search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீடி இலைகள்"

    • சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கிராம கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து தூத்துக்குடி 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து,முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்லாமொழி கடற்கரை வழியாக இன்று அதிகாலை 2 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 106பீடிஇலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    அவற்றை இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் ஆரக்கோட்டை காரைக்குடியை சேர்ந்த அருள் விஜயகாந்த் (வயது 35) மற்றும் நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மா சாலையைச் சேர்ந்த பாண்டியன் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 75 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
    • ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணம் கடற்கரைக்கு செல்லும் பாதை வழியாக இலங்கைக்கு வாகனம் மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக மாவட்ட `கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதய ராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது லோடு வேனில் 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகள் பீடி இலைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

    போலீசார் வாகனத்தை சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். இதை யடுத்து பீடி இலைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த 'கியூ' பிரிவு போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, வெள்ள மடத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 63) என்பவரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதேபோல் நேற்று அதிகாலை தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன்படி ஒரே வாரத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை `கியூ' பிரிவு போலீசார் தடுத்து கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • வேனில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,250 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.
    • ஆலந்தலை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக அவர்கள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் படகு மூலம் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ், காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்செந்தூர் உட்கோட்டம் திருச்செந்தூர் போலீஸ் நிலைய எல்லை அருகே கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் ஆலந்தலை ஊருக்கு வடக்கே கணேசபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது வேனில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,250 கிலோ எடை கொண்ட 42 மூட்டை பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

    அதனை ஆலந்தலை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக அவர்கள் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து பீடி மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் வேனில் இருந்த ஆலந்தலை ராஜா (வயது29), வேனை ஓட்டி வந்த டிரைவர் தூத்துக்குடி எஸ்.எஸ். மாணிக்கப்புரத்தை சேர்ந்த பாலமுருகன் (35) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மாத்திரைகள், பீடி இலைகள், தங்கம் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.

    மேலம் இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு சட்ட விரோதமாக கடத்தல்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் சாயல்குடி அருகே உள்ள வாலிநோக்கத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த இருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வாலிநோக்கம்-கீழமுந்தல் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை போலீசார் மறித்தனர். உடனே அதில் இருந்த டிரைவர் உள்பட சிலர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். தொடர்ந்து போலீசார் லாரியை சோதனையிட்ட போது 70 மூடைகளில் 30 கிலோ எடையுள்ள பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. அதனையும், கடத்த பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்த முயன்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வாலிநோக்கம் கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என்பது குறித்து தப்பியோடிய நபர்களையும் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாள முத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் 'கியூ'பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர், இருதயராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ பீடி இலை பண்டல்கள் மற்றும் உயிர் கொல்லி பூச்சி மருந்துகள், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 425 கிலோ கட்டிங் செய்த பீடி இலை 17பண்டல்கள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8,750 பாக்கெட்டுகளில் அடைத்து 15 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த மருந்து பொருட்கள் ஆகியவை இருந்தது அவற்றை இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரிய வந்தது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இதை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து படகு மூலம் 2 டன் பீடி இலைகள் கடத்தி சென்ற 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    கடத்தலில் ஈடுபட்டதாக தூத்துக்குடி இனிகோ நகர், சிலுவைபட்டி மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது19), அபிஷ்டன் (19), மரிய அந்தோணி (20), டிஜோ(24), காட்வே (19) ஆகிய 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் கூத்தன்குழி கடற்கரை வழியாக படகு மூலம் பீடி இலைகளை கடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தூத்துக்குடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலைகள் இருப்பதும், இதனை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி ஆரேக்கியபுரத்தைச் சேர்ந்த ஆதவன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடற்கரையோரமாக சந்தேகத்திற்க்கு இடமாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.
    • போலீசார் மினி லாரியை சோதனை செய்தபோது அதில் 32 மூடைகளில் ஆயிரம் கிலோ பீடி இல்லைகள் இருப்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடலோர பகுதி வழியாக பீடி இலைகள், மஞ்சள் மற்றும் டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரையோர பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது தூத்துக்குடி தாளமுத்துநகர்-ராஜபாளையம் கடற்கரையோரமாக சந்தேகத்திற்க்கு இடமாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது திடீரென போலீசார் வருவதை கண்டதும் மினிலாரியில் இருந்தவர்கள் அதனை நிறுத்தி விட்டு கீழ இறங்கி தப்பி ஓடி விட்டனர். போலீசார் மினி லாரியை சோதனை செய்தபோது அதில் 32 மூடைகளில் ஆயிரம் கிலோ பீடி இல்லைகள் இருப்பது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் யார்? மினி லாரியில் இருந்து தப்பி ஓடியவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடற்கரையோர பகுதியில் சந்தேகத்திடமாக மினிலாரி மற்றும் படகுடன் 6 பேர் நின்றிருந்தனர்.
    • படகு மற்றும் லோடு ஆட்டோவில் இருந்த பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், சுரேஷ், தலைமை காவலர்கள் ராமர் இருதயராஜ், பழனி, இசக்கி மற்றும் போலீசார் கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை வேம்பார் கலைஞானபுரம் கடற்கரையோர பகுதியில் சந்தேகத்திடமாக மினிலாரி மற்றும் படகுடன் 6 பேர் நின்றிருந்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் படகு மற்றும் மினிலாரியை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் பீடி இலைகள் 40 மூட்டைகளில் மொத்தம் 1,200 கிலோ இருந்தது தெரியவந்தது. மேலும் அவை தூத்துக்குடியில் இருந்த இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இதனைத் தொடர்ந்து படகு மற்றும் லோடு ஆட்டோவில் இருந்த பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடத்தலில் ஈடுபட்ட மணக்கரை கீழூரை சேர்ந்த சரவணன் (23), மாரியப்பன் (38), பாளையங்கோட்டை சாந்திநகர் 3-வது தெருவை சேர்ந்த லூர்து அந்தோணி (41), கம்பராமாயண தெருவை சேர்ந்த முத்துக்குமார் (38), நெல்லை கான்சாபுரம் நொச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூர் (20), முருகன் கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் (40) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி கடற்கரை சாலை மீன்பிடி துறைமுகத்தை அடுத்து இனிகோநகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மறித்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    லோடு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தபோது அதில் 40 மூடைகளில் 2 டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் லோடு வேனை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலை பண்டல் இருந்தது தெரியவந்தது.
    • கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பாலம் அருகில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த லோடு வேனை நிறுத்த சொல்லியபோதும் லோடுவேன் நிற்காமல் தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் திரும்பி சென்றது.

    இதனைத்தொடர்ந்து அந்த லோடு வேனை பின் தொடர்ந்து சென்று போலீசார் தடுத்து நிறுத்திய போது டிரைவர் மற்றும் மற்றொருவர் காட்டுப் பகுதியில் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து போலீசார் லோடு வேனை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலை பண்டல் இருந்தது தெரியவந்தது. இதனால் தப்பியோடிய 2 பேரும் பீடி இலை கடத்தலில் ஈடுபட்டுள்ளதை அறிந்த போலீசார் லோடு வேனை பறிமுதல் செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது
    • ஒவ்வொரு மூட்டையிலும் 30 கிலோ என மொத்தம் 270 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராமேசுவரம்:

    அண்மை காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்துவது அதிகளவில் நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 35 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது

    இலங்கையில் பீடி தயாரிக்கப்படும் இலைகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. அதிக விலை போகும் இந்த இலைகள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 9 மூட்டைகள் கேட்பாரற்று கிடப்பதாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் மூட்டைகளை பிரித்து சோதனையிட்ட போது அதில் பீடி இலைகள் இருந்தன. ஒவ்வொரு மூட்டையிலும் 30 கிலோ என மொத்தம் 270 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக சமூக விரோதிகள் கொண்டு வந்திருக்கலாம் எனவும், ஆனால் எந்த காரணத்திற்காகவும் விட்டு சென்றார்கள் என தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×