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி வாட்சப் கால் வந்த நம்பரை மகளிடம் சொல்லியுள்ளார். அந்த நம்பர் +92 என்று தொடங்கியதால் அது போலி அழைப்பு என்று மகள் தாய் மால்தியை ஆறுதல் படுத்தியுள்ளார்.

    மேலும் காலேஜில் இருந்த சகோதரிக்கும் போன் செய்து அவர் பத்திரமாக இருப்பதை உறுதிப்படுத்தி தாய்க்கு ஆறுதல் அளித்துள்ளார். ஆனாலும் பதற்றத்துடனேயே இருந்த மால்தி வீடு திரும்பியதும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.போலி அழைப்பு தொடர்பாக மால்தி யின் குடும்பம் புகார் அளித்த நிலையில் போலீசார் அதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார்
    • மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறினார்.

    இந்தியா முழுமைக்கும் செல்போன் போலி அழைப்புகள் மூலம் அரங்கேறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் கவனமாக இருக்க எவ்வாறு அறிவுறுத்தினாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    இதுபோன்ற சைபர் மோசடிகளை செய்வதையே வேலைவாய்ப்பாகச் சிலர் கருதி முழு நேரமும் அதில் ஈடுபட்டு வருகின்றனர். நான் போலீஸ் அதிகாரி பேசுகிறேன், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, பணம் கொடுத்தால் உங்களை இந்த சிக்கலில் இருந்து காப்பற்றுகிறேன் என்று கூறியும் மோசடிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் வழக்கம்போல போலீஸ் உடை அணிந்து வீடியோ கால் மூலம் மோசடி செய்யலாம் என்று நினைத்த நபர் தவறுதலாக மோசடிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட கேரள சைபர் செல் அலுவலகத்துக்கே வீடியோ கால் போட்டுள்ளார். திருச்சூர் கேரள சைபர் செல் அதிகாரி ஒருவருக்கு வீடியோ கால் வந்துள்ளது.

    அதை அவர் தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார். எதிர் பக்கம் இருந்த போலீஸ் உடையணிந்த மோசடி காரர் வழக்கம்போல பேசியுள்ளார். தனது கேமரா வேலை செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார், ஆனால் மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறியதால் சைபர் போலீஸ் தனது கேமராவை ஆன் செய்தார்.

    அதன் பின்னரே தான் வசமாக சிக்கியதை மோசடிக்காரர் உணர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சைபர் போலீஸ், இந்த வேலையை செய்யாதீர்கள், என்னிடம் உங்களின் முகவரி, நீங்கள் உள்ள இடம் என அனைத்தும் தெரியும், இது சைபர் செல், இந்த [மோசடி] வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்வதே உங்களுக்கு நல்லது என்று எச்சரித்துள்ளார். அவர் பேசியது அனைத்தும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட்ட நிலையில் அதை திருச்சூர் சைபர் போலீஸ் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 1,77,000 வியூஸ்களை கடந்து வைரலாகி வருகிறது.

     

    • கணினிகளில் பழைய வெர்ஷன்களை கொண்ட கூகுள் குரோம் செயல்பாட்டில் உள்ளது
    • Windows மற்றும் Mac க்கான 131.0.6778.69/70க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷன் உள்ளது.

    கூகுள் குரோம் பிரவுசரில் பலவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகப் பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய கம்பியூட்டர் எமர்ஜென்சி குழு [CERT-In] எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கணினிகளில் பழைய வெர்ஷன்களை கொண்ட கூகுள் குரோம் செயல்பாட்டில் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

    அதாவது, Windows மற்றும் Mac க்கான 131.0.6778.69/70க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும், Linuxக்கு 131.0.6778.69க்கு முந்தைய டெஸ்க்டாப் வெர்ஷனிலும் கூகுள் குரோம் இயங்குகிறது.

     

    எனவே பக் [bugs] களை பயன்படுத்தி செக்கியூரிட்டி கட்டுப்பாடுகளை எளிதில் கடந்து பாதுகாக்கப்பட்ட தகவல்களைக் குற்றவாளிகள் திருடும் அபாயம் அதிகம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது.
    • போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்ததும் மோசடி செய்ய முயன்ற நபர் அழைப்பை துண்டித்துள்ளனர்.

    மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு நேற்று மதியம் ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.

    துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1,11,930 சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக உங்கள் மீது மும்பை காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    பின்னர் உங்களிடம் இருந்து வாக்குமூலம் வாங்க வேண்டும் என்று கூறி அந்த நபர் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்து உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளனர்.

    பொதுமக்களுக்கு இத்தகைய சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதனை துணைக் காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார்.

    • பின்னணியில் உள்ள சீன மோசடிக் கும்பலை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களை சைபர் அடிமைகளாக மாற்றும் சம்பவங்களை தடுப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    சென்னையை சேர்ந்த அப்துல்காதர், சையது ஆகியோரது மூலமாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த சங்கர் சர்கார் என்பவர் 9 பேரை லாவோஸ் நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

    இதுபோன்று வேலைக்கு சேர்ந்தவர்கள் அங்கு சைபர் அடிமைகளாக மாற்றப்பட்டு தவித்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் சேலம் தம்மம்பட்டி போலீஸ் நிலையத்தில் கடந்த ஜூலை மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அப்துல் காதர், சையது ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சங்கர் சர்காரை பிடிக்க போலீசார் வலை விரித்தனர்.

    இது தொடர்பாக விமான நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு லுக் அவுட் நோட்டீசும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து சங்கர் சர்கார் கைது செய்யப்பட்டார்.

    அவரை போலீசார் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி அழைத்து வந்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இவரது பின்னணியில் உள்ள சீன மோசடிக் கும்பலை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×