என் மலர்
நீங்கள் தேடியது "வறட்சி"
- திசையன்விளை பகுதியில் மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
- கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது.
திசையன்விளை:
திசையன்விளை பகுதியில் பருவகால மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள முதலாளிகுளம், எருமைகுளம், செங்குளம், குருவி சுட்டான்குளம், சுகாதியாகுளம் உள்பட அனைத்து குளங்களும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இதுவரை பெய்த மழையால் ஒரு அடி ஆழம் கூட நனையவில்லை. இப்பகுதியில் சென்ற ஆண்டும் கால மழை சரியாக பெய்யவில்லை. விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற 400 முதல் 600 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் கிடைத்த தண்ணீரில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.
கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது. இதனால் தென்னை மற்றும் முருங்கை விவசாயிகள் தண்ணீரின்றி அவதிபட்டனர். இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்யும் பயிர்களை காப்பாற்றிவிடலாம் என நம்பிக்கையில் இருந்தனர்.
இந்த ஆண்டும் இதுவரை மழை சரியாக பெய்யாததால் சென்ற ஆண்டு நிலைதான் இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடுமோ என்று கவலை அடைந்துள்ளனர். இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை இல்லை இன்று காலையிலும் வெயில் அடிக்கிறது.
- உடன்குடி வட்டார பகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
- கடந்த ஆண்டு இங்குள்ள குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதி என்பது 18 கிராம ஊராட்சி ஒரு பேரூராட்சி உள்பட பெரும் பகுதியாகும். இங்கு சுமார் 75 சதவீத பகுதி விவசாய நிலங்களாக உள்ளன. அதுவும் செம்மணல் நிறைந்த தேரிபகுதியில் பனை, தென்னை தோப்புகள் அதிக அளவில் உள்ளன.
இங்கு ஊடுபயிராக முருங்கை விவசாயம் நடந்து வருகிறது. மேலும் மரவள்ளி கிழங்கு, சக்கர வள்ளி கிழங்கு, நிலக்கடலை, சப்போட்டா, மா, வாழை போன்ற விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு இங்குள்ள தாங்கைகுளம், சடையனேரி குளம், தருவைகுளம் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட 10 குளங்கள், ஊரணி குட்டைகள், கருமேனி ஆகியவை நிரம்பி வழிந்தன. திரும்பிய திசைகள் எல்லாம் தண்ணீராகவே காட்சி தெரிந்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த ஆண்டு இதுவரை மழை பெய்யாததால் எந்த குளமும், நிரம்பவில்லை. இப்படியே இந்த ஆண்டு மழை ஏமாற்றி விடுமோ?என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். மேலும் தண்ணீர் தேங்க கூடிய பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் தற்போது விளையாட்டு மைதானம் ஆக்கி கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
இன்னும் சில இடங்களில் ஆடு மாடுகளை மேய்ப்பதற்கு மேய்ச்சல் நிலங்களாகவும் பயன்படுத்திவிட்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நல சங்க தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,
மழை வருமா? குளங்கள் நிரம்புமா?என்பது கேள்விக்குறியாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் குளங்களை எல்லாம் முழுமையாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த ஆண்டு குளங்கள், குட்டை கள் முழுமையாக நிரம்ப வில்லை என்றால் அருகில் உள்ள கடல் நீர்மட்டம் விவசாய விளை நிலங்களில் புகுந்து பல ஏக்கர் விவசாய நிலங்கள் உவர் நிலமாக மாறி போகும் என்றார்.
இதேபோல் சமூக ஆர்வலர் சிவலூர் ஜெயராஜ் கூறும்போது, இதோ வருகிறது, அதோ வருகிறது என்று அனைத்து குளங்களும், குட்டைகளும், புதியதாக உருவாக்கப்பட்ட ஊரணிகளும், மழைக்காக தண்ணீருக்காக, காத்தி ருக்கின்றது. ஆனால் இப்பகுதியில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதனால் தான் மழை குறைந்துவிட்டது. என்று பலர் கூறுகிறார்கள்.
அதனால் தமிழக அரசு, மாவட்ட கலெக்டர், மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்துரையாடல் நடத்தி பல இடங்களில் வீணாக செல்லும் மழை தண்ணீரை கொண்டு வந்து உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகளை முழுமையாக நிரப்ப வேண்டும்.
சடையனேரி கால்வாய்யை நிரந்தர கால்வாயாக அறிவித்து அடிக்கடி தண்ணீர் திறந்து குளங்கள் மறறும் குட்டைகளில் தண்ணீர் தேக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். என்று கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த பலரும் இனியும் மழையை நம்பி காத்திருக்காமல் இங்குள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
- இளையான்குடி யூனியனில் வறட்சி நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வடக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் பேரூர் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. மூத்த உறுப்பினர் புக்குளி முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளரும் இளையான்குடி பேரூராட்சி தலைவருமான நஜூமுதீன் முன்னிலை வகித்தார். தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன் சிறப்புரையாற்றினார்.
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, இளையான்குடி வடக்கு ஒன்றியம் முழுவதும் வாக்குச்சாவடி குழு அமைப்பது, தி.மு.க.வின் அனைத்து சார்பு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிப்பது, இளையான்குடி யூனியனில் பருவமழை பொய்த்ததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கெடுத்து வறட்சி நிவாரணப் பணிகளை தொடங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க. மாவட்ட விவசாய அணி காளிமுத்து, மாணவரணி சந்திரசேகர் தொண்டரணி புலிக்குட்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் சுப. தமிழரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் முருகன், நிர்வாகிகள் சாரதி என்ற சாருஹாசன், உதயசூரியன், தட்சிணாமூர்த்தி, சிவனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்தினால் தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது,
- மறுகால்நீர் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடன்குடி:
உடன்குடி அனல் மின் நிலைய அதிகாரிக்கு, கருமேனி ஆறு கழிமுக பகுதி விவசாயிகள் நல கூட்டமைப்பு தலைவர் நாகராஜன் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் அருகேயுள்ள எல்லப்ப நாயக்கன் குளத்தின் மறுகாலில் இருந்து வெளியேறும் உபரிநீர், அனல்மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க கால்வாய் கரையில் மணல் ஒப்பந்தகாரர்களால் சுமார் ½ பர்லாங் தூரம் 10 அடி ஆழத்திற்கு கரை பகுதி மண்ணை எடுத்த காரணத்திலும், அனல் மின் நிலைய மதிற்சுவர் எதிர் பக்க உபரிநீர் கால்வாய் கரை 6 கி.மீ தூரத்திற்கு மிகவும் சேதமடைந்திருப்பாதாலும் குலசை தருவைகுளத்திற்கு தண்ணீர் செல்வதில் மிகுந்த இடையூறு ஏற்பட்டுள்து,
இதன்விளைவாக உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள விவசாயத்தோட்டங்கள் மற்றும் பொது மக்கள்ள்குடிநீர் ஆகியன பாதிப்படையும் நிலை உருவாகி உள்ளது. இந்தாண்டு மணிமுத்தாறு, பாபநாச மலைகளில் சரியான மழையில்லை. ஆகையினால் பாபநாச அணைநீர் மட்டம் 97 அடிதான் நிரம்பியிருக்கிறது.ஏல்லப்பநாயக்கன் குளத்து மறுகால்நீர் எளிதில் குலசை தருவை குளத்திற்கு வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது
எனவே எல்லப்ப நாயக்கன் குளம் மறுகா லிருந்து குலசை தருவைகுளம் வரை உபரிநீர் கால்வாயின் அனல்மின்நிலைய மதிற்சுவர் எதிர் கரையை 8 கி.மீ தூரத்திற்கு சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் சரிசெயய்து தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மழை மற்றும் வறட்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.
- இயற்கை வழி விவசாயம், எலியை கட்டுப்படுத்தும் முறை.
நாகப்பட்டினம்:
ரிலையன்ஸ் அறக்கட்ட ளையின் நிறுவனர் தினத்தை முன்னிட்டு நெற்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தல் குறித்து வல்லுனர்கள் மற்றும் விவசாயிகளிடையே கலந்துரையாடல் நிகிழ்ச்சி நாகையில் நடைபெற்றது. ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்ட மேலாளர் மெய்கண்டன் தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முனைவர் திருமேனி தலைவர் மற்றும் பேராசிரியர் (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை) பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் அவர்கள் கலந்துகொண்டு மழை மற்றும் வறச்சியை தாக்கி வளர கூடிய ரகங்கள் பற்றி விளக்கினார்.
நெற்பயிரில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் சந்திரசேகர் (தொழில்நுட்ப வல்லுனர் பயிர்பாதுகாப்பு துறை) வேளாண்மை அறிவியல் நிலையம்- சிக்கல், முனைவர் குமார ரெத்தினசபாதி முதல்வர்- ஆதிபாராசக்தி தோட்டக்கலைகல்லூரி வேலூர், முனைவர் காந்திபன் பூச்சியியல் துறை பேராசியியர் மற்றும் தலைவர் பஜன்கோ வேளாண்மை கல்லூரி காரைக்கால் ஆகியோர் விளக்கினார்கள்.
நெற்பயிரில் உர மேலாண்மை, மண் வளத்தை பெருக்குதல், இயற்கை வழி விவசாயம், எலியை எளிய முறையில் கட்டுப்படுத்தல் குறித்து முனைவர் பாபு இணை பேராசிரியர் அண்ணாம லைப்பல்கலைக்கழகம் சிதம்பரம் அவர்கள் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அறக்கட்டளையின் அலுவலர் பிரவின்ராஜ் செய்திருந்தார்.
- முதுகுளத்தூர், கடலாடியில் வறட்சி பாதித்த பகுதிகளை வேளாண்மை இயக்குநர் ஆய்வு செய்தனர்.
- பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் நெல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நடப்பாண்டில் இந்த பகுதிகளில் சுமார் 95 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை நம்பி மானாவாரியாக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்ய வேண்டிய மழை போதிய அளவில் பெய்யாததால் வளர்ச்சி நிலை, தூர் பிடிக்கும் பருவம் மற்றும் பூக்கும் பருவம் என பல்வேறு நிலைகளில் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
கண்மாய்களில் போதிய அளவு நீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் நீர்பாசன வசதியுள்ள பகுதிகளிலும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதிகளில் பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்பட்டது.
சில பகுதிகளில் பயிர்கள் ஆரம்பகட்ட வளர்ச்சிக்குப்பின் மணி பிடித்த நிலையில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக மணிகள் பதராக மாறி மகசூல் முற்றிலுமாக பாதிக்க ப்பட்டது.
பாதிக்க ப்பட்ட விவசாயி களின் தொடர் கோரி க்கைக்கு பிறகு தற்போது வருவாய் த்துறை மற்றும் வேளா ண்மைத் துறைகளின் மூலம் வறட்சி பாதிப்புகள் குறித்த கண க்கெடுப்பு நடந்து வருகிறது.
இந்த பணிகளை ஆய்வு செய்ய சென்னை யில் இருந்து வந்த வேளாண்மை இயக்குநர் அண்ணா துரை, பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூலுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கடலாடி வட்டாரம் ஏனாதி, முதுகுளத்தூர் வட்டாரம் தேரிருவேலி ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
சாகுபடி செய்யப்பட்ட பரப்பு, பாதிக்கப்பட்ட பரப்பு, பயிர் காப்பீடு செய்யப்பட்ட பரப்பு, பாதிப்பு விவரங்களை கணக்கெடுக்கும் பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வறட்சி பாதிப்பு கணக்கெடுக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை சாகு படிக்கு கொண்டு வரும் சிறப்புத் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயன சர்மா உடனிருந்தார். ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சரசுவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி, செயற்பொறியாளர் சங்கர் ராஜ், வேளாண்மை உதவி இயக்குநர் (பயிர் காப்பீடு) செல்வம் மற்றும் முதுகுளத்தூர், கடலாடி வட்டார வேளாண்மைத் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- கடலாடி தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
- சிக்கல் காவல் நிலையம் முதல் சப்பாணி கோவில் வரை தார் சாலை அமைக்க வேண்டும்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் நடந்தது. ஆணையாளர் அண்ணாதுரை, மேலாளர் முரளிதரன், முன்னாள் தலைவர் முனியசாமி பாண்டியன், துணை சேர்மன் ஆத்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர்கள் குமரையா, பிச்சை உள்ளிட்ட கவுன்சிலர்கள்: கடலாடி தாலுகாவை வறட்சி பகுதியாக அறிவித்து பயிர் இழப்பீட்டு தொகை மற்றும் வறட்சி நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆணையாளர்: இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கவுன்சிலர் வசந்தா கதிரேசன்: மாரியூர் ஊராட்சி வேலாயுதபுரம் கிராமத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும். மாரியூர் வடக்கு தெருவில் நாடக மேடை அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் ஜெயச்சந்திரன்: சாத்தங்குடி வெள்ளங்குளம் கிரா மத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும். கடுகு சந்தை சத்திரம் கிராம தெருக்கள் முழுவதும் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் காதர் சுல்தான் அலி: வாலிநோக்கம் கிராமத்தில் குடிநீருக்காக பைப் லைன் பதிப்பதற்கு சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சேதமடைந்த சாலைகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் மாயகிருஷ்ணன்: ஏ.புன வாசல் ஊராட்சி பாடு வனேந்தல் கிராமத்திற்கு மெட்டல் சாலை மற்றும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கவுன்சிலர் குஞ்சரம் முருகன்: டி.எம்.கோட்டை கிராமத்தில் இருந்து செவல்பட்டி செல்லும் சாலை தார் சாலையாக அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் பைரோஸ் பானு ஜலீல்: மாரியூர் கடற்கரை செல்லும் சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பிலான் கிராமத்தில் இருந்து ஒப்பிலான் கடற்கரைக்கு செல்லும் சாலையை தார் சாலையாக அமைக்க வேண்டும்.
கவுன்சிலர் அம்மாவாசி: சிக்கல் கிராமத்தில் உள்ள பாண்டியன் ஊரணியை சுற்றி முள்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கல் காவல் நிலையம் முதல் சப்பாணி கோவில் வரை தார் சாலை அமைக்க வேண்டும். சிக்கல் மேற்கு காலனி பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கவுன்சிலர் ராஜேந்திரன்: வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து சிறைக்குளம் செல்லும் சாலை, ராஜாக்கள் பாளையம் கிராமத்தில் இருந்து காமராஜர்புரம் செல்லும் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் செய்யது ராவ்யா செய்யது அலி: கீழச் சிறுபோது கவுன்சிலுக்கு உட்பட்ட மேலச்சிறு போது, கீழச்சிறுபோது, சவேரியார் பட்டினம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் அனைத்து தெருக்களுக்கும் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர்கள் பானுமதி ராமமூர்த்தி, மகேஸ்வரி சக்திவேல், முருக லட்சுமி மலைராஜ், நரிப்பையூர் முருகன், உள்ளிட்டோரும் அவர்களது பகுதி கோரிக்கை களை வலியுறுத்தினர்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலாடி யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.
- அபிராமம் பகுதியில் கடும் வறட்சி காரணமாக 16 கிலோ மீட்டர் தூரம் சென்று ஆடு-மாடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது வெயில் சுட்டெறிக்க தொடங்கி விட்டது. ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடனை, தொண்டி, நயினார் கோவில், பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் உட்பட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இந்த ஆண்டு மேய்ச்சல் நிலங்களில் புல், செடி, கொடிகள் குறைவாக உள்ளதால் தேவையான இரை கிடைக்காமல் ஆடு, மாடுகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வைகை ஆற்றில் இருந்து உபரிநீர் அதிக அளவில் வந்தபோதும் கண்மாய்க ளுக்குச் செல்லும் நீர்வழி தடங்கள், கால்வாய், தடுப்பணைகள் சீரமைக்கப் படாததாலும் ஆக்கிரமிப்பு களாலும் பல கண்மாய்கள் வறண்டுள்ளன. மாவட் டத்தில் பெருவாரியான கண்மாய்கள் வறண்ட நிலையில் உள்ளன. இதனால் நீராதாரம் பாதிக்கப்படுவதால் மேய்ச்சல் நிலங்களும் வறண்டுள்ளது.
காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது. பருவகாலங்கள் மாறியதாலும், பருவமழை பொய்த்ததாலும் அடர்ந்த காடுகள் இருந்த இடங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன.
இந்த காலகட்டத்தில் மரங்களை நம்பி வாழும் பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.
இதுபற்றி அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் ஒருவர் கூறுகையில், கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் மேய்ச்சல் நிலங்களும் வறண்டு உள்ளது. 10 கிலோ மீட்டர் முதல் 16 கிலோமீட்டர் தூரம் வரை சென்று ஆடு மேய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போதிய அளவு மேய்ச்சல் நிலம் இல்லாததால் ஆடு , மாடுகள் மிகவும் சிரமப்படுகிறது. இதே நிலைதொடருமானால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்களாக மேய்ச்சல் உள்ள பகுதியை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
- செங்கோட்டை பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
- தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.
செங்கோட்டை:
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செங்கோட்டை சுற்றுவட்டப் பகுதி பூ மகசூலுக்கு சிறப்பு பெற்றதாகும்.
உளுந்து, சோளம், கம்பு
இப்பகுதி விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும், ஏனைய காலங்களில் உளுந்து, சோளம், கம்பு மற்றும் தோட்ட பயிரான கத்தரி, வெண்டை, புடலங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட கோடை கால பயிர்கள், நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்கள் என பயிரிடுவார்கள்.
இப்பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். மேலும் கேரளாவில் கொண்டாப்படும் ஓணம் பண்டிகை காலத்தில் அங்கு காய்கறிகள் விலை அதிகரிப்பதால் அதனை கணக்கில் கொண்டு செங்கோட்டை பகுதி விவசாயிகள் தங்களின் விளைச்சலை பெருக்குவர். இதனால் வர்த்தக அதிகளவில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் பயன்பெற்றனர்.
தென்மேற்கு பருவமழை
இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.
மழை பொய்த்ததால் மோட்டை, அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது.
இதனால் செங் கோட்டை பகுதியில் குறைந்த அளவிலான விவசாயிகளே பயிரிட்டுள்ளனர். காய்கறிகள் விளைச்சல் குறைந்ததால் அவற்றின் விலையும் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.
விவசாயிகள் வேதனை
இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் தற்போது வரை பருவமழை பெய்யாததால் செங்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் வெறும் புல் தரையாக காட்சி அளிக்கிறது. இதனால் அவை ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
இதே நிலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் என செங்கோட்டை பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- தென்காசி மாவட்டத்தில் சரிவர மழை பெய்யாததால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர்.
- பயிரிட்ட விளைநிலங்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிவிட்டது.
தென்காசி:
தென்காசி எம்.எல்.ஏ.பழனி நாடார் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சரிவர மழை பெய்யாததால் விவசாயிகள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் அதை நம்பி இருந்த ஆறு, குளங்களும் வறண்டு காணப்படுகின்றது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிரிட்ட விளைநிலங்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிவிட்டது. மேலும் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக எதிர்வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க இரட்டைக்குளம், ஊத்துமலை உள்ளிட்ட ஏனைய கால்வாய்கள் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
- ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.
- நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலையில் விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பாதித்து வந்தனர்.இந்நிலையில் கோடை மழை, தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று கிணறு, போர்வெல்களில் நீரின்றியும், புதிதாக போர்வெல்கள் அமைத்தாலும் நீர் இன்றி, நிலைப்பயிரான தென்னையை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
பல கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து, வெட்டி அகற்றும் அவல நிலை உள்ளது.
இது குறித்து தென்னை விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதால், நீர் இன்றி பல ஆயிரக்கணக்கான மரங்கள் காய் பிடிக்காமலும், காய்ந்தும் வருகிறது. ஒரு சில மாதங்கள் இதே நிலை நீடித்தால் தென்னை மரங்கள் அடியோடு காய்ந்து கருகும்.
நீண்ட கால பயிரான தென்னையை காக்க தண்ணீர் லாரிகள் வாயிலாக ஒரு லாரி ரூ.4,500 விலை கொடுத்து வாங்கி ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து, மரங்களின் உயிரை காப்பாற்ற விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். எனவே தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை மரத்திற்கு உரிய இழப்பீடும், மறு நடவிற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தென்னை வளர்ச்சி வாரியத்தின் சார்பில் தென்னை காப்புறுதி திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் 50 சதவீதம் மற்றும் தலா 25 சதவீதம், மாநில அரசும், விவசாயிகளும் செலுத்தும் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை.
எனவே பயிர்க்காப்பீட்டு திட்டத்தில், மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் இணையும் வகையில், அரசு துறைகளை ஒருங்கிணைத்து துரித நடவடிக்கை எடுக்கவும், காப்பீட்டுத்தொகையாக ஒரு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கவும் வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உலர் கண் நோய் ஏற்பட்டால் கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.
- தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும்போது விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.
நம் கண்களின் வெளிப்புற அடுக்கில் எண்ணெய்யும், மைய அடுக்கில் நீரும், உள் அடுக்கில் புரதமும் இருக்கும். இந்த மூன்று அடுக்குகளின் தரம் அல்லது அளவில் உண்டாகும் மாற்றமே உலர் கண் நோயாகும். கண்களின் சீரான தன்மை மற்றும் செயல்பாட்டிற்கு அதில் சுரக்கக்கூடிய கண்ணீரின் அளவு அடிப்படையானதாகும். உலர் கண் நோய் ஏற்படும்போது கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.
அறிகுறிகள்:
கண்களில் எரிச்சல், வறட்சி, அரிப்பு, வலி உணர்வு, கனம், கண்களில் நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை, புத்தகம் வாசிப்பதில் சிரமம் ஏற்படுவது போன்றவை உலர் கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.
காரணங்கள்:
* எந்த ஒரு பொருளையும் தொடர்ந்து நீண்ட நேரம் உற்றுப்பார்ப்பது.
* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்கள் காரணமாகவும் உலர் கண் நோய் ஏற்படும்.
* தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும் போதும், மாசுக்கள் கண்களில் தொடர்ந்து படும்போதும் விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.
* காற்றில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் உலர் கண் நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏ.சி. பயன்பாட்டின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை குறைந்து, ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்புகளின் உற்பத்தியை தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
தீர்வு:
* உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
* கண்களுக்கான பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் பயிற்சிகள் செய்யும்போது ஆரம்ப காலத்தில் தலைவலி உண்டாகலாம். இந்த பயிற்சிகளை பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது.
* நீங்கள் இருக்கும் அறையில் ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இது அறையில் உள்ள காற்றை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
* 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். இது சருமம் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு, கண்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் சோர்வை நீக்கும்.
* சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 10 வினாடிகளுக்கு ஒருமுறை கண்களை சிமிட்டுவது அவசியமானது.
* வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவது நல்லது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* குளிர்ந்த அல்லது அதிக வெப்பநிலை உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
* நேரடியாக கண்ணில் வேகமான காற்று படும்படி இருப்பதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை போடுவதை தவிர்க்க வேண்டும்.